Jump to content

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று....காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் பெரும் நிதி


Recommended Posts

காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் பெரும் நிதி

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் பெரும்நிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்றும் அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியும், தலைவர்கள் மருத்துவமனை வந்தது குறித்தான செய்தியும்தான் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

தினமணி: 'காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ 15,167 கோடி'

காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் ரூ.15,167 கோடி இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

23 காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்திருப்போரின் ரூ.15,167 கோடி பணம் உரிமை கோரப்படாமல் இருக்கிறது. இதில் அதிகப்பட்சமாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யிடம் ரூ.10,509 கோடி உள்ளது. அதற்கடுத்து 22 தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.4657 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது.

காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் பெரும்நிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில், ஐசிஐசிஐ புருடென்சியல் லைப் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.807.4 கோடியும், ரிலையன்ஸ் நிப்பான் லைப் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.696.12 கோடியும், எஸ்பிஐ லைப் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.678.59 கோடியும், ஹெச்டிஎஃப்சி ஸ்டான்டர்ட் லைப் நிறுவனத்திடம் ரூ.659.3 கோடியும் உரிமைகோரப்படாமல் உள்ளது என்று காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ-விடம் இருக்கும் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஜெயலலிதா மரணம் - அப்பல்லோவை பார்வையிட்ட விசாரணை குழு'

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் சிகிச்சை பெற்ற சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

'ஜெயலலிதா மரணம் - அப்போலோவை பார்வையிட்ட விசாரணை குழு'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, அறை எண் 2008 ஆகிய பகுதிகளை பார்வையிட்டதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

தினத்தந்தி: 'சென்னையில் தி.மு.க. தொண்டர் தற்கொலை'

கருணாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் தி.மு.க. தொண்டர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மேலும் 3 பேர் இறந்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

'சென்னையில் தி.மு.க. தொண்டர் தற்கொலை'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் ராஜு (வயது 63). எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க. தீவிர தொண்டரான இவர், திருவொற்றியூர் வட்ட செயலாளராக 3 முறை பதவி வகித்தவர். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளராகவும் இருந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ராஜு மனம் உடைந்தார். இதனால் அவர், கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் ராஜு வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

இந்து தமிழ்: 'காரில் இருந்த பெட்ரோல் கேன் வெடித்ததில் 4 பேர் காயம்'

கட்சிப் பதவி பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த நிர்வாகி, டிடிவி தினகரன் வீடு எதிரே அவரது உருவபொம்மையை எரித்தார். அப்போது தீ காருக்குள் பரவி அதிலிருந்த பெட்ரோல் கேன்கள் வெடித்துச் சிதறின. இதில், 4 பேர் காயம் அடைந்தனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

Dinakaranபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் நகர செயலாளராக இருந்தவர் பரிமளம் என்ற புல்லட் பரிமளம்.

இவரை கடந்த 27-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கிய துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வேறு ஒருவரை அந்தப் பதவியில் நியமித்தார்.

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு நேற்று மதியம் பரிமளம் சென்றார். காருக்குள் வைக்கோலால் செய்யப்பட்ட தினகரனின் உருவபொம்மை, 2 கேன்களில் பெட்ரோல் மற்றும் அரிவாள் இருந்துள்ளது.

தினகரன் வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு தினகரனை பார்க்க பரிமளம் சென்றார். அவரை தினகர னின் கார் டிரைவர் பாண்டித்துரை, புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பரிமளம், தினகரனுக்கு எதிப்பு தெரிவித்தவாறு தனது காருக்குள் வைத்திருந்த உருவபொம்மையை எடுத்து எரித்துள்ளார். அப்போது, காருக்குள் தீ பரவி அதிலிருந்த பெட்ரோல் கேன்கள் வெடிகுண்டுபோல வெடித்துச் சிதறின. இதில் பாண்டித்துரை, டார்வின் மற்றும் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் பரமசிவம், பரிமளம் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

https://www.bbc.com/tamil/india-45002589

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.