Jump to content

அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல்


Recommended Posts

அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல்

 

USCGC-Sherman-300x200.jpgஅமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது.

1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.

378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு  துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதிலும், இதனைப் பழுதுபார்க்கும், உதிரிப்பாக  செலவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும்.

ஹவாயில் தரித்திருக்கும், ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, போர்க்கப்பலின் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வரும் ஓகஸ்ட் 22ஆம் நாள், நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

எனினும், 2019 பெப்ரவரி வரையில் இந்தக் கப்பல் ஹவாயிலேயே தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

USCGC-Sherman.jpg

இந்தப் போர்க்கப்பலில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள் தற்போது சிறிலங்கா கடற்படையினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 30 சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

வரும் ஓகஸ்ட் 22 ஆம் நாளுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்படும். ஹொனொலுலு துறைமுகத்தில் இருந்து இந்தப் போர்க்கப்பல் புறப்படும் போது, சிறிலங்கா கடற்படையினரின் எண்ணிக்கை 130 வரை அதிகரிக்கும்.

போருக்குப் பிந்திய கால பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல்கள் தேவைப்படுவதாக சிறிலங்கா கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“200 மைல் சிறப்பு பொருளாதார வலயத்தில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள எமக்கு பெரிய கப்பல்கள் தேவைப்படுகின்றன. இந்த மூலோபாயத்தின் ஒரு கட்டமாகவே அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் பெறப்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு கையளிக்கப்படவுள்ள ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’ போர்க்கப்பல், வியட்னாம் போரின் போது சிறப்பாகப் பணியாற்றி, எதிரிப் போர்க்கப்பல்களை மூழ்கடித்திருந்தது. இதற்காக தங்க கழுகு விருதும் இந்தக் கப்பலுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004ஆம் ஆண்டு அமெரிக்கக் கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட ‘யுஎஸ்சிஜி கரேஜஸ்’ என்ற போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்கு,  கொடையாக வழங்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா கடற்படையில் ‘எஸ்எல்என்எஸ் சமுத்ர’ என்ற பெயருடன் இயங்கும் இந்தப் போர்க்கப்பல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ,  ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/07/30/news/32136

Link to comment
Share on other sites

Quote

1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.

 

 கொடையாக குப்பை வழங்கப்பட்டிருந்தது.tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் போட்டி போட்டு கொடுக்கிறார்கள்.யாரோ பாவிக்கப் போகிறார்கள்.யார் என்று தான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதிலும், இதனைப் பழுதுபார்க்கும், உதிரிப்பாக  செலவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும்.

அந்த உடன்பாடு எப்ப செய்தவையல் என்பதுதான் இப்ப முக்கியம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

 

 கொடையாக குப்பை வழங்கப்பட்டிருந்தது.tw_tounge_xd:

கல்கத்தாவுக்கு...இரும்பு விலைக்கு அனுப்பிறதிலும் பார்க்க....இது மிகவும் விவேகமான முடிவு!

சேவையிலிருந்து நீக்கப் பட்ட...கப்பல்...என்ற படியால்....அதிக திருத்த வேலைகள்...அடிக்கடி வரும்!

எனவே.....கப்பல் பெறுமதிக்குப் பதிலாக.....இரண்டு மூண்டு மடங்கை.....சிங்களத்திடமிருந்து அமேரிக்கா நிச்சயம் கறக்கும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை உருக்குலைக்கிற செலவுக்கு பதில் வருமானம்.. அமெரிக்கனா.. கொக்கா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல்களை, அதுவும் வன்முறை சார்ந்த அதிகாரத்தை பிரயோகிக்கக்கூடிய கப்பல்களை, சொறி சிங்களத்திற்கு வழங்குவதை தொடக்கி வைத்ததே அமெரிக்கா தான்.

Access and Cross  Services treaty 2007 இல் சொறி சிங்களம் கையெழுத்திட முன்பும், இப்படியே ஓர் கழித்து விட்ட கரையோர காவல் படை கப்பலை அமெரிக்கா வழங்கி இருந்தது.

புலிகளை களத்தில் இருந்து  அகற்ற கிறோம் என்று நினைத்து தொடக்கி வைத்தது, ஆப்பிழுத்த குரங்கின் கதியாக மாறியிருக்கிறது அமெரிக்காவிடிற்கு, சீனாவால்.  

அமெரிக்கா கழித்து  விடுவதை கொடுக்கும் நிலையில் அப்படியே இருக்க, சீன புத்தம் புதிய கப்பலை வழங்கி அமெரிக்கா அப்படி செய்ய முடியாத நிலைக்கு கேம் ஐ கொண்டுவந்து விட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

அந்த உடன்பாடு எப்ப செய்தவையல் என்பதுதான் இப்ப முக்கியம்

 

3 hours ago, Kadancha said:

Access and Cross  Services treaty 2007 இல் சொறி சிங்களம் கையெழுத்திட முன்பும், இப்படியே ஓர் கழித்து விட்ட கரையோர காவல் படை கப்பலை அமெரிக்கா வழங்கி இருந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவித்தவர்களுக்கு பழையதாக இருந்தாலும் பாதிக்கப்ப்ட்டவனுக்கு கிடைக்கும் போது அது புதிதுதான் அவனுக்கு கிடைக்கும் பொருட்கள பொறுத்தே அதுவும் அமைகிறது அமெரிக்காவினது என்றால் இன்னும் மவுசுதான் அதுவும் இலங்கைக்கு கிடைக்கிறது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.