Jump to content

தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாண இளைஞர்


Recommended Posts

 
தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாண இளைஞர்

தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாண இளைஞர்

 
 

Colombo (News 1st)  பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

பின்னர், கடந்த சில வருடங்களாக அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன், தனது வீட்டிலும் உறவினர்களின் வீடுகளிலுமாக தற்போது 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார்.

ஆரம்பத்தில் தேனீக்களின் கொட்டிற்கு ஆளானதாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டாம் என எதிர்மறையான அறிவுறுத்தல்கள் வந்ததாகவும் நிரோசன் குறிப்பிட்டார்.

எனினும், தற்போது தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுவரும் அவர், ஏனையவர்களுக்கு அது தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

தேனீ வளர்ப்பிற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கூடுகளில் மலைத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுகுத் தேனீ மற்றும் பொந்துத் தேனீ என 4 வகையான தேனீகளை இவர் வளர்த்து வருகிறார்.

மரங்களும் பூக்களும் அதிகளவில் காணப்படும் இடங்களிலேயே தேனீ கூடுகளை வைக்க வேண்டும் என நிரோஷன் தெரிவித்தார்.

சிறப்பாக தேனீ வளர்ப்பில் ஈடுபடும் நிரோஷன் யாழ். மாவட்ட விவசாய திணைக்களம் ஊடாக தேனீ வளர்ப்பு தொடர்பில் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் பொறியியல் மாணவரான நிரோஷன், மாதாந்தம் 15,000 தொடக்கம் 20,000 வரையான வருமானத்தை ஈட்டுகின்றார்.

தனது முயற்சியால் வருமானம் ஈட்டுவதுடன், கல்வி செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றார்.

இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றார் சிவகுமாரன் நிரோஷன்.

 

https://www.newsfirst.lk/tamil/2018/07/தேனீ-வளர்ப்பில்-சாதித்து/

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:
சிறப்பாக தேனீ வளர்ப்பில் ஈடுபடும் நிரோஷன் யாழ். மாவட்ட விவசாய திணைக்களம் ஊடாக தேனீ வளர்ப்பு தொடர்பில் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் பொறியியல் மாணவரான நிரோஷன், மாதாந்தம் 15,000 தொடக்கம் 20,000 வரையான வருமானத்தை ஈட்டுகின்றார்.

தேனீ பற்றாகுறை அமெரிக்காவில் விவசாயத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இங்கு தேனீ வளர்ப்பதன் முக்கிய நோக்கம் தேன் எடுப்பது அல்ல. தேன் பல நாடுகளிலும் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆப்பிள், மாம்பழம், ரம்புட்டான், கிவி, பீச், இப்படி பல பழங்கள் உற்பத்தியாக தேனீ ஆண் பூவின் மகரந்தங்களை பெண் பூவுடன் சேர்க்க வேண்டும். இதற்காக தேனியை இங்கு வாடகைக்கு விடுவார்கள். கிருமிநாசினி அடித்த பூக்களில் மகரந்தம் எடுக்கும் தேனீக்கள் செத்து போய்விடும். இவ்வகையான எல்லா பழங்களையும் இந்த இணைப்பில் பாருங்கள்.

https://honeylove.org/list-of-food/

 

நிரோஷன் இந்த தேனீ வணிகத்தை ஏற்றுமதி செய்யும் பாரிய வணிகமாக மாற்றி வடகிழக்கில் பல்லாயிரம் மக்களுக்கு வேலைவாயிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமாரன் நிரோசன் மேன்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.