Jump to content

அரளிக்கொட்டை


Recommended Posts

அரளிக்கொட்டை

 

 
kadhir4


நீட் தேர்வு ரிசல்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும்.  கமலாவின் நெஞ்சு "பட பட' வென்று அடித்துக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வேண்டிக் கொண்டு  விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.
அந்தக் கிராமத்தில் நாம் தான் முதல் டாக்டர் என்ற கற்பனை அவளை வானத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் ஆகி இதே கிராமத்தில் இலவச வைத்தியம் பண்ணினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள்.  ஊரில் வைத்திய வசதி இல்லாததால்தான் தன் அப்பா திடீர் நெஞ்சு வலியில் செத்துப் போனதையும், அது  போல் இங்குள்ள யாரும் செத்துப் போகாமல் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தாள்.
வீடு வீடாகச் சென்று கூலிக்கு வீட்டு வேலை செய்து கஷ்டப்படும் அம்மாவை, தான் டாக்டராகி வேலைக்குப் போக வேண்டாம் என்று தடுத்து ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆசையும், ஊனமான தன் தங்கச்சியின் காலைச் சரியாக்கி நடக்க வைக்க  வேண்டும் என்ற ஆசையும்  கமலாவைத் தெருவில் நடக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நடக்க வைத்துக் கொண்டிருந்தது.

 


அந்தச் சின்னக் கிராமத்தில் வீதி பெரும்பாலும் நடமாட்டம் இல்லாமல் தான் இருக்கும். எனவே அவளால் கற்பனை செய்து கொண்டே நடந்து வர முடிந்தது. வீட்டுக்குள் வந்த உடனே அவளுக்குத் திடீர் என்று ஒரு பயம் உடம்பைச் சற்று நடுங்க வைத்தது. "ஒரு வேளை மார்க் வராமல் போனால்?'  என்ற எண்ணம் கற்பனைகளையெல்லாம் நொடி நேரத்தில் சிதற அடித்தது.
தான் கூலி வேலை செய்யும் வீடுகளில் எல்லாம் மகளை டாக்டருக்குப் படிக்க வைக்கப் போவதாகப் பெருமையாகச் சொல்லி, கூடவே காலேஜுக்குக் கட்ட  கடனும் கேட்டு வைத்திருக்கும் அம்மாவுக்கு அந்த அதிர்ச்சி? கமலாவுக்கு அதை நினைக்கவே முடியவில்லை... மீண்டும் மீண்டும்  கடவுளை வேண்டிக்கொண்டாள். 
கமலாவின் குடும்பம் ஓர்  ஏழைக் குடும்பம் தான். ஆறு வருஷத்துக்கு முன்னால்  கூலி வேலை செய்து வந்த அப்பா திடீர் நெஞ்சு வலியால் துடித்தபோது   உள்ளுரில் ஆஸ்பத்திரி வசதி இல்லாததால்  காப்பாற்ற முடியாமல்  போன அன்று  அம்மா,  ""ஐயோ... எ சாமி...என்னை அனாதியா உட்டுட்டுப் போயிட்டீயே...ரண்டு பொட்டப் புள்ளகள வச்சிக் கிட்டு நா என்ன செய்வேன்?'' 
என்று  நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத அழுகையை நினைத்த போதெல்லாம் கமலா கண்கலங்கி விடுவாள். அதன் பிறகு, ஊனமான தங்கையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அம்மா கூலிவேலைக்குச் சென்றதால்தான்  தான் பள்ளிக்கூடம் செல்ல முடிந்தது என்பதையும் அவள் மறந்து விடவில்லை. 
பகலில் கூலி வேலை இரவில் வெகுநேரம் வரை தையல் மெஷினில் ஜவுளிக்கடைக்குப் பை தைத்துக் கொடுத்துக் கூலி வாங்கியது... இப்படி அம்மா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் அல்ல என்பதும் அவளுக்குத் தெரியும். இந்த நிலைமையில் தான் ஒரு டாக்டரானால் அம்மாவுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்த்தாள்.

 


சைக்கிளை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த புரெளசிங் சென்டருக்கு ஒன்பது மணிக்கே வந்து விட்டாள். மணி பத்தை நெருங்க நெருங்க கமலா நெஞ்சு முன்பை விட வேகமாக அடித்துக் கொண்டது.
மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டு கம்ப்யூட்டரை ஆன் பண்ணினாள். இன்னும் ஐந்து நிமிடங்கள்!  உடல் நடுக்கத்தைவிட மனம் அதிகமாக நடுங்கியது. அவளைப் போலவே அவளது தோழிகள் சிலரும் அதற்காக வந்திருந்த போதும் அவர்கள் எல்லாம் அவள் கவனத்தில் இல்லை. 
மணி பத்தானது. நடுக்கத்தில் தடுமாறித்  தடுமாறித் தன் பதிவு எண்ணைத் தேடினாள்.  ஒரு வழியாகக் கண்டு பிடித்தபோது அவளால் நம்ப முடியவில்லை! அவள் பயந்தது போலவே குறைவான மதிப்பெண்! அதிர்ச்சியில் தான் பார்த்த எண் தப்பாகப் போயிருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு நடுக்கத்தோடு மீண்டும் தன் ஹால் டிக்கெட்டை எடுத்துப் பார்த்தாள். அதே எண் தான்!  
கமலாவுக்கு மயக்கமே வந்து விடும் போல் ஆகிவிட்டது. கண்கள் கலங்கி விட்டன. அழுகை வந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் இரண்டு மூன்று முறை போட்டுப் பார்த்தாள். அதே தான் மார்க்! 
அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை. பணத்தைக் கொடுத்து விட்டுத் தோழிகளைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவளாய், அதிர்ச்சி நீங்காதவளாய், எப்படியோ சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். ஓடிப்போய்ப் பாயில் குப்புறப் படுத்துக் கொண்டு அழுதாள். 
அம்மா வேலைக்குப் போய் விட்டிருக்க, விவரம் தெரியாத தங்கச்சி தவழ்ந்து வந்து  ""ஏக்கா அழுவுற?'' என்று கேட்ட போது கமலா பதில் ஏதும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள். தன் கனவும், அம்மாவின் கனவும் நொறுங்கிப் போனதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 
பொதுவாகக் கமலா நன்றாகப் படிப்பவள் தான், வகுப்பில் எப்போதும்  முதல் ரேங்க் தான். ஆனாலும் நீட் தேர்வில் தோற்றுப் போன அதிர்ச்சி... இனி எப்படி ஊரார் முகத்தில் விழிப்பது? தோழிகள் முகத்தில்? அம்மாவின் டாக்டர் கனவு நொறுங்கிப் போய் விட்டதே! அம்மாவைக் கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே, தங்கச்சியின் ஊனத்தைச் சரிபண்ண முடியாதே, ஊராருக்கு இலவச வைத்தியம் என்பதெல்லாம் வெளியே சொல்லவே கேவலமாகப் போய்விட்டதே! இனி அம்மாவுக்குப் பாரமாக  இருந்து கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பதா? அவளால் சமாதானம் பண்ணிக் கொள்ளவே முடியவில்லை. தோல்வி என்ற இடி அவளைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்தது.

 


புரண்டு புரண்டு அழுது பார்த்தாள். தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாள். அவமானம்...அவமானம்... "இது வரை நீ வாங்கிய மார்க்கெல்லாம் காப்பியடித்து வாங்கியதா?' என்று கேட்பார்களே, என்ன சொல்வது? 
அம்மா வேலைக்குப் போகும் வீட்டிலெல்லாம் கேட்பார்களே...  அம்மா எப்படிக் கேவலப்படப் போகிறாள். கோச்சிங் வகுப்புக்குப் போயிருந்தால் அந்த நான்கு மார்க்கையும் வாங்கியிருக்கலாமோ? பணம் இருந்தால் போயிருக்கலாம், பணமில்லையே என்ன செய்வது? இன்னும் கொஞ்சம் படித்திருக்க வேண்டும் தான்.
"ஐயோ, ஏமாந்து போய் விட்டோமே. ஆயிரம் கனவுகளோடு வரும் அம்மாவின் முகத்தில் இனி எப்படி முழிப்பது?  தன் வகுப்புத் தோழி மாலதி  தன் அம்மா திட்டியதற்கே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாளே, நாம் இத்தனை அவமானத்தையும் கேவலத்தையும் தாங்கிக்கொண்டு எப்படி உயிரோடிருப்பது? ஊரார் கேவலமாகப் பார்ப்பார்களே...இப்படிப் பல கேள்விகள் மின்னலைப் போல் வந்து  கொண்டே இருந்தன. உலகமே அவளைப் பார்த்துச் சிரிப்பதைப்  போல் அவளுக்குத் தோன்றியது.

 


செல்போனில் அவள் தோழிகள் சிலர் அழைத்த போதிலும் எடுத்துப் பேச விரும்பவில்லை. எப்படிச் சொல்வது, அவர்கள் எல்லாம் பாஸாகி இருப்பார்களே, பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. அம்மா வருவதற்குள் ஒரு முடிவு செய்தாக வேண்டும் என்றும் அக்கம் பக்கத்தாரின் கேவலத்தை விடச் செத்துப் போவதே மேல் என்றும் தோன்றியது.
ஏற்கெனவே அதே கிராமத்துப் பெண்கள் சிலர் செய்த செயல் அவளுக்கு நினைவுக்கு வந்தது. எழுந்து கதவைச் சாத்தி விட்டுப்  பக்கத்துத் தோட்டத்துக்குப் போனாள். அங்கு வேலி ஓரம் இருந்த தங்க அரளி மரத்தில் இருந்து ஐந்தாறு கொட்டைகளைப் பறித்துத் தாவணியில் முடிந்து கொண்டாள். அதை அரைத்துக் குடித்தால் செத்துப் போகலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். கூடவே அது மிகவும் கசக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறாள். யோசித்துக் கொண்டே மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமியிடம்  அம்மாவுக்காகவும் தங்கச்சிக்காகவும் வேண்டிக் கொண்டாள். 
வெளியே வரும்போது எதிர் வீட்டுப் பையன் கதிர்வேலு நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தான். அவனுடைய  ஒரு கால் பிறவியிலேயே போலியோவால் ஊனம். அவன் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருப்பது கமலாவுக்குத் தெரியும். எப்போவாவது சந்தேகம் கேட்க வருவான். 
""என்ன அக்கா, எப்பவும் உங்க அம்மாவோடதான் கோயிலுக்கு வருவே, இப்போ தனியா வந்திருக்கே?'' என்று கேட்டான். 
""எங்கம்மா வர லேட் ஆகும், அதனாலே நானே வந்தே?'' என்று சொல்லிவிட்டுப் போக நடந்தவளுக்கு ஒரு யோசனை வந்தது. 
""ஏங் கதிர்வேலு, நீ எங்க போறே?''

 


""கடைக்குப் போறேங்க்கா''
""சரி கதிர்வேலு, எனக்கு ஒரு உதவி பண்றயா ?''
""என்னக்கா, சொல்லக்கா''
""இந்தா, இந்த ரண்டு ரூபாய்க்குக் கடலை முட்டாய் ரண்டு வாங்கிட்டு வந்து தர்றயா?''
""சரிக்கா''
பணத்தை வாங்கிக்கொண்டு கதிர்வேலு போனான். அவன் திரும்பி வரும் வரை கமலா கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள். அரளி விதையை அரைத்துக்  கடலை மிட்டாயைக் கடித்துக் கொண்டு குடித்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்டாள். இது தான் அந்தக் கிராமத்துத் தற்கொலைக் கலாசாரம்!
கொஞ்ச  நேரத்தில் நொண்டி நொண்டி நடந்து வந்த கதிர்வேலு கொஞ்சம் களைத்துப் போனதால் கடலை மிட்டாயைக் கமலாவிடம் கொடுத்து விட்டுக் கோயில் திண்ணையில் உட்கார்ந்தான்.
உதவி செய்த நன்றிக்காக ஏதாவது பேசவேண்டுமென்று கமலாவுக்குத் தோன்றியது.
""ஏங் கதிர்வேலு, ஊனமானவங்களுக்குன்னு இருக்கற பள்ளிக்கூடத்திலேயும் ஹாஸ்டல்லேயும் உனக்கு இலவச  எடங்கெடச்சுதாமே, அங்கே போனாக் கஷ்டப்படாமே படிக்கலாமே, ஏன் போகலே?''


""போக்கா, இங்க எங்கம்மாவையும்  தங்கச்சியையும்  அனாதையாக் கஷ்டப்பட வுட்டுட்டு, என்னய் மட்டு சொர்க்கத்துக்கு வான்னு கடவுளே  கூப்பிட்டாலும்  நா போக மாட்டேக்கா,  நா கஷ்டப்பட்டுப் படிச்சு வேலைக்குப் போயி, சம்பாரிச்சு, ஒரு வேள சோத்தக் கூட வயிறாரத் திங்காத எங்கம்மாவைக் கஷ்டப்படாமே காப்பாத்தணும், எந் தங்கச்சியப் படிக்க வச்சு, நகை போட்டுக் கல்யாணம் பண்ணி வெக்கணும். அப்பத்தா நா மனுச! நீ வென்னா பாரக்கா,  இந்த நொண்டி செய்து காட்றானா 
இல்லையான்னு!'' 
சொல்லிவிட்டுத் திண்ணையிலிருந்து வேகமாக இறங்கிய கதிர்வேலு வேக வேகமாக நொண்டி நொண்டி  நடந்து போனான். அது கோபமா, வீறாப்பா என்று புரியவில்லை!
விக்கித்துப் போன, வாயடைத்துப் போன கமலா  தன் பார்வையிலிருந்து மறையும் வரை கதிர்வேலுவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 
பத்து வயசுப் பையன் கதிர்வேலு! 
முட்டாள்தனமும் வெட்கமும் மண்டையில் இடிக்க மடியிலிருந்த அரளிக் கொட்டைகளைத் தூக்கி வீசிவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் கமலா.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.