Jump to content

மாகாண சபைத் தேர்தல்களுக்காக -கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்!!


Recommended Posts

மாகாண சபைத் தேர்தல்களுக்காக -கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்!!

 

 

TELO-Logo-1.jpg

 
 
 
 

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்தல் உள்­ளிட்ட வரப் போ­கின்ற தேர் தல்­க­ளுக்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட ­மைப்­பைப் பலப்­ப­டுத்­தவேண்­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அனைத்­துப் பங்­கா­ளிக் கட்­சி­க­ளை­யும் ஓர­ணி­யில் திரட்­ட­வேண்­டும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா ஆகி ­யோ­ரி­டம் நேற்று நேரில் கோரிக்கை விடுத்­துள்­ளது ரெலோ அமைப்பு.

தமிழ்த்  தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை ­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு மான இரா.சம்­பந்­தன், தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா ஆகி­யோரை ரெலோ அமைப்­பின் ஆறு பிர­தி­நி­தி­கள் திரு­கோ­ண­ம­லை­யில் நேற்­றுச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர்.

 

இந்­தச் சந்­திப்­பில் பல விட­யங்­கள் தொடர்­பில் பேசப்­பட்­டுள்­ளது. சம­கால அர­சி­யல் நில­வ­ரங்­கள் தொடர்­பில் இரு தரப்­பி­ன­ரும் ஆராய்ந்­துள்­ள­னர். அர­சி­யல் தீர்­வுக்கு முன்­னு­ரிமை கொடுத்­துச் செயற்­ப­ட­வேண்­டும் என்று ரெலோ அமைப்­புக் கோரி­யுள்­ளது. அதற்கு சம்­பந்­தன் இணங்­கி­யுள்­ள­து­டன், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை விளக்­கி­யுள்­ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒருங்­கி­ணைப்­புக் குழு­வைக் கூட்­டு­மாறு ரெலோ அமைப்­புக் கேட்­டுக் கொண்­டுள்­ளது. எதிர்­வ­ரும் 10ஆம் திகதி கொழும்­பில் அந்­தச் சந்­திப்பை நடத்­து­வ­தற்கு இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.

வடக்கு – கிழக்கு மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் உள்­ளிட்ட வரப்­போ­கின்ற தேர்­தல்­க­ளுக்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்­த­வேண்­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அனைத்­துப் பங்­கா­ளிக் கட்­சி­க­ளை­யும் ஓர­ணி­யில் திரட்­ட­வேண்­டும் என்று ரெலோ அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

வடக்கு – கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்­த­லுக்­கான கூட்­ட­மைப்­பின் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே அறி­விக்­க­வேண்­டும் என்­றும் ரெலோ அமைப்பு இந்­தச் சந்­திப்­பில் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

ரெலோ சார்­பில், அந்­தக் கட்­சி­யின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், செய­லர் ந.சிறீ­காந்தா, நிர்­வா­கச் செய­லர் நித்தி மாஸ்­ரர், மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், முன்­னாள் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான கோவிந்­தன் கரு­ணா­க­ரம் (ஜனா), பிர­சன்னா இந்­தி­ர­கு­மார் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

இதே­வேளை, வெலிக்­க­டைச்­சிறை படு­கொ­லை­கள் நினை­வஞ்­ச­லிப் பொதுக் கூட்­டம் கர­வெட்­டிப் பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது.

இங்கு உரை­யாற்­றிய ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறீ­காந்தா, முன்­னாள் தீவி­ர­வாத இயக்­கங்­கள், முன்­னாள் போராட்ட இயக்­கங்­கள், ஆயு­தம் தாங்கி அரசை அசைத்த இயக்­கங்­கள், ஜன­நா­யக வழியே ஒரே நிலைப்­பாட்­டில் நிற்­கக் கூடி­ய­தாக இருந்­த­தால் மற்­ற­வர்­க­ளும் இணைந்­தி­ருப்­பார்­கள். ஆனால் நாங்­கள் பிள­வு­பட்டு நிற்­கின்­றோம்.

முன்­னாள் தீவி­ர­வாத இயக்­கங்­கள் பிள­வு­பட்டு நிற்­கின்­றது. எங்­கள் சிந்­த­னை­கள் மாறி­விட்­டது. எங்­கள் இலக்­கு­கள் மாறி­விட்­டது. திசை மாறிய பற­வை­க­ளாக இன்­றைக்கு நாங்­கள் நிற்­கின்­றோம். மிகத் தாழ்­மை­யாக நான் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­வது, எதிர்­வ­ரும் டிசெம்­பர் வரை­யிலே பொறுத்­தி­ருக்­க­லாம்.

அதற்­குப் பின்­னர் தமி­ழீழ விடு­தலை இயக்­கம் (ரெலோ) சுய­மாக சில முடி­வு­கள் எடுக்­கத் தள்­ளப்­ப­டும். அந்த முடி­வு­களை நாங்­கள் விவா­திப்­போம். கூட்­டாக எடுப்­போம். தமிழ்க் கூட்­ட­மைப்­புக்­கும் முன்­வைப்­போம். அதற்கு இடை­யிலே தமிழ்த் தேசி­யத்தை முன்­நி­றுத்­து­கின்ற முன்­னாள் தீவி­ர­வாத அமைப்­புக்­கள் அனைத்­தை­யும் ஒன்­று­ப­டுத்த முடி­யுமா என்று நாங்­கள் சிந்­தித்­துச் செயற்­ப­டு­வோம் – என்று தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/09/மாகாண-சபைத்-தேர்தல்களுக்காக-கூட்டமைப்பை-பலப்படுத்த-வேண்டும்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.