Jump to content

50 ஆண்டுகள் கடந்தும் மவுசு குறையாத தில்லானா மோகனாம்பாள்


Recommended Posts

50 ஆண்டுகள் கடந்தும் மவுசு குறையாத தில்லானா மோகனாம்பாள்


 

 

thillana-mohanambal-50

 

 

 

தில்லானா மோகனாம்பாள் என்ற பெயரைக் கேட்டவுடனேயே சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் நாகேஷும் ஜில்ஜில் ரமாமணியாகிய மனோரமாவும் கண் முன்னே மின்னல் வேகத்தில் பளிச்சிடுவர். அந்தக் காலத்து மனிதர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி உபயத்தால் இந்தக் கால இளைஞர்களுக்கும் கூட இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் பரிச்சியம்தான்.

நிகழ்த்துக் கலைஞர்களின் கலையையும் அவர்கள் வாழ்க்கையையும் சேர்த்து சுவாரஸ்யமாக ஒரு களம் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாளின் வெற்றி மந்திரம். தமிழ்த் திரையுலகில் அத்தகைய கலைஞர்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். 

 

தில்லானா மோகனாம்பாள் வழியில் கரகாட்டக்காரன் சங்கமம் என்று படங்கள் வந்திருந்தாலும் இனி எதிர்காலத்தில் வந்தாலும் இந்த அளவுக்கு மக்கள் கொண்டாடும் கலையாக இருக்குமா என்று இப்போதே உறுதியாகக் கூறிவிட முடியாது.
இரண்டு தேசிய விருதுகள் , 5 மாநில விருதுகள் 1968 ஜூலை 28-ல் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால் அந்தத் திரைப்படத்துக்கான மவுசு சற்றும் குறையவில்லை. காரணம், கதையம்சம். கொத்தமங்கலம் சுப்பு ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதிய கதைதான் பின்னாளில் தில்லானா மோகனாம்பாள் என ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியானது. இந்தக் கதைக்கு கோபுலு ஓவியங்களை வரைந்திருப்பார். இன்றைக்குகூட அந்தத் தொடரை எடுத்துப் பார்த்தால் ஓவியமாக இருக்கும் வடிவாம்பாளும் வைத்தியும் திரைக்கதையில் வரும் சி.கே.சரஸ்வதியுடனும் நாகேஷுடனும் அப்படிப் பொருந்திப் போயிருப்பார்கள்.

காதலும் மோதலும் பின் சேர்தலும்..
நாதஸ்வர வித்வானான சிக்கல் சண்முகசுந்தரத்துக்கும் (சிவாஜி கணேசன்) பரதநாட்டியக் கலைஞரான மோகனாம்பாளுக்கும் (பத்மினி) பார்த்தவுடனேயே இதயங்கள் இடம் மாறிவிடுகின்றன. இதயம் சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை கண் ஜாடைகளாலும் உதட்டு சுளிப்புகளாலும் தத்தம் கோஷ்டியினர் தூதுமொழிகளாலும் காதல்ரசமாக வழிந்தோடச் செய்திருப்பார் ஏ.பி.நாகராஜன். ஆனால், எல்லா உறவுச்சிக்கல்களுக்கும் பின்னணியாக இருக்கும் புரிதல் குறைபாடே இவர்கள் பிரிவுக்கும் காரணமாக அமைந்துவிட பிரிந்த இதயங்கள் இணைவதே மீதிக் கதை.
இடையிடையே நலம் தானா நலம் தானா... மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன... பாடல்களும் அதற்கான பாவனைகளும் கண் மூடினால் காட்சியாக விரியும். அத்தனை நேர்த்தியாக செதுக்கப்பட்ட திரைப்படம். இப்படிப்பட்ட கலையைப் பற்றி ஒரு தீவிர சினிமா ரசிகர் கூறிய விவரங்கள் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தன.

1532762693.jpg

சிந்தாமணி தியேட்டரும் தில்லானாவும்...
தில்லானா மோகனாம்பாளைப் பற்றி பேசும்போது அதன் ரசிகர் ஒருவரின் அனுபவத்தை இங்கே பகிர்வதும் மிகப் பொருத்தமாக இருக்கும். மதுரையைச் சேர்ந்தவர் கணேசன். சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தில்லானாவை அவ்வளவு அழகாக சிலாகிக்கிறார்.
"தில்லானா மோகனாம்பாள் சென்னையில் சாந்தி, கிரவும் புவனேஸ்வரி திரையரங்குகளில் வெளியானது. மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் வெளியானது. எனக்கு வயது அப்போது 15 இருக்கும். முதல் நாள் முதல் காட்சிக்கே என் நண்பர்களுடன் சென்றுவிட்டேன். ஈஸ்ட்மேன் கலரின் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்த பிரம்மாண்டத்தில் மூழ்கிப்போனேன். இப்போதுகூட திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தது மனதில் பசுமையாக இருக்கிறது.
சிக்கல் சண்முகசுந்தரம், மோகனாம்பாள், 'கலியுக நந்தி' முத்துராக்கு, கருப்பாயி (எ) 'ஜில் ஜில்' ரமாமணி, 'சவடால்' வைத்தி, 'மதன்பூர்' மகாராஜா, சிங்கபுரம் மைனர், வடிவாம்பாள், நாகலிங்கம், நர்ஸாக வரும் பானுமதி எல்லோருமே என் ஆழ்மனதில் வாழ்கின்றனர். நண்பர்களுடன் ஒரு முறை அப்புறம் தனியாக இரண்டு முறை என மூன்று முறை அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

இப்போதும் சிந்தாமணி தியேட்டர் இருந்த இடம் வழியாகச் செல்லும்போதெல்லாம் எனக்கு தில்லானா பாடல்தான் காதில் ஒழிக்கும். தில்லானாவை அவ்வளவு பிடிக்கும் என்பதாலேயே சிந்தாமணி தியேட்டரையும் அவ்வளவு பிடிக்கும்.
காலத்தால் அழியாத கலையைத் திரையிட்ட அந்தக் கலைக்கூடம் இன்றைக்கு இல்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது. இன்று கீழமாசி வீதியில் சிந்தாமணி இல்லை ஆனால் என் நினைவுகளில் இருந்து தில்லானா மோகனாம்பாள் இன்னும் சிந்தவில்லை.

மதுரைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது!
மதுரைக்கும் தில்லானா மோகனாம்பாளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நலம்தானா?.. நலம்தானா?.. உடலும் உள்ளமும் நலம்தானா என்ற பாடலில் சுசீலாவின் குரல் இனிமைக்கு சற்றும் குறையாமல் இனித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வரத்தைக் கேட்டிருப்பீர்கள். அந்த இனிய இசையை வழங்கியவர்கள், நாதசுரக் கலைஞர்களான திருவாளர்கள் மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள். தனது தந்தை நடேசன் பிள்ளையிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது ஏழாவது வயதில் தந்தை, மூத்த அண்ணன் எம்.பி.என். சேதுராமன் இவர்களுடன் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதியில் நாதசுவரம் வாசிக்கத் தொடங்கினார். பின்னாளில் இந்த விஷயம் தெரிந்தபோதிலிருந்து தில்லானா மனதுக்கு இன்னும் நெருக்கமாகிவிட்டது.

மதுரையில் சினிமா ரசிகர்கள் அதிகம். திரைப்பட ரிலீஸை நாங்கள் எல்லோரும் திருவிழா போல் கொண்டாடுவோம். பல முன்னணி இயக்குநர்கள் நட்சத்திரங்கள்கூட பட ரிலீஸுக்குப் பின் மதுரையில் என்ன ரிசல்ட் என்று கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால்தான் ஜூலை பிறந்தவுடனேயே எனக்கு இது தில்லானா மோகனாம்பாள் வந்த 50-வது ஆண்டு என்பது நினைவுக்கு வந்தது. என் அனுபவத்தில் தில்லானாவுக்கு நிகராக நான் ஒரு படத்தைப் பார்த்ததில்லை. இனியும் நிச்சயமாக அப்படியொரு படத்தை எடுக்க முடியாது. அந்தப் படத்தின் கதை அப்படி நடிகர்கள் அப்பேர்பட்டவர்கள். அத்தகைய கூட்டணி இனி சாத்தியமில்லை.

கணேசன் அப்படிக் கூறிச் சென்றபோது நான் என் வயதில் பார்த்த கரகாட்டக்காரன் ஓரளவுக்கு ஏனும் நிகழ்த்துக் கலைஞர்களின் உணர்வுகளையும் வாழ்வையும் சினிமாத் தனமில்லாமல் காட்சிப்படுத்தியது என்றே தோன்றியது.
இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லானா மோகனாம்பாள் 100 என்று இளம் தலைமுறையினர் யாராவது எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

https://www.kamadenu.in/news/special-articles/4366-thillana-mohanambal-50.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

சிவாஜியின் நடிப்புக்கு ஒரு படம்!

 

 
sivajijpg

நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் காலந்தோறும் நம்மைக் கடந்துசெல்கின்றன. ஆனால் சில பல படங்களே கதாபாத்திரங்களுக்காகத் தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுகின்றன. அந்த வரிசையில் 50 ஆண்டுகளைக் கடந்து நம் நினைவில் நிற்பவை ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் நாயகன் ‘சிக்கல்’ சண்முகசுந்தரமும் நாயகி ‘தில்லானா’ மோகனாம்பாளும். ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் உலகத்தர நடிப்புத் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பல கதாபாத்திரங்களில் சண்முகத்துக்குத் தனியிடம் உண்டு.

நாத பிரம்மம் தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு அமைந்திருப்பது காவிரிக் கரையில். பரதக் கலையின் இருபெரும் முறைகளாகச் சொல்லப்படும் பந்தநல்லூர், வழுவூர் ஆகிய ஊர்கள் அமைந்திருப்பதும் காவிரிப்படுகையில்தான். அதனால்தானோ என்னவோ, ‘தில்லானா மோகானாம்பாள்’ படத்தின் நாயகி மோகனா திருவாரூரைச் சேர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அதேபோல் நாயகன் சண்முகசுந்தரம் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரைச் சேர்ந்தவர்.

 

பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோபமும் தொழில் கர்வமும் கொண்டவர்கள் என்ற கருத்து உண்டு. அதற்கு வலுச்சேர்க்கும் கதாபாத்திரங்களாக வடிக்கப்பட்டவர்கள்தாம் சண்முகமும் மோகனாவும். அதிலும் சண்முகம் உண்மையிலேயே மனத்தளவில் சிக்கலார்தான்.

தன் தொழிலின்மேல் அபார பக்தி, தன் திறமைமேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்துக்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோதத் தயங்காத குணம், தான் நேசிக்கும் பெண் மீது வைக்கும் அளவுகடந்த அன்பு, அவள் தனக்கு மட்டுமே உரியவள் என்ற உணர்ச்சி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சராசரி மனிதனுக்குரிய பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான எளிய ஆனால், திறமையான கலைஞனே சிக்கல் சண்முகசுந்தரம்.

பல கம்பீரமான கதாபாத்திரங்களைத் தனது விஸ்தாரமான நடிப்பால் உயிர்பெறச் செய்த சிவாஜி கணேசன், ‘சிக்கல்’ சண்முகசுந்தரம் என்ற கதாபாத்திரத்தின் இந்த நுணுக்கமான உணர்வுகளைத் திரையில் வெளிப்படுத்தியவிதம்தான் இன்றும் இயல்பும் நம்பகமும் மிகை அற்றதுமாக இருக்கிறது.

மீண்டும் பார்க்கத் தூண்டிய காட்சி

முதன்முதலாகக் கோயிலில் கச்சேரி செய்துகொண்டிருக்கும்போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவைப் பார்த்தவுடன் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே பாலையாவிடம் அதைச் சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் முதல் பார்வையிலேயே தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாத, பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று மிகக் குறைந்த நடிப்பால் கதாபாத்திரத்தை நிறுவிவிடுவார் சிவாஜி கணேசன். காதல், கோபம் கர்வம் என உணர்ச்சிகள் தனித்தனியாகவும் கலவையாகவும் முகபாவங்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.

கதையின் நாயகன் என்றாலும் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான நாயகன் அல்ல, சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு மோகனாவின் நாட்டியத்தைப் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரைப் போகக் கூடாது எனத் தடுத்துவிட்டாலும் மனத்தின் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் நிகழ்ச்சிக்குப் போய் மறைந்திருந்து பார்க்கும் காதல் வயப்பட்ட சண்முகம் எனும் ஒரு சக கலைஞனைச் சிவாஜி வெளிக்கொண்டு வரும் விதம் உணர்வுகளின் ஊர்வலமாக இருக்கும்.

அந்தக் காதலின் உணர்ச்சிக் குவியலை ரயில் பயணக் காட்சியில் காணலாம். ஒரே ரயிலில் மோகனாவுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மோகனா வரும்வரை பல ரயில்களைத் தவறவிடுவதும், அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும்   பொங்கிப் பெருகும் காதலை வெளிப்படுத்துவதுமான அந்தக் காட்சி ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

பாலையா துணையுடன் ரயில்பெட்டியின் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சிக்காகவும் ‘நலந்தானா’ பாடலுக்காகவும் இந்தப் படத்தை 20 முறைக்கும் அதிகமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.

sivaji%202jpg
 

பலவீனங்களின் முழுமை!

திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை மறைக்க சண்முகம் முற்படுவார். ஆனால், அது பாலையாவுக்குப் புரிந்துவிட, அந்தத் தர்மசங்கடத்தைக் கோவப்படுவது போல் சிவாஜி காட்டும் வெட்க உணர்ச்சியை உச்சி முகர்ந்துகொள்ளலாம். சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியைப் பார்த்ததும் சண்முகத்துக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது.

‘ஒரு பெண் கலைஞரைக் கலைஞராக மட்டுமே பார்’ என்ற அசலான கலைஞனின் தார்மீக கோபம் அது. ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் கதை நடப்பது சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம். அன்று நாட்டியப் பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பிற்போக்கான பார்வை. அந்தச் சூழலில் வளர்ந்த சண்முகத்துக்கு அதேபோன்ற சந்தேகம் வருவதுபோல் காட்சி அமைத்தது ‘சிக்கல்’ சண்முகசுந்தரம் கதாபாத்திரத்துக்கான பலகீனங்களின் முழுமையை வெளிக்காட்டுகிறது.

படம் முழுவதும் வரக்கூடிய காதல் வயப்பட்ட எளிய கலைஞனாகிய சண்முகத்துக்கும், ‘ஜில் ஜில்’ ரமாமணியின் கொட்டகையில் இருக்கும்போது வெளிப்படும் சண்முகத்துக்கும் மெல்லிய வேறுபாட்டைக் காணலாம். ரமா மணியிடம் கோபதாபம் இல்லாத, திறமை குறித்த கர்வம் இல்லாத மனம்விட்டுச் சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம். “குறையில்லாத மனுஷன் ஏது ஜில்லூ?” எனக் குழந்தையாய் கேட்கும் சண்முகத்தை இயல்பின் அருகில் சென்று வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி.

அமரகாவியம்

ஆடல் முடிந்து, மோகனா மயங்கிச் சரிந்தவுடன் அவருக்கு ‘தில்லானா’ பட்டம் கொடுக்கும் காட்சி. பேச்சு வராமல் தயங்கித் தயங்கி வார்த்தைகளைத் தேடி பேசுவார். சண்முகத்துக்கு மேடை புதியதல்ல, ஆனால், மேடைப் பேச்சு புதிது. அதனால் வந்த தடுமாற்றம். அந்தக் கதாபாத்திரத்தை எத்துனை உள்வாங்கியிருந்தால் சிவாஜியால் இப்படி ஒரு வெளிப்படுத்துதலைச் சாத்தியப்படுத்தியிருக்கமுடியும்.

‘நலந்தானா’ பாடல் காட்சியில் சிவாஜியின் நடிப்புபற்றித் தனிக்கட்டுரையே எழுதலாம். ‘கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன்’ என்ற வரிகளின்போது கண்கள் சிவந்து, நீர் பெருக்கி, ஒரு சின்ன தலையாட்டலில் ‘எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதை நான் உணர்ந்திருக்கிறேன்’ என்று காதலின் ஆழத்தை அவர் வெளிப்படுத்தும் பாங்கு, ஈடு இணை இல்லாத சிவாஜியின் நடிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

‘தில்லானா’ மோகனாம்பாள்’ ஒரு காதல் கதை. கலையால் இணைந்த இரு உள்ளங்கள் காதலில் இணைய எதிர்கொள்ளும் போராட்டங்கள்தாம் கதை. ஆனால், கதையின் பின்புலமாக இசையும் நடனமும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுக்கும் ஒரு அங்கமாக மாறிவிடுகின்றன. இருப்பினும் அதையும் மீறி நடிகர்களின் நடிப்புத் திறமையே நடனமும் இசையும் மேலும் துலங்க களமாக அமைந்துவிடுகின்றன. இந்தத் தலைமுறையில் ‘தில்லானா மோகனாம்பாள்’ மறுஆக்கம் செய்யப்பட நடிகர்கள் இல்லாததால் இந்த நிமிடம்வரை அது சாத்தியமற்று இருக்கிறது அமரகாவியமாக.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24580868.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.