Jump to content

3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்


Recommended Posts

3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

 

 

செயிண்ட் கிட்சில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 302 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #WIvBAN

 
 
 
 
3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
 
செயிண்ட் கிட்ஸ்:
 
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. 
 
முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசமும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில், செயிண்ட் கிட்ஸ் நகரில் வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
 
டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் களமிறங்கினர்.
 
தொடக்கம் முதலே தமிம் இக்பால் பொறுப்புடன் ஆடினார். அனமுல் 10 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 37 ரன்னிலும் முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிதானமாக ஆடிய தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய மகமதுல்லா 49 பந்துகளில் 67 ரன்கள் அடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி  வருகிறது. #WIvBAN

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/28234433/1179972/west-indies-needs-302-runs-against-bangadesh-in-third.vpf

 

4.png&h=42&w=42

63/1 * (12/50 ov, target 302)

 

Link to comment
Share on other sites

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது வங்காளதேசம்

 

செயிண்ட் கிட்சில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காள தேசம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. #WIvBAN

 
 
 
 
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது வங்காளதேசம்
 
செயிண்ட் கிட்ஸ்:
 
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசமும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது.
 
டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் களமிறங்கினர்.
 
அனமுல் 10 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 37 ரன்னிலும் முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்னிலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய மகமதுல்லா 67 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின்  லெவிசும் இறங்கினர்.
 
லெவிஸ் 13 ரன்னிலும், கெயில் 73 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஷா ஹோப் 64 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் 74 ரன்னும் எடுத்தனர்.
 
மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 283 ரன்களுக்கு எடுத்து தோல்வி அடைந்தது. 
  
இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. #WIvBA

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/29035049/1179985/bangladesh-won-by-18-runs-against-west-indies-one.vpf

Link to comment
Share on other sites

9 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி: மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

 

 

 
tamim

சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் தமிம் இக்பால்   -  படம் உதவி: ட்விட்டர்

தமிம் இக்பாலின் அபார சதத்தால், செயின்ட் கிட்ஸ் நகரில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது வங்கதேசம் அணி.

கடந்த 9 ஆண்டுகளுக்குப்பின், ஆசிய கண்டத்துக்கு பின் வெளியே, வங்கதேசம் அணி வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், மேற்கிந்தியத்தீவுகளில் வங்கதேசம் வெல்லும் 2-வது ஒருநாள் தொடர் மற்றும் ஒட்டுமொத்தமாக அந்த அணிக்கு எதிராக வங்கதேசம் வெல்லும் 3-வது தொடர் இதுவாகும்.

   
 

இதன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தோல்வி கடந்த 4-வது ஆண்டாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மேற்கிந்தியத்தீவுகள் அணி, எந்த நாட்டுக்கு எதிராகவும் எந்த தொடரையும் வெல்ல முடியாமல் திணறிவருகிறது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 124 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். தமிம் இக்பால் இந்த ஒருநாள் தொடரில் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். இவரின் சதமே வங்கதேசம் அணி இமாலய ஸ்கோரை எட்டவும், வெற்றி பெறவும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை இக்பால் பெற்றார்.

டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக வங்கதேசம் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

302 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

வங்கதேசம் தரப்பில் தமிம் இக்பால், இமானுல் ஹக் ஆட்டத்தைத் தொடங்கினர். இமானுல் ஹக் 10 ரன்களில் நடையைக் கட்டினார். 2-வது விக்கெட்டுக்கு வந்த சகிப் அல்ஹசன், இக்பாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். சிறப்பாக ஆடிய இக்பால் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

2-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தபோது, 37 ரன்களில் சகிப் அல்ஹசன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முஸ்பிகுர் ரஹிம் 12 ரன்களில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு மகமதுல்லாவுடன் சேர்ந்தார் இக்பால். இருவரும் ரன்களை வேகமாகச் சேர்த்தனர்.

120 பந்துகளில் தமிம் இக்பால் இந்த தொடரில் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். அடுத்து சில நிமிடங்கள் நீடித்த அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மோர்தசா 36 ரன்கள் ,சபிர் ரஹ்மான் 12 ரன்களில் வெளியேறினார்கள். அதிரடியாக ஆடிய மகமதுல்லா 44 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

50 ஓவர்கள் முடிவில் மகமதுல்லா 67 ரன்களுடனும், ஹூசைன் 11ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் நர்ஸ், ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

302 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் வீர்கள் கெயில், லிவிஸ் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். 53 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு சேர்த்த நிலையில், லீவிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹோப், கெயிலுடன் இணைந்தார்.

gaylejpg

அதிரடியாக பேட் செய்த கெயில்

 

அதிரடியாக பேட் செய்த கெயில் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். 66 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து கெயில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

ஹோப் 94 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார். நடுவரிசையில் களமிறங்கிய ஹெட்மேயர் 30 ரன்கள், ஆன்ட்ரூ பாவெல் 4 ரன்களில் வெளியேறினார்.

டி20 போட்டி போன்று அதிரடியாக ஆடிய ரிக்கார்டோ பாவெல் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், இவருக்கு உறுதுணையாக பேட் செய்ய அடுத்தடுத்துவீரர்கள் இல்லை. ஜேஸன் ஹோல்டர் 9 ரன்களில் வெளியேறினார். நர்ஸ் 5 ரன்களுடனும், பாவெல் 44பந்துகளில் 71 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

mortasajpg

வங்கதேச வீரர் மோர்தாசை பாராட்டும் சகவீரர்

 

50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்தது. வங்கதேசம் தரப்பில் மோர்தசா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

https://tamil.thehindu.com/sports/article24546035.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bangaladesh 60/0 * (4.2/20 ov)

வங்களாதேஸ் நாய் பேயடி அடிக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.