Jump to content

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!


Recommended Posts

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!

 

'அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது' என்று சொல்லப்படவே, உடனே ஓ.பி.எஸ். தனக்கு தெரிந்தவர்களிடம் தனியார் ஏர் ஆம்புலன்ஸை புக் பண்ண சொல்லியுள்ளார். அது உடனே கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், ராணுவ ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளார்.

ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்!
 

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விவகாரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கு சிக்கலைத் தரும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. 'இருவரும் ராஜினாமா செய்யவேண்டும்; சாதாரண மக்களாக இருந்தால், இதுபோல் செய்வீர்களா?' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பி.ஜே.பி-யிலும், ஓ.பி.எஸ்ஸூக்கு எதிராக அ.தி.மு.க-விலும் இப்பிரச்னை தொடர்பாக, உள்ளடி வேலைகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

மதுரையில் கடந்த வருடம் நடந்த அ.தி.மு.க. விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் திட்டமிட்டு பெயர்ப்பலகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் புறக்கணிக்கப்பட்டது, கட்சிக்குள் மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போது, மதுரையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலரிடம் ''இங்கு உள்ளவர்கள் எனக்கு முக்கியத்துவம் தராதது பற்றி கவலையில்லை. மத்திய அரசுக்கு நான்தான் செல்லப்பிள்ளை. அவர்கள் என்னைத்தான் முதலமைச்சராகப் பார்க்கிறார்கள். டெல்லி சென்றால் பிரதமர், மத்திய அமைச்சர்களை என்னால் உடனடியாகச் சந்திக்க முடியும்'' என்று பெருமையாகக் கூறினார். அப்படிப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், ஜூலை 24-ம் தேதி டெல்லி சென்றபோது, அவரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அதை ட்விட்டரிலும் பதிவிட்டார். ஓ.பி.எஸ்ஸிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் மீது நிர்மலா சீதாராமன் கோபமாக இருக்கிறார். அவரைக் கூல் படுத்தலாமே என்று நினைத்து, 'தம்பியின் சிகிச்சைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியதற்கு நன்றி சொல்ல வந்தேன்' என்று ஊடகத்தினருக்கு பன்னீர் அளித்த பேட்டியை, இவ்வளவு பெரிய விவகாரமாக்குவார்கள் என்று அவர் நினைக்கவில்லை.

ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

 

 

'பேரிடர் காலத்திலும், போர்ச்சூழலிலும் மட்டுமே ராணுவத்திலுள்ள ஏர் ஆம்புலன்ஸ்களைப் பயன்டுத்த முடியும். தனி நபர்கள் பயன்டுத்திக்கொள்ள விதிகளில் இடமில்லை' என்று ஒரு தரப்பும், 'வி.ஐ.பி-க்கள் நினைத்தால், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அவசர நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 1-ம் தேதி, மதுரைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வந்தது ஏன் என்பது பற்றிப் பார்ப்போம்.

 

 

ஓ.பி.எஸ்ஸுக்கு ராஜா, பாலமுருகன், சண்முக சுந்தரம் என்று மூன்று தம்பிகள். இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன், அரசியல் கூட்டங்களில் தலைகாட்ட மாட்டார். விவசாயம், ஃபைனான்ஸ் என்று தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஓ.பி.எஸ்ஸுக்கு இவர் மீது மிகுந்த பாசம். சமீபகாலமாக இதயநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை கடந்த 1-ம் தேதியன்று மிகவும் சீரியஸானது. உடனே அவரை மதுரை அப்போலோவுக்குக் கொண்டுவந்தனர். அங்கு தீவிர சிகிசைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அன்று கட்சி நிகழ்ச்சியில் வெளியூரில் இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் உடனே அப்போலோ சி.இ.ஓ. ரோஹினியிடம் பேசி, தன் தம்பிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஓ.பி.எஸ். தம்பி, மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோருக்குத் தெரியாது. மதுரையிலுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களில் இரண்டு பேர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்தனர். அதில் எஸ்.எஸ். சரவணன், எடப்பாடி அணிக்கு போய்விட்டார். மிச்சம் இருப்பது சோழவந்தான் மாணிக்கம் மட்டுமே. அதனால், மதுரையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் என்று யாருமில்லை. அதனால் ஓ.பி.எஸ். தம்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல், அரசல் புரசலாக வெளியில் தெரிந்தும் கட்சி நிர்வாகிகள் யாரும் சென்று பார்க்கவில்லை.

இந்த நிலையில் பாலமுருகனின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டு போனது. மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் அல்லது சென்னை அப்போலோவுக்குக் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை மருத்துவர்கள் கூற, உடனே ஓ.பி.எஸ்., 'சென்னை அப்போலோவில் அட்மிட் செய்யுங்கள்' என்று கூறிவிட்டார். அதேநேரம், 'அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது' என்று சொல்லப்படவே, உடனே ஓ.பி.எஸ். தனக்கு தெரிந்தவர்களிடம் தனியார் ஏர் ஆம்புலன்ஸை புக் பண்ண சொல்லியுள்ளார். அது உடனே கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், ராணுவ ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளார். இதற்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் குரங்கணி மலையில் தீ விபத்து ஏற்பட்டபோது, நிர்மலா சீதாராமனால் அனுப்பி வைக்கப்பட்ட விமானப்படையைச் சேர்ந்த மீட்பு ஹெலிகாப்டர்கள், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதை நேரில் பார்த்திருந்தார். அதை நினைவில் வைத்தே, நிர்மலா சீதாராமனிடம் உதவி கோரினார். இதையடுத்து உடனே அதற்கு ஏற்பாடு செய்தார் மத்திய அமைச்சர். இந்த ஏற்பாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே தெரியாதாம். இது சம்பந்தமாக அவரிடம் எந்த உதவியும் ஓ.பி.எஸ். கோரவில்லை. 

 

 

ஓ.பாலமுருகன்

அன்று மாலை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பெங்களூரிலிருந்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட அப்போலோவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் 20 நிமிடத்தில் விமான நிலையத்தின் பாதுக்காக்கப்பட்ட வழியாக ரன்-வேக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் பாலமுருகனின் குடும்பத்தினரும் சென்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ஒருவர் கொண்டு செல்லப்பட்டது இதுவே முதல்முறை. இந்த விஷயம் விமான நிலைய அதிகாரிகளுக்குக் கடைசி நேரத்தில்தான் தெரியவந்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு வந்ததால், எந்தக் கேள்வியும் கேட்காமல் சோதனையும் செய்யாமல் அனுப்பி வைத்தனர். "மிக முக்கியமானதாகக் கருதப்படும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்குக்கூட ராணுவ ஹெலிகாப்டர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை" என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். 

ராணுவ ஹெலிகாப்டரில் ஓ.பி.எஸ். தம்பி கொண்டு செல்லப்பட்ட விவகாரம், அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாம். ஓ.பி.எஸ் உடன் முறைத்துக் கொண்டிருந்த மற்றொரு தம்பி ஓ.ராஜா கூட அதன் பின்னர் அவருடன் ராசியாகி விட்டாராம். சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்ட பாலமுருகனை, எடப்பாடி, உட்பட அமைச்சர்கள் வந்து பார்த்தபோதுதான், அவரை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வந்ததை ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ். நேரடித் தொடர்பு வைத்திருப்பதைப் பார்த்து, அப்போதே அதிர்ந்திருக்கிறார் எடப்பாடி. தம்பியின் உடல்நிலை ஓரளவு தேறிவந்த நிலையில்தான், இதுவரை பாதுகாத்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் ரகசியத்தை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

https://www.vikatan.com/news/politics/132328-opaneerselvam-opens-up-about-military-ambulance-issue.html

Link to comment
Share on other sites

எடப்பாடியால் அவமானப்பட்ட பன்னீர்!

 
 

 

‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்பதை, ஜூலை 23-ம் தேதி மேற்கொண்ட திடீர் டெல்லி பயணம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உணர்த்தியிருக்கிறது.

‘பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி போகிறார் பன்னீர். முக்கியமான சந்திப்புகளை நிகழ்த்துகிறார்’ என்ற செய்திகளை, அவர் விமானம் ஏறுவதற்கு முன்பாகவே சேனல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தன. அடுத்தடுத்து ரெய்டுகள் நடந்த சூழலில் பன்னீர் டெல்லி கிளம்பியதால், முதல்வர் எடப்பாடிக்கும் அவருக்குமான மோதல் குறித்த தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால், ‘‘டெல்லியில் பன்னீரை அவமானப்படுத்த இதைச் சரியான சந்தர்ப்பமாக எடப்பாடி பயன்படுத்திக் கொண்டார்’’ என்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.

ஜூலை 23 திங்கள்கிழமை இரவு கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சகிதமாக டெல்லி வந்த பன்னீரை, முதல்வருக்கு இணையாக விமான நிலையத்திலேயே மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி-க்கள் மலர்க்கொத்துகளுடனும் சால்வைகளுடனும் வந்து வரவேற்றனர். நேராக தமிழ்நாடு இல்லம் வந்தவர், இரவு விருந்துக்கு மைத்ரேயன் வீட்டுக்குச் சென்றார். அன்று வேறு எந்தச் சந்திப்புகளும் நடைபெறவில்லை. ‘‘அமித் ஷாவைச் சந்திப்பதாக எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், ‘பன்னீரைப் பார்க்க அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை’ என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் வதந்தி கிளப்பினார்கள்’’ என்று பன்னீர் ஆதரவு எம்.பி-க்கள் சிலர் புலம்பினர்.

p6a_1532689429.jpg

மறுநாள் காலையில் தம்பிதுரையும், வேறு சில எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு முன், தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து பன்னீரைச் சந்தித்துவிட்டுச் சென்றனர். காலையிலேயே, ‘‘பிற்பகல் 2.30 மணிக்குப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை பன்னீர் சந்திக்கவிருக்கிறார்’’ என்பது செய்தியாளர்களுக்குச் சொல்லப்பட்டது. ‘எதற்காக இந்தச் சந்திப்பு’ என்று டெல்லி செய்தியாளர்களுக்குக் கேள்வி எழ, அதற்கு விடை சென்னையில் கிடைத்தது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கக்குட்டிக்கு ‘ஜெயா’ எனப் பெயர் சூட்டிய எடப்பாடி பழனிசாமி, எதிர்பாராதவிதமாக நிருபர்களைச் சந்தித்தார். பன்னீரின் டெல்லி விசிட் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்காகவே காத்திருந்ததுபோல பதில் சொன்னார் எடப்பாடி. ‘‘துணை முதல்வர் டெல்லிக்குத் திடீரென்று போகவில்லை. அவர் தம்பி உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் இருந்தபோது, உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்து, குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்னை மருத்துவமனையில் அவரைச் சேர்க்க உதவினார், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்கு நன்றி தெரிவிக்கவே அவர் டெல்லி சென்றிருக்கிறார்’’ என்றார் எடப்பாடி.  

இதற்கிடையே தமிழ்நாடு இல்லத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு நிர்மலா சீதாராமனைச் சந்திக்கப் புறப்பட்டார் பன்னீர். எடப்பாடி பிரஸ்மீட் விஷயம் அப்போது பன்னீருக்குத் தெரிந்துவிட்டது. எனவே, தமிழ்நாடு இல்ல வாசலில் இருந்த செய்தியாளர்கள், ‘‘எதற்காக இந்தச் சந்திப்பு என இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுச் செல்லுங்களேன்’’ என்று கேட்டபோது அவர் மறுக்கவில்லை. ‘‘இது அரசு முறை சந்திப்பு இல்லை. தனிப்பட்ட சந்திப்பு. என் தம்பிக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் வழங்கி உதவியதற்கு நன்றி சொல்லவே வந்தேன்’’ என்று சொல்லி விட்டு நேராகப் பாதுகாப்பு  அமைச்சகத்துக்குச் சென்றார். ‘யார் யார் அமைச்சரைச் சந்திக்க வருகிறார்கள், எந்த எண் கொண்ட வாகனங்களில் வருகிறார்கள்’ என்பதை நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு ஏற்கெனவே மைத்ரேயன் தரப்பிலிருந்து வழங்கியிருந்தனர். இதனால் அவர்கள் சென்ற வாகனங்கள் சோதனைக்குப் பின் உடனே அனுமதிக்கப்பட்டன. அப்போது மணி பிற்பகல் 2.15. ஓ.பி.எஸ், மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரவேற்பறையில் உட்காரவைக்கப்பட்டனர். 10 நிமிடங்கள் கழித்துத் தன் அலுவலகத்துக்கு நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அப்போதே கோபமாக இருந்த அவர், தன் உதவியாளர்களுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். உடனே அமைச்சரக அதிகாரி ஒருவர், தமிழக செய்தியாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் கூறியிருந்த விவரங்களைக் கேட்டிருக்கிறார். அந்தச் செய்தியாளர் உடனே பேட்டியை வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அடுத்த 40 நிமிடங்களில், ‘ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க நேரம் வழங்கவில்லை. மைத்ரேயனுக்கு மட்டுமே வழங்கப்பட்டது’ என்று நிர்மலா சீதாராமன் அலுவலகத்திலிருந்து ட்விட்டரில் தகவல் வெளியான பின்னர்தான், அனைவரும் பரபரப்பானார்கள். என்ன என்று விசாரித்தபோது தான், ஏர் ஆம்புலன்ஸ் வழங்கியதை வெளிப்படை யாக ஓ.பி.எஸ் போட்டு உடைத்ததுதான் காரணம் என்று தெரியவந்தது.

p6sss_1532689514.jpg

முதல்வர் சென்னையில் அளித்த பேட்டியும், ஓ.பி.எஸ் அளித்த டெல்லி பேட்டியும் நிர்மலாவுக்கு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த நிர்மலா, பன்னீரைச் சந்திக்க மறுத்து, மைத்ரேயனை மட்டும் தன் அறைக்கு அழைத்திருக்கிறார். கோபத்தின் உச்சத்தில் இருந்த நிர்மலா, ‘‘ஏதோ அவசரத்துக்கு உதவி செய்தால், அதை இப்படியா அம்பலப்படுத்துவது? இதனால், நாளை எனக்குப் பிரச்னை வரும் என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்களாவது சொல்லக் கூடாதா? நாளை ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ யாரேனும் இதேபோன்று உதவி கேட்டு, என்னால் உதவ முடியாமல்போனால், என்மீது விமர்சனங்கள் வராதா? நான் பன்னீரைப் பார்க்க விரும்பவில்லை. அவரிடம் சொல்லிவிடுங்கள்’’ என்று 10 நிமிடங்களுக்கு மேல் மைத்ரேயனை வறுத்தெடுத்து விட்டாராம்.

சோகமாக வெளியே வந்த மைத்ரேயன், நடந்தவற்றை பன்னீரிடம் சொல்லியிருக்கிறார். அதற்குள் நிர்மலாவின் ட்வீட் வெளியானது. ஒரு செய்தி சேனலில், நிர்மலாவை பன்னீர் சந்தித்ததாகச் செய்தி வெளியாக, அதை மறுத்தும் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் ட்வீட் வெளியிட்டது. இதிலிருந்தே நிர்மலாவின் கோபம் வெளிப்படை யாகத் தெரிந்தது. ‘‘இந்தச் சங்கடத்துடன் தமிழ்நாடு இல்லம் செல்ல வேண்டாம். நேராக விமான நிலையம் சென்றுவிடலாம்’’ என்று ஓ.பி.எஸ் கூற, கார் நேராக டெல்லி விமான நிலையம் சென்றது. மாலை 5.30 மணிக்குத்தான் விமானம் என்றாலும், 4 மணிக்கே அங்கு சென்று காத்திருந்தனர். 

மறுநாள் மக்களவை அ.தி.மு.க குழுத் தலைவர் வேணுகோபாலைச் சந்தித்தபோதும், அவரிடமும் ஓ.பி.எஸ் மீதான தன் வருத்தத்தை நிர்மலா வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போது, ‘நிர்மலா சீதாராமனின் கோபத்தைத் தணிக்க என்ன செய்வது’ என்ற யோசனையில்தான் இருக்கிறார் பன்னீர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்நாளில் பிரதமராயிருந்த இந்திரா காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக அவரது தேர்தல் செல்லாது என அலகாபாத் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார் (பின்னர் அத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்று , அவசரநிலைப் பிரகடனம் செய்து பேயாட்டம் போட்டது வேறு கதை) . அரசு இயந்திரத்தைச் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்வதில் இவர்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை என்பது ஒரு விடயம். நிர்மலா சீதாராமனைப் பொறுத்தமட்டில் இன்னொரு விடயம் 

'நன்றாற்றலுள்ளும் தவறுண்டாம்

அவரவர் 

பண்பறிந்தாற்றாக் கடை' எனும் குறளை மறந்தமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.