Jump to content

வடக்கு மாகா­ண ­சபை -கோமா­ளி­கள் கூடா­ரம்- ஓடிப்­போன முத­ல­மைச்­சர்!!


Recommended Posts

வடக்கு மாகா­ண ­சபை -கோமா­ளி­கள் கூடா­ரம்- ஓடிப்­போன முத­ல­மைச்­சர்!!

 
 
varathar-720x430.png
 
 
 
 

வடக்கு மாகாண சபையை கோமா­ளி­க­ளின் கூடா­ராம் என்று முன்­னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள் தெரி­வித்­தார்.

‘‘மாகாண சபைக்கு அதி­கா­ரம் கோரி ஒரு வழக்­கே­னும் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை, நானாக இருந்­தால் 200க்கும் மேற்­பட்ட வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­தி­ருப்­பேன்’’ என்­றும் அவர் கூறி­னார்.

1983ஆம் ஆண்டு இடம்­பெற்ற கறுப்பு ஜூலைக் கல­வ­ரங்­கள், வெலிக்­க­டைச்­சி­றைப் படு­கொ­லை­கள் தொடர்­பான நினை­வஞ்­ச­லிப் பொதுக்­கூட்­டம் நேற்று கர­வெட்­டிப் பிர­தே­ச­சபை மண்­ட­பத்­தில் மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கம் தல­மை­யில் மாலை 4.30 மணிக்கு இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.

 

எமது ஈழப்­போ­ராட்­டம் 1987ஆம் ஆண்டே தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டது. நாம் அப்­பொ­ழுதே ஒற்­று­மை­யாய் இருந்­தி­ருந்­தால் ஒரு தீர்வு கிடைத்­தி­ருக்­கும். ஆனால் இன்று நாடா­ளு­மன்ற தேர்­தல், மாகா­ண­ச­பைத் தேர்­தல்­க­ளில் அர­சி­யல் கட்­சி­கள் தமது பத­வி­க­ளை­யும், ஆச­னங்­க­ளை­யும் தக்­க­வைப்­ப­தற்­கா­கவே செயற்­ப­டு­கின்ற்­றன. தேர்­தலை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே ஒற்­றுமை என்­பது தெரி­கி­றது.

வடக்கு மாகா­ண­சபை கோமா­ளி­க­ளின் கூடா­ர­மாக இருக்­கி­றது. மாகாண சபை­யில் 350 தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­ற­றப்­ப­டுள்­ளன. அவற்­றால் பயன் ஏதும் இல்லை. இன்­று­வரை மாகாண சபைக்கு அதி­கா­ரம் வழங்­க­வேண்­டும் என்று எந்­த­வொரு வழக்­கும் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை.

நாற்­பது வருட நீதி­மன்ற அனு­ப­வ­முள்ள சட்­ட­மேதை எந்­த­வொரு வழக்­கை­யும் தமது அதி­கா­ரத்தை வலி­யு­றுத்தி தாக்­கல் செய்­ய­வில்லை. அலி­பா­பா­வும் நாற்­பது திரு­டர்­க­ளை­யும் போல மாகாண சபை­யில் நான்கு அமைச்­சர்­க­ளும் ஊழல்­வா­தி­கள் என்று முதல்­வர் கூறி­னார். அப்­ப­டிப்­பட்ட ஊழல்­வா­தி­களை அமைச்­சர்­க­ளாக நிய­மித்த முதல்­வ­ரும் தானா­கவே வெளி­யே­றி­யி­ருக்­க­வேண்­டும். ஆனால் அப்­படி நடக்­க­வில்லை.

எமது போராட்­டம் தோற்­ற­மைக்கு ஒற்­று­மை­யின்­மையே கார­ணம். நாம் ஒற்­று­மை­யாக இருந்­தி­ருந்­தால் போராட்­டம் தோற்­றி­ருக்­காது -என்­றார்.

இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்­தின்­படி மாகாண சபை­கள் உரு­வாக்­கப்­பட்­ட­போது வடக்கு கிழக்கு மாகா­ணத்­தின் முத­லா­வது முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர் வர­த­ரா­ஜப் பெரு­மாள். இந்­திய அமை­திப்­ப­டை­யின் பாது­காப்­பில் அவர் முத­ல­மைச்­சர் பத­வியை வகித்­தார்.

இலங்­கை­யின் அரச தலை­வ­ராக பிரே­ம­தாச பொறுப்­பேற்­றுக்­கொண்டு இந்­திய அமை­திப் படையை இலங்­கையை விட்டு வெளி­யே­று­மாறு தெரி­வித்­ததை அடுத்து 1989இல் இந்­திய அமை­திப்­படை வெளி­யே­றிச் சென்­ற­போது, முத­ல­மைச்­ச­ராக இருந்த வர­த­ரா­ஜப் பெரு­மா­ளும் அவர்­க­ளு­ட­னேயே ஓடிச் சென்று இந்­தி­யா­வில் தலை­ம­றை­வாக வாழ்ந்­தார்.

போர் முடி­வ­டைந்த பின்­னர் இந்­தி­யா­வில் இருந்து அவ்­வப்­போது இலங்­கைக்கு வரு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கி­றார்.

நிகழ்­வில் ரெலோ அமைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஐனா கரு­ணா­க­ரன், கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள், ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறீ­காந்தா, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சயந்­தன், கய­தீ­பன், விந்­தன், பருத்­தித்­துறை நகர, பிர­தேச சபை­க­ளின் தவி­சா­ளர்­கள், உறுப்­பி­னர்­கள், ரெலோ அமைப்­பின் உறுப்­பி­னர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

இதன்­பொ­ழுது ரெலோ அமைப்­பைச் சேர்ந்­த­வர்­க­ளும் தொடக்க கால உரி­மைப் போரா­ளி­க­ளு­மான குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் ஆகி­யோ­ரது உரு­வப் படங்­க­ளுக்கு மலர்­மாலை அணி­வித்து அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

http://newuthayan.com/story/09/வடக்கு-மாகா­ண-­சபை-கோமா­ளி­கள்-கூடா­ரம்-ஓடிப்­போன-முத­ல­மைச்­சர்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய பிள்ளைகளை செட்டிலாக்கிவிட்டு வயது போன நேரம் ஊரை அடிச்சி உலையில் போட்டு பிழைப்பு நடத்த வந்திருக்குது ஓநாய் ஒன்று . முதலில் இவரால் காணாமல் ஆக்கபட்ட தமிழ் மாணவர்களுக்கு இவரின் மீதும் போர்குற்றம் பதியனும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

தன்னுடைய பிள்ளைகளை செட்டிலாக்கிவிட்டு

அவர் தந்தையாக செய்ததை விமர்சிக்க எம்மைக்கு உரிமை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

அவர் தந்தையாக செய்ததை விமர்சிக்க எம்மைக்கு உரிமை இல்லை.

அவர் சாதாரண தந்தையாக இருந்தால் எனக்கு அவரை விமரிசிக்க எந்த தகுதியும் கிடையாது ஆனால் அவர் மூலம் வடகிழக்கில் பல ஆயிரக்கணகான இளைஜர் யுவதிகளை காணமால் போகவும் சித்திரைவதைக்கு உட்பட்டு இன்றும் நடைபிணமாக திரியும் இளையோரை காணலாம் அப்படி காணமால் போகடிக்க பட்ட பிள்ளைகளின் பெற்றோரின் மனநிலை எனக்கும் வலிக்குது உங்களுக்கு ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.