Jump to content

எப்போதும் இம்ரான் கேப்டன்தான்


Recommended Posts

எப்போதும் இம்ரான் கேப்டன்தான்

 

 

 
imranjpg

பாகிஸ்தான்  பிரதமர் பதவிக்கான ரேஸில் பாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் முந்திச் செல்லும் நிலையில் உள்ளார். கிரிக்கெட் உலகில் அவர் எப்போதும் முதன்மையான மற்றும் புதிரான கேப்டனாகவே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கிரிக்கெட் வாழ்க்கை யில் இருந்து விடுபட்ட பின்னர் அரசியல் பாதையில் சாத்தியமற்ற சூழ்நிலையில் தன்னை பொது வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டார்.

1980-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் பல்வேறு கேப்டன்கள் இருந்தனர். ஆனால் களத்தில் தலைவராக செயல்பட்டது இம்ரான்கான் மட்டுமே.  ஷார்ஜாவில் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆட்டங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. அப்போது இம்ரான்கான்தான் அணியை ரகசியமாக வழிநடத்தினார் என்ற பேச்சும் அடிபடாமல் இல்லை.

 
 

அவரது காலக்கட்டத்தில் இம்ரான்கான் தலைசிறந்த ஆல்ரவுண்டராகவும், உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராகவும் வலம் வந்தார். ஆனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஒரு அந்தஸ்தை அவர் பெற்றது கேப்டன் பதவியில்தான்.

1980 காலக்கட்டங்களில் இம்ரான்கான், கபில் தேவ், ரிட்சர்ட் ஹெட்லி, இயன் போத்தம் ஆகிய 4 சிறந்த ஆல்ரவுண்டர்கள் இருந்தனர். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவர்கள். கபில்தேவ் இயற்கையான திறன்களை கொண்டிருந்தார். ஆனால் அவரின் ஆளுமை திறன்கள் மங்கலாகவே இருந்தன. வெற்றிக்காக குறுக்கு வழிகளை இம்ரான்கான் தேடக்கூடியவர் என்ற எதிர்மறை கருத்தும் அவர் மீது எழுவது உண்டு.

இம்ரான்கானை விட வாசிம் அக்ரம் ரிவர்ஸ் ஸ்விங் கலையில் சிறந்தவராக திகழ்ந்தார். ஆனால் இம்ரான்கானின் கேப்டன் திறனுடன் அக்ரமால் போட்டியிட முடியவில்லை. ‘டார்க் ஆர்ட்’ என வர்ணிக்கப்படும் ரிவர்ஸ் ஸ்விங் தந்திரங்களை இம்ரான்கானிடம் இருந்துதான் வாசிம் அக்ரம் கற்றுக்கொண்டார்.

திறமை மீது இம்ரான்கானுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. ஒருநாள் அவர், எதேச்சையாக டி.வி.யில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் ஸ்லிங் பாணி பந்து வீச்சு இம்ரான்கானுக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த இளம் வீரரின் திறமை குறித்து வியந்தோதினார். அவர், தான் வாக்கர் யூனிஸ். இதன் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வாக்கர் யூனிஸ் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார் என்பதை வரலாறு சொல்லும்.

இதேபோல் 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இன்சமாம் உல்ஹக்கை அறிமுகம் செய்து பிரமாதப்படுத்தினார். இவரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய அங்கம் வகிக்க தவறவில்லை. ஆனால் கேப்டனாக இம்ரான்கான் பெரிய சாதனை படைத்ததாக கருதப்படுவது சிறந்த பேட்ஸ்மேனான சர்ச்சை மன்னன் ஜாவித் மியான்தத்தை கையாண்டதுதான்.

இம்ரான்கானின் தலைமைப் பண்புகளை விவாதிக்கும் போது, அவர் எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.1970 காலக்கட்டத்தின் பிற்பகுதியில் தான் இம்ரான்கான் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை வேகப்பந்து வீச்சாளராக தொடங்கினார்.

ஒருவிதமாக உடலை வளைத்தபடி பந்து வீசும் பாணியைக் கொண்டிருந்த இம்ரான்கான் எல்லா இடங்களிலும் பந்தை பிட்ச் செய்யும் ஒரு ஒழுங்கற்ற பந்து

வீச்சாளராக இருந்தார். அதேவேளையில் 1980 காலக்கட்டங்களில் அதிகளவிலான கவுன்டி போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். மேலும் சில அறுவை சிகிச்

சைகள் செய்து கொண்ட இம்ரான்கான் அதன் பின்னர் தனது பந்து வீச்சு பாணியை மாற்றினார். பந்து அவரது கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் செய்யும் ஜம்ப் பிரபலமானது.

‘‘இம்ரான்கான் முதல் பந்தை புல்டாசாக வீச வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்வேன். ஏனெனில் குறைந்தது அந்த பந்தில் நான் ஒரு ரன்னாவது எடுத்துவிடுவேன்’’ என கவாஸ்கர் எப்போதும் விளையாட்டாக கூறுவதுண்டு. இதில் இருந்து இம்ரான்கான் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். கவாஸ்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் எடுக்க முடியாமல் 96 ரன்களில் இம்ரான்கான் பந்தில்தான் ஆட்டமிழந்தார் என்பது வேறுகதை.

கவாஸ்கருடன் இணைந்து இம்ரான்கான் நடித்த இந்திய குளிர்பான விளம்பரம் ஒன்று மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சின்தால் சோப்பு விளம்பரம் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார் இம்ரான்கான். அரசியல்வாதியாக இம்ரான்கானின் முகத்தை உலகம் அதிகம் அறிந்திருக்காது என்றாலும், கிரிக்கெட் வீரர் மற்றும்  தலைசிறந்த கேப்டனாக அவர் எப்பொழுதும் மதிக்கப்படுவார்.

https://tamil.thehindu.com/sports/article24528660.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.