Jump to content

திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்துக்குத் தந்தது என்ன?


Recommended Posts

திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்துக்குத் தந்தது என்ன?

 

 

 
44c9e073P1443975mrjpg

1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கையாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்:

அண்ணாவுக்குப் பிறகு…

 
 

தமிழக முதலமைச்சராக இருந்த சி.என்.அண்ணாதுரை 1969-ல் மறைந்தார். மு.கருணாநிதி முதலமைச்சராக அடுத்து பதவிக்கு வந்தார். இந்தியை எதிர்த்தவர்கள், டெல்லிக்கு எதிராக இயக்கங்கள் நடத்தியவர்கள், இளைஞர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆற்றொழுக்காக அடுக்கு மொழியில் பேசுகிறவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர். முந்தைய அரசுகளுக்கு இணையாக மட்டுமல்ல, அதைவிடச் சிறப்பாக மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தங்களால் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் அவர்கள். 1969 தொடங்கி 1976 வரையிலான அரசின் கொள்கைகள் அனைத்தும் இத்தகையோரின் கருத்துக் கலவைகளால் விளைந்தவை.

ஆள்பவர்களின் அரவணைப்பு, கட்சித் தொண்டர்களின் பங்களிப்பு ஆகியவை வளர்ச்சிக்கு உதவின. மக்களுடைய கோரிக்கைகளை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதை இளம் அதிகாரியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். இது முக்கியமான மாற்றம். அதற்கு முன்னால், ஊராட்சி ஒன்றியத் தலைவர் அதிகாரிகள் சூழ இருக்கும்போது வளர்ச்சித் திட்டங்களை அவர்களுடன் விவாதித்திருக்கிறேன். இப்போதோ பாசனத்துக்கான தண்ணீர், ரேஷன் அரிசி, பள்ளிக்கூடச் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பாக மாவட்ட, வட்ட கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளைச் சந்தித்து மக்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து நடவடிக்கைகளை எடுக்கவைத்தனர். மேல் அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கும் வழக்கம் மாறி, ஆளும் கட்சி நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடங்கினோம்.

சமுதாயப் படிநிலையில் முன்னேற நினைத்த குழுக்கள் உருவாகி ஆளும் கட்சியின் ஆதரவை நாடின. தொடக்ககாலத்தில் அவர்கள் மக்களுடைய குறைகளை மட்டுமே அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். ஏற்கெனவே இருந்த நிர்வாகச் சங்கிலித் தொடர்கள் மீறப்பட்டன. ஆண்டுகள் செல்லச்செல்ல இந்தக் குழுக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகிகளிடம் வலியுறுத்தத் தொடங்கின. அரசு நிர்வாகத்துக்குக் கட்சித் தொண்டர்களிடமிருந்து கோரிக்கைகள் வருவது எப்போதாவது நிகழும் நிகழ்ச்சி என்பது மாறி, அன்றாட வழக்கமாகிவிட்டது. இதனால், மக்களுடைய கோரிக்கைகளும் குறைகளும் அரசு நிர்வாகத்தின் கவனத்தை உடனுக்குடன் ஈர்த்தன. அது ஒருவகையில் பின்னடைவாகவும் மாறியது.

மேலே வந்த கீழ்நிலைச் சமூகங்கள்

அரசு வேலைகளிலும் கட்சியிலும் கீழ்நிலைச் சமூகங்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் கிடைக்கத் தொடங்கியது. தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் தரவுகளின்படி 1960 தொடங்கி 1980 வரையிலான காலத்தில் அரசு வேலைக்கு வந்தவர்களின் சாதிப் பின்னணி அடியோடு மாறியிருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசு வேலைகளைப் பெற்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனச் சாதிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்ந்ததால் அதிகாரவர்க்கக் கட்டமைப்பே அடியோடு மாற்றம் கண்டது.

மக்கள்தொகையில் குறைவாக இருந்தாலும், அதற்குப் பொருத்தமில்லாத வகையில் அபரிமிதமாக அரசு வேலைகளைப் பிராமணர்கள் ஆக்கிரமித்திருந்த நிலை சீராக்கப்பட்டது. புதிய வேலைவாய்ப்புகளில், முற்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைந்தது. அத்துடன் அரசு வேலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக, அதுவரை அரசு வேலைக்கே வந்திராத பல சாதியினர் வேலைகளைப் பெற்றனர். இது அரசின் நிர்வாகத்தில் பன்மைத்துவத்தை வலுப்படுத்தியது. இது மிகமிக முக்கியமான மாற்றம்.

1925-ல் நடந்த காஞ்சிபுரம் மாநாடு முதல் பெரியார் வலியுறுத்திவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், 1967-ல் தொடங்கி வலுவாக அமலானது. திராவிடக் கட்சிகளின் எண்ணங்கள், லட்சியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான சாதிகளை, பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசு வேலையில் சேர்ந்தனர். இதனால், அரசு நிர்வாகத்தில் பிரதிநிதித்துவ சமநிலை ஏற்பட்டது. அதனால், சமூகநலத் திட்டங்களையும் சமூகங்களுக்குப் பலன் தரக்கூடிய சேவைகளையும் அடுத்தடுத்த அரசுகளால் வழங்க முடிந்தது. அரசு ஊழியர்களின் சமூகப் பிரதிநிதித்துவம், 1965-ல் நான் பணியில் சேர்ந்தபோது இருந்ததைப் போல அல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் அனைத்துத் தரப்பையும் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது.

நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது மாவட்ட ஆட்சியரையும் மாவட்ட அரசு நிர்வாகங்களையும் சார்ந்துதான் எல்லாமே இருந்தன. அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் கரங்களாக ஆட்சியர்கள் இருந்தனர். காலனியாதிக்கக் காலத்திலிருந்து தொடர்ந்த அந்தப் பாரம்பரியம் அரசு நிர்வாகம் என்பதை அதிகார வர்க்கத்துக்குக் கட்டுப்பட்டதாக வைத்திருந்தது.

மாற்றிக்காட்டிய தமிழகம்!

1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் நிலைமை மாறியது. மக்களோடு இணைந்து பல இயக்கங்களை நடத்திய, மக்களின் பேராதரவைப் பெற்ற கட்சியாக திமுக இருந்தது. எனவே, பதவியில் இருக்கும்போது மக்களுடைய கோரிக்கைகளைச் செவிமடுப்பதும் அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றுவதும் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. திமுக கட்டுக்கோப்பான தொண்டர்களைக் கொண்ட ஜனநாயகக் கட்சியாக இருந்ததால் மாவட்டச் செயலாளர்களால் கட்சியின் உயர் தலைவர்களுடன் நேரடியாக எளிதில் தொடர்புகொள்ள முடிந்தது.

அன்றாட அரசு நிர்வாகம் தொடர்பாகக்கூட மாவட்ட ஆட்சியர்களுடன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கலப்பது வழக்கமாகிவிட்டது. மாவட்ட ஆட்சியர் பதவி அதிகாரம் மிக்கதாகவும், அனைவராலும் அடையப்பட வேண்டிய லட்சியப் பதவியாகவும் திகழ்ந்தது.

1971-க்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவும் மாறத் தொடங்கியது. கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததால், கட்சிக்குள்ளும் அரசு நிர்வாகத்திலும் தொண்டர்களின் கை ஓங்கியது. மாநில அரசின் வலுவான இரு கரங்களாக மாவட்ட ஆட்சியரும் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரும் செயல்பட்டனர். அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றில் மாநில அரசின் பங்களிப்போடு அரசியலுக்கும் முக்கிய செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. இதனால், நிர்வாகம் அரசியல்மயமானது. இந்தக் காலத்தில்தான் அரசின் உயர் அதிகாரிகளில் பலர் ஓய்வுபெற்றனர், பலர் மத்திய அரசுப் பணிக்கு அயல்பணி அடிப்படையில் அனுப்பிவைக்கப்பட்டனர். மாநில அரசு நிர்வாகத்தின் அடித்தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் எளிதில் உணரக்கூடியதாக இருந்தது. அடுத்து அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தபோதும் இதுவே நடந்தது.

-எஸ்.நாராயண்

- தி இந்து ஆங்கிலம்,

தமிழில் சுருக்கமாக: சாரி

https://tamil.thehindu.com/opinion/columns/article24517625.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக நீதி நிலைநாட்டப் பெற்று நிகழ்ந்த  பெரும் சமூக மாற்றத்தை இக்கட்டுரை சரியாக எடுத்துரைக்கிறது. பல்வேறு இனக் குழுக்களின் அடையாளங்கள் நிலைநாட்டப்பட்டு பன்மைத்துவம் வலியுறுத்தப்பட்டது. மற்றப்படி ஊழல் தேசிய அளவிலும் உலகளவிலும் கூட பரவலாக்கப் பட்டதால், குறிப்பாக திராவிட ஆட்சியில் என்று சொல்வதற்கில்லை. 

இன்றைய நிலை வேறு. இப்போது நடப்பதும், திமுகவின் பிற்காலத்திய அரசியலும் கொள்கை சார்ந்த திராவிட அரசியல் அல்ல. பணம், பதவி, அதிகாரம் இவை தவிர வேறெதுவும் அறியாத அற்ப அரசியல். மத்திய பாசிச பாஜக அரசிடம் இப்போது அதிமுக கைகட்டி நிற்பதும், பதவி சுகத்திலும் இறுமாப்பிலும் இலங்கையில் தமிழின அழிப்பு முயற்சிக்குக் கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசுக்குத் துணை போனதும் திராவிடக் கட்சிகளின் இழிநிலைக்கான சான்றுகள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக நீதி நிலைநாட்டப் பெற்று நிகழ்ந்த  பெரும் சமூக மாற்றத்தை இக்கட்டுரை சரியாக எடுத்துரைக்கிறது. பல்வேறு இனக் குழுக்களின் அடையாளங்கள் நிலைநாட்டப்பட்டு பன்மைத்துவம் வலியுறுத்தப்பட்டது. மற்றப்படி ஊழல் தேசிய அளவிலும் உலகளவிலும் கூட பரவலாக்கப் பட்டதால், குறிப்பாக திராவிட ஆட்சியில் என்று சொல்வதற்கில்லை. 

இன்றைய நிலை வேறு. இப்போது நடப்பதும், திமுகவின் பிற்காலத்திய அரசியலும் கொள்கை சார்ந்த திராவிட அரசியல் அல்ல. பணம், பதவி, அதிகாரம் இவை தவிர வேறெதுவும் அறியாத அற்ப அரசியல். மத்திய பாசிச பாஜக அரசிடம் இப்போது அதிமுக கைகட்டி நிற்பதும், பதவி சுகத்திலும் இறுமாப்பிலும் இலங்கையில் தமிழின அழிப்புக்குக் கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசுக்குத் துணை போனதும் திராவிடக் கட்சிகளின் இழிநிலைக்கான சான்றுகள்.

கருணாநிதி தமிழ் இன அழிப்புக்கு துணை போகவில்லை, தமிழ்  ஈழ விடுதலை போராட்டத்தை அழித்தவர்களில் முக்கியமான சூத்திரதாரி தான் இவர். கருணாநிதி ஒரு தெலுங்கர் அதனால் தமிழ் இனத்தை ஆழித்தார். உலகமே போரை நிறுத்த முயன்றாலும் கருணாநிதி நிறுத்த விட்டிருக்க மாட்டர் என்பது தான் யதார்த்தம். 

தமிழனும் கருணாநிதியும் ஒரு இனம் அல்ல , சிங்களவனும் கருணாநிதியும் தான் ஒரே இனம்

தமிழனின் அழிவை ரசித்தவர்களில் அதிகம் திராவிடரும் தெலுங்கர்களுமே....!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.