Jump to content

தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?


Recommended Posts

தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?

 
 

`கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.'

தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?
 

கருணாநிதி

``என்னுடைய 44 வயது பிறந்தநாளைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். அந்தப் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் பேச்சுதான் எனக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 'தண்டவாளாத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக, சமமாக கருதுபவன் கருணாநிதி' என்றார். அதனால் அந்தப் பிறந்தநாளை முக்கியமான நாளாகக் கருதுகிறேன்" - 1997-ம் ஆண்டு 'முக்கால் சத வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள். இதில் எந்த வயதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்?' என்ற கேள்விக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பதில் இது. 

அதே 44-வது வயதில் தி.மு.க.வின் தலைவராகவும் உயர்ந்தார் கருணாநிதி. அப்படி கருணாநிதி தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது ஆண்டைத் தொட்டுள்ளார். 49 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில், அதாவது 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். 

 

 

கருணாநிதி - எம்.ஜி.ஆர்.

அண்ணா மறைவுக்குப் பின்னர்...?

தி.மு.க.வை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அடுத்த முதல்வர் யார், தி.மு.க.வை தலைமையேற்று நடத்தப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி அப்போது எழுந்தது. காலம் கடத்தினால் பிரச்னைகள் உருவாகும் என்பதால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் கட்சி நிர்வாகிகள் வேகம் காட்டினர். அண்ணாவுக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கு இருவர் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டிருந்தது. ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன். மற்றொருவர் கருணாநிதி.

 

 

`கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்துவிட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது; எனக் கட்சியின் மற்ற நிர்வாகிகளும், ஆர்வலர்களும் எண்ணினர். 'பிரச்னைகள் ஏதும் உருவாகிவிடக்கூடாது; ஆட்சிக்கோ, கட்சிக்கோ ஆபத்து வந்து விடக்கூடாது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. அதற்குள் மத்திய அரசின் நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது," என்ற அச்சம் அனைவரிடமும் மேலோங்கியிருந்தது.

 

 

கருணாநிதி - பெரியார்

கருணாநிதியை அண்ணா புகழ்ந்ததே காரணம்?

யார் முதல்வராக வர வேண்டும் என்றபோது பலரால் முன்மொழியப்பட்டார் கருணாநிதி. பெரியாரும், ராஜாஜியும் 'கருணாநிதியே இருக்கட்டும்' எனச் சொன்னதாக சொல்லப்பட்டது.  அண்ணாவே கருணாநிதி பெயரைப் பலமுறை முன்மொழிந்ததே, கருணாநிதிக்கு ஆதரவை ஏற்படுத்தியிருந்தது. 

``வரலாற்றின் முற்பகுதியை நான் எழுதினேன், பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” எனத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணா பேசியதும், `தண்டவாளத்தில் தலை வை' என்றாலும், ‘மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்’ என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன் என் தம்பி கருணாநிதி' என்று கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பாராட்டிப் பேசியதும், ``என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் அடைபட்டுக்கிடக்கும் பாளையங்கோட்டை இடந்தான் எனக்கு யாத்திரை தலம்; புனித பூமி’’ என்று பொதுக்கூட்டத்தில் பெருமைபொங்க அண்ணா பேசியதுமே கருணாநிதிக்கு பெரும் ஆதரவை உருவாக்கியதாகவும் சொல்லப்பட்டது. 

அண்ணாவுக்கு இரங்கல் கூட்டம் நடந்து முடிந்த மறுநாள் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பெரும்பான்மையானோர் கருணாநிதியைத் தேர்வு செய்ய முதல்வரானார் கருணாநிதி. பெரும்பான்மையானோர் கருணாநிதியை முதல்வராகத் தேர்வு செய்தாலும், கட்சியில் பிணக்கு உருவாகவே செய்தது. எல்லாம் சரிசெய்த பின்னர் 1969ப்ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. இன்று கட்சியின் தலைவராகப் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறார்.

80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் என  கடந்த நூற்றாண்டில் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, தற்போது ஒரு இயக்கத்தின் தலைவராக 50-வது ஆண்டை துவக்கியதன் மூலம் இன்னொரு சாதனையைப் படைத்திருக்கிறார். 

கருணாநிதி

'பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு இல்லை'

``எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டுச் சென்று விடுவோமா' என எப்போதாவது நினைத்ததுண்டா? என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியிடம் கேட்டபோது அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பதிலாகத் தந்தார். ``சிறுவனாக இருந்தபோது நானும் என் நண்பன் தென்னனும் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் நீந்தி மைய மண்டபத்துக்குச் செல்ல முயன்றோம். முக்கால் பகுதி தூரம் கடந்து சென்ற பின்னால் என் நண்பன் தென்னனால் நீந்த முடியவில்லை. 'திரும்பி விடலாம் வா' என என்னை அழைத்தார். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான். அதற்கே செல்லலாம்." எனக்கூறி மைய மண்டபத்தை அடைந்தோம். பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசியல் நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. எல்லாப் பாதைகளிலும் குளிர்ச் சோலையும் இருக்கும். சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல." இதுதான் கருணாநிதி தெரிவித்த பதில். இந்தக் கதையை கருணாநிதி எங்கெல்லாம் சொல்லியிருப்பார். எத்தனை முறை சொல்லியிருப்பார் எனக் கணக்கே இருக்காது. 

அரசியலில் உயரத்தைப் போலவே நெருக்கடிகளையும் சந்தித்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் பிரிவால் 13 ஆண்டுகள் ஆட்சி பீடத்தை இழந்தார். ஆனால், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சி தொண்டர்களைச் சோர்ந்து விடாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். வைகோ பிரிந்து சென்றபோது ஏற்பட்ட நெருக்கடியைக் கூட்டணி மூலம் சமாளித்தார். 2ஜி ஊழல், இலங்கை பிரச்னைகளில் சறுக்கினார். காய்த்த மரங்களே கல்லடிபடுகிறது எனச் சொல்வதுண்டு. எதிலும் நீண்ட காலம் தாக்குப்பிடித்திருப்பதில் உள்ள ஒரு சிக்கலாகவே இதைப்பார்க்க வேண்டும்.

`கருணாநிதியின் அரசியல் எதிரிகள்கூட அவர் பேச்சுக்கு ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்' எனச் சொல்வார்கள். ஈழப்பிரச்னையின்போது அவரைத் திட்டித்தீர்த்த இளம் தலைமுறையினர் கூட, தற்போது உடல்நலமின்றி இருக்கும் கருணாநிதிக்காகக் கலங்குவதை காண முடிகிறது.

ஒரு இயக்கத்தின் தலைவராக 50 ஆண்டைத் தொட்டிருக்கிறார் கருணாநிதி. அவர் இப்போது பேசுவதில்லை. ஆனால், அவரைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம். முதுமை முற்றுகையிட்டு கோபாலபுரம் இல்லத்தில் இருக்கிறார் கருணாநிதி. குளத்தில் நீந்தி மையம் மண்டபம் அடைந்த திருக்குவளை சிறுவனைப்போல.

https://www.vikatan.com/news/coverstory/132176-karunanidhi-completes-49-years-as-dmk-president.html

Link to comment
Share on other sites

கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்!

117_thumb.jpg
 
 

தி.மு.க என்ற மாபெரும் ஓர் இயக்கத்தின் தலைவராக இத்தனை ஆண்டுக்காலம் கருணாநிதி பதவி வகித்த, அவரின் தலைவர் பதவி பொன்விழா ஆண்டையொட்டி  அவரைப் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்!
 

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி தன்னுடைய 95 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உடல் நலிவுற்று கோபாலபுரம் இல்லத்தில் அப்போதே ஓய்வெடுத்து வந்தபோதிலும், வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதுடன், தன் வாழ்த்துகளையும் தொண்டர்களுக்குத் தெரிவித்தார். 

இந்த நிலையில் தி.மு.க-வின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்று (27.07.2018) 50 ஆண்டுகளாகின்றன. தி.மு.க என்ற மாபெரும் ஓர் இயக்கத்தின் தலைவராக இத்தனை ஆண்டுக்காலம் கருணாநிதி பதவி வகித்த, அவரின் தலைவர் பதவி பொன்விழா ஆண்டையொட்டி  அவரைப் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

* திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் சிறிய கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் கருணாநிதி. 

 

 

* இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்த கருணாநிதி, தன் பெயருக்கு முன்னால் 'டி.எம்' (திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி) என்ற இனிஷியலை, சி.என்.அண்ணாதுரை (காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை) வழியைப் பின் பற்றி, நீண்டகாலமாகப் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர், மு.கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார். 

 
 

 

* பள்ளியில் படிக்கும்போது நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் முதன்முதலாக 1939-ம் ஆண்டு கருணாநிதி பேச்சைத் தொடங்கினார். அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து 'மாணவ நேசன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். முதன்முறையாக அவர் தொடங்கிய இந்தப் பத்திரிகை ஒரு மாத இதழ். அவர் முதல் முறையாகத் தொடங்கிய அமைப்பு 'தமிழ் மாணவர் மன்றம்'. 

* கருணாநிதி எழுதி முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் 'பழனியப்பன்'. தமிழ் மன்றம் நடத்த நிதி திரட்டுவதற்காக, திருவாரூர் பேபி டாக்கீஸில் 1940-ம் ஆண்டு இந்த நாடகத்தை நடத்தினார் அவர்.

அண்ணா கருணாநிதி 

* பேரறிஞர் அண்ணா நடத்திய 'திராவிட நாடு' இதழில் 'இளமைப் பலி' என்ற கருணாநிதியின் கட்டுரை 1942-ம் ஆண்டு வெளிவந்தது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா, 'இளமைப் பலி' எழுதிய கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார். 'நடுவகிடு எடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு..." என அண்ணாவை முதல் சந்திப்பிலேயே தன்வசப்படுத்தினார் கருணாநிதி.

 * `முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் 1942-ம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, 'முரசொலி' என்ற மாத இதழைத் தொடங்கினார். அதில் 'சேரன்' என்ற பெயரில் புரட்சியான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார்.

* திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் 28.5.1944 அன்று கலந்துகொள்ள வந்த பெரியார், முரசொலி ஏட்டைப் பாராட்டியதோடு 'மிகச் சிறந்த பணி' என்று கருணாநிதியை உச்சி மோந்தார். பெரியாருடன் நட்பு ஏற்பட்ட பின், தொடர்ந்து அவரது இயக்கக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். ஈரோட்டிலிருந்து வெளிவந்த `குடியரசு' பத்திரிகையில் கருணாநிதியை உதவி ஆசிரியராகப் பணியில் சேர்த்துக் கொண்டார் பெரியார்.

எம்.ஜி.ஆர் உடன்

* குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபடி, நேரடியாகப் பெரியாரிடம் பயிற்சி பெற்ற கருணாநிதிக்கு இயக்கப் பணி, எழுத்துப் பணி ஆகியவற்றோடு திரைத்துறை மீதும் தீராத ஆர்வம் இருந்தது. எனவே, திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி-யோடு பணியாற்ற, பெரியார் அனுமதியுடன் கோவைக்குச் சென்றார் கருணாநிதி. `ராஜகுமாரி' படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்தார்.

* கருணாநிதியின் திரைப்பட வாழ்க்கையில் அவர் கடைசியாக கதை, வசனம் எழுதிய திரைப்படம் பொன்னர்-சங்கர். தொலைக்காட்சி தொடர் 'ராமானுஜர்'. சிவாஜி கணேசன் நடித்த, 'பராசக்தி' திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனம், தென்னிந்திய திரையுலகத்தையே புரட்டிப்போட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் நடிகர்களுக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை தன் கதை, வசனம் மூலம் அளித்தவர் கருணாநிதி. 

* 6 சரித்திர நாவல்களையும் 10 சமூக நாவல்களையும் 21 நாடகங்களையும் கருணாநிதி எழுதியுள்ளார். தி.மு.க-வின் தேர்தல் சின்னமாக உதயசூரியன் கிடைத்தபோது, அதைப் பிரபலப்படுத்துவதற்காகவே, `உதயசூரியன்' என்ற நாடகத்தை எழுதினார். 'இனியவை 20' என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

ஒரு சந்தோஷத் தருணத்தில்...

* முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர், கலைஞர் என்று பல பெயர்களில் தொண்டர்களும் பொதுமக்களும் கருணாநிதியை அன்போடு அழைப்பார்கள். ஆனால், கலைஞர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். கருணாநிதி எழுதிய, `தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்த நடிகர் எம்.ஆர்.ராதா அவரை முதன்முதலில் 'கலைஞர்' என்று கூறி, அந்தப் பட்டத்தை அளித்தார்.

* எம்.ஜி.ஆருக்கு, `புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை, கருணாநிதி கொடுத்தார். கருணாநிதியை எம்.ஜி.ஆர், `ஆண்டவரே' என்று ஆரம்பகாலங்களில் அழைத்து வந்தார்.

* முதன்முதலாகத் தன்னுடைய 33 வது வயதில் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் கருணாநிதி. 45 வயதில் முதல் அமைச்சர் ஆனார். இதுவரை 13 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். குளித்தலை தொகுதியில் முதலில் வென்றார். தற்போது, சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதி உறுப்பினராக உள்ளார். 1957-ம் ஆண்டிலிருந்து, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கருணாநிதி, சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

* மாநில அரசுகளின் சார்பில் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் மாநில ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றிவந்தனர். 1974-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கருணாநிதி வலியுறுத்திக் கேட்டு, சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தார். முதன்முதலாக 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் கருணாநிதி. 

* மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய, 'நீராரும் கடலுடுத்த... என்று தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்து, தமிழக அரசு விழாக்களில் தொடக்கத்தில் பாடும் நடைமுறையைக் கொண்டுவந்தவர் கருணாநிதி.

* அரசு நிகழ்ச்சியானாலும் கட்சி நிகழ்ச்சியானாலும் குறித்த நேரத்துக்கு முன்பாகவே மேடைக்கு வந்துவிடுவார். குறித்த நேரத்தில் விழாவை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

முரசொலி மாறனுடன்...

* ராஜாஜி, பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என்று தமிழகத்தின் 11 முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் அரசியல் செய்தவர் கருணாநிதி.

* சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், பூம்புகார் மீட்டெடுப்பு, பெரியார் சமத்துவபுரம், குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் கற்சிலை, கோவையில் உலக செம்மொழி மாநாடு, உணவுப் பாதுகாப்புகாக இந்திய உணவுக் கழகத்தைப்போல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.  

* நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக மகளிர் திருமண உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ் அறிஞர்கள் உதவியோடு, தமிழ் ஆண்டு வரிசைக்கு, 'திருவள்ளுவர் ஆண்டு' என்ற முறையைக் கொண்டு வந்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து, பெருமை சேர்த்தவரும் கருணாநிதிதான்.

* பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, 'இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தில் பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமஉரிமை உண்டு' என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

கருணாநிதி நித்யா

* கருணாநிதியின் உதவியாளராகக் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவைப் புரிந்துகொண்டு செயல்படக் கூடிய உதவியாளர். கருணாநிதியின் தனி உதவியாளராக நித்யானந்தன் என்பவர் இருக்கிறார்.

* 2005-ம் ஆண்டு ரூ.5 கோடியில் 'கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை' நிறுவி, மாதந்தோறும் அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் ஒவ்வொரு மாதமும் 12 பேருக்கு தலா ரூ.25,000 வீதம், 'கல்வி மற்றும் மருத்துவ நிதியுதவி' வழங்கி வருகிறார் கருணாநிதி. 

* 'தன்னுடைய கோபாலபுரம் இல்லம், தயாளு அம்மாளின் காலத்துக்குப் பிறகு, மருத்துவமனையாகப் பயன்பட வேண்டும்' என்று எழுதி வைத்துள்ளார் கருணாநிதி.

https://www.vikatan.com/news/politics/132258-karunanidhi-50-years-as-dmk-leader.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.