Jump to content

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு


Recommended Posts

கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரிக்க அஜித், விஜய் மருத்துவமனை வருகை

கருணாநிதி ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, நடிகர்கள் விஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர்.

நடிகர் விஜய், மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்றும் கட்சித் தொண்டர்கள் யாரும் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென்றும் மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்திருந்தார்.

கருணாநிதி

கருணாநிதி உடல்நலம் குன்றியிருக்கிறார் என்ற செய்தி கேட்டு 21 தி.மு.க. தொண்டர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி தனக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே ‘தலைவா வா‘ என்று எழுப்பிய முழக்கங்கள் வீண் போகவில்லையென்றும், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் கூறியுள்ள மு.க. ஸ்டாலின், கட்சியினர் யாரும் தங்கள் உயிரை மாய்க்கும் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசுமுத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே இருந்துவருகிறது.

குறிப்பாக கடந்த 29ஆம் தேதியன்று, கருணாநிதியின் உடல்நிலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்ட தகவல், தி.மு.க. தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் வந்து பார்த்தார். அந்தப் புகைப்படமும் வெளியிடப்பட்டது.

கருணாநிதியை சந்தித்த ராகுல்

கருணாநிதி எந்தப் பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு வந்தாரோ, அந்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் காவேரி மருத்துவமனை செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று புதன்கிழமை காலையில் காவேரி மருத்துவமனைக்கு வந்து, மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரிப்பு

நேற்றைய மருத்துவ அறிக்கைக்குப் பிறகு, கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றமோ, பின்னடைவோ இல்லையென மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், அவரது உடல்நலம் சீரடைந்துவருவதாக மு.க. ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-45029584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 2:55 PM, அபராஜிதன் said:

நான்கலைஞரின் விசுவாசி அல்ல இந்த நேரம்களில் இப்படியான ட்ரோல் பண்ணுற வேலைகள் நாகரிகமானவை அல்ல

நீங்கள் சொல்வது உண்மைதான். நான் துயர வீட்டில் துள்ளிக்குதிப்பவனும் அல்ல. இறந்தவன் மார்பில் ஏறி நின்று மார்தட்ட நான் சிங்கள இனத்தவனும் அல்ல. அதே போல் கிந்திய இனத்தவனும் அல்ல. மாறாக நான் ஒரு தமிழன். தமிழினம் என்றுமே அடுத்தவன் மரணத்தை கொண்டாடியதுமில்லை.தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் கூட ஏனைய அரசியல்வாதிகள் மேல் இல்லாத வெறுப்பு கருணாநிதி மேல்?????? ஏன் கருணாநிதிக்கு மட்டும் இந்த நிலை? 
கருணாநிதி அவர்கள் ஈழத்தமிழர் இனக்கலவர பிரச்சனை ஆரம்பகாலம் தொடக்கம் தனது அரசியல் வேட்டுக்களை சிங்களவர் பக்கம் தீர்த்தவண்ணமே உள்ளார். தமிழ்நாட்டு தமிழர் ஒன்றாக ஒண்டுக்கு இருந்தாலே இலங்கை மூழ்கிவிடும் என்று பயமுறுத்தியவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
நிற்க...

ஈழப்போரின் இறுதிக்கட்ட நேரத்தில் கருணாநிதி அவர்கள் எடுத்த நையாண்டி உண்ணாவிரதம்தான் அகில ஈழத்தமிழரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குடும்ப சமேதரதராய் திடீர் உண்ணாவிரதம். ஏற்கனவே குடும்ப தொலைக்காட்சி தயார் நிலையில்.... மூன்று மணி நேர உண்ணாவிரதத்தில் தலைவரின் உதடு வரண்டு போக கட்டாயத்தின் பேரில் மகளென அறிவித்த கனிமொழி கொடுத்த குவளை தண்ணீரில் உதட்டை மட்டும் நக்கல் சிரிப்புடன் நனைத்துவிட்டு.......

சிறிது நேரத்தில் ஈழத்தில் நடக்கும் சண்டை நிறுத்தப்படுகின்றது என உண்ணாவிரதத்தை முடித்து நாடகமாடியவர். அதன் பிற்பாடுதான் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்கள். 

கருணாநிதி அவர்கள் உண்ணாவிரதமிருந்து நாடகமாடாமல் வழமைபோல் மத்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் கடிதம் எழுதியிருந்தாலே இவ்வளவு வக்கிரம் வந்திருக்காது என நான் நினைக்கின்றேன்.இவரது உண்ணாவிரத நாடகம் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு ஒரு தூதுபோலவே அமைந்திருந்தது.

விடுதலைப்புலிகள் மீது நேரடியாக கருத்துவைத்து தாக்கிய ஜெயலலிதா மீது கூட ஏன் ஏனைய அரசியல்வாதிகள் மீதும் இப்படியான வெறுப்பலைகள் வந்ததில்லை என்பதை நீங்கள் கவனத்திலெடுக்கவேண்டும். 

இன்னும் நிறையவே எழுதலாம். ஒரு துயரத்திற்கு நியாயம் தேடுவதும் நியாயமில்லை.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகில உலகத்துக்கும் திமுகாவின் நாடகம் (உண்மையில் தலிவருக்கு சுகமில்லை என்றால் அப்பவும் கறுத்த கண்ணாடியுடன் தூக்கிக்கொண்டு ஓடுவார்களா ?) ஒரு பிரியாணி கடை பாக்சிங்குடன் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்கவிட்டு போய்விட்டுது .? எல்லாம் பழைய காலம் போல் நினைத்து இருப்பினம் அரசு பஸ்ஸை போட்டு ஒரு திமுக உடைக்க  அடுத்த நொடி டுவிட்டர் இந்தனையாம் வட்டாரம் இன்ன இடத்து  ஆள் இங்கு வைத்து பொது சொத்தை நாசம் பண்ணுகிறார் என்று 10 நிமிடங்களில் 700 மேல் பகிரபடுது ஆனால் இங்கு நான் இணைத்த இணைப்புகளை சத்தமில்லாமல் அகற்றிவிட்டு சிலர் நடுநிலை பேனுகிரம் என்று சொல்கினம் எழுத வேண்டாம் இணைக்க வேண்டாம் என்றால் சொல்லுங்க ஒரேயடியாய் நிப்பாட்டுகிரன் .

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது உண்மைதான். நான் துயர வீட்டில் துள்ளிக்குதிப்பவனும் அல்ல. இறந்தவன் மார்பில் ஏறி நின்று மார்தட்ட நான் சிங்கள இனத்தவனும் அல்ல. அதே போல் கிந்திய இனத்தவனும் அல்ல. மாறாக நான் ஒரு தமிழன். தமிழினம் என்றுமே அடுத்தவன் மரணத்தை கொண்டாடியதுமில்லை.தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் கூட ஏனைய அரசியல்வாதிகள் மேல் இல்லாத வெறுப்பு கருணாநிதி மேல்?????? ஏன் கருணாநிதிக்கு மட்டும் இந்த நிலை? 
கருணாநிதி அவர்கள் ஈழத்தமிழர் இனக்கலவர பிரச்சனை ஆரம்பகாலம் தொடக்கம் தனது அரசியல் வேட்டுக்களை சிங்களவர் பக்கம் தீர்த்தவண்ணமே உள்ளார். தமிழ்நாட்டு தமிழர் ஒன்றாக ஒண்டுக்கு இருந்தாலே இலங்கை மூழ்கிவிடும் என்று பயமுறுத்தியவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
நிற்க...

ஈழப்போரின் இறுதிக்கட்ட நேரத்தில் கருணாநிதி அவர்கள் எடுத்த நையாண்டி உண்ணாவிரதம்தான் அகில ஈழத்தமிழரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குடும்ப சமேதரதராய் திடீர் உண்ணாவிரதம். ஏற்கனவே குடும்ப தொலைக்காட்சி தயார் நிலையில்.... மூன்று மணி நேர உண்ணாவிரதத்தில் தலைவரின் உதடு வரண்டு போக கட்டாயத்தின் பேரில் மகளென அறிவித்த கனிமொழி கொடுத்த குவளை தண்ணீரில் உதட்டை மட்டும் நக்கல் சிரிப்புடன் நனைத்துவிட்டு.......

சிறிது நேரத்தில் ஈழத்தில் நடக்கும் சண்டை நிறுத்தப்படுகின்றது என உண்ணாவிரதத்தை முடித்து நாடகமாடியவர். அதன் பிற்பாடுதான் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்கள். 

கருணாநிதி அவர்கள் உண்ணாவிரதமிருந்து நாடகமாடாமல் வழமைபோல் மத்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் கடிதம் எழுதியிருந்தாலே இவ்வளவு வக்கிரம் வந்திருக்காது என நான் நினைக்கின்றேன்.இவரது உண்ணாவிரத நாடகம் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு ஒரு தூதுபோலவே அமைந்திருந்தது.

விடுதலைப்புலிகள் மீது நேரடியாக கருத்துவைத்து தாக்கிய ஜெயலலிதா மீது கூட ஏன் ஏனைய அரசியல்வாதிகள் மீதும் இப்படியான வெறுப்பலைகள் வந்ததில்லை என்பதை நீங்கள் கவனத்திலெடுக்கவேண்டும். 

இன்னும் நிறையவே எழுதலாம். ஒரு துயரத்திற்கு நியாயம் தேடுவதும் நியாயமில்லை.
நன்றி.

நான் கலைஞர் செய்த எதையுமே நியாயபடுத்தவில்லை,நான் சொன்னது 

இன்றைய நிலையில் அப்படி செய்வது எம்மை தான் தரம் தாழ்த்தி காட்டும், 

அநேகமான தமிழக மக்களிற்கு அவரின் இன்றைய நிலமை பெரும் பரிதாபத்தை அவர்பால் கூட்டியுள்ளது,அப்படியான அநுதாப கண்ணோட்டத்துடன்  இருக்கும் ஒருவர் யாழ் களத்தை பார்ப்பாராகில் எம்மேல் வெறுப்பு தான் ஏற்படும், 

திமுக வில் ஏறக்குறைய2கோடி தொண்டர்கள்,ஏற்கனவே எம்மை வெறுப்பவர்கள் அதிகம் ,இன்னும் அதிக வெறுப்பாளர்களை சம்பாதிக்க வேணுமா ?

வரலாறு என்பது கத்தி போன்று கூர்மையானது அது நாங்கள் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன , அவரின் கறுப்பு பக்கங்களுடனேயே அவரை நினைவு கூறும் 

 

அவரை கழுவி ஊத்தனும் எனில் இருக்கவேஇருக்கிறது அவரின் பிறந்த நாள் அந்த நேரங்களில் செய்யலாம் 

என்னைப்பொறுத்தவரை  கருணாநிதி நினைத்திருந்தால் கூட 2009 மே யை தவிர்த்திருக்க முடியாது...

Link to comment
Share on other sites

கருணாநிதி ஒரு பிறவிப் போராளி - கேரள முதல்வர் பினராயி விஜயன்

மருத்துவமனையில் ஆறாவது நாளாக சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

பினராயி சந்திப்பு. Image captionஸ்டாலின், கனிமொழியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு.

இன்று வியாழக்கிழமை காவேரி மருத்துவமனைக்கு வந்த பினராயி விஜயன், ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரிடமும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்" என்றார்.

மேலும் கருணாநிதியைப் பிறவிப் போராளி என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ட்விட்டரில் கருணாநிதி உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார் பினராயி விஜயன்.

இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

முன்னதாக, நேற்று நடிகர் கவுண்டமணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்தனர்.

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

புதன்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போது கருணாநிதி உடல்நிலை தேறி வருவதாகவும் தொண்டர்கள் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.

கவுண்டமண்- - ஸ்டாலின்படத்தின் காப்புரிமைFACEBOOK

செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "நான் கருணாநிதியை பார்க்க விரும்பினேன். அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க விரும்பினேன். எங்களுக்குக் கருணாநிதியுடன் நீண்ட கால உறவு இருக்கிறது. ஆகவே அவரை நான் பார்க்க வந்திருக்கிறேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மிக உறுதியாக இருக்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நலத்தை நடிகர் விஜய் நேரில் சென்று விசாரித்தார். புதன்கிழமை காலை மருத்துவமனை சென்ற நடிகர் விஜய், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி உடனிருந்தார்.

இதைப் போலவே மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்துவிட்டுத் திரும்பும்போது பேசிய ரஜினிகாந்த் "கருணாநிதியின் உடல்நலம் குறித்து அழகிரி மற்றும் கனிமொழியிடம் விசாரித்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்" என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/india-45042562

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போதைக்கு சாக  மாட்டார்...இழுத்து,இழுத்து 100 வயசு வரை இருப்பார்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் ..மனிதநேயத்தை  பாராட்டுகிறேன்  ..☺️

Link to comment
Share on other sites

கருணாநிதி உடல்நிலை: நேரில் சந்தித்தார் குடியரசு தலைவர் கோவிந்த்

சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் மருத்துவமனைக்கு வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஒன்பது நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை சந்தித்துவிட்டு அவர் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் என்ற செய்தியை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் கருணாநிதியை சந்தித்த நேரத்தில் திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தோற்று காரணமாக சிகிச்சை எடுத்துவரும் கருணாநிதியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் கருணாநிதியின் உடல்நலன் குறித்து நலம் விசாரித்தனர்.

 
 

திமுக தலைவரின் உடல்நலன் பற்றிய மருத்துவ அறிக்கைகள் அவ்வப்போது வெளியாகி வந்தாலும், அவர் குணமாகி வீடு திரும்பும்வரை மருத்துவமனையைவிட்டுச் செல்லப்போவதில்லை என்ற முடிவில் திமுக தொண்டர்கள் சில ஆழ்வார்பேட்டையில் காத்திருக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/india-45075479

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கீழ் சாதிக்காரர் என்பதால் இந்தியாவில் ஒரு கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை அதுக்குப்பிறகும் இவர் இந்தியாவின் ஜனாதிபதி இதைவிட நாண்டிக்கிட்டுச்ச்சாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2018 at 5:02 PM, ரதி said:

இவர் இப்போதைக்கு சாக  மாட்டார்...இழுத்து,இழுத்து 100 வயசு வரை இருப்பார்
 

ஏதோ ஒரு ஆசை இன்னும் நிறைவேறேல்லை எண்டு நல்லவடிவாய் தெரியுது....அது என்னெண்டு ஆரைக்கேட்டு தெரியலாம் எண்டு தான் தெரியேல்லை.... ஒரு வேளை .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

ஏதோ ஒரு ஆசை இன்னும் நிறைவேறேல்லை எண்டு நல்லவடிவாய் தெரியுது....அது என்னெண்டு ஆரைக்கேட்டு தெரியலாம் எண்டு தான் தெரியேல்லை.... ஒரு வேளை .........

சவுண்டைப் பார்த்தால் நான்காவது ஆளைத் தேடுற மாதிரியெல்லோ இருக்கு.

Link to comment
Share on other sites

கருணாநிதி உடல்நிலை... காவேரியில் பரபரப்பு!

117_thumb.jpg
 

மஞ்சள் காமாலையின் தீவிரம் இன்னும் குறையாத காரணத்தினால், சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், கருணாநிதிக்கு இந்த நேரத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்திருப்பதால், ஐ.சி.யூ-வின் அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

கருணாநிதி உடல்நிலை... காவேரியில் பரபரப்பு!
 

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் கடந்த 2016 ம் ஆண்டு, முதல்முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அப்போது அவருக்கு `ட்ரக்கியோஸ்டோமி' (தொண்டைக்குழி அறுவை சிகிச்சை) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வருகிறார் கருணாநிதி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே உடல் நலக்குறைவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த  ஜூலை மாதம் 18 ம் தேதி உடல் நிலைப் பரிசோதனை மற்றும் ட்ரக்கியோடோமி கருவியை மாற்றுவதற்கும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதன் பின்னர், வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரது உடல் நிலையில் திடீர் சோர்வு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், கோபாலபுரம் வீட்டுக்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றானதால் மீண்டும், கருணாநிதியைக் காவேரி மருத்துவமனைக்கே அழைத்துச் செல்ல முடிவு எடுத்தனர்.

கருணாநிதி

அதன்படி, கடந்த 28 ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கருணாநிதியை அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் குழு கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியின் தலைவர்களும் நலம் விசாரித்தனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, மருத்துவச் சிகிச்சையில் இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகப் புகைப்படங்கள் வெளியாகின. இது தி.மு.க தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியானது.

 

 

இதற்கிடையில், பிற மாநில முதல்வர்கள் உட்பட பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்துச் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றார். கருணாநிதிக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதற்காகத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

 

 

சிறப்பு மருத்துவர் முகமது ரெலாகல்லீரலில் ஏற்கெனவே கருணாநிதிக்குச் சில பிரச்னைகள் இருந்ததால், புகழ்பெற்ற கல்லீரல் சிகிச்சை நிபுணர் முகமது ரிலா இரண்டு முறை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருகிறது. மஞ்சள் காமாலையின் தீவிரம் இன்னும் குறையாத காரணத்தினால், சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், கருணாநிதிக்கு இந்த நேரத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்திருப்பதால், ஐ.சி.யூ-வின் அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கட்சியினரிடையே கடந்த சில தினங்களாகத் தகவல் பரவி வருகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள்., எம்.பி-க்கள் எனப் பலரும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். முக்கிய நிர்வாகிகள் பலரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து, கருணாநிதி உடல் நிலை குறித்து உடன்பிறப்புகள் கலக்கத்துடன் விசாரித்து வருகின்றனர். கடந்த 22 ம் தேதி நிலவிய பரபரப்பு, இன்று காலையில் இருந்தே மீண்டும் தொற்றிக்கொண்டுள்ளது. கருணாநிதி குடும்பத்தினர் இன்று காலையிலேயே காவேரி மருத்துவமனைக்கு வந்த நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று மதியம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவர், கருணாநிதியை நேரில் பார்த்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, மறதி நோயால் உடல் நலிவுற்று வீட்டில் ஓய்வில் இருந்த தயாளு அம்மாளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இன்று, கருணாநிதியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், ``கலைஞரின் உடல் நிலையில் காலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் பின்னர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார் கலைஞர். அவரின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டறிந்தேன்'' என்றார். இதற்கிடையில், ``மருத்துவமனை முன்பு அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் கூடி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்'' என்று மருத்துவமனையில் இருந்த தி.மு.க முன்னணியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/133209-health-condition-of-dmk-chief-karunanidhi.html

Link to comment
Share on other sites

கருணாநிதியின் உடலில் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது: காவேரி மருத்துவமனை

 

karuna
 
 
karunanidhi1jpg

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரின் வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சலுக்காக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ம் தேதி இரவு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் பார்த்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துச் சென்றனர்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கருணாநிதியைப் பார்த்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் மு.கருணாநிதியை பார்த்தேன். அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினர், மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதல்வரும், பொது வாழ்வில் மூத்தவருமான கருணாநிதி விரைவில் நலம் பெற விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரின் வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.

மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார். அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24616278.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

`கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு’ - காவேரி மருத்துவமனை அறிக்கை!

 
 
 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை


தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் கடந்த 2016 ம் ஆண்டு, முதல்முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அப்போது அவருக்கு `ட்ரக்கியோஸ்டோமி' (தொண்டைக்குழி அறுவைசிகிச்சை) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வருகிறார் கருணாநிதி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகக் கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த  ஜூலை மாதம் 18-ம் தேதி உடல்நிலைப் பரிசோதனை மற்றும் ட்ரக்கியோடோமி கருவியை மாற்றுவதற்கும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதன் பின்னர், வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரின் உடல் நிலையில் திடீர் சோர்வு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், கோபாலபுரம் வீட்டுக்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றானதால் மீண்டும், கருணாநிதியைக் காவேரி மருத்துவமனைக்கே அழைத்துச் செல்ல முடிவு எடுத்தனர். அதன்படி, கடந்த 28-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கருணாநிதியை அழைத்து வந்தனர்.

 

 

அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் குழு கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியின் தலைவர்களும் நலம் விசாரித்தனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, மருத்துவச் சிகிச்சையில் இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகப் புகைப்படங்கள் வெளியாகின. இது தி.மு.க தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியானது. இதற்கிடையில், பிற மாநில முதல்வர்கள் உட்பட பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்துச் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றார். கருணாநிதிக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதற்காகத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மற்றொரு அறிக்கையைக் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், `வயது முதிர்வின் காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133226-the-challenge-of-directing-karunanidhis-organs-is-cauvery-hospital-report.html

Link to comment
Share on other sites

காவேரி மருத்துவமனை வந்த தி.மு.க எம்.எல்.ஏ க்கள் -பாதுகாப்பு அதிகரிப்பு #karunanidhi

 
 

தி.மு.க எம்.எல்.ஏ க்கள், டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு வருதற்காக தி.மு.க எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு சென்று, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து  விசாரித்து வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. 

 

 

மத்திய தரைவழிப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அறிந்து கொள்வதற்காக சென்னை வந்தடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் அவர் காவேரி மருத்துவமனைக்குச் செல்ல உள்ளார்.

 

 

தே.மு.தி.க-வைச் சேர்ந்த சுதீஷ், காவேரி மருத்துவமனைக்குச் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். இதையடுத்துப் பேசிய அவர், `கருணாநிதியின் உடல்நிலைகுறித்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்' என்று தெரிவித்தார்.

சுதீஷ்

காவேரி மருத்துவமனை அருகில் தி.மு.க தொண்டர்கள் குவிந்துவருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், காவேரி மருத்துவமனைக்குச் செல்லும் வழிகள் மாற்றப்பட்டுள்ளது.
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் காவேரி மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், `தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஏற்ற இறக்கமாக உள்ளது' என்று தெரிவித்தார்.

முத்தரசன்

காவேரி மருத்துவமனைக்கு தி.மு.க நிர்வாகிகள் மட்டுமல்லாது, பல கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும்  வரத் தொடங்கியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் முத்தரசன், வைரமுத்து, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் வருகைதந்துள்ளனர். 

காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்து, மருத்துவமனை இருக்கும் பகுதியில் தி.மு.க தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

காவேரி மருத்துவமனை

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 27-ம் தேதி இரவு திடீர் ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர், அவரது உடல்நிலைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நலம்குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான அறிக்கையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/133234-whats-happening-in-kauvery-hospital.html

Link to comment
Share on other sites

கருணாநிதி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: 24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை அறிவிப்பு

 

 
07THCADREPTIjpg

கருணாநிதியின் உடல்நிலையை கேட்டு கதறும் திமுக தொண்டர்

‘வயது மூப்பினால் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது’

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரத்துக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணா நிதிக்கு கடந்த ஜூலை 27-ம் தேதி நள்ளிரவில் திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 29-ம் தேதி மாலை அவருக்கு இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையால் உடல்நிலை படிப்படி யாக சீராகி வந்தது.

ஜூலை 31-ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய மருத்துவமனையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயல்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையால் அவருக்கு ஆரம்பகட்ட மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கல்லீரல் மருத்துவ நிபுணர் முகமது ரேலா ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூச்சுத் திணறல் காரணமாக கருணாநிதிக்கு டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தீவிர சிகிச்சை பிரிவுக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்த படங்களை திமுக தலைமை அலு வலகம் உடனடியாக வெளியிட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் நேரில் பார்த்த படங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் நேற்று பார்த்தார். பகல் 1.50 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார்.

cauveryjpg

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்ததும் காவேரி மருத்துவமனை முன்பு திரண்ட திமுகவினர். படம்: க.ஸ்ரீபரத்

 

மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி, துணைவியார் ராசாத்தி அம்மாள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட திமுக வின் முக்கிய நிர்வாகிகளும் நேற்று மருத்துவமனையில் முகாமிட்டிருந்தனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர் காவல் இணை ஆணையர் அன்பு, மயிலாப்பூர் காவல் ஆணையர் மயில்வாகனன் ஆகியோர் நேற்று பகல் 12.30 மணியளவில் மருத்துவனைக்கு வந்து நிலவரத்தை ஆராய்ந்தனர். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையும் அவர்கள் சந்தித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இது தொடர்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. எனவே, அவரது உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத் துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை குறித்து தெரிவிக்க முடியும்' என்று கூறப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ள தகவலை அறிந்ததும் காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக் கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர். கட்சி நிர்வாகிகளும் வரத் தொடங்கினர். பெண்களும் தொண்டர்களும் கதறி அழுதனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால், ஆழ்வார்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24620231.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை..! மருத்துவமனை முன் குவியும் தொண்டர்கள்

 
 
 

கருணாநிதி உடல்நிலை குறித்து அடுத்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், மு.க.ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர் காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

காவேரி மருத்துவமனை

வயது முதிர்வின் காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர் உடல்நிலை நலிவுற்றது. எனினும் வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதில் எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் இல்லாததால், கடந்த 28-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கருணாநிதியை அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அதேபோல் பல்வேறு கட்சியின் தலைவர்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர், பிற மாநிலத் தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுகுறித்தப் புகைப்படங்கள் வெளியாகி தி.மு.க தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. இதற்கிடையே, நேற்று அவர் உடல்நலத்தில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மேலும், அவருக்கு மஞ்சள்காமாலை போன்ற நோய் தொற்றுகள் உள்ளதும் கண்டறியப்பட்டது. 

 

 

இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், `வயது முதிர்வின் காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.  இதற்கிடையே, 11-வது நாளாக இன்றும் கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார். இன்று அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனை முன்பு அதிகளவில் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், காலையிலேயே கனிமொழி, அவரது கணவருடன் மருத்துவமனை வந்துள்ளார். இதேபோல் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு வரத்தொடங்கியுள்ளனர். 

 

 

காவேரி மருத்துவமனை

கருணாநிதி உடல்நிலை குறித்து அடுத்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், மு.க.ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தி.மு.க தலைமை நிலையை மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர் காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதிகமான தொண்டர்கள் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அவரின் உடல்நலம் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/133298-mk-stalin-consultation-with-senior-executives-about-karunanidhis-health-condition.html

Link to comment
Share on other sites

 

கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு

 

 
karunanidhi

 

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மாலை வெளியாகும் மருத்துவ அறிக்கைக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

சற்றுமுன்.. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார். இதனால் தமிழகத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு ஸ்டாலினுடன், மு.க. அழகிரி, துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோரும் செல்கின்றனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றிய கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 11வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மதியம் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்ததால் பதற்றம் நிலவியது.

இது பற்றிய தகவல் அறிந்த ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு குவிந்தனர். 
mk-ch.jpg

கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமை தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, அவரது முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவ ரீதியாகச் சமாளிப்பது சவாலாக உள்ளது. கருணாநிதிக்கு தொடர் கண்காணிப்பும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மருத்துவ அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் 24 மணி நேரம் என்பது இன்று மாலை 6.30 மணி வரை என்பதால், அடுத்த மருத்துவ அறிக்கையில் என்ன சொல்வார்கள் என்ற கலக்கத்தோடு திமுக தொண்டர்கள் மருத்துவமனையில் கலங்கிய கண்களோடு காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் கூடுதலாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதலாக வரவழைக்கப்பட்ட காவலர்கள் எழும்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பிற்பகலில் மருத்துவமனையில்  இருந்து புறப்பட்டுச் சென்றனர். கருணாநிதியுடன் மருத்துவமனையில் ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் திங்கள்கிழமை மாலையில் இருந்து தலைவர்களும் தொண்டர்களும் மருத்துவமனையில் குவிந்தனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்சாய் ரெட்டி, சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தனர். தொண்டர்களும் பெருமளவில் மருத்துவமனையில் குவிந்தனர். கருணாநிதி நலம்பெற வேண்டி, பலர் கண்ணீர் விட்டு கதறினர்.

எம்.பி.-க்கள் வருகை: கருணாநிதி உடல் நலம் குறித்த தகவல் கிடைத்ததும் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவசரம் அவசரமாக சென்னை திரும்பினர்.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, மனுதாரரே திரும்பப் பெற்றதால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
stalin.jpg

தமிழக முதல்வருடன், மு.க. ஸ்டாலினின் சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்ற நிலையில், இந்த சந்திப்பின் போது முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

http://www.dinamani.com/tamilnadu/2018/aug/07/கருணாநிதியின்-உடல்நிலை-தொடர்ந்து-கவலைக்கிடம்-முதல்வர்-பழனிசாமி-ஸ்டாலின்-சந்திப்பு-2976260.html

Link to comment
Share on other sites

மு.க.அழகிரியுடன் முதல்வரை சந்தித்த ஸ்டாலின்! #Karunanidhi

 
 
 

*முதல்வரை சந்தித்துவிட்டு மீண்டும் காவேரி மருத்துவமனை வந்த மு.க.ஸ்டாலின், தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

அதிரடி படையினர்

*காவேரி மருத்துவமனையில் அதிரடி படை குவிக்கப்பட்டுள்ளது.

 

 

கருணாநிதி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, எடப்பாடியை ஸ்டாலின் சந்தித்து உள்ளார். அவருடன் மு.க.அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உள்ளனர்.

 

 

கருணாநிதி
 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலத்தில் நேற்று பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. `வயது முதிர்வின் காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளைச் செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ என மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நேற்று மாலையிலிருந்தே தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். 

 

 

கருணாநிதி
 

இன்று காலை முதல் காவேரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது. அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க மூத்த நிர்வாகிகள் காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அவர்களுடன் இன்று காலை ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து தற்போது மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்தச் சந்திப்பு தொண்டர்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்து உள்ளன. காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் கதறி அழும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது!

https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html

Link to comment
Share on other sites

`கருணாநிதிக்கு என் பிரார்த்தனைகள்!’ - அமைச்சர் ட்வீட் #Karunanidhi

 

Karunanidhi Health Updates:

*`திமுக தலைவர் கருணாநிதிக்கு என் பிரார்த்தனைகள்’ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதனை பதிவிட்டுள்ளார்.

வேலுமணி

https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html

Link to comment
Share on other sites

`கண்ணீருடன் காவேரி மருத்துவமனைக்குள் வந்த துரைமுருகன் #Karunanidhi

 

Karunanidhi Health Updates:

*தி.மு.க தலைவர் கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். துரைமுருகன் கண்ணீருடன் காவேரி மருத்துவமனைக்குள் வந்தார். 

*கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

 

 

*சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெரினாவில் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா

*வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. அறிவுறுத்தி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

டிஜிபி உத்தரவு

*சற்றுமுன் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துச் சென்ற நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். 

*`தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு என் பிரார்த்தனைகள்’ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதைப் பதிவிட்டுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html

 

 

 

கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! - காவேரி மருத்துவமனை அறிக்கை

 
 

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கருணாநிதி

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கருணாநிதி ஓய்வில் இருந்து வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், அவருக்கு கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே அவர், காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக்குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை 6 அறிக்கைகள் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. நேற்று மாலை வெளியான அறிக்கையில், `வயது முதிர்வின் காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

 

இந்தநிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்புக்குப் பின்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மேலும், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சென்னைக்கு உடனடியாக வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பாக குவிந்த வண்ணம் இருக்கின்றனர். 

 

 

காவேரி மருத்துவமனை அறிக்கை

இந்தநிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``கருணாநிதியின் உடல்நிலையில் கடந்த சில மணி நேரமாக பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்து வருகின்றன. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/133319-kaveri-hospital-issues-medical-bulletin-about-karunanidhis-health.html

Link to comment
Share on other sites

காவேரி மருத்துவமனைக்குள் இனி யாருக்கும் அனுமதியில்லை -காவல்துறை அறிவிப்பு! #Karunanidhi

 

Karunanidhi Health Updates:

*காவேரி மருத்துமனை தரப்பில் அறிக்கை வெளியானதையடுத்து, தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து   காவேரி மருத்துவமனைக்குள் இனி வெளியிலிருந்து வரும் யாருக்கும் அனுமதியில்லை என போலீஸார் அறிவித்துள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html

Link to comment
Share on other sites

கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் - கண்ணீரில் கோபாலபுரம் இல்லம்! #Karunanidhi

 

Karunanidhi Health Updates:

 

* கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து, அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். 

கருணாநிதி குடும்பத்தார்

 

 

*தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட  உத்தரவிடப்பட்டுள்ளது.

*கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, அங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html

 

 

 

கொட்டுகிறது மழை; அசய மறுக்கின்றனர் தொண்டர்கள் !!!

 

 
 

காவேரி வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியில் மாலை முதல் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்த மழைக்கு நடுவே நனைந்தபடி திமுக தொண்டர்கள் கருணாநிதி வாழ்க என்று கோஷம் எழுப்பியபடி உள்ளனர்.

xkauvery-hospital456565-1533643622.jpg.p

பெண் தொண்டர்கள் அழுது புலம்பியபடி உள்ள நிலையில். கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி வைத்தியசாலை இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து காவேரி வைத்தியசாலைளை சுற்றிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. 

xkauvery-hospital32332-1533643631.jpg.pa

இந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோபாலபுரம் இல்லத்திலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அங்கு குவிந்துள்ள தொண்டர்கள் மழையையும் பொருட்படுத்தாது  களைஞர் வாழ்க! என கோஷமிட்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/38010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்தார் கருணாநிதி....

 

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426437

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.