Jump to content

“பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை”


Recommended Posts

“பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை” 

 

 
 

கிளிநொச்சி பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு இதுவரை அனுமதியும் கிடைக்கவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை  என ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு தற்போது வரை எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவை அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாக இடம்பெற்ற  விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

IMG_2630.jpg

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 767 மில்லியன் ரூபாவில் திட்டம் ஒன்று வரையப்பட்டு அது தொடர்பில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது  ஆனால் குறித்த திட்டம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்கு  இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை அவை அடுத்தவாரமே அனுப்பப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. எனவே இதுவரைக்கும் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை.

ஆனால் கிளிநொச்சி பொதுச் சந்தை எரிந்த பின்னர் நான் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் சுவாமிநாதன் ஆகியோருடன் பேசியதற்கு அமைவாக அவர்களால் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு 150 மில்லியன் நிதி புதிய சந்தை கட்டடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 80 மில்லியன் நிதி மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.  ஆனால் அது வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப் பட்டுவிட்டது.

IMG_2626.jpg

இதன் பின்னர் கிளி நொச்சிக்கான நகர அபிவிருத்தியினை நோக்காக  கொண்டு மாதிரி  சந்தை கட்டடம் ஒன்ற 767 மில்லியன் ரூபாவில்  நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வரையப்பட்டு அமைச்சரவை அனுமதிக்கு  கொண்டு சென்ற போது அங்கு நிதி அமைச்சர்  சந்தை அமைப்பதற்கு  ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டது பின்னர் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது  இது பெருமளவு நிதி  என்பதனால் தேசிய திட்டமில் திணைக்களத்தின்அனுமதி பெறப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது  அதற்கான பணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர் ஒரு வாராத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவுறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே இன்றை திகதி வரை  இது சம்மந்தமான எந்த நிதி ஒதுக்கீடும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன்தான் இது செயற்பாடு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் எனத் தெரிவித்த ஆளுநர் அதேநேரம்  இந்த புதிய திட்டமும் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை

http://www.virakesari.lk/article/37320

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.