Jump to content

வடக்கு தேர்­த­லுக்கு முன்னர் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு வரும் : நிபுணர் குழு­வுக்கு சுமந்­திரன் எம்.பி. அழுத்தம்; கூட்டு எதிர்க்­கட்சி குற்­றச்­சாட்டு


Recommended Posts

வடக்கு தேர்­த­லுக்கு முன்னர் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு வரும் : நிபுணர் குழு­வுக்கு சுமந்­திரன் எம்.பி. அழுத்தம்; கூட்டு எதிர்க்­கட்சி குற்­றச்­சாட்டு

city-01GMGPage1Image0024-f1415f681e36fd1c7e2a9f325f897c603ad2f5d9.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறை­யைக்­கொண்ட புதிய அர­சி­ ய­ல­மைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்

­னெ­டுத்­துள்­ளது. அவ்­வி­ட­யங்­களை விரை­வு­ப­டுத்­து­மாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சர்­வ­தே­சமும் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன.

எனவே அது­நாட்­டுக்கு மிகவும் ஆபத்­தான சூழ்­நி­லை­யாகும். எனினும் சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்பை தடுப்­ப­தற்­காக கூட்டு எதிர்க்­கட்சி பரந்­து­பட்ட போராட்­டங்­களைத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அதில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே தெரி­வித்தர்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பாடு செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக அர­சாங்கம் மோச­டி­களை சட்­ட­மாக்­கு­வ­தற்கு எதிர்­பார்க்­கி­றது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கத்­தி­லுள்ள இரு தரப்பும் அர­சி­ய­ல­மைப்பு குறித்து இரண்டு வகை­யி­லான அபிப்­பி­ரா­யங்­களை முன்­வைத்­தி­ருந்­தன.

புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சிய கூறி­யது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் முன்­வைப்­ப­தா­கவும் அது குறித்து மாறு­பட்ட கருத்­துகள் எழு­மாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தெரி­வித்­தி­ருந்தார்.

எனவே 2016 ஆண்டு மார்ச் மாதம் ஒன்­பதாம் திகதி அர­சி­ய­ல­மைப்பு சபை­யினால் பிர­தமர் தலை­மையில் 21 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவில் கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன மற்றும் பிர­சன்ன ரண­துங்­கவும் அங்கம் வகித்­தனர். அக்­கு­ழு­வா­னது பின்னர் அர­சி­ய­ல­மைப்பு குறித்து நிபு­ணத்­துவம் வாய்ந்த பத்து பேர் கொண்ட குழுவை நிய­மித்­தி­ருந்­தது.

அந்த பத்து பேர் கொண்ட குழுவே அர­சி­ய­ல­மைப்பு குறித்து தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி வந்­தது. அதற்­கி­ணங்க அக்­குழு கடந்த வாரம் பிர­தமர் தல­மை­யி­லான 21 பேர் கொண்ட குழு­விடம் புதிய அர­ய­சி­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தை முன்­வைத்­துள்­ளது. அது நூற்று இரு­பத்­தைந்து பக்­கங்­க­ளைக்­கொண்­ட­தாகும். எனினும் எழுத்­து­மூ­மான அந்த ஆவ­ணத்தை முன்­வைக்­கும்­போதே நிபுணர் குழு­வுக்குள் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அக்­கு­ழுவில் பத்துப் பேர் அங்கம் வகிக்­கின்ற போதிலும் ஆறு பேரே கைச்­சாத்­திட்­டுள்­ளனர். அத்­துடன் அதில் ஒரு உறுப்­பினர் கடந்த ஆறு மாத கால­மாக வெளி­நாட்டில் உள்ளார். எனினும் அவரின் கையொப்­பமும் இடப்­பட்­டுள்­ளது.

அந்த நிபுணர் குழு­வுக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் தெளி­வூட்­டு­மாறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன மற்றும் பிர­சன்ன ரண­துங்க ஆகியோர் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தனர். நிபுணர் குழு பேச்­சு­வார்த்தை நடத்­தாத விட­யங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் பேரா­சி­ரியர் கமீனா குண­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

அவ்­வா­றான விட­யங்­களை உள்­ள­டக்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுமந்­திரன் மற்றும் ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன ஆகியோர் அழுத்தம் வழங்­கி­யுள்­ளனர். எனவே அவ்­வி­ரு­வரும் அழுத்தம் வழங்­கு­வதைத் தடுக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வி்டம் வேண்­டிக்­கொண்­ட­தா­கவும் பேரா­சி­ரியர் கமீனா குண­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் வட மாகா­ணத்தைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பினர் என்­ப­துடன் அவர் சமஷ்டி ஆட்­சியை கோரும் உறுப்­பி­ன­ரு­மாவார். ஜயம்­பதி விக்­ர­ம­ரட்ன அரச சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து துணிந்து பேசு­பவர். எனவே அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­ல­மா­னது அலரி மாளி­கையில் செயற்­படும் குழு ஒன்­றி­னா­லேயே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் முதல் அம்­ச­மாக “ஏக்­கிய ராஜ்ய - ஒரு­மித்த நாடு” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது சம்­பந்­த­மாக ஏற்­க­னவே பிரச்­சினை ஏற்­பட்­டி­ருந்­தது. சிங்­கள மக்கள் மத்­தியில் ஒரு கருத்­தையும் தமிழ் மக்கள் மத்­தியில் மற்­றொரு கருத்­தையும் அர­சாங்கம் குறிப்­பி­டு­கி­றது. மேலும் மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரத்தை பர­வ­லாக்கம் செய்­வது குறித்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் மூலம் சமஷ்டி ஆட்சி முறை­மை­யையே கொண்டு வரு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்­றனர். ஆகவே சமஷ்டி ஆட்­சியை அர­சாங்கம் ஏற்­ப­டுத்த முனை­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தின் 93 (சி) பிரிவில் ஜனா­தி­ப­தி­யா­னவர் உள­வியல் ரீதி­யி­லான பாதிப்­புக்கு உட்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­ற­தென்றால் சபா­நா­யகர், எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் பிர­தமர் ஆகியோர் இணைந்து ஜனா­தி­ப­தியை நீக்க முடியும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அது குறித்து வைத்­தி­யர்­களின் ஆலோ­சனை அவ­சி­ய­மில்லை என்­ப­தையே குறிக்­கி­றது.

அத்­துடன் 107 (2) பிரிவில் பிர­ஜா­வு­ரிமை குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­கி­ணங்க எவ­ருக்­கா­வது இரட்டைப் பிரா­ஜா­வு­ரிமை இருக்­கு­மாயின் அவர் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மாயின் தேர்­த­லுக்கு 12 மாதங்­க­ளுக்கு முன்னர் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கிக்­கொள்ள வேண்டும். குறித்த ஏற்­பாடு யாருக்­காக கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது என்­பது தெளி­வா­கி­றது.

இவ்­வா­றா­ன­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்கும் போது புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வந்து அத­னூ­டாக சமஷ்டி ஆட்­சியை ஏற்­ப­டுத்த எத்­த­ணிக்­கின்­றனர். அத்­துடன் சமஷ்­டியை ஏற்­ப­டுத்த முனை­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இடை­யூறு ஏற்­ப­டுத்தின் அவ­ருக்கு உள­வியல் ரீதி­யி­லான பாதிப்பு உள்­ள­தாகக் குறிப்­பிட்டு பத­வி­யி­லி­ருந்து நீக்­குவர். பின்னர் மக்­களின் ஆத­ர­வுடன் இவ்­வா­றான செயற்­பா­டு­களை எதிர்க்க முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ உட்­பட எவ­ரா­வது முன்­வ­ரு­வார்­க­ளாயின் அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத நிலையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தில் தேசிய பொலிஸ் மற்றும் மாகாண பொலிஸ் என­பன குறித்தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. பொலிஸ் ஆணைக்­கு­ழுவும் இரண்­டாக அமை­ய­வுள்­ளது. முத­ல­மைச்­சரின் கீழ் வரும் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் தல­மையின் கீழ் மாகா­ணங்­களின் பொலிஸ் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளனர்.

வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் விரைவில் நிறை­வ­டை­ய­வுள்­ளது. வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்குச் செல்­வ­தற்கு முன்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­மாறு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கி­றது. அல்­லா­வி­டத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் மக்கள் மத்­தியில் செல்ல முடி­யாத நிலை ஏற்­படும். ஆகவே உட­ன­டி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­மாறு தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் அர­சாங்­கத்தின் மீது அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது.

இது நாட்­டுக்கு மிகவும் ஆபத்­தான நிலை­வ­ர­மாகும். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க 2020 ஆம் ஆண்டில் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கே இவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கிறார். அதற்­கா­கத்தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சிறையில் அடைப்­ப­துடன் ஏனைய ராஜபக் ஷகள் முன்­வ­ரு­வ­தையும் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­கான விட­யங்கள் குறித்து நாம் தற்­போது பேச்­சு­வார்த்தை நடத்தி வருகிறோம். அத்துடன் தற்போது குறித்த அரசியலமைப்பு சட்டமூலத்தை முன்வைத்துள்ளபோதிலும் பாராளுமன்றில் நிறைவேற்ற எத்தணிக்கும்போது இன்னும் பாரதூரமான விடங்கள் சிலவற்றை திருத்தம் மூலம் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பர். ஆகவே அது சம்பந்தமாகவும் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். கூட்டு எதிர்க்ட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி குழுக்கள் அமைத்துள்ளோம்.

அரசாங்கம் நாட்டுக்குப் பாதாகமான அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பாராமன்றத்திற்கு வெளியில் மக்களை இணைத்துக்கொண்டு போராட்டங்களிலும் ஈடுபடும். அது தொடர்பில் சகல கட்சிகளையும் இணைத்துகொண்டு திட்டமிட்ட எதிர்ப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை வீட்டுக்கனுப்புவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-26#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.