Jump to content

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி


Recommended Posts

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

 
 

சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

 

அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,உஇதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது.

ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/spiritual/01/189020?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாடா பறைமேளத்தை காணேல்லை எண்டு பார்த்தன்.........சரி அதுவும் வந்திட்டுது.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்........இருந்தும் தமிழினம் பின்னோக்கி போகின்றதோ என்றொரு மனவருத்தம் என் அடிமனதை வருடுகின்றது.

Link to comment
Share on other sites

கவலைக்குரிய விடயம் ஒன்றும் செய்யமுடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீ மிதிக்கிறதுக்கும் ஒரு துணிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

இவர்கள் தீ மிதிப்பதால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை. யருக்கும் பிரயோசனம இல்லாத ஒரு வேலையை செய்வதால் கடவுள் அருள் புரிவார் என்று நம்பும் கூட்டம் முட்டாள்கள் கூட்டமே. உலகிலே நாங்கள் தான் அதி முட்டாள்கள் என்பதை தமிழ் பக்தர்கள் ஐரோப்பிய நமரங்களில் கோவில் திருவிழாக்களில் நிரூபித்து வருகிறார்கள். வருடம் முழுவதும் குளிரிலும், பனியலும்உழைக்கும் பணத்தை கொண்டு கோடை கால விடுமுறையை சந்தோசமாக அனுபவிக்காமல் கோவில் வியாபாரிகளின் வங்கிக்கணக்கை நிரப்பும் முட்டாள்கள் கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

ஐரோப்பாவில் ஒரு நாட்டில் தைபொங்கலன்று வெளியே பானை வைத்து பொங்கல் செய்தார்கள் ஒரு குடும்பம், விறைக்கும் குளிரில் மேலங்கியின்றி வேட்டி மட்டும் அணிந்தபடி..

நெருப்பும் புகையும் எழுந்ததை பார்த்து பக்கத்துவீட்டு வெள்ளை பொலிசுக்கு அடிக்க ,தீயணைப்பு வாகனம் கூவிகொண்டுவந்து ஒரே அடி, வீட்டு காரருக்கு இன்னொருமுறை இப்படி நடந்துகொள்ளக்கூடாது எனும் எச்சரிக்கையும் தண்டப்பணமும் அறவிடப்பட்டது...

அதேபோல் இன்னொரு நாட்டில் வயதானவர் தூக்கத்திலயே இறந்துவிட்டார் ,வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் திரைகளைமூடி தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி அழுதுகொண்டிருக்க...அதே சட்ட நடவடிக்கைகள் ,அம்புலன்ஸுகள்,எச்சரிக்கைகள்...

தீ மிதிக்கும் இந்த நடவடிக்கைபற்றி எவரும் காவல்துறையிடம் புகார் கொடுக்காதவரை  மத சம்பிரதாயங்கள் வாழும், அப்படியில்லாம யாரும் புகார் கொடுத்தால் ஆக குறைந்தது தீயணைப்பு துறைக்கு அறிவித்து தயார் நிலையில் ஒரு வண்டி நிறுத்தி வைக்கப்படாததற்குகூட  சட்டம் தண்டிக்கலாம்...

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரியது...ஆனால் பொதுவெளியில் பகிரப்பட்ட செய்தியென்பதால் ஏதோ சொல்ல தோன்றிச்சு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, valavan said:

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

47 minutes ago, valavan said:

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரிய

இப்படியான கூட்டங்களை நம்பித்தான் ஐயர்மார் சொந்தச்செலவில் கோவில்கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வீடியோவைப் பார்த்தேன். முதலிலே உரு வந்து ஓடுபட்டுத் திரிந்தவர் தீமிதிக்காமல் ஓடிவிடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் சிங்கன் கடைசியில ஏறிவிட்டார். இல்லாட்டி யாரும் ஏத்திவிட்டாங்களோ தெரியவில்லை.

கரி போடும் மஞ்சள் வேட்டிக்காரரின் கோமணத்தை வீடியோக்காரன் காட்டாமல் வெட்டி  வெட்டிருக்கலாம்??

நம்ம நண்பர் ஒருவரும் அங்கப்பிரதட்சணம் செய்திருக்கின்றார்?

 

எங்கள் பண்பாடு என்று சொல்லி இப்படிப் படம் காட்டுவதைவிட்டுவிட்டு இந்து ஞான மரபை அதன் ஆன்மீகத்தை வளர்க்க கோயில்கள் முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

பக்தி பண்பாடு எனும் பெயரில் பகட்டு பந்தாவை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கோவில்கள் கேளிக்கை கூடாரமாகிக்கொண்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

இந்த கோவிலுக்கு போவது விட அமைதியான ஏரிக்கரையில் உள்ள ரெஸ்ரராண்டில் அமர்ந்து பியர் அருந்துவதால்  மன மகிழ்வும் மன அமைதியும் அதிகமாக கிடைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்த கோவில் தொடக்கத்தில் ஆகா ஓகோ என்று செய்வினம் இரண்டு மூன்று வருடங்கள் போன பின் தமிழனுக்கு என்ற சொறிக்குனம் வெளிய எட்டி பார்க்கும் பிறகென்ன மாறி மாறி போலீசுக்கும் கவுன்சிலுக்கும் பெட்டிசம் போகும் தானாகவே இந்த தீ மிதி விளயாட்டு நின்றுவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விருப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை வெளிக் காட்டுவதில் (குறிப்பாக அந்நிய நாட்டில்) பக்குவம் வேண்டும். தமிழரின் பக்தி இலக்கியங்களின் வாயிலாக மெய்ஞ்ஞானத்தைப் பரப்பலாம். சிவனைப் போற்றிய திருவாசகத்தில் ஜி.யு.போப்பை உருக வைத்த தமிழர் மாண்பு இவர்கள் அறிந்திலரோ ? தமிழரின் தலைசிறந்த சங்க நாகரிக காலத்தில் இன்றைய பெரும்பாலான ஐரோப்பியர் காட்டுவாசிகளாய்த் திரிந்திருக்க வேண்டும். இன்று அவர்கள் நாகரிகமடைந்து நம்மவர் அவர் முன் காட்டுவாசிகளாய் நடந்து கொள்வது என்ன ஒரு நகை முரண் ! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

 

 

அந்த டிரெஸ்ஸிங் கவுண் ..போட்டவா...என்னத்தையோ...ஒரு நாளும் காணாத ஒண்டைக்கண்டது போல...உத்துப் பார்க்கிறா!

இப்படி நிர்வாணமாகத் திரியிறது....ஜெயின்..சமண சமயங்களின் வழக்கமாகும்!

இவருக்கு ஏதோ....ஒரு விதமான நரம்பியல் பிரச்சனை இருக்குப் போல கிடக்கு!

அல்லது...நல்ல..நுழம்புக் கடியோ தெரியாது!

மேலதிக படங்கள்....இருந்தால் இணைக்கவும்!

Link to comment
Share on other sites

அவரவருக்கு வாழ்க்கையில் என்ன பிரச்சனைகளோ. நானும் இங்குள்ள கருத்துக்களை வாசித்தபின்னர் காணொலியை பார்த்தேன். நாதஸ்வர வித்துவானும் தீயை மிதித்தார். எது எப்படியோ...

இறந்தபிறகு தீ எங்களை மிதிக்கப்போகின்றது. எங்கள் உடல் தீயில் தகனம் ஆகப்போகின்றது. இப்போ என்ன அவசரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 9:35 PM, சுப.சோமசுந்தரம் said:

! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

 

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/26/2018 at 6:30 AM, நந்தன் said:

இப்பிடி தீ மிதிச்சா சூடு ஏறாதா

பலர் அப்படி  ஒன்றும் தெரிவதில்லை, என்று சொன்னாலும்... 
வேறு இடங்களில்... சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு, மருத்துவ மனையில்... அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள்,  இப்படியான வேலைகளில் இறங்குவதை தவிர்ப்பதே... புத்திசாலித் தனமானது.

1) இங்கு நாம் எப்போதும் சப்பாத்துடன்,  நடமாடுவதால்... எமது பாதங்கள், ஊரில் இருப்பவர்களை விட மென்மையானது. உடனே.. தீ கொப்பளங்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

2) அப்படி தீக்காயம் ஏற்பட்டு... மருத்துவ மனைக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்...
அதற்குரிய வைத்திய செலவுகளை... அவரது,  மருத்துவ காப்புறுதி  நிறுவனம் ஏற்றுக்  கொள்ள மாட்டாது. 

3) அதன் பின்.. வேலையிடத்தில், மருத்துவ விடுமுறை எடுத்தமைக்கான  காரணங்கள் தெரிய வரும் போது... வரும் பிரச்சினைகளையும்  எதிர் கொள்ள வேண்டி வரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

பெரியார் தமது பெயரில் ராமசாமியை நீக்கவில்லை. Rationalist Association of Sri Lanka வின் உலகப் புகழ்பெற்ற தலைவராய் விளங்கிய ஆபிரகாம் கோவூர் தமது பெயரில் ஆபிரகாமை நீக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

 

ஒரு நாத்திகர்,  தலைமுறை என்று வரும்போது ஆத்திகத்தையும் மதிக்கணும் எங்கிற உங்கள் கருத்தை வரவேற்கிறேன் சார்.:)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு கம்மி என்றாலும் 
ஜாதியில் எவ்வளவு உயர்வானவர்கள் 
இது தெரியாமல் இங்கே சிலர் காழ்ப்புனர்வு கருத்து எழுதுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் தீ மிதிப்பதையும் கொண்டுவந்து சேர்த்த தமிழர்களுக்கு  கும்பிடு  இங்கே வெள்ளைக்காரன் வந்து வேஸ்டி சேலைகட்டி கோவிலுக்குள் சென்று வழிபடும் போது ஏனப்பா நம்ம சனம் அங்கே மிதிக்க கூடாத என்ன நேர்த்திக்கடன்களை செலுத்த பறவைக்காவடி எடுக்கிறான் இங்க அங்க அங்குள்ளவர்களுக்கு தீயில் இறங்க வேண்டினார்கள் என்னவோ

ஊரில ஒருகாலத்தில திருநீறு பூசி தண்ணிய ஓதி அடிச்சால்தான் கன பேருக்கு பட்ட காத்து கருப்பு போனதாமே மெய்ஞானம் 

வெள்ளைக்காரனுக்கு பார்க்க சுத்த பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்ல தெரியாத மனிதர்களாக நாம் இருக்கிறன் விண்வெளிக்கு போக முன்பு சேர்ஜ்ஜிக்கு போனவன் அங்கே எதை கேட்டுப்போயிருப்பான் விண்வெளியில் காற்று கொஞ்சம் கொடு என்று கேட்டிருப்பான் என்னவோ :) 

Link to comment
Share on other sites

On 7/29/2018 at 6:37 PM, தனிக்காட்டு ராஜா said:

ஐரோப்பிய நாடுகளில் தீ மிதிப்பதையும் கொண்டுவந்து சேர்த்த தமிழர்களுக்கு  கும்பிடு  இங்கே வெள்ளைக்காரன் வந்து வேஸ்டி சேலைகட்டி கோவிலுக்குள் சென்று வழிபடும் போது ஏனப்பா நம்ம சனம் அங்கே மிதிக்க கூடாத என்ன நேர்த்திக்கடன்களை செலுத்த பறவைக்காவடி எடுக்கிறான் இங்க அங்க அங்குள்ளவர்களுக்கு தீயில் இறங்க வேண்டினார்கள் என்னவோ

ஊரில ஒருகாலத்தில திருநீறு பூசி தண்ணிய ஓதி அடிச்சால்தான் கன பேருக்கு பட்ட காத்து கருப்பு போனதாமே மெய்ஞானம் 

வெள்ளைக்காரனுக்கு பார்க்க சுத்த பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்ல தெரியாத மனிதர்களாக நாம் இருக்கிறன் விண்வெளிக்கு போக முன்பு சேர்ஜ்ஜிக்கு போனவன் அங்கே எதை கேட்டுப்போயிருப்பான் விண்வெளியில் காற்று கொஞ்சம் கொடு என்று கேட்டிருப்பான் என்னவோ :) 

இறைவனுக்கு நேர்த்திகடன் என்றால் என்ன? முட்டாள்த்தனமாக பறவைக்காவடி எடுப்பதும் தீயில்   இறங்குவதும் அறிவு வளர்ச்சி அடையாத காலங்களில் மக்களால் நம்பப்பட்ட மூடப் பழக்கங்கள். இதை தற்போதைய காலங்களில்  ஜரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல எங்கு செய்தாலும் அவர்கள் காட்டு மிராண்டிகளே. கடவுள் என்று ஒருவர் இருந்து அவர்  மனிதர்தாகளைப் படைத்திருந்தால் தான்  படைத்த மனிதர்கள் அறிவுடைய நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும. என்று தான் விரும்புவரே யொழிய  தன்பெயரில் காட்டு மிராண்டி மூடத்தனங்களை செய்யும், பரப்பும் மூடர்களாக இருப்பதை விரும்ப மாட்டார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.