Jump to content

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி


Recommended Posts

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

 
 

சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

 

அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,உஇதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது.

ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/spiritual/01/189020?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாடா பறைமேளத்தை காணேல்லை எண்டு பார்த்தன்.........சரி அதுவும் வந்திட்டுது.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்........இருந்தும் தமிழினம் பின்னோக்கி போகின்றதோ என்றொரு மனவருத்தம் என் அடிமனதை வருடுகின்றது.

Link to comment
Share on other sites

கவலைக்குரிய விடயம் ஒன்றும் செய்யமுடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீ மிதிக்கிறதுக்கும் ஒரு துணிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

இவர்கள் தீ மிதிப்பதால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை. யருக்கும் பிரயோசனம இல்லாத ஒரு வேலையை செய்வதால் கடவுள் அருள் புரிவார் என்று நம்பும் கூட்டம் முட்டாள்கள் கூட்டமே. உலகிலே நாங்கள் தான் அதி முட்டாள்கள் என்பதை தமிழ் பக்தர்கள் ஐரோப்பிய நமரங்களில் கோவில் திருவிழாக்களில் நிரூபித்து வருகிறார்கள். வருடம் முழுவதும் குளிரிலும், பனியலும்உழைக்கும் பணத்தை கொண்டு கோடை கால விடுமுறையை சந்தோசமாக அனுபவிக்காமல் கோவில் வியாபாரிகளின் வங்கிக்கணக்கை நிரப்பும் முட்டாள்கள் கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

ஐரோப்பாவில் ஒரு நாட்டில் தைபொங்கலன்று வெளியே பானை வைத்து பொங்கல் செய்தார்கள் ஒரு குடும்பம், விறைக்கும் குளிரில் மேலங்கியின்றி வேட்டி மட்டும் அணிந்தபடி..

நெருப்பும் புகையும் எழுந்ததை பார்த்து பக்கத்துவீட்டு வெள்ளை பொலிசுக்கு அடிக்க ,தீயணைப்பு வாகனம் கூவிகொண்டுவந்து ஒரே அடி, வீட்டு காரருக்கு இன்னொருமுறை இப்படி நடந்துகொள்ளக்கூடாது எனும் எச்சரிக்கையும் தண்டப்பணமும் அறவிடப்பட்டது...

அதேபோல் இன்னொரு நாட்டில் வயதானவர் தூக்கத்திலயே இறந்துவிட்டார் ,வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் திரைகளைமூடி தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி அழுதுகொண்டிருக்க...அதே சட்ட நடவடிக்கைகள் ,அம்புலன்ஸுகள்,எச்சரிக்கைகள்...

தீ மிதிக்கும் இந்த நடவடிக்கைபற்றி எவரும் காவல்துறையிடம் புகார் கொடுக்காதவரை  மத சம்பிரதாயங்கள் வாழும், அப்படியில்லாம யாரும் புகார் கொடுத்தால் ஆக குறைந்தது தீயணைப்பு துறைக்கு அறிவித்து தயார் நிலையில் ஒரு வண்டி நிறுத்தி வைக்கப்படாததற்குகூட  சட்டம் தண்டிக்கலாம்...

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரியது...ஆனால் பொதுவெளியில் பகிரப்பட்ட செய்தியென்பதால் ஏதோ சொல்ல தோன்றிச்சு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, valavan said:

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

47 minutes ago, valavan said:

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரிய

இப்படியான கூட்டங்களை நம்பித்தான் ஐயர்மார் சொந்தச்செலவில் கோவில்கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வீடியோவைப் பார்த்தேன். முதலிலே உரு வந்து ஓடுபட்டுத் திரிந்தவர் தீமிதிக்காமல் ஓடிவிடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் சிங்கன் கடைசியில ஏறிவிட்டார். இல்லாட்டி யாரும் ஏத்திவிட்டாங்களோ தெரியவில்லை.

கரி போடும் மஞ்சள் வேட்டிக்காரரின் கோமணத்தை வீடியோக்காரன் காட்டாமல் வெட்டி  வெட்டிருக்கலாம்??

நம்ம நண்பர் ஒருவரும் அங்கப்பிரதட்சணம் செய்திருக்கின்றார்?

 

எங்கள் பண்பாடு என்று சொல்லி இப்படிப் படம் காட்டுவதைவிட்டுவிட்டு இந்து ஞான மரபை அதன் ஆன்மீகத்தை வளர்க்க கோயில்கள் முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

பக்தி பண்பாடு எனும் பெயரில் பகட்டு பந்தாவை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கோவில்கள் கேளிக்கை கூடாரமாகிக்கொண்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

இந்த கோவிலுக்கு போவது விட அமைதியான ஏரிக்கரையில் உள்ள ரெஸ்ரராண்டில் அமர்ந்து பியர் அருந்துவதால்  மன மகிழ்வும் மன அமைதியும் அதிகமாக கிடைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்த கோவில் தொடக்கத்தில் ஆகா ஓகோ என்று செய்வினம் இரண்டு மூன்று வருடங்கள் போன பின் தமிழனுக்கு என்ற சொறிக்குனம் வெளிய எட்டி பார்க்கும் பிறகென்ன மாறி மாறி போலீசுக்கும் கவுன்சிலுக்கும் பெட்டிசம் போகும் தானாகவே இந்த தீ மிதி விளயாட்டு நின்றுவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விருப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை வெளிக் காட்டுவதில் (குறிப்பாக அந்நிய நாட்டில்) பக்குவம் வேண்டும். தமிழரின் பக்தி இலக்கியங்களின் வாயிலாக மெய்ஞ்ஞானத்தைப் பரப்பலாம். சிவனைப் போற்றிய திருவாசகத்தில் ஜி.யு.போப்பை உருக வைத்த தமிழர் மாண்பு இவர்கள் அறிந்திலரோ ? தமிழரின் தலைசிறந்த சங்க நாகரிக காலத்தில் இன்றைய பெரும்பாலான ஐரோப்பியர் காட்டுவாசிகளாய்த் திரிந்திருக்க வேண்டும். இன்று அவர்கள் நாகரிகமடைந்து நம்மவர் அவர் முன் காட்டுவாசிகளாய் நடந்து கொள்வது என்ன ஒரு நகை முரண் ! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

 

 

அந்த டிரெஸ்ஸிங் கவுண் ..போட்டவா...என்னத்தையோ...ஒரு நாளும் காணாத ஒண்டைக்கண்டது போல...உத்துப் பார்க்கிறா!

இப்படி நிர்வாணமாகத் திரியிறது....ஜெயின்..சமண சமயங்களின் வழக்கமாகும்!

இவருக்கு ஏதோ....ஒரு விதமான நரம்பியல் பிரச்சனை இருக்குப் போல கிடக்கு!

அல்லது...நல்ல..நுழம்புக் கடியோ தெரியாது!

மேலதிக படங்கள்....இருந்தால் இணைக்கவும்!

Link to comment
Share on other sites

அவரவருக்கு வாழ்க்கையில் என்ன பிரச்சனைகளோ. நானும் இங்குள்ள கருத்துக்களை வாசித்தபின்னர் காணொலியை பார்த்தேன். நாதஸ்வர வித்துவானும் தீயை மிதித்தார். எது எப்படியோ...

இறந்தபிறகு தீ எங்களை மிதிக்கப்போகின்றது. எங்கள் உடல் தீயில் தகனம் ஆகப்போகின்றது. இப்போ என்ன அவசரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 9:35 PM, சுப.சோமசுந்தரம் said:

! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

 

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/26/2018 at 6:30 AM, நந்தன் said:

இப்பிடி தீ மிதிச்சா சூடு ஏறாதா

பலர் அப்படி  ஒன்றும் தெரிவதில்லை, என்று சொன்னாலும்... 
வேறு இடங்களில்... சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு, மருத்துவ மனையில்... அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள்,  இப்படியான வேலைகளில் இறங்குவதை தவிர்ப்பதே... புத்திசாலித் தனமானது.

1) இங்கு நாம் எப்போதும் சப்பாத்துடன்,  நடமாடுவதால்... எமது பாதங்கள், ஊரில் இருப்பவர்களை விட மென்மையானது. உடனே.. தீ கொப்பளங்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

2) அப்படி தீக்காயம் ஏற்பட்டு... மருத்துவ மனைக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்...
அதற்குரிய வைத்திய செலவுகளை... அவரது,  மருத்துவ காப்புறுதி  நிறுவனம் ஏற்றுக்  கொள்ள மாட்டாது. 

3) அதன் பின்.. வேலையிடத்தில், மருத்துவ விடுமுறை எடுத்தமைக்கான  காரணங்கள் தெரிய வரும் போது... வரும் பிரச்சினைகளையும்  எதிர் கொள்ள வேண்டி வரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

பெரியார் தமது பெயரில் ராமசாமியை நீக்கவில்லை. Rationalist Association of Sri Lanka வின் உலகப் புகழ்பெற்ற தலைவராய் விளங்கிய ஆபிரகாம் கோவூர் தமது பெயரில் ஆபிரகாமை நீக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

 

ஒரு நாத்திகர்,  தலைமுறை என்று வரும்போது ஆத்திகத்தையும் மதிக்கணும் எங்கிற உங்கள் கருத்தை வரவேற்கிறேன் சார்.:)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு கம்மி என்றாலும் 
ஜாதியில் எவ்வளவு உயர்வானவர்கள் 
இது தெரியாமல் இங்கே சிலர் காழ்ப்புனர்வு கருத்து எழுதுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் தீ மிதிப்பதையும் கொண்டுவந்து சேர்த்த தமிழர்களுக்கு  கும்பிடு  இங்கே வெள்ளைக்காரன் வந்து வேஸ்டி சேலைகட்டி கோவிலுக்குள் சென்று வழிபடும் போது ஏனப்பா நம்ம சனம் அங்கே மிதிக்க கூடாத என்ன நேர்த்திக்கடன்களை செலுத்த பறவைக்காவடி எடுக்கிறான் இங்க அங்க அங்குள்ளவர்களுக்கு தீயில் இறங்க வேண்டினார்கள் என்னவோ

ஊரில ஒருகாலத்தில திருநீறு பூசி தண்ணிய ஓதி அடிச்சால்தான் கன பேருக்கு பட்ட காத்து கருப்பு போனதாமே மெய்ஞானம் 

வெள்ளைக்காரனுக்கு பார்க்க சுத்த பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்ல தெரியாத மனிதர்களாக நாம் இருக்கிறன் விண்வெளிக்கு போக முன்பு சேர்ஜ்ஜிக்கு போனவன் அங்கே எதை கேட்டுப்போயிருப்பான் விண்வெளியில் காற்று கொஞ்சம் கொடு என்று கேட்டிருப்பான் என்னவோ :) 

Link to comment
Share on other sites

On 7/29/2018 at 6:37 PM, தனிக்காட்டு ராஜா said:

ஐரோப்பிய நாடுகளில் தீ மிதிப்பதையும் கொண்டுவந்து சேர்த்த தமிழர்களுக்கு  கும்பிடு  இங்கே வெள்ளைக்காரன் வந்து வேஸ்டி சேலைகட்டி கோவிலுக்குள் சென்று வழிபடும் போது ஏனப்பா நம்ம சனம் அங்கே மிதிக்க கூடாத என்ன நேர்த்திக்கடன்களை செலுத்த பறவைக்காவடி எடுக்கிறான் இங்க அங்க அங்குள்ளவர்களுக்கு தீயில் இறங்க வேண்டினார்கள் என்னவோ

ஊரில ஒருகாலத்தில திருநீறு பூசி தண்ணிய ஓதி அடிச்சால்தான் கன பேருக்கு பட்ட காத்து கருப்பு போனதாமே மெய்ஞானம் 

வெள்ளைக்காரனுக்கு பார்க்க சுத்த பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்ல தெரியாத மனிதர்களாக நாம் இருக்கிறன் விண்வெளிக்கு போக முன்பு சேர்ஜ்ஜிக்கு போனவன் அங்கே எதை கேட்டுப்போயிருப்பான் விண்வெளியில் காற்று கொஞ்சம் கொடு என்று கேட்டிருப்பான் என்னவோ :) 

இறைவனுக்கு நேர்த்திகடன் என்றால் என்ன? முட்டாள்த்தனமாக பறவைக்காவடி எடுப்பதும் தீயில்   இறங்குவதும் அறிவு வளர்ச்சி அடையாத காலங்களில் மக்களால் நம்பப்பட்ட மூடப் பழக்கங்கள். இதை தற்போதைய காலங்களில்  ஜரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல எங்கு செய்தாலும் அவர்கள் காட்டு மிராண்டிகளே. கடவுள் என்று ஒருவர் இருந்து அவர்  மனிதர்தாகளைப் படைத்திருந்தால் தான்  படைத்த மனிதர்கள் அறிவுடைய நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும. என்று தான் விரும்புவரே யொழிய  தன்பெயரில் காட்டு மிராண்டி மூடத்தனங்களை செய்யும், பரப்பும் மூடர்களாக இருப்பதை விரும்ப மாட்டார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.