Jump to content

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி


Recommended Posts

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

 
 

சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

 

அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,உஇதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது.

ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/spiritual/01/189020?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாடா பறைமேளத்தை காணேல்லை எண்டு பார்த்தன்.........சரி அதுவும் வந்திட்டுது.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்........இருந்தும் தமிழினம் பின்னோக்கி போகின்றதோ என்றொரு மனவருத்தம் என் அடிமனதை வருடுகின்றது.

Link to comment
Share on other sites

கவலைக்குரிய விடயம் ஒன்றும் செய்யமுடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீ மிதிக்கிறதுக்கும் ஒரு துணிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

இவர்கள் தீ மிதிப்பதால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை. யருக்கும் பிரயோசனம இல்லாத ஒரு வேலையை செய்வதால் கடவுள் அருள் புரிவார் என்று நம்பும் கூட்டம் முட்டாள்கள் கூட்டமே. உலகிலே நாங்கள் தான் அதி முட்டாள்கள் என்பதை தமிழ் பக்தர்கள் ஐரோப்பிய நமரங்களில் கோவில் திருவிழாக்களில் நிரூபித்து வருகிறார்கள். வருடம் முழுவதும் குளிரிலும், பனியலும்உழைக்கும் பணத்தை கொண்டு கோடை கால விடுமுறையை சந்தோசமாக அனுபவிக்காமல் கோவில் வியாபாரிகளின் வங்கிக்கணக்கை நிரப்பும் முட்டாள்கள் கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

ஐரோப்பாவில் ஒரு நாட்டில் தைபொங்கலன்று வெளியே பானை வைத்து பொங்கல் செய்தார்கள் ஒரு குடும்பம், விறைக்கும் குளிரில் மேலங்கியின்றி வேட்டி மட்டும் அணிந்தபடி..

நெருப்பும் புகையும் எழுந்ததை பார்த்து பக்கத்துவீட்டு வெள்ளை பொலிசுக்கு அடிக்க ,தீயணைப்பு வாகனம் கூவிகொண்டுவந்து ஒரே அடி, வீட்டு காரருக்கு இன்னொருமுறை இப்படி நடந்துகொள்ளக்கூடாது எனும் எச்சரிக்கையும் தண்டப்பணமும் அறவிடப்பட்டது...

அதேபோல் இன்னொரு நாட்டில் வயதானவர் தூக்கத்திலயே இறந்துவிட்டார் ,வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் திரைகளைமூடி தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி அழுதுகொண்டிருக்க...அதே சட்ட நடவடிக்கைகள் ,அம்புலன்ஸுகள்,எச்சரிக்கைகள்...

தீ மிதிக்கும் இந்த நடவடிக்கைபற்றி எவரும் காவல்துறையிடம் புகார் கொடுக்காதவரை  மத சம்பிரதாயங்கள் வாழும், அப்படியில்லாம யாரும் புகார் கொடுத்தால் ஆக குறைந்தது தீயணைப்பு துறைக்கு அறிவித்து தயார் நிலையில் ஒரு வண்டி நிறுத்தி வைக்கப்படாததற்குகூட  சட்டம் தண்டிக்கலாம்...

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரியது...ஆனால் பொதுவெளியில் பகிரப்பட்ட செய்தியென்பதால் ஏதோ சொல்ல தோன்றிச்சு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, valavan said:

வழிபாட்டு முறையும் கலாச்சாரங்களும் நாம் வாழ்கின்ற தேசங்களை பொறுத்து கடைபிடிக்கப்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்படும்...

47 minutes ago, valavan said:

மெஞ்ஞானத்தை இறுக்கமாக நாங்கள் கடைபிடிக்கும் ஒரு கலாச்சாரத்தின் வழி வந்தவர்கள் என்று எம் பக்கம் நியாயபடுத்தினாலும்... இந்த தேரிழுக்கும் விழாவில் ஜீன்ஸுடனும் நிற்கிறார்கள், முக்கால்வாசி முதுகை காட்டியபடியும் இறைவன் சந்நிதியில் நிற்கிறார்கள், ஆண்டவன் வலம்வரும் வரிசையில் நின்றபடி செல்போனில் யாருடனோ பேசியபடி ஹாயாக செல்கிறார்கள்... ஆக விஞ்ஞான நாட்டின் கலாச்சாரங்களை கடைபிடித்தபடியே , தாயகத்தின் மெஞ்ஞானம் வளர்க்கிறார்கள்...

அவரவர் நம்பிக்கை வாழ்க்கைமுறை அவர்களுக்கேயுரிய

இப்படியான கூட்டங்களை நம்பித்தான் ஐயர்மார் சொந்தச்செலவில் கோவில்கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வீடியோவைப் பார்த்தேன். முதலிலே உரு வந்து ஓடுபட்டுத் திரிந்தவர் தீமிதிக்காமல் ஓடிவிடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் சிங்கன் கடைசியில ஏறிவிட்டார். இல்லாட்டி யாரும் ஏத்திவிட்டாங்களோ தெரியவில்லை.

கரி போடும் மஞ்சள் வேட்டிக்காரரின் கோமணத்தை வீடியோக்காரன் காட்டாமல் வெட்டி  வெட்டிருக்கலாம்??

நம்ம நண்பர் ஒருவரும் அங்கப்பிரதட்சணம் செய்திருக்கின்றார்?

 

எங்கள் பண்பாடு என்று சொல்லி இப்படிப் படம் காட்டுவதைவிட்டுவிட்டு இந்து ஞான மரபை அதன் ஆன்மீகத்தை வளர்க்க கோயில்கள் முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

பக்தி பண்பாடு எனும் பெயரில் பகட்டு பந்தாவை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கோவில்கள் கேளிக்கை கூடாரமாகிக்கொண்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது

'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

இந்த கோவிலுக்கு போவது விட அமைதியான ஏரிக்கரையில் உள்ள ரெஸ்ரராண்டில் அமர்ந்து பியர் அருந்துவதால்  மன மகிழ்வும் மன அமைதியும் அதிகமாக கிடைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....!

ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்த கோவில் தொடக்கத்தில் ஆகா ஓகோ என்று செய்வினம் இரண்டு மூன்று வருடங்கள் போன பின் தமிழனுக்கு என்ற சொறிக்குனம் வெளிய எட்டி பார்க்கும் பிறகென்ன மாறி மாறி போலீசுக்கும் கவுன்சிலுக்கும் பெட்டிசம் போகும் தானாகவே இந்த தீ மிதி விளயாட்டு நின்றுவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விருப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை வெளிக் காட்டுவதில் (குறிப்பாக அந்நிய நாட்டில்) பக்குவம் வேண்டும். தமிழரின் பக்தி இலக்கியங்களின் வாயிலாக மெய்ஞ்ஞானத்தைப் பரப்பலாம். சிவனைப் போற்றிய திருவாசகத்தில் ஜி.யு.போப்பை உருக வைத்த தமிழர் மாண்பு இவர்கள் அறிந்திலரோ ? தமிழரின் தலைசிறந்த சங்க நாகரிக காலத்தில் இன்றைய பெரும்பாலான ஐரோப்பியர் காட்டுவாசிகளாய்த் திரிந்திருக்க வேண்டும். இன்று அவர்கள் நாகரிகமடைந்து நம்மவர் அவர் முன் காட்டுவாசிகளாய் நடந்து கொள்வது என்ன ஒரு நகை முரண் ! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புலன்பெயர்ந்தவன் போறபோக்கை பார்த்தால் ஆண்டிப்பூசையும் நடக்கும் கண்டியளோ!

 

 

அந்த டிரெஸ்ஸிங் கவுண் ..போட்டவா...என்னத்தையோ...ஒரு நாளும் காணாத ஒண்டைக்கண்டது போல...உத்துப் பார்க்கிறா!

இப்படி நிர்வாணமாகத் திரியிறது....ஜெயின்..சமண சமயங்களின் வழக்கமாகும்!

இவருக்கு ஏதோ....ஒரு விதமான நரம்பியல் பிரச்சனை இருக்குப் போல கிடக்கு!

அல்லது...நல்ல..நுழம்புக் கடியோ தெரியாது!

மேலதிக படங்கள்....இருந்தால் இணைக்கவும்!

Link to comment
Share on other sites

அவரவருக்கு வாழ்க்கையில் என்ன பிரச்சனைகளோ. நானும் இங்குள்ள கருத்துக்களை வாசித்தபின்னர் காணொலியை பார்த்தேன். நாதஸ்வர வித்துவானும் தீயை மிதித்தார். எது எப்படியோ...

இறந்தபிறகு தீ எங்களை மிதிக்கப்போகின்றது. எங்கள் உடல் தீயில் தகனம் ஆகப்போகின்றது. இப்போ என்ன அவசரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 9:35 PM, சுப.சோமசுந்தரம் said:

! இத்தகைய செயல்களால் அந்நியரிடம் மட்டுமல்ல , என்னைப் போன்ற நாத்திகரிடமும் இவர்கள் தோற்றுப் போவார்கள். அதை நானே விரும்பவில்லை.

 

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/26/2018 at 6:30 AM, நந்தன் said:

இப்பிடி தீ மிதிச்சா சூடு ஏறாதா

பலர் அப்படி  ஒன்றும் தெரிவதில்லை, என்று சொன்னாலும்... 
வேறு இடங்களில்... சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு, மருத்துவ மனையில்... அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள்,  இப்படியான வேலைகளில் இறங்குவதை தவிர்ப்பதே... புத்திசாலித் தனமானது.

1) இங்கு நாம் எப்போதும் சப்பாத்துடன்,  நடமாடுவதால்... எமது பாதங்கள், ஊரில் இருப்பவர்களை விட மென்மையானது. உடனே.. தீ கொப்பளங்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

2) அப்படி தீக்காயம் ஏற்பட்டு... மருத்துவ மனைக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்...
அதற்குரிய வைத்திய செலவுகளை... அவரது,  மருத்துவ காப்புறுதி  நிறுவனம் ஏற்றுக்  கொள்ள மாட்டாது. 

3) அதன் பின்.. வேலையிடத்தில், மருத்துவ விடுமுறை எடுத்தமைக்கான  காரணங்கள் தெரிய வரும் போது... வரும் பிரச்சினைகளையும்  எதிர் கொள்ள வேண்டி வரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

சோம சுந்தரம் ..(ர்) என்ற பெயரை இன்றுவரை தாங்கிகொண்டிருப்பதால் நாத்திகத்தை நீங்கள் களங்கபடுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

பெரியார் தமது பெயரில் ராமசாமியை நீக்கவில்லை. Rationalist Association of Sri Lanka வின் உலகப் புகழ்பெற்ற தலைவராய் விளங்கிய ஆபிரகாம் கோவூர் தமது பெயரில் ஆபிரகாமை நீக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கண்டிப்பாகத் தோன்றவில்லை நண்பரே ! என் தாய், தந்தை இட்ட பெயர். என்னைப் பொறுத்தமட்டில் அது என் உயிருக்குயிரான என்  தாத்தாவின் பெயர். இன்று அவர் பெயர் சொல்லும் பெயரன் நான். ஒரு ஆத்திகர் அவரது சாமியின் பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையை நான் மதிக்கிறேன். உணர்வற்ற வெளிப்பூச்சு பகுத்தறிவுவாதம் எனக்குத் தேவையில்லை.

 

ஒரு நாத்திகர்,  தலைமுறை என்று வரும்போது ஆத்திகத்தையும் மதிக்கணும் எங்கிற உங்கள் கருத்தை வரவேற்கிறேன் சார்.:)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு கம்மி என்றாலும் 
ஜாதியில் எவ்வளவு உயர்வானவர்கள் 
இது தெரியாமல் இங்கே சிலர் காழ்ப்புனர்வு கருத்து எழுதுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் தீ மிதிப்பதையும் கொண்டுவந்து சேர்த்த தமிழர்களுக்கு  கும்பிடு  இங்கே வெள்ளைக்காரன் வந்து வேஸ்டி சேலைகட்டி கோவிலுக்குள் சென்று வழிபடும் போது ஏனப்பா நம்ம சனம் அங்கே மிதிக்க கூடாத என்ன நேர்த்திக்கடன்களை செலுத்த பறவைக்காவடி எடுக்கிறான் இங்க அங்க அங்குள்ளவர்களுக்கு தீயில் இறங்க வேண்டினார்கள் என்னவோ

ஊரில ஒருகாலத்தில திருநீறு பூசி தண்ணிய ஓதி அடிச்சால்தான் கன பேருக்கு பட்ட காத்து கருப்பு போனதாமே மெய்ஞானம் 

வெள்ளைக்காரனுக்கு பார்க்க சுத்த பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்ல தெரியாத மனிதர்களாக நாம் இருக்கிறன் விண்வெளிக்கு போக முன்பு சேர்ஜ்ஜிக்கு போனவன் அங்கே எதை கேட்டுப்போயிருப்பான் விண்வெளியில் காற்று கொஞ்சம் கொடு என்று கேட்டிருப்பான் என்னவோ :) 

Link to comment
Share on other sites

On 7/29/2018 at 6:37 PM, தனிக்காட்டு ராஜா said:

ஐரோப்பிய நாடுகளில் தீ மிதிப்பதையும் கொண்டுவந்து சேர்த்த தமிழர்களுக்கு  கும்பிடு  இங்கே வெள்ளைக்காரன் வந்து வேஸ்டி சேலைகட்டி கோவிலுக்குள் சென்று வழிபடும் போது ஏனப்பா நம்ம சனம் அங்கே மிதிக்க கூடாத என்ன நேர்த்திக்கடன்களை செலுத்த பறவைக்காவடி எடுக்கிறான் இங்க அங்க அங்குள்ளவர்களுக்கு தீயில் இறங்க வேண்டினார்கள் என்னவோ

ஊரில ஒருகாலத்தில திருநீறு பூசி தண்ணிய ஓதி அடிச்சால்தான் கன பேருக்கு பட்ட காத்து கருப்பு போனதாமே மெய்ஞானம் 

வெள்ளைக்காரனுக்கு பார்க்க சுத்த பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்ல தெரியாத மனிதர்களாக நாம் இருக்கிறன் விண்வெளிக்கு போக முன்பு சேர்ஜ்ஜிக்கு போனவன் அங்கே எதை கேட்டுப்போயிருப்பான் விண்வெளியில் காற்று கொஞ்சம் கொடு என்று கேட்டிருப்பான் என்னவோ :) 

இறைவனுக்கு நேர்த்திகடன் என்றால் என்ன? முட்டாள்த்தனமாக பறவைக்காவடி எடுப்பதும் தீயில்   இறங்குவதும் அறிவு வளர்ச்சி அடையாத காலங்களில் மக்களால் நம்பப்பட்ட மூடப் பழக்கங்கள். இதை தற்போதைய காலங்களில்  ஜரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல எங்கு செய்தாலும் அவர்கள் காட்டு மிராண்டிகளே. கடவுள் என்று ஒருவர் இருந்து அவர்  மனிதர்தாகளைப் படைத்திருந்தால் தான்  படைத்த மனிதர்கள் அறிவுடைய நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும. என்று தான் விரும்புவரே யொழிய  தன்பெயரில் காட்டு மிராண்டி மூடத்தனங்களை செய்யும், பரப்பும் மூடர்களாக இருப்பதை விரும்ப மாட்டார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.