Jump to content

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ்

சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.”

“அவர் என்ன சொன்னார்?”

“அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதியாக தீர்மானித்திருந்தேன். இப்போ பிரிஞ்சு தனியா வந்திருக்கேன். டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கேன்.”

“அவருக்கு உங்களுடன் இருக்க விருப்பம் இருந்ததா?”

“ஆண்கள் என்றுமே மனைவியின் நலன், தேவை, பிரச்சனை பற்றி கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு நான் ஒரு உடைமை. ஓட்டையோ உடைசலோ இருக்கட்டுமே என்பது அவரது அணுகுமுறை. நீ பார்த்திருப்பாயே, ரெண்டு பெண்டாட்டி வைத்திருக்கிற ஆண்கள் இரண்டு பெண்களையும் தக்க வைக்கவே ஆசைப்படுவார்கள் – ஒருவரிடம் திருப்தி இல்லை என்றாலும் கூட. அது ஒரு டிப்பிக்கல் ஆண் நிலைப்பாடு.”

நான் மீளவும் கேட்டேன்,

“அவருக்கு உங்கள் மீது விருப்பமில்லையா?”

அவர் எரிச்சலானார், “ஏன் திரும்பத் திரும்ப கேட்குறே? அவருக்கு விருப்பமிருந்தா தான் என்ன? நான் சந்தோஷமா இல்ல. என் சந்தோஷம் முக்கியம் இல்லையா? ஏன் அவரோட வசதிக்காத இந்த உறவை நான் சகிச்சுக்கணும்?”

திருமண உறவில் தனிநபர் திருப்தி முக்கியம் என்கிற தரப்பே என்னுடையதும். ஆனால் அப்படி ஒருவருக்கு அதிருப்தி என்றால் அந்த உறவை காப்பாற்ற சிறிய முயற்சிகளையாவது அவர் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இன்று நாம் அத்தகைய சகிப்புத் தன்மையை இழந்து வருகிறோம் என்பது ஒரு பக்கம் என்றால், எதற்கு மணவாழ்வை முறிக்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு தெள்வில்லை என்பது இன்னொரு பக்கம். நான் அத்தோழியிடம் கேட்டேன்,

“நீங்கள் சந்தோஷமாக இல்லைன்னு சொல்றீங்களா? இல்லை திருமண உறவில் நீங்கள் சந்தோஷமா இல்லைங்கிறீங்களா?”

“என்ன ஸ்டுப்பிட் கேள்வி. ரெண்டும் ஒண்ணு தானே?”

“ரெண்டும் ஒண்ணு இல்லீங்க. நீங்க தனிப்பட்ட முறையில் சந்தோஷமா இருக்கிறது வேறே, திருமணத்தில் சந்தோஷமா இருக்கிறது வேறே. ஒன்று இன்னொன்றுக்கு உதவலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.”

“என்ன தான் சொல்றே?”

“நீங்க திருமண வாழ்வில் சந்தோஷமா இல்லைன்னா அதை சரி செய்றதுக்கு முயற்சிக்கலாம். ஆனால் நீங்க உங்க வாழ்க்கையில் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்றால் அது வேறு பிரச்சனை. அதை மண முறிவு மூலம் சரி செய்ய முடியாது.”

“அவரோட நான் மகிழ்ச்சியால் இல்லைங்கிறதுனால தானே என் வாழ்க்கை நரகமாச்சு?”

“சரி இது உண்மைன்னா, அவரை விட்டு பிரிஞ்ச பிறகு ரொம்ப குதூகலமா இருக்கீங்களா?”

“இல்லை இப்பவும் அந்த பாதிப்பு என்னை விட்டுப் போகல”

“அந்த மனச்சோர்வை முழுக்க போயிடுச்சா?”

“இல்லை”

“இல்லைன்னா உங்க சோர்வோட காரணம் அவர் இல்லை தானே? இல்லை என்றால் அவரை பிரிந்த மறுகணம் உங்க வாழ்வே சொர்க்கமாக ஆகணுமே?”

அவர் கோபத்தில் போனை துண்டித்து விட்டார்.

 

இன்று நான் காணும் கணிசமான மணமுறிவுகள் இப்படி தெளிவற்ற காரணங்களால் தான் நிகழ்கின்றன.

 ஒன்று, இன்று முன்னளவுக்கு யாரும் மண உறவுகளை நம்பி இல்லை. தனியாக வாழ்வது இன்று பெரும் சவால் அல்ல. அடுத்து முக்கியமாய், இன்று பலரையும் சொல்லொண்ணா துக்கம், சோர்வு, அவநம்பிக்கை, கசப்பு ஆட்கொள்கிறது. இதன் காரணம் என்னவென துல்லியமாய் தெரியாத நிலையில் ஒவ்வொரு எளிய இலக்குகளையாய் பலி கொடுக்கிறார்கள்.

பேஸ்புக்கை டீ அக்டிவேட் செய்வார்கள், வாட் ஆப்பை, மெஸஞ்சரை போனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வார்கள், சிலர் இந்த நடவடிக்கைகளை அடுத்து ஒரு சிறிய திருப்தியை உணர்வார்கள்; ஆனால் இதுவும் தற்காலிகமே. வருத்தமும் சோர்வும் மீண்டும் அவர்களை ஆட்கொள்ளும். இப்போது அவர்கள் நட்புறவுகளை துண்டிப்பார்கள். அடுத்து, வேலையில் இருந்து அடிக்கடி லீவ் எடுப்பார்கள். சிலர் நேர்மறையாக, புகைப்படக் கலை, இசை, ஓவியம் என எதிலாவது புதிதாக ஈடுபடுவார்கள். இதற்கு நடுவில் சிக்கி விபத்தாவது திருமண வாழ்வு. 

பேஸ்புக் நண்பர்கள், வாட்ஸ் ஆப் அரட்டைகள், மற்றும் நடைமுறை வாழ்வு நண்பர்களை விட்டு விலகிய பின்னரும் மனம் நிம்மதி கொள்ளவில்லை எனில் நிச்சயம் பிரச்சனை கணவன் / மனைவிடத்து தான் என நம்புவார்கள். 

திருமணத்தில் ஆண்களுக்கு பொதுவாய் அழுத்தம் குறைவு. ஆகையால் அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு தாமதமாய் திரும்புவார்கள். மனைவியுடன் உரையாடுவதை குறைத்துக் கொள்வார்கள். செக்ஸில் ஈடுபாடு இழப்பார்கள். ஒருவேளை புதிய பெண்ணுடல்களை நாடினால் செக்ஸில் கூடுதல் திருப்தி கிடைத்து அதனால் வாழ்வில் மகிழ்ச்சி மீளும் என நம்புவார்கள். பெண்களும் இப்படி முயற்சிக்கலாம், என்றாலும் அவர்கள் அதிகமாய் உறவை முறிப்பதிலேயே முனைப்பு கொள்கிறார்கள் என்பது என் கணிப்பு; ஏனெனில் குடும்ப வாழ்வில் பெண்களுக்கு நெருக்கடி அதிகம்.

சமீப காலங்களில் இந்தியாவில் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. தில்லியில் தினமும் நூறு விவாகரத்து வழக்குகளாவது தொடுக்கப்படுகின்றன என்கிறார்கள். 2003இல் இருந்து 2011 வரை கொல்கொத்தாவில் விவாகரத்தில் 350% அதிகரித்துள்ளன. 2010-14க்கு இடையிலான காலத்தில் மும்பையில் விவாகரத்துகள் இரட்டிப்பாயுள்ளன. இதற்கு பல நியாயமான காரணங்கள் உண்டு தாம். ஒரு நியாயமற்ற காரணம் நான் மேலே சுட்டிக் காட்டி உள்ளது.

இனிவரும் காலங்களில் நம் வாழ்வில் விளக்க இயலாத அதிருப்தியும் நிம்மதியின்மையும் கசப்பும் அதிகமாகப் போகிறது. இதைப் போக்க நாம் கீழ்வரும் அபத்த தீர்வுகளையே அதிகம் கையாளப் போகிறோம்.

(1)  பேஸ்புக் டீஆக்டிவேஷன்

(2)  வாட்ஸ் ஆப்பை விட்டு நீங்குதல்

(3)  ஒவ்வொரு சமூக உறவாடலாக கைவிடுதல்

(4)  பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் மூழ்குதல்

(5)  உளவியல் ஆலோசகரை அணுகுதல்

(6)  விவாகரத்துக்கு விண்ணப்பித்தல்

 

மேலும், இனிமேல் ஆண் பெண் உறவுகளில் எந்த நிலையான தன்மையும் இராது. தனிநபர்கள் உள்ளுக்குள் திருப்தியாக இருந்தால் ஒழிய திருமண / காதல் உறவுகள் இனி தப்பிக்காது. அதாவது, இனிமேல் உறவின் நன்மை மட்டுமே அதைக் காப்பாற்றாது.

இதற்கு சரியான தீர்வு?

நமது மனச்சோர்வுக்கு அடிப்படை காரணத்தை நமக்குள்ளே தான் தேட வேண்டும், அடுத்தவரிடம் அல்ல எனும் தெளிவு இருந்தாலே பாதி விவாகரத்துகளை தவிர்க்கலாம்.

http://thiruttusavi.blogspot.com/2018/07/1_23.html?m=1

http://thiruttusavi.blogspot.com/2018/07/2_23.html?m=1

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என் கருத்து வெறும் ஏட்டுச் சுரைக்காயாய்த் தோன்றலாம். அகவாழ்வில் உலகோர்க்கே நெறி வகுத்தவர் தமிழர். தமிழராய்ப் பிறந்தோர் அகப் பாடல்கள் சிலவற்றையாவது , குறிப்பாக வள்ளுவனின் இன்பத்துப்பாலைச் சிறிதளவாவது உட்கொள்ளுதல் மணவாழ்விலும் அதன் வாயிலாய் சமூக வாழ்விலும் ஏற்றம் தரும். வள்ளுவன் வாழ்ந்த உலகில் உளவியலாளர்களுக்கு வேலையில்லை. ஆனால் இங்கும் விவாகரத்து பெருகி வருதல் தமிழனின் அறிவுச் சருக்கல் அன்றி வேறென்ன ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்திலை புட்டுக்கு உப்பு காணாட்டிலும் உடனை விவாகரத்துத்தான் கண்டியளோ ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 2:06 PM, குமாரசாமி said:

இந்தக்காலத்திலை புட்டுக்கு உப்பு காணாட்டிலும் உடனை விவாகரத்துத்தான் கண்டியளோ ❤️

குசா புட்டு அவித்தது கணவனா மனைவியா? தெளிவாக எழுதவேணும் கண்டியளோ!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.