Jump to content

என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை


Recommended Posts

என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை

 

 

 
maxwell

கிளென் மேக்ஸ்வெல். | ஏ.எப்.பி.

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடிய போது ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’கில் ஆஸி.வீரர்கள் ஈடுபட்டதாக அல்ஜசீரா புலனாய்வு ஆவண வீடியோ வெளியிட்டது. தற்போது கிளென் மேக்ஸ்வெலையும் இதில் இழுத்து விட்டது குறித்து அவர் கடுமையாக வருத்தமடைந்துள்ளதோடு குற்றச்சாட்டுகளை மேக்ஸ்வெல் தீவிரமாக மறுக்கவும் செய்துள்ளார்.

மேக்ஸ்வெல் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக கூறப்படும் தருணம், காட்டப்பட்ட ஹெல்மெட் ஆகியவை மேக்ஸ்வெலுக்கு எதிராக சாட்சியமாகியுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் சிலபல சந்தேகங்களில் மேக்ஸ்வெல் பெயர் அடிப்பட்டதும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

 
 

பல்வேறு மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு விசாரித்து வரும் நிலையில் மேக்ஸ்வெல் இன்னமும் விசாரிக்கப்படவில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் அவரை விசாரணை செய்யவில்லை, ஆனால் இந்த வீடியோ வெளியிடப்படப்போவதாக மேக்ஸ்வெலிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் கூறியதாவது:

எனக்கு அதிர்ச்சியாக உள்ளது, என்னை இது காயப்படுத்துகிறது. ஈடுபாட்டுடன் ஒரு ஆட்டத்தில் ஆடி அதில் என் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தது பற்றி மகிழ்ச்சியான் நினைவுகள் மட்டுமே என்னிடம் உள்ள நிலையில்... சதம் எடுத்த பிறகு ஸ்டீவ் ஸ்மித்தை நான் அணைத்துக் கொண்டதும் மிகப்பெரிய நினைவுகளாக என்னிடம் உள்ளது.

இத்தகைய மகாநினைவுகளை இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளால் களங்கப்படுத்தப்படுவது என்னை நொறுக்குகிறது. நிச்சயம் இதில் எள்ளளவும் உண்மையில்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணத்தின் மீது கரி பூச மேற்கொள்ளப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் நியாயமற்றவை, அராஜகமானவை.

2015 உலகக்கோப்பை வெற்றியையும் இப்படித்தான் களங்கப்படுத்தினார்கள். என்னுடைய இரண்டு மிகப்பெரிய நினைவுகள் இவை. டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட தருணத்தில் நான் என்னை நிரூபிக்கக் கடமைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிலையில் நான் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டேன் என்பது முற்றிலும் முட்டாள்தனமானது.

அல்ஜசீரா பெயர்களை வெளியிட்டிருந்தால் அவர்கள் மீது பெரிய விமர்சனம் எழுந்திருக்கும். அவர்கள் பெயர்கள் எதையும் குறிப்பிடவில்லை, ஆட்டத்தின் குறிப்பிட்ட தருணத்தைக் குறிப்பிட்டுள்ளனர். அப்போது நான் கிரீசில் இருந்தேன். நான் பயன்படுத்திய ஹெல்மெட் காட்டப்படுகிறது. அப்போது என்னைத் தவிர அந்த ஹெட் கியரை யாரும் பயன்படுத்தவில்லை. இதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளிடம் நான் 100% நேர்மையாக இருந்திருக்கிறேன். ஏதாவது தவறு நிகழும் அறிகுறி இருந்தால் நான் அவர்களிடம் நீண்ட நேரம் இது குறித்து பேசியுள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார் மேக்ஸ்வெல். அல்ஜசீரா வீடியோவில் 2 ஆஸி.வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/sports/article24503256.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.