Jump to content

அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு.....எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும்


Recommended Posts

அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு

SAMAKALAM210718-PG03-R2Page1Image0001-4e64701f076351983b4e2c8b6c35578de62d9e9d.jpg

 

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

 

எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும்

இரு நாடு­களின் தலை­வர்கள் சந்­திக்­கி­றார்கள் என்றால், அந்த சந்­திப்பு பல வழி­களில் முக்­கி­யத்­துவம் பெறும். அதுவும் அமெ­ரிக்க ஜனா­தி­ ப­தியும், ரஷ்ய ஜனா­தி­ப­தியும் சந்­திக்­கி­றார்கள் என்றால், அதற்­குள்ள முக்­கி­யத்­து­வத்தைக் கேட்­கவே வேண்டாம். இந்த சந்­திப்பு அமெ­ரிக்­கா­விற்கும், ரஷ்­யா­விற்கும் மாத்­தி­ர­மன்றி, முழு உல­கிற்கும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும்.  

இவ்­விரு நாடு­களும் உலக வல்­ல­ர­சு­க­ளாக இருப்­ப­தற்கு அப்பால், இரு முகாம்­களைப் பிர­தி­நி­தித்­துப்­ப­டுத்­து­வதும், உலகின் சம­கால அர­சியல், பொரு­ளா­தார செல்­  நெ­றி­களைத் தீர்­மா­னிப்­ப­வை­யாக இருப்­பதும் இதற்குக் காரணம். இதன் கார­ண­மாக, டொனல்ட் ட்ரம்ப், விளாடிமிர் புட்டின் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான உச்­சி­மா­நாடு மிகவும் ஆவ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது.  

இந்த மாநாடு அமெ­ரிக்க, ரஷ்ய உற­வு­களில் புதிய அத்­தி­யா­யத்தை ஆரம்­பிக்க வழி­வ­குக்கும் என்ற நம்­பிக்கை இல்­லா­தி­ருந்­தமை உண்மை தான். ஆனால், மாநாட்டின் பெறு­பே­றுகள் சிரி­யாவில் நீடிக்கும் சிவில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரும் முயற்­சிகள் முதற்­கொண்டு, உலகம் முழு­வதும் எரி­பொருள் விலை மாற்றம் வரை பல விட­யங்­களில் தாக்கம் செலுத்­தக்­கூடும் என்ற எதிர்­பார்ப்பு மேலோங்­கி­யி­ருந்­தது.

இந்த எதிர்­பார்ப்­புக்கள் யாவற்­றையும் பிசு­பி­சுத்துப் போகச் செய்து, இரு­நா­டு­களின் எதிர்­கால ராஜ­தந்­திர உற­வுகள் தனி­ம­னி­தனின் குணா­தி­ச­யத்­திலும், ஆளு­மை­யிலும் தங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய துர்ப்­பாக்­கிய நிலையை பகி­ரங்­கப்­ப­டுத்தி மாநாடு முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

இந்த மாநாடு கடந்த திங்­கட்­கி­ழமை பின்­லாந்தின் தலை­ந­கரில் இடம்­பெற்­றது. இதில் இரு தலை­வர்­க­ளையும், மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளையும் தவிர வேறெ­வரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இரு­வரும் திட்­ட­மி­டப்­பட்­டதை விடவும் கொஞ்சம் கூடு­த­லாக நேரம் எடுத்துக் கொண்டு இரண்டு மணித்­தி­யா­லங்கள் வரை பேசி­னார்கள். இதில் இரு­வரும் என்ன பேசி­னார்கள், எந்­தெந்த விட­யங்­களில் இணக்கம் காணப்­பட்­டன என்­ப­தெல்லாம் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இரு நாடு­களும் கூட்­ட­றிக்கை விடுக்­கவும் இல்லை.

இருந்­த­போ­திலும், இரு தலை­வர்­களும் கூட்­டாக செய்­தி­யாளர் மாநா­டு­களை நடத்­தி­னார்கள். அதனைத் தொடர்ந்து, ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு தனிப்­பட்ட முறையில் பேட்­டி­ய­ளித்­தார்கள். இவற்றில் தாம் இணக்கம் கண்ட விட­யங்கள் பற்­றியும், கருத்து வேறு­பாடு கொண்­டுள்ள விவ­கா­ரங்கள் பற்­றியும் கோடிட்டுக் காட்­டி­னார்கள். இந்த விட­யங்­க­ளையும், விவ­கா­ரங்­க­ளையும் விட கடந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ரஷ்யா தலை­யீடு செய்­த­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்­பான அர­சியல் பிரச்­ச­னைக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டது. அந்த விவ­கா­ரத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இரு நாடு­களும் அர­சியல் செய்­கின்­றன.

இரு வல்­ல­ரசு நாடு­களின் தலை­வர்கள் தனித்­த­னி­யாக பேசிக் கொள்ளும் சம­யத்தில், எந்த நாடு பலம் பொருந்­தி­யது என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கான பலப்­ப­ரீட்­சைகள் நிகழும். ஹெல்­சிங்கி உச்­சி­மா­நாட்டைத் தொடர்ந்து யார் பொரு­ளா­தார ஜாம்­பவான் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டது. தமது நாடு மிகப்­பெ­ரி­யது என்­பதால், அதன் மீது தடை­களை விதித்து தனி­மைப்­ப­டுத்­து­வது சாத்­தியம் இல்­லை­யென ரஷ்ய ஜனா­தி­பதி பேசினார். மேற்­கு­லக சார்­பு­டைய யுக்­ரேனின் கிறி­மியா பிராந்­தி­யத்தை ரஷ்யா இணைத்துக் கொண்­டதால், அந்­நாட்டின் மீது பொரு­ளா­தாரத் தடைகள் விதிக்­கப்­பட்­டன. இந்த விட­யத்தில் தமக்கும், டரம்­பிற்கும் இடையில் வேறு­பா­டுகள் இருப்­பதை புட்டின் ஏற்றுக் கொண்டார்.

இரு தலை­வர்­களும் சிரிய யுத்தம் பற்­றியும் கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில் பேசி­னார்கள். இந்த யுத்தம் முடிவை நெருங்­கு­கி­றது என்­பதை ஏற்றுக் கொண்­டார்கள். சிரி­யாவின் யுத்­தத்தில் ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடு­களின் வகி­பாகம் பற்றி கருத்து வேறு­பா­டுகள் இருந்­தாலும், இந்த வேறு­பா­டுகள் பற்றி இரு­வரும் அவ்­வ­ள­வாக அலட்டிக் கொள்­ள­வில்லை. சிரி­யாவை மீளக்­கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சியில் அமெ­ரிக்கா உதவி செய்ய முடியும் என டொனால்ட் ட்ரம்ப் கூறினார். சிரி­யாவின் மீள்­கட்­டு­மானப் பணி­களில் உதவி செய்ய பரந்த அடிப்­ப­டை­யி­லான சமா­தான உடன்­ப­டிக்கை அமு­லாக்­கப்­பட வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் விதித்த நிபந்­த­னையை அவர் பொருட்­டாகக் கரு­த­வில்லை. மறு­பு­றத்தில், சிரி­யாவின் பிரச்சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக வெவ்வேறாக நடத்­தப்­படும் பேச்­சு­வார்த்­தைகள் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்டும் என்று புட்டின் கோரிக்கை விடுத்தார். சிரி­யாவில் நீண்­ட­நாட்க­ளாக கொடிய யுத்தம் நீடிப்­ப­தற்கு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் கார­ண­மாக இருந்த தலை­வர்கள். இதை விடவும் முக்­கி­ய­மான விஷ­யங்கள் இரு­வ­ருக்கும் இருந்­தன.

இந்தத் தலை­வர்­களில் டொனால்ட் ட்ரம்ப் விசித்­தி­ர­மா­னவர். அமெ­ரிக்­காவின் வெளி­யு­றவுக் கொள்­கை­களோ, ராஜ­தந்­தி­ரங்­களோ அவ­ருக்குப் பொருட்­டல்ல. காலம் கால­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட கொள்­கை­களை கணப்­பொ­ழுதில் மீறி விடுவார். ராஜ­தந்­தி­ரங்­களை நொடிப்­பொ­ழுதில் மறந்து விடுவார். தூர இருக்­கையில் வட­கொ­ரியத் தலை­வரை ரொக்கட் குள்ளன் என்று ஏசுவார். அவ­ருடன் நேரடிப் பேச்­சு­வார்த்தை நடத்தும் சந்­தர்ப்­பத்தில் சாணக்­கி­ய­மான தலைவன் என்று பாராட்­டவும் செய்வார். இதனை ஆங்­கி­லத்தில் Off- the -cuff diplomacy என்­பார்கள். எது­விதத் தயார்

­ப­டுத்­தலும் இன்றி, தாம் மனதில் நினைத்­ததை செய்தல் என்று அர்த்தம். ரஷ்ய ஜனா­தி­ப­தி­யு­ட­னான உச்­சி­மா­நாட்டைத் தொடர்ந்து கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய சம­யத்­திலும், அத்­த­கைய ராஜ­தந்­தி­ரமே டொனல்ட் ட்ரம்­பிடம் வெளிப்­பட்­டது.

கிறி­மியா என்­பது மேற்­கு­ல­கிற்கும், ரஷ்­யா­விற்கும் இடை­யி­லான அதி­காரப் போட்­டிக்­கு­ரிய முக்­கி­ய­மான பலப்­ப­ரீட்­சை­யாகத் திகழும் கள­மாகும். மேற்­கு­லக சார்­பு­டைய உக்­ரே­னிடம் இருந்து கிறி­மி­யாவை ரஷ்யா பல­வந்­த­மாக பறித்துக் கொண்­டது என்ற நிலைப்­பாட்டை அமெ­ரிக்க ராஜாங்கத் திணைக்­களம் அறி­விக்­கி­றது. உக்­ரே­னுக்கு மேலாக பறந்த விமா­ன­மொன்றை ரஷ்­யாவே சுட்டு வீழ்த்­தி­ய­தாக அமெ­ரிக்­காவின் புல­னாய்வு அமைப்­புக்கள் பிர­சாரம் செய்­கின்­றன. ரஷ்ய ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பைத் தொடர்ந்து, இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யெல்லாம் டொனால்ட் ட்ரம்ப் பொருட்­டாக மதிக்­க­வில்லை. வெளி­வி­வ­காரக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யி­லான ராஜ­தந்­தி­ரத்தைத் தாண்டி, தமது மனதில் தோன்­றி­யதை அவர் பேசினார். அமெ­ரிக்க, ரஷ்ய உற­வுகள் ஆகவும் கீழ்­மட்­டத்தில் உள்­ள­தென்றால், அது ரஷ்யா கிறி­மி­யாவை பறித்துக் கொண்­டதால் ஏற்­பட்ட விளைவு அல்­ல­வென அமெ­ரிக்க ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

டொனால்ட் ட்ரம்பின் சொற்­க­ளிலும், செயற்­பா­டு­க­ளிலும் ரஷ்ய ஜனா­தி­ப­தியை அனு­ச­ரித்துப் போகக்­கூ­டிய நிதா­ன­மான போக்கு வெளிப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வுக்கும், ரஷ்­யா­விற்கும் இடையில் நல்­லு­றவு நீடித்தால், ஒட்­டு­மொத்த உல­கமும் நன்மை பெறும் என்­பதை வலி­யு­றுத்­தக்­கூ­டிய பாசாங்கு அவ­ரிடம் தென்­பட்­டது.

          

 இது அப்­பா­வித்­த­னமா, அர­சியல் சாணக்­கி­யமா, அப்­பட்­டமா சுய­ந­லமா என்­பதை ஆராய வேண்டும். இந்த ஆராய்ச்­சியில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ரஷ்யா தலை­யீடு செய்­த­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு முக்­கி­ய­மா­னது.

2016ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் நடந்த சம­யத்தில், ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பா­ள­ராக ஹிலரி கிளின்டன் அம்­மையார் போட்­டி­யிட்டார். அவரை எதிர்த்து டொனல்ட் ட்ரம்ப் கள­மி­றங்­கி­யி­ருந்தார். ஹிலரி கிளின்­டனைத் தோற்­க­டிக்க வேண்டும் என்­ப­தற்­காக, ரஷ்­யாவின் உள­வுத்­துறை டொனல்ட் ட்ரம்­பிற்கு பல்­வேறு வழி­க­ளிலும் உதவி செய்­தது என்­பது பிர­தா­ன­மாக குற்­றச்­சாட்­டாகும். ஏதா­வது செய்து கிளின்டன் அம்­மையார் வெற்றி பெறும் வாய்ப்பை முடக்­கு­மாறு ரஷ்ய ஜனா­தி­பதி நேர­டி­யாக உத்­த­ர­விட்டார் என அமெ­ரிக்­காவின் புல­னாய்வு அமைப்­புக்கள் அடித்துச் சொல்­கின்­றன. இதற்­காக, கிளின்­டனின் மின்­னஞ்­சல்­களை ரஷ்யா உளவு பார்த்­த­தா­கவும் புல­னாய்வு அமைப்­புக்கள் கூறு­கின்­றன. இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களைத் தம்­மீ­தான தனிப்­பட்ட தாக்­கு­தல்­க­ளாக டொனல்ட் ட்ரம்ப் பார்க்­கிறார். தேர்­தலில் பெண் வேட்­பா­ளரைத் தோற்­க­டிப்­ப­தற்­காக ரஷ்­யாவில் இருந்து உதவி பெற்ற மனிதர் என்ற கறை­ப­டித்த தோற்­றப்­பாட்­டுடன் வாழ்­வதை அவர் விரும்­ப­வில்லை.

அமெ­ரிக்க, ரஷ்ய உற­வு­களைத் தீர்­மா­னிக்கும் ராஜ­தந்­திர கொள்கை எது­வாக இருந்­தாலும், தாம் அவ­மா­னத்தில் இருந்து விடு­பட்டு விட்டால் போதும் என்ற எண்ணம் அவ­ருக்கு இருக்­கி­றது. ரஷ்யத் தலை­வ­ரு­டான உச்­சி­மா­நாட்டைத் தொடர்ந்து, அமெ­ரிக்க ஜனா­தி­பதி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பதில் அளித்த விதம் அவரது எண்ணத்தைத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஒரு செய்தியாளர் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினார்.  இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு என்பதை அமெரிக்காவின் அனைத்துப் புலனாய்வு நிறுவனங்களும் ஊர்ஜிதம் செய்துள்ள நிலையில், ரஷ்யா தலையீடு செய்ததாக நீங்கள் நம்புகிறீர்களா என்று அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், பக்கத்தில் நின்ற புத்தினைக் காட்டி, தாம் அவ்வாறு செய்யவில்லையென புத்தின் சொல்கிறாரே என்றார். அமெரிக்கத் தேர்தலில் தலையீடு செய்யும் அவசியம் ரஷ்யாவிற்குக் கிடையாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க, ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு உலகிற்கு என்ன நன்மையைத் தரப் போகிறது என்று எவரும் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய மாநாட்டில் பேசப்பட்ட விடயங்களை ஆராயத் தேவையில்லை. ட்ரம்பின் பதிலை அவதானித்து, அதில் தொனிக்கும் சுயநலத்தை விளங்கிக் கொண்டால் போதுமானது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-22#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.