Jump to content

வடக்கு முத­ல­மைச்­சருக்கு- உதய கம்­பன்­பில விட்ட சவால்!!


Recommended Posts

வடக்கு முத­ல­மைச்­சருக்கு- உதய கம்­பன்­பில விட்ட சவால்!!

 

udaya-kambanbila-720x450-720x430.jpg

 
 

இந்த நாட்­டில் சிங்­க­ள­ வர்­க­ளுக்கு முன்­னரே தமி­ழர்­கள் குடி­யி­ருந்­துள் ளார்­கள் என்­பதை முடி­யு­மா­னால் நிரூ­பிக்­கு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ர­னுக்கு சவால் விடுத்­தார் பிவி­துரு ஹெல உறு­மய கட்­சி­யின் தலை­வர் உதய கம்­மன்­பில.

இந்த நாட்­டில் சிங்­க­ள­ வர்­க­ளுக்கு முன்­னரே தமிழ் மக்­களே குடி­யி­ ருந்­துள்­ளார்­கள் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்த கருத்து நேற்­றுப் பத்­தி­ரி­கை­க­ளில் வெளி­யா­கி­யுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்ட அவர் அதற்கே பதி­ல­ளித்­தார்.

இந்­தக் கருத்தை முடி­யு­மா­யின் நிரூ­பிக்­கு­மாறு அவ­ருக்­குச் சவால் விடுக்­கின்­றேன் என­வும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கம்­மன்­பில கூறி­னார். நேற்­றறு கொழும்­பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு கருத்­துத் தெரி­விக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/09/வடக்கு-முத­ல­மைச்­சருக்கு-உதய-கம்­பன்­பில-விட்ட-சவால்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருமே இல்லையாமே சீனக்காரன் தான் இருந்தவன் என்று போன  சனிக்கிழமை பொலன்னறுவவில், நடந்த நிகழ்வு ஒன்றில் மைத்ரிக்கு முன்னாள் சீன தேசிய கீதம் பாடினவனாமே ? இலங்கை தேசிய கீதம் இரண்டாவதாய் பாடினார்களாம்  அதெல்லாம் இந்த இனவெறி கூட்டத்தலைவர் மாருக்கு தெரியாது விடிஞ்சா பொழுது படுமட்டும் தமிழனை தூற்றிக்கொண்டு இருப்பது இவர்களுக்கு பேரானந்தம்.

என்ன செய்வது ஆயிரம்கால டிசைன் மாத்த முடியாது.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசாவில் இருந்து.....சிங்களவன் இலங்கைக்கு வரும் வரைக்கும்......இராமேஸ்வரத்திலிருந்த தமிழன்....வடை சுட்டுக்கொண்டிருந்தானா? என்று யாராவது...இந்தக் கம்மன்பிலவிடம் கேட்டுச் சொல்லவும்!

ஒரு பெரிய முன்னேற்றம்!

சிங்களவன் தானும்...வந்தேறு குடி தான்....என்று ஒப்புக் கொண்டு விட்டான்!

இப்ப பிரச்சனை......ஆரு முதலில் வந்தது என்பது தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொண்ணூறு வீதமான ஆதாரத்தையும் அழிச்சாப்பிறகு சாட்சி கேக்கலாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

தொண்ணூறு வீதமான ஆதாரத்தையும் அழிச்சாப்பிறகு சாட்சி கேக்கலாம் தானே

நூறுவீதம் ஆதாரம் இருந்தாலும் நாங்கள் வாயை மூடிக்கொண்டுதான் இருப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.