Jump to content

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை


Recommended Posts

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை

 

UK-weather-23.07.2018-720x450.jpg

பிரித்தானியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவுவதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் வெள்ளிக்கிழமைவரை இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை உயர்வாக இருக்குமென மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சஃபோல்க் (Suffolk) பிராந்தியத்தில் உள்ள சன்ரன் டௌனமில் (Santon Downham) 33.3C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இதுவே இந்த வருடத்தின் உயர்வான வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கென்ற்றில் உள்ள பேவஷம் (Faversham) இல் 38.5C வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இருப்பினும் கடந்த 100 ஆண்டுகளில் இந்த ஆண்டே கோடைகால பருவத்தில் மிக நீண்டநாட்களாக வெப்பநிலை மிகஉயர்வாக உள்ளதாகவும் வானியல் அவதானநிலையம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/100-ஆண்டுகளில்-இல்லாத-அளவிற/

Link to comment
Share on other sites

ஐரோப்பாவில் கடும்வெம்மை . கிரேக்கத்தில் 50 பேருக்குமேல் பலி! பிரித்தானியாவில் 34 பாகை !!

 

 

ஐரோப்பாவின் பல நாடுகளில் நிலவும் கடும் வரட்சியும் அதிக வெப்பநிலையும் பல இடங்களில் காட்டுத் தீ விபத்துக்களை உருவாக்கிவருகின்றது.

கிரேக்க தலைநகர் ஏதென்சில் பரவிய காட்டுத்தீயால் இதுவரை 50 பேருக்குமேல் பலியாகியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காட்டுத்தீ சூழ்ந்ததால் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பலர் கடலுக்குள் குதித்த அவலமான செய்திகளும் கிட்டியுள்ளன.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். தீயணைப்பு நடவடிக்கiயில் தமக்கு உதவும்படி கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் ஐரோப்பி நாடுகளிடம் உதவிகோரியுள்ளார்.

ஏற்கனவே சுவிடனிலும் 53 இடங்களில் பெரும்; காட்டுத்தீ ஏற்பட்டிருந்தது தீவிரமாக பரவிவரும் இந்ததீ துருவப்பகுதியை அண்மித்துவருகின்றது.

இதனால் தீயை அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நோர்வே ஆகிய நாடுகள் தமது படையினரையும் தீயணைப்பு உபகரணங்களையும் அவசரமாக அனுப்பியுள்ளன.

பிரித்தானியாவிலும் கடும் வெப்பநிலை உயர்ந்து வருகின்றது. எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளியன்று 34 பாகைக்கு கூட வெப்பநிலை உயரும் சாத்தியம் உள்ளதான அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயர்வுகாரணமாக இங்கிலாந்துப் பிராந்தியவாசிகளுக்கு 3 ஆம் நிலை (அம்பர்) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நேரடி சூரிய ஒளித்தாக்கத்தில் இருந்து விலகியிருக்கும்படி மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/europe/80/103701?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணமாய் போற அளவுக்கு கெந்தக வெக்கை சொல்லு வேலையில்லை.:320_sun_with_face:

Link to comment
Share on other sites

பிரித்தானியா-பிரான்ஸ்-ஜேர்மனி இன்று அபாயநாள்! கடும்வெப்பம்- இடிமின்னல் -பனிகல்மழை!!

 

 

பிரித்தானியா- பிரான்ஸ் -ஜேர்மனி ஆகிய நாடுகள் உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு இன்று காலநிலையை பொறுத்தவரை பெரும் சவாலான ஒரு நாளாக கடக்கப்போகிறது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் கடுமையான வெப்பநிலை தாக்கிவரும் நிலையில் இன்று பல இடங்களில் 18 ஆண்டுகளுக்குப்பின்னர் அதிஉச்ச வெப்பநிலைபதிவாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.

பிரித்தானியா மற்றும் பிரான்சில் இன்று கடும் வெப்பநிலை நிலவும் அதேநேரம் சில இடங்களில் கடுமையான இடிமின்னல் தாக்கம் மற்றும் தீவிர பனிக்கல்மழை பொழிவு இருக்கும் என்பதால் இன்றைய நாள் ஒரு உலைக்கள நாளாக அமையும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ரீதியில் இன்று பிரித்தானியாதான் அதிக வெப்பநிலை பதிவாகும் நாடாக மாறக்கூடும். எனினும் கடுமையான இடிமின்னலுடன் மழைபொழிந்தால் வெப்பநிலை கொஞ்சம் குறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு இங்கிலாந்திலும் வட பிரான்சிலும் கடுமையான இடிமின்னல் தாக்கம் இருக்கும் என இரண்டு நாடுகளின் காலநிலை அவதான நிலையங்களும் அறிவித்துள்ளன.

பிரான்சில் பரிஸ் உட்பட 18 பிராந்தியங்களுக்கு இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெப்பநிலை தொடர்ந்தும் உயர்வடைந்த காரணத்தால் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளும் உருவாகியுள்ளன. பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஈரோ ஸ்ரார் தொடருந்து சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

கடும்வெப்பம் காரணமாக ஈரோஸ்டார் தொடருந்து வண்டிகளின் குளிர்சாதன கருவிகள் செயல்இழந்ததால் நேற்றும் இன்றும் சேவைகள் பாதிப்படைந்தன. நூற்றுக்கணக்காக பயணிகள் தமது பயணங்களை மீளெடுத்துள்ளனர்.

Nஐர்மனியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக அங்;கும் கடும் பாதிப்புகளும் நெருக்கடிகளும் நிலவிவருகின்றது. நேற்று கொலோன் நகரில் 37 பாகை வெப்ப நிலை பதிவானது. ரைன் நதியூடான மேற்கொளப்படும் சரக்கு கப்பற்சேவை அரைவாசியாக குறைக்கபட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக விமான ஓடுபாதைகள் விரிசலடைந்ததால் சில விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

சுவிஸில் காட்டு;த்தீ அச்சம் காரணமாக பொது இடங்களில் வாணவேடிக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் முதலாம் திகதி தேசிய விடுமுறையை முன்னிட்டு நடத்தப்படவிருந்த பாரம்பரிய வாணவேடிக்கை நிகழ்வும் மீளெடுக்கப்பட்டுள்ளது.

1921 ஆம் ஆண்டுக்குப்பின்னர் சுவிசில் மிக குறைந்த மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு மாறியுள்ளது.

இன்றையநாளில் முன்னெச்சரிக்கை மற்றும் அவதானமாக இருக்கும் படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/europe/80/103858?ref=imp-news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.