Jump to content

மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி?


Recommended Posts

மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி?

 
 

ஆணவப் படுகொலையின் தோலுரித்த #Sairat படத்தின் ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் அறிமுகப் படம்! #Dhadak படம் எப்படி?

மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி?
 

சாதிய கொடுமைகளால் இறந்து போன காதல்கள், காதலர்களின் கதைகள் சினிமாவுக்கும் புதிதல்ல, நிஜ வாழ்க்கைக்கும் புதிதல்ல. செல்லுலாய்டில் இத்தகைய கதைகளுக்கு உயிர் கொடுக்கும்போது, வியாபார சமரசமின்றி, இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக ஆணவப் படுகொலைகள், கௌரவப் படுகொலைகள் அதன் காரணிகள் மற்றும் அதன் கோரத்தைப் பதிவு செய்யும்போது, அத்தகைய படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிடும். 2015-ம் ஆண்டு வெளிவந்த மராத்தியப் படமான சாய்ராட் (Sairat) இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பல்வேறு விருதுகள், மற்ற மொழிகளில் ரீ-மேக்குகள் என இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பு ஏராளம். அதன் ஹிந்தி ரீ-மேக்கான ‘Dhadak’ (இதயத் துடிப்பு) மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நாயகியாகவும், ‘Beyond the Clouds’ படத்தில் கவனம் ஈர்த்த இஷான் கத்தரை நாயகனாகவும் கொண்டு வெளிவந்துள்ளது. எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய #Dhadak படம் எப்படி?

Dhadak

பார்த்தவி சிங்க் (ஜான்வி கபூர்) உயர் சாதி பெண். அவளின் தந்தை ரத்தன் சிங்க் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அதே ஊரில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்துபவரின் மகன் மதுகர் பாக்லாவிற்கு (இஷான் கத்தர்) பார்த்தவியின் மீது காதல். பார்த்தவிக்கும் அந்தக் காதல் மலர்ந்துவிட விஷயம் வெளியே கசிகிறது. தன் மகள் வேறு சாதி பையனைக் காதலிப்பதா என அவனையும் அவன் நண்பர்களையும் காவல்துறை உதவியுடன் முடிக்க நினைக்கிறார் பார்த்தவியின் தந்தை. கடைசி நேரத்தில் பார்த்தவி அவர்களைக் காப்பாற்றிவிட ஊரை விட்டு ஓடுகிறது காதல் ஜோடி. காதல் வாழ்க்கையில் இருந்த அன்பு திருமண வாழ்க்கையிலும் இருந்ததா? சில வருடங்கள் கழித்து இந்த ஜோடியை மீண்டும் சந்திக்கும் பார்த்தவியின் குடும்பம் இவர்களை ஏற்றுக் கொண்டதா?

 

 

‘சாய்ராட்’ படத்தின் கதையை மட்டும் வைத்துக் கொண்டு, பாலிவுட்டுக்கு ஏற்றவாறு படத்தை மாற்றுகிறேன் என்று தன் இஷ்டத்துக்கு துவம்சம் செய்திருக்கிறார்கள். ‘சாய்ராட்’ படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், அது ஒரு பின்தங்கிய கிராமத்தின் இயல்பு வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்தது. அந்த ஊரில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு, கிரிக்கெட் கலாசாரம், பெண்களை அடக்கி ஆளும் தன்மை என அந்தப் படம் பேசிய அரசியல் ஏராளம். அந்தக் காரத்தில் எல்லாம் உப்பைக் கொட்டி சப்பென ஆக்கியிருக்கிறது தடக். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளை அத்தனை சிரத்தையுடன் காட்டிய தடக், சமுதாய கட்டமைப்பு, சாதிய, வர்க்க சண்டைகள் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் தடம் புரண்டிருக்கிறது. இதனாலேயே இவர்களின் காதலுக்கு எதிரியாக நிற்பது ஜாதிதான் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை ஹிந்திக்கு இது போதும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?

Dhadak

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் முதல் படம். அறிமுகப் படத்தை சரியாகத் தேர்ந்தெடுத்தவர், நடிப்பிலும் பாஸ் மார்க் பெறுகிறார். மிடுக்குடன் திரியும் பெண் கதாபாத்திரம் என்பது இவருக்குச் சரியாக பொருந்தியிருக்கிறது. சினிமாத்தனத்துடன், உருகி உருகிக் காதலித்து, தன் பின்னால் சுற்றும் நாயகனை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்வது, எவ்வித சலனமும், நாடகத் தன்மையும் இன்றி, “ஐ லவ் யூ” சொல்லிவிட்டு, நாயகனையும் சொல்ல சொல்லி மிரட்டுவது, காதலனையும், அவன் நண்பர்களையும் போலீசிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். அடுத்தடுத்து நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்தால் குட்டி மயிலும் ஒரு ரவுண்டு வரலாம்.

Dhadak

இஷான் கதாபாத்திரத்தை பொறுத்தவரை, இதுவரை காதல் அமரகாவியங்களில் நாயகனுக்கு எல்லாம் எந்த வேலையோ அதுதான் இவருக்கும். விடலைப் பருவக்காதல் கணக்காக ஜான்வி செல்லும் இடமெல்லாம் பின்னாலே ஓடுவது, பெற்றோர்கள் பேச்சை கேட்காமல் நண்பர்களுடன் கனவு கண்டுகொண்டு திரிவது எனப் பார்த்து பழகிய பாத்திரம்தான். ஆனால், அதைச் சிரத்தையுடன் செய்திருக்கிறார். தன் காதலி வந்திருக்கிறாள் என்ற செய்தி தெரிந்தவுடன், டிப்டாப்பாக ட்ரெஸ் செய்து கொண்டு, துள்ளல் நடை, நடனத்துடன் அவர் ஓடும் காட்சி ஒன்றுபோதும்... இது மாதிரி சரியான கதாபாத்திரங்களை பண்ணுங்க பாஸ்! அவரின் நண்பர்களாகத் தோன்றும் கோகுல் மற்றும் புருஷோத்தின் கதாபாத்திரங்கள்தான் முதல் பாதிக்கு கூடுதல் பலம் சேர்கிறார்கள். ஆனால், உருவத்தையும், உயரத்தையும் வைத்துக் கிண்டல் செய்யும் நகைச்சுவை (?) காட்சிகள் இதில் தேவையா பாஸ்?

முதல் ஒரு மணி நேரம் காதல் காட்சிகள், காமெடி, பாடல்கள் எனத் திருவிழாவாக நகர்கிறது. அந்த நேர்த்தியைத் தேங்கி நிற்கும் இரண்டாம் பாதியிலும் சேர்த்திருக்கலாம். சாய்ராட்டிற்கு கமர்ஷியல் சாயம் பூசப் போகிறேன் என்று முடிவு எடுத்த பிறகு, இரண்டாம் பாதியை மட்டும் ஏன் நாடகமாக மாற்றினார்கள் என்பது புரியவில்லை. 

சாதியப் பிரச்னைகள் தவிர்த்து சாய்ராட் செய்த மற்றுமொரு சாதனை, லூசு பெண்களாக வரும் நாயகி கதாபாத்திரங்களை உடைத்து எரிந்தது. கிட்டத்தட்ட அதில், ஒரு ஹீரோ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை ஹீரோயின் செய்வாள். அதை இங்கேயும் அப்படியே வைத்தது மிகப்பெரிய ஆறுதல். நாயகி, போலீசிடம் இருந்து காப்பாற்றுகிறாள், தப்பித்து ஓடும்போது பயத்தில் நடங்கும் ஹீரோவுக்கு தைரியம் கொடுக்கிறாள். ஊரை விட்டு ஊரு வந்து கஷ்டத்தில் இருக்கும்போது தைரியமாக முடிவுகள் எடுக்கிறாள்.

Dhadak

ராஜஸ்தானின் உதய்பூர்தான் கதைக்களம் என்று முடிவு செய்தவுடன் அதன் வாழ்வியலை இன்னமும் ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். சாதிக் கொடுமைகள் இன்னமும் அங்கு நிகழ்கின்றன என்பதை இன்னமும் அழுத்தம் திருத்தமாக காட்டியிருக்கலாம். அது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்குக் கூடுதல் வலு சேர்த்திருக்கும். ஆனால், அதுவரை, சாதி பிரச்னைகள் குறித்து ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் கடந்துவிட்டு, இறுதியில் மட்டும் ஆணவப் படுகொலை குறித்துப் பேசுவது படத்தை மொத்தமாக காலி செய்கிறது. அதன் கோரத்தை நமக்குக் கடத்த முடியாமல் திரைக்கதை திணறியிருக்கிறது. படத்தின் கருவே அதுதான் என்றானபின், அதற்கு வேண்டிய முக்கியத்துவத்தை முதல் காட்சியிலிருந்தே கொடுத்திருக்கலாமே? எல்லாவற்றிற்கும் மேலாக, பல்வேறு பாராட்டுகளை வாங்கிக் குவித்த சாய்ராட்டின் இறுதிக் காட்சியை இப்படியா மாற்றி வைப்பது? அடப்போங்க பாஸ்!

உதய்பூரின் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கும் விஷ்ணு ராவின் கேமரா, நெரிசலான கொல்கத்தாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறது. படத்தின் மற்றொரு பெரிய பலம் அஜய்-அதுல் சகோதரர்களின் பாடல்கள். அதே சாய்ராட் படத்தின் இசையமைப்பாளர்கள்.

Dhadak

‘சாய்ராட்’ படத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு ‘தடக்’ படத்தைப் பார்த்தால் முதல் பாதி நிச்சயம் ரசிக்க வைக்கும். ஏனென்றால் அது எல்லாப் பெட்டிகளிலும் டிக் செய்யும் பிளாக்பஸ்டர் பாலிவுட் திரைக்கதை. ஆனால், இரண்டாம் பாதியில் அப்பட்டமாக சாய்ராட் நோக்கி நகரும் காட்சிகளில் நிறையத் தடுமாறி இருக்கிறார்கள். ஒரே பாட்டில் முன்னேறுவது, சண்டை போட்டு பின் சேருவது போன்ற இடங்களில் ஆங்காங்கே நாடகத்தன்மை எட்டிப் பார்க்கிறது. ஆனால், பேசவேண்டிய சாதிய பிரச்னைகளை இன்னமும் தெளிவாக போட்டு உடைத்திருந்தால், சாய்ராட்டின் அந்த பதைபதைக்க வைக்கும் கிளைமாக்ஸ் காட்சியை அப்படியே வைத்திருந்தால் ‘தடக்’ நம் மனதில் தடம் பதித்திருக்குமோ என்னவோ?

https://cinema.vikatan.com/movie-review/131637-dhadak-hindi-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.