Jump to content

யாழில் இருப்பது காவற்துறையா காடையர் துறையா?


Recommended Posts

யாழில் இருப்பது காவற்துறையா காடையர் துறையா?

 

 

அச்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை –  காவற்துறையினரின் செயற்பாடு குறித்தும் அதிருப்தி… யாழ்ப்பாணத்தில் இருந்து – பாலன் – சுப்பிரமணியன்….

Sad.png

 

கடந்த 19.07.2018 அன்று இரவு 9.30 மணியளவில் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் விடுதிக்கு வரும் பருத்தித்துறை வாயிலூடாக குருநகரைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலை 30 ஆம் இலக்க விடுதிக்குள் செல்ல முற்பட்டபோது கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டார். எனினும் நால்வரும் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இவ்விடயத்தை 24 ஆம் விடுதியில் காவலில் இருந்த சக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த நால்வரும் திருப்பியனுப்பப்பட்டனர். அவர்கள் திரும்பும்போது கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தலையில் கொட்டனால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தலையில் படுகாயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவசர சிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு உடனடியாக அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போதும் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் உடனடியாக வைத்தியசாலையில் கடமையில் இருந்த காவற்றுறையினருக்கு அறிவிக்கப்பட்டு சந்தேகத்துக்குரியவர்கள் காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றவரால் தாக்குதலுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். எனினும் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார். கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்திய நபரை காவற்துறை விடுவித்தமையானது வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இரவு வேளைகளில் விபத்துக்களின்போதும் வாள்வெட்டு முதலான தாக்குதல் சம்பவங்களின் போதும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் மீறி உள்ளே வருவதால் இரவு கடமையில் இருக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடையே அச்சம் நிலவுகின்றது.

மாலை 6.00 மணிக்குப் பின்னர் பார்வையாளர் எவரும் வைத்தியசாலைக்குள் நுழைவது தடுக்கப்பட்ட போதும் அடாவடியில் ஈடுபடுவோர் அத்துமீறி நுழைவது வைத்திய சேவைக்கு அச்சுறுத்தலான விடயமாகும். வைத்தியசாலைக்குள் காவற்றுறையினருக்கு தங்கும் விடுதி உள்ளபோதும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது வியப்பளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/88804/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.