Jump to content

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்


Recommended Posts

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்

 

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார்.

 

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் ஆகியுள்ளதால் இன்று சிலாபம் - சின்னவத்தையில் உள்ள சரத் ஹேமச்சந்திரவின் இல்லத்திற்கு சென்று நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், ஹேமச்சந்திரவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் இளஞ்செழியன் சென்று அஞ்சலியை செலுத்தியுள்ளார். அவரின் இந்த செயற்பாடுகள் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

சரத் ஹேமச்சந்திரவின் உயிரிழப்பிற்கு பின் அவரின் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகிறார்.

இதேவேளை ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்திருக்கும் சின்னவத்தை பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வந்ததையடுத்து இளஞ்செழியன் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

பல அரசியல்வாதிகள் கூட தம்முடைய மெய்ப்பாதுகாவலர்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால் தேவையான உதவிகளை செய்து விட்டு அத்துடன் மறந்து விடுகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

ஆனால் நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்களாக தன்னுடனிருந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்துள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கும் உதவியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இளஞ்செழியனின் இந்த செயற்பாடுகளானது இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், இதனை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயல்கள் மூலம் நீதிபதி இளஞ்செழியன் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது தென்னிலங்கை உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/188760?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா தெற்கு மக்களை நெகிழ வைக்கும்பணியில் தொடர்ச்சியாக மும்முரமாய் நிற்கிறார்..

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

ஐயா தெற்கு மக்களை நெகிழ வைக்கும்பணியில் தொடர்ச்சியாக மும்முரமாய் நிற்கிறார்..

தனது குடும்பத்தில் ஒருவராக வீட்டோடு இருந்து பதினேழு வருடமாக தன்னை பாதுகாத்த ஒருவர் மீது இனவேறுபாடுபாட்டுக்கு அப்பால் உருவாகும் நட்பு அது. நீங்கள் அதை இனவெறியோடு பார்க்கிறீர்கள். 

 

3 hours ago, valavan said:

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

நீங்கள் அபரீதமான சுயலாபம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை போலும். உங்களை போலவே மற்றவர்களும் என்று நினைத்து எழுதுவது தெரிகிறது. உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு நீங்கள் எது செய்தாலும் நிச்சயமாக உங்களுக்கு அபரீதமான இலாபம் வைத்து தான் செய்கிறீர்கள் இல்லையா? நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

ஐயா தெற்கு மக்களை நெகிழ வைக்கும்பணியில் தொடர்ச்சியாக மும்முரமாய் நிற்கிறார்..

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

மனச்சாட்சி அதிகம் உள்ள மனிதராய் இருப்பாரோ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2018 at 12:30 PM, Jude said:

தனது குடும்பத்தில் ஒருவராக வீட்டோடு இருந்து பதினேழு வருடமாக தன்னை பாதுகாத்த ஒருவர் மீது இனவேறுபாடுபாட்டுக்கு அப்பால் உருவாகும் நட்பு அது. நீங்கள் அதை இனவெறியோடு பார்க்கிறீர்கள். 

 

நீங்கள் அபரீதமான சுயலாபம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை போலும். உங்களை போலவே மற்றவர்களும் என்று நினைத்து எழுதுவது தெரிகிறது. உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு நீங்கள் எது செய்தாலும் நிச்சயமாக உங்களுக்கு அபரீதமான இலாபம் வைத்து தான் செய்கிறீர்கள் இல்லையா? நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

 

ஒரு வருடத்தின் முன்னர் எதற்கும் கலங்காமல் தீர்ப்பு வழங்கும் ஒரு துறையில் இருக்கும் நீதிபதிக்கு  காவலாய் இருந்தவர் கொல்லப்பட்டபோது , அந்த காவலரின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுததும், அவர் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காய் உதவியதும் நெகிழ்வான விஷயமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர்...

அவரின் நடமாட்டங்கள் ,நடவடிக்கைகள் எதுவும் ரகசியமாய் வைக்கப்பட்டு,, விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில்... இலங்கையில் இருக்கும் நீதிபதிகளில் அதி உச்ச பாதுகாப்பு கொண்டவராக இருக்கும் இளஞ்செழியன் ஐயா அவர்களின்...

வருகையும் , அவர் பாதுகாவலருக்கு ஓராண்டின் பின்னரும் வழங்கிய உதவிகளும் சராசரி ஊடகங்களில்,படங்களாகவும் செய்தியாகவும் எப்படி வருவதற்கு இலங்கை அரசும், ஐயாவும் வழிவிட்டார்கள்,ஏன் வழிவிட்டார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?

கிடைத்திருந்தால் சொல்லுங்கள், என் கருத்தை மீள பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை!

On 7/22/2018 at 12:30 PM, Jude said:

நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும், பலகோடி மக்களை சுற்றி வாழும் நாங்கள் எல்லாம் ஒருவரின் கருத்துக்கு பதில் சொல்லும் சகிப்பு தன்மை இன்றி வாழ்பவர்களாய் இருந்தால் நாங்கள் தூர விலகி இருக்க வேண்டியதில்லை...நம்மை சூழ இருக்கும் சமூகமே எங்களை தூர விலக்கி வைக்கும்,!

சமூக தளத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது என்னால் புரிந்துகொள்ளகூடியதாகவே உள்ளது...

ஆனால் உங்களை தூரவிலக்கி வைக்கும் ஐடியா எனக்கு இல்லை, நீங்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம்!

 

On 7/22/2018 at 12:37 PM, ரதி said:

மனச்சாட்சி அதிகம் உள்ள மனிதராய் இருப்பாரோ

மனசாட்சிக்கு ஊடக வெளிச்சம் ஏன் தேவைபடுகிறது என்பதற்கு உங்களிடம் ஏதாவது விளக்கம் இருக்குமா? அறிந்துகொள்ள ஆசை அவ்வளவுதான்!

Link to comment
Share on other sites

22 hours ago, valavan said:

ஒரு வருடத்தின் முன்னர் எதற்கும் கலங்காமல் தீர்ப்பு வழங்கும் ஒரு துறையில் இருக்கும் நீதிபதிக்கு  காவலாய் இருந்தவர் கொல்லப்பட்டபோது , அந்த காவலரின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுததும், அவர் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காய் உதவியதும் நெகிழ்வான விஷயமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர்...

அவரின் நடமாட்டங்கள் ,நடவடிக்கைகள் எதுவும் ரகசியமாய் வைக்கப்பட்டு,, விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில்... இலங்கையில் இருக்கும் நீதிபதிகளில் அதி உச்ச பாதுகாப்பு கொண்டவராக இருக்கும் இளஞ்செழியன் ஐயா அவர்களின்...

வருகையும் , அவர் பாதுகாவலருக்கு ஓராண்டின் பின்னரும் வழங்கிய உதவிகளும் சராசரி ஊடகங்களில்,படங்களாகவும் செய்தியாகவும் எப்படி வருவதற்கு இலங்கை அரசும், ஐயாவும் வழிவிட்டார்கள்,ஏன் வழிவிட்டார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?

கிடைத்திருந்தால் சொல்லுங்கள், என் கருத்தை மீள பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை!

அதிக சந்தேகத்தோடு சிந்திக்கிறீர்கள். பெரும்பாலான ஊடகங்களின் செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்தால் தான் அவர்களுக்கு வருமானம். இந்த நீதிபதியை பற்றிய செய்தியை முன்னர் வெளியிட்ட செய்தியாளர்கள் அவரை தொடர்ந்தும் அவதானித்து வருவதும் அவர் பற்றிய செய்திகளை சேகரித்து வெளியிடுவதும், செய்திக்கான தகவல்களை தரக்கூடியவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதும் செய்தி வழங்கும் துறையில் சாதாரணமான செயற்பாடுகள். இந்த வகையில் நீதிபதி இளம்செழியனின் மறைந்து போன மெய்ப்பாதுகாவலரின் குடும்பம் பற்றிய செய்தியை வெளியிட்ட செய்தியாளர் அந்த குடும்பத்து உறவினர் ஒருவருடன் தொடர்புகளை பேணி தனக்கு மட்டும் உடன் செய்தி தர வேண்டும் என்று உடன்பாடு செய்து இருக்கலாம்.  குடும்பத்துக்கு புகைப்படம் எடுத்தவர் இந்த புகைப்படங்களை செய்தியாளருக்கு விற்றிருக்கலாம். 

இன்று போரும் பயங்கரவாதமும் இல்லாத நிலையில், சிங்கள பகுதியில், ஒரு சிங்கள குடும்ப நிகழ்வில், ஒரு சிங்கள செய்தியாளர், இவ்வாறன செய்தி சேகரிப்பதை அரசு தடுக்க முனையாது. சம்பவம் முடிந்து நீதிபதி வீடு திரும்பிய பின் செய்தியை வெளியிடுவதால் நீதிபதிக்கு ஆபத்து இல்லை.

ஆனால் அதை நீதிபதி இளம்செழியனே ஒரு அரசியல்வாதியாக கமராக்களை ஏற்பாடு செய்து பகிரங்க படுத்தினார் என்று நீங்கள் சொல்லும் போது அது ஆதாரம் இல்லாத, ஆனால் குறைந்த அளவில் சாத்தியமான நிகழ்வு பற்றிய ஒரு கருத்தாகும். போர்க்காலத்திலேயே கிருஷாந்தி குமாரசாமி வழக்கு முதல் வேறு வழக்குகளில் கூட குற்றவாளிகளான இராணுவ வீரருக்கு நீண்ட தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கியவர் இளம்செழியன். இவரது துணிச்சலான செயற்பாடுகளை மெச்சி அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் இவரது வீடு தேடிச் சென்று இவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கினார்கள். ஆனால் அவர் இலங்கையிலேயே தனது பயனுள்ளது என்று கூறி அங்கே இருக்கிறார். அரசியல் பழிவாங்கலுக்கு  அஞ்சாமல் வித்தியா கொலைவழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனில் பங்கு பற்றி தீர்ப்பில் பகிரங்கமாக குறிப்பிட்டு இருந்தார். அவர் இன்றுவரை அரசியலில் நாட்டம் காட்டவில்லை.  இவர் போன்றவர்கள் அங்கே மக்களுக்கு இன்று மிகவும் தேவையானவர்கள். எதுவித ஆதாரங்களும் இல்லாமல் இவர் போன்றவர்களை வெறுத்து ஒதுங்க செய்வதால் மக்களின் அழிவு மேலும் அதிகரிக்குமே அன்றி குறையாது. நீங்களுமா அதற்கு பங்களிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Jude said:

அதிக சந்தேகத்தோடு சிந்திக்கிறீர்கள். பெரும்பாலான ஊடகங்களின் செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்தால் தான் அவர்களுக்கு வருமானம். இந்த நீதிபதியை பற்றிய செய்தியை முன்னர் வெளியிட்ட செய்தியாளர்கள் அவரை தொடர்ந்தும் அவதானித்து வருவதும் அவர் பற்றிய செய்திகளை சேகரித்து வெளியிடுவதும், செய்திக்கான தகவல்களை தரக்கூடியவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதும் செய்தி வழங்கும் துறையில் சாதாரணமான செயற்பாடுகள். இந்த வகையில் நீதிபதி இளம்செழியனின் மறைந்து போன மெய்ப்பாதுகாவலரின் குடும்பம் பற்றிய செய்தியை வெளியிட்ட செய்தியாளர் அந்த குடும்பத்து உறவினர் ஒருவருடன் தொடர்புகளை பேணி தனக்கு மட்டும் உடன் செய்தி தர வேண்டும் என்று உடன்பாடு செய்து இருக்கலாம்.  குடும்பத்துக்கு புகைப்படம் எடுத்தவர் இந்த புகைப்படங்களை செய்தியாளருக்கு விற்றிருக்கலாம். 

இன்று போரும் பயங்கரவாதமும் இல்லாத நிலையில், சிங்கள பகுதியில், ஒரு சிங்கள குடும்ப நிகழ்வில், ஒரு சிங்கள செய்தியாளர், இவ்வாறன செய்தி சேகரிப்பதை அரசு தடுக்க முனையாது. சம்பவம் முடிந்து நீதிபதி வீடு திரும்பிய பின் செய்தியை வெளியிடுவதால் நீதிபதிக்கு ஆபத்து இல்லை.

ஆனால் அதை நீதிபதி இளம்செழியனே ஒரு அரசியல்வாதியாக கமராக்களை ஏற்பாடு செய்து பகிரங்க படுத்தினார் என்று நீங்கள் சொல்லும் போது அது ஆதாரம் இல்லாத, ஆனால் குறைந்த அளவில் சாத்தியமான நிகழ்வு பற்றிய ஒரு கருத்தாகும். போர்க்காலத்திலேயே கிருஷாந்தி குமாரசாமி வழக்கு முதல் வேறு வழக்குகளில் கூட குற்றவாளிகளான இராணுவ வீரருக்கு நீண்ட தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கியவர் இளம்செழியன். இவரது துணிச்சலான செயற்பாடுகளை மெச்சி அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் இவரது வீடு தேடிச் சென்று இவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கினார்கள். ஆனால் அவர் இலங்கையிலேயே தனது பயனுள்ளது என்று கூறி அங்கே இருக்கிறார். அரசியல் பழிவாங்கலுக்கு  அஞ்சாமல் வித்தியா கொலைவழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனில் பங்கு பற்றி தீர்ப்பில் பகிரங்கமாக குறிப்பிட்டு இருந்தார். அவர் இன்றுவரை அரசியலில் நாட்டம் காட்டவில்லை.  இவர் போன்றவர்கள் அங்கே மக்களுக்கு இன்று மிகவும் தேவையானவர்கள். எதுவித ஆதாரங்களும் இல்லாமல் இவர் போன்றவர்களை வெறுத்து ஒதுங்க செய்வதால் மக்களின் அழிவு மேலும் அதிகரிக்குமே அன்றி குறையாது. நீங்களுமா அதற்கு பங்களிக்கிறீர்கள்?

மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்...

இளஞ்செழியன் மரண தண்டனை தீர்ப்பு வழங்கினார் என்றால் அது என்ன அவரின் தனிப்பட்ட முடிவா?

இலங்கையின் நீதி நிர்வாக சட்ட பிரிவுகளின் அடிப்படையில் அவர் வழங்கிய தீர்ப்பு...

அங்கே தனிப்பட்ட முடிவுகளுக்கு இடமில்லை...அதுபோக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் வேண்டுமென்று இப்போதான்  மைத்திரி முயற்சிக்கிறார்...அதுக்கு பலமான தடை போடுகிறது  EU & US ...

அதுபோக ஒரு நாட்டின் நீதிபதியாய் நிகழ்காலத்தில்  இருப்பவருக்கு அமெரிக்கா வந்து எங்க நாட்டுக்கு வாருங்கள் என்று குடியுரிமை கொடுக்குமா? ஆச்சரியமாக இருக்கிறது, அந்த முயற்சிபாடின் இணைப்புகள் ஏதாவது உங்கள் கைவசம் இருக்கிறதா? தயவு செய்து தாருங்கள்...

பலர் அந்த... அரசுகளின் நிர்வாகத்திலிருப்பவர்களுக்கு அமெரிக்கா சிற்றிசன் கொடுக்க விளைவதை அறிய ஆவலாய் இருப்பார்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2018 at 6:33 PM, valavan said:

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டலாம் காட்டாமலும் போகலாம்  ஐயா விக்கியரும் நீதி அரசர் தானே:34_rolling_eyes: 

Link to comment
Share on other sites

22 hours ago, valavan said:

மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்...

செய்தி எப்படி வெளிவந்தது என்பது தான் உங்கள் கேள்வி. அதற்கான உங்கள் எதிர்வு கூறல், இந்த செய்தியை நீதிபதி இளஞ்செழியனே தான் அரசியலில் ஈடுபடும் நோக்கத்துடன் காமராக்களுக்கு முன் நின்று வெளிவிட்டு இருக்கலாம் என்பதாகும். அதற்கு ஆதாரமாக, இளஞ்செழியனுக்கு உள்ள பாதுகாப்பையும் அதை மீறி செய்தியாளர்கள் செய்தியை சேகரித்து இருக்கமுடியாது என்ற வாதத்தை முன் வைத்தீர்கள். எனது வாதம், இந்த நிகழ்வு முடிந்த பின் செய்தி வருவதால் நீதிபதி  இளஞ்செழியனுக்கு ஆபத்து இல்லை என்பாதாலும், முன்னர்  இளஞ்செழியன் பற்றி செய்தி சேகரித்தவர்கள் தமக்கு செய்தி வழங்குபவருடன் செய்த உடன்பாட்டின் படி செய்தியை பெற்று வெளிவிட்டு இருக்கலாம் என்பதே.

அதற்கு உங்கள் எதிர் வாதம் எங்கே? மேலே உள்ள "மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்..." என்பதா உங்கள் எதிர்வாதம்?

நீதிபதி இளஞ்செழியன் தனது அமெரிக்க குடியுரிமை பற்றி சொன்ன வாசங்கள்:

“Recognition of his contribution to judicial independence. Recalling the award, Ilancheliyan said: “When I was told by US officials that I could stay back in the US as a citizen, I said I would like to continue to serve the Lankan judiciary. Thereupon, a State Department official remarked that their choice was right!”

கீழே உள்ள இணைப்புகளில் இதை கண்டேன்.

https://www.ipetitions.com/petition/requesting-legal-action-against-to-jaffna-high
http://www.newjaffna.net/?p=30313

நாங்கள் இங்கே நீதிபதி இளஞ்செழியனின் அமெரிக்க குடியுரிமை பற்றி விவாதிக்கவில்லை. அவரின் சிறப்பான பணி பற்றி விபரிக்கவே அதை குறிப்ப்ட்டேன். மேலும் நீதித்துறை, சட்டங்கள், இலங்கையில் மரணதண்டனை பற்றிய விடயங்களையும் நாம் இங்கு விவாதிக்கவில்லை. மரணதண்டனை இலங்கையில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் நிறைவேற்ற படுவதில்லை. இப்போது நிறைவேற்ற விரும்புகிறார்கள். நீதித்துறை, சட்டங்கள், இலங்கையில் மரணதண்டனை பற்றிய விபரங்களை நான் தேடி உங்களுக்கு தருவதிலும் பார்க்க நீங்களே தேடி அறிந்து கொண்டால் அந்த அறிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டலாம் காட்டாமலும் போகலாம்  ஐயா விக்கியரும் நீதி அரசர் தானே:34_rolling_eyes: 

அரசியல்வாதிகள் இல்லாமல் ஒரு ஜனநாயக நாடான இலங்கை இயங்க முடியாது. கொலைகாரர், பயங்கரவாதிகள், கொள்ளையர், மற்றும் சண்டியர்கள் அரசியல்வாதிகளாக இருந்து இலங்கையை ஆள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு ஆபத்தான ஆவா கும்பல் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை வழங்கியவர் என்று பெயர் எடுத்த ஒரு நீதிபதி அரசியலுக்கு வருவது எம்மில் சிலருக்கு பிடிக்கவில்லை. இது முட்டாள்தனமாக படவில்லையா? நாட்டை ஆளும் சட்டத்தை உருவாக்குவதற்கு நல்ல நீதிபதி என்று பெயர் எடுத்தவர் வேண்டாம், பலரையும் கொன்ற முன்னாள் கொலைகாரர் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு வாக்கும் போட்டு அவர்களை தெரிவு செய்து அந்த ஆட்சியில் தொடர்ந்து அழிந்து போகும் மக்கள் வாழத்தக்க இனமாக தெரியவில்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 12:19 AM, Jude said:

அரசியல்வாதிகள் இல்லாமல் ஒரு ஜனநாயக நாடான இலங்கை இயங்க முடியாது. கொலைகாரர், பயங்கரவாதிகள், கொள்ளையர், மற்றும் சண்டியர்கள் அரசியல்வாதிகளாக இருந்து இலங்கையை ஆள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு ஆபத்தான ஆவா கும்பல் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை வழங்கியவர் என்று பெயர் எடுத்த ஒரு நீதிபதி அரசியலுக்கு வருவது எம்மில் சிலருக்கு பிடிக்கவில்லை. இது முட்டாள்தனமாக படவில்லையா? நாட்டை ஆளும் சட்டத்தை உருவாக்குவதற்கு நல்ல நீதிபதி என்று பெயர் எடுத்தவர் வேண்டாம், பலரையும் கொன்ற முன்னாள் கொலைகாரர் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு வாக்கும் போட்டு அவர்களை தெரிவு செய்து அந்த ஆட்சியில் தொடர்ந்து அழிந்து போகும் மக்கள் வாழத்தக்க இனமாக தெரியவில்லை. ?

பாவம் மக்கள் இது தெரியாமல் அவர்களையே இன்னமும் விரும்புகிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.