Jump to content

பதி­ல­ளிக்காவிட்டால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை வரும்


Recommended Posts

பதி­ல­ளிக்காவிட்டால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை வரும்

 

 

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீனா­விடம் நிதி பெற்­றமை தொடர்­பான குற்­றச்­சாட்­டிற்கு மஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்கத் தவறும் பட்­சத்தில் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வரவும், அடுத்த கட்ட சட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கவும் ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். இந்த விட­யங்­களை வலி­யு­றுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­ விற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

mahinda.jpg

இவ்­வா­றான நட­வ­டிக்­கைளை தேசிய அர­சாங்கம் அனு­ம­திக்­காது. எனவே தனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் விரைவில் விளக்­க­ம­ளிக்க  வேண்டும். அவ்­வாறு இல்லை என்றால் அவ­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வ­தற்கும், பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்கி சட்ட நட­வ­டிக்கையை முன்­னெ­டுக்­கவும் ஆளும் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். 

பாரா­ளு­மன்­றத்தில் வெள்­ளிக்­கி­ழமை விஷேட சந்­திப்­பினை மேற்­கொண்ட போதே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதே போன்று 112 கோடி குற்­றச்­சாட்­டிற்கு பதி­ல­ளிக்­கு­மாறும் அவ்­வாறு இல்­லை­யென்றால் எதிர்­கொள்ள வேண்­டிய நெருக்­க­டிகள் குறித்தும்  வலி­யு­றுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. 

தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சீன நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 112 கோடி நிதி­யினை பெற்­றுக்­கொண்­டமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ இது­வ­ரையில் பதி­ல­ளிக்கவில்லை. குறித்த விடயம் தொடர்பில் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்­திலும் கலந்­து­கொள்­ள­வு­மில்லை. இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளினால் மஹிந்த ராஜ­ப­க் ஷ மீதான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ள­துடன் தேசிய அர­சி­யலில் சீனாவின் எல்லை மீறிய தலை­யீ­டு­களும் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளன. 

நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் பிர­காரம் சீன நிறு­வனம் நிதி வழங்­கி­யதா? அந்த நிதி ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டதா? அந்த நிதிக்­கான நிபந்­த­ணைகள் என்ன? போன்ற கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கு­மாறு கடி­தத்தில் கோரப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துஷார இந்­துனில் உறு­திப்­ப­டுத்­தினார். 

நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதை மஹிந்த ராஜ­ப­க் ஷ தவிர்த்துக்கொள்கின்றமை சந்தேகம் வலுப்பெற காரணமாகியுள்ளது. எனவே விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/37043

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.