Jump to content

விக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன்


Recommended Posts

விக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன்

 

 
 

(ரி.விரூஷன்)

வடக்கு மாகாண சபையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்­ச­னைக்கு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் தீர்­வு­காண முடியும் என தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வேண்­டு­மென்றே விளங்­க­வில்லை என்­பது போல பாசாங்கு செய்­வது தான் குழப்ப நிலைக்கு காரணம் எனவும் தெரி­வித்தார்.

sumanthiran.jpg

மேலும் மாகாண சபையில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்­பாக எவரும் விமர்­சிக்­கவோ அல்­லது விசா­ரணை செய்­யவோ அதி­காரம் கிடை­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.

யாழ்.சாவ­கச்­சே­ரியில் நேற்­றைய தினம் காலை இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு செய்­தி­யா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

கேள்வி: யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்­நி­லையில் அண்­மையில் சட்ட ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வந்து சென்ற பிறகும் அந்த நிலைமை நீடிக்­கின்­றதே ?

பதில்: இச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த மாகாண சபைக்கு சட்ட ஒழுங்­கா­னது முறை­யாக பகி­ரப்­பட வேண்டும். அத்­தோடு இப் பிர­தே­சத்­தி­லுள்ள பொலிஸார் இப் பிர­தே­சத்­திற்­கு­ரிய மொழி­யினை சொந்த மொழி­யாகக் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும். அவ்­வாறு இல்லை என்றால் இச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது மிகக் கடி­ன­மா­ன­தாகும்.

அந்த நிலைமை ஏற்­படும் வரையில் நாம் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. சட்ட ஒழுங்கு அதி­கா­ரத்தை கைகளில் வைத்­தி­ருக்­கின்ற மத்­திய அர­சா­னது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்­பாக நாம் கடு­மை­யான அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்றோம். அத­னா­லேயே சட்ட ஒழுங்கு அமைச்சர் யாழ்ப்­பாணம் வந்தார் .

இவ் வன்­முறைச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக நாம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தரும் பிர­த­ம­ரு­டனும் பேச­வுள்ளோம்.

கேள்வி: வடக்கு மாகாண சபையின் அமைச்­ச­ரவை தொடர்­பாக நீதி­மன்றம் கட்­ட­ளை­யொன்றை வழங்­கிய பின்­னரும் தொடர்ந்தும் பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றதே ?

பதில்: நீதி­மன்றம் வழங்­கிய கட்­ட­ளையில் எந்தப் பிரச்­சினையும் இல்லை. அக் கட்­ட­ளையை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் சுமூ­க­மான மாகாண சபை ஆட்­சியை நடத்த முடியும். ஆனால் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் அதனை வேண்­டு­மென்றே விளக்­க­மில்லை என்­பது போல பாசாங்கு செய்து அதனை அமுல்­ப­டுத்­தா­மை­யா­லேயே தற்­போது குழப்ப நிலை நீடிக்­கின்­றது.

கேள்வி: வடக்கு மாகாண பெண் அமைச்சர் ஒருவர் கைத் துப்­பாக்கி வைத்­தி­ருப்­ப­தாக உறுப்­பினர் அஸ்மின் கூறிய நிலையில் அது தொடர்­பாக அப்பெண் அமைச்சர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாரே ?

பதில்: மாகாண சபையில் பேச்சு சுதந்திரம் இருப்பதாக சட்டத்தில் கூறப்படுகின்றது. இந்நிலையில் மாகாண சபையில் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக எவருக்கும் விமர்சிக்கவோ அல்லது விசாரிக்கவோ அதிகாரம் கிடையாது என்றார். 

http://www.virakesari.lk/article/37044

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.