Jump to content

மூடி மறைக்க முயலும் செயற்பாடு


Recommended Posts

மூடி மறைக்க முயலும் செயற்பாடு

 

தமிழ் மக்­க­ளையும் உல­கத்­தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்பட்டோர் அலு­வ­ல­கத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்­க­ணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழில் காணாமல் ஆக்­கப்­ப­ட்­டோரின் உற­வுகள் பலர் மாபெரும் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்­ப­ட்டோர் தொடர்­பான அலு­வ­லகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உற­வு­களை சந்­தித்து உரை­யா­டி­வரும் நிகழ்ச்­சித்­திட்­டத்­துக்கு ஏற்ப யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டலை உற­வி­னர்கள் முற்­றாக புறக்­க­ணித்­தது மாத்­தி­ர­மன்றி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தையும் நடத்­தினர்.

காணாமல் போன தமது உற­வு­க­ளைத்­தேடி மாதக்­க­ணக்­காக, வரு­டக்­க­ணக்­காக போராட்­டங்­களை நடத்­தி­வரும் உற­வுகள் தற்­போது காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­துக்கு எதி­ராக தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கி­றார்கள். இறுதி யுத்­தத்­தின்­போதும் அதன்­பின்­னரும் காணாமல் ஆக்­கப்­பட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­­கான உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு அல்­லது கண்­டு­பி­டித்து தரு­மாறு கடந்த பல­வ­ரு­டங்­க­ளாக குறிப்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்டதன் ­பின் உற­வுகள் மாவட்­டங்­கள்­தோறும், நக­ரங் கள் தோறும் பல தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை நடத்தி வரு­கி­றார்கள். திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தைச் சேர்ந்த உற­வுகள் கடந்த பல மாதங்­க­ளாக கிழக்கு மாகாண ஆளுநர் அலு­வ­ல­கத்­துக்கு முன்­பாக போராட்­டங்­களை தொடர்ச்­சி­ யாக நடத்தி வரு­வதைக் காணலாம்.

காணாமல் ஆக்­கப்­ப­ட்டோர் தொடர்­பான காரி­யா­ல­யத்தை பிராந்­திய ரீதி­யாக அல்­லது மாவட்­டம்­தோறும் நிறுவி உண்­மை­யான தக­வல்­களை சரி­யான நபர்க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை விரைவுபடுத்த வேண்டும். வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான உண்மை நிலைப்­பட்­டி­யலைத் தயா­ரித்து இருப்­ப­வர்கள் இல்­லா­த­வர்கள் என்ற உண்­மைத்­தன்­மையை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு பகி­ரங்­கப்­ப­டுத்­து­வதன் மூலமே உற­வி­னர்­க­ளு­டைய ரணத்தை ஆற வைக்க முடியும். நடந்து போன விட­யங்­க­ளுக்­காக பகி­ரங்க மன்­னிப்­பையோ உண்மை நிலையை ெவளிப்­ப­டுத்­து­வதன் மூலமே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வா­களின் உற­ வு­களை சாந்­தி­ய­டைய வைக்க முடி­யு­மென்­பது எல்­லோ­ரு­டைய எதிர்­பார்ப்­பாகும்.

யுத்­தம் ­ந­டை­பெற்­ற­ வே­ளை­யிலும் அது முடி­வுக்கு கொண்­டு­வந்­தபின்னும் பெரும்­பா­லான இளை­ஞர்கள், யுவ­திகள் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு ெவளியேயும் கைது செய்­யப்­பட்டும் கடத்திச் செல்­லப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளனர். வழி­ம­றிப்புக்­க­டத்தல், வெள்ளை வேன் கடத்தல், பயணம் செல்­லும் வேளை கடத்தல், வீடு புகுந்து கடத்தல், சோதனை சாவ­டி­யில்­வைத்து கடத்தல், சோதிப்­புக்கு அழைத்து கடத்தல், இரா­ணுவ முகா­முக்கு அழைத்து காணாமல் போன­வர்கள் என கடத்­தப்­பட்ட­ வ­கை­களில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ரு­க்­கி­றார்­க­ளென தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. உற­வி­னர்­களின் வாக்குமூலங்கள் மூலமும் அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இறுதி யுத்­தத்­தின்­போது வெள்ளைக்­கொ­டி­யேந்தி சர­ண­டைந்­த­வர்கள் தவிர சாதா­ர­ண­மாக சர­ண­டைந்­த­வர்கள் உற­வி­னர்­களால் நேர­டி­யா­கவே இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்களாவர். புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்­ட­போதிலும் இது­வரை ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்டு குறிப்­பாக இந்­திய இராணுவம் வட­கி­ழக்கில் நிலை­த­ரித்த காலத்­திலும் அது­வெளியே­றி­ய­தன்­ பின்னும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் மாவட்­டங்கள் தோறும் இயக்­கப் பட்ட பிர­ஜைகள் குழுக்கள் மற்றும் மனி­த­வு­ரிமை ஆணைக்­குழு, செஞ்­சி­லு­வைச்­சங்கம், பொலிஸ் நிலை­யங்கள், மத ஸ்தாப­னங்கள் தோறும் செய்­யப்­பட்ட முறைப்­பா­டு­க­ளுக்க மைய கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பா­க வும் எழுத்து மூல வாய்­மூல முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருப்­ப­து­ பற்­றியும் பிரஸ்­தா­பிக்­கப்­ப­டு­கி­றது.

2009ஆம் ஆண்­டு ­யுத்­தத்­துக்­குப்­பின்­ன­ரான காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக அதிகம் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போதிலும் அதற்கு முந்­திய கால நிைல­மை­க­ளி­லும்­ பெ­ருந் ­தொ­கை­யான இளை­ஞர்­களும் யுவ­தி­களும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­க­ளென்ற தக­வல்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களால் நடத்­தப்­ப­டு­கிற போராட்ட கால குறிப்­புக்­க­ளி­லி­ருந்து அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

 இதில் கவ­லை­த­ரு­கி­ன்ற­ வி­டயம் யாதெனில் ஒரு­ கு­டும்­பத்தில் மூன்­றுக்கு மேற்­பட்ட சகோ­த­ரர்கள், சகோ­த­ரிகள், தந்தை, மகன், மகள் என்ற குடும்ப கிளை­களே காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்கும் பரி­தாப சம்­ப­வங்­களும் இடம்பெற்­றி­ருக்­கின்­றன. சில தாய்மார் தமது 3 ஆண்­பிள்­ளை­க­ளையும் தங்கள் கணவன் மாரையும் பதைக்­கப்­ப­தைக்க பறி­கொ­டுத்­து­விட்டு அவர்கள் இன்னும் உயி­ரோடு இருக்­கின்­றார்­களா இல்­லையா என்­பதை அறிய முடி­யாமல் கண்­ணீர்­மல்க காத்­தி­ருப்­பதும் சில மனை­வியர் தமது கணவன் உயி­ருடன் இருக்­கிறார் என்ற அப­ரிமித­மா­ன­ நம்­பிக்­கை­யுடன் கழுத்தில் தொங்கும் தாலியை இன்னும் பூஜித்து வரு­வ­தாகவும் தொடர்­க­தைகள் நீண்­டு­கொண்டே போகின்­றன.

 மட்­டக்­க­ளப்பில் கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு முன் நடந்த காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான ஆணைக்­கு­ழு­ வி­சா­ர­ணை­யின்­போது மகன் ஒருவன் அம்மா, அப்பா உட்­பட குடும்­பத்தில் 10 பேர் காணாமல் போயுள்­ள னர் என சாட்­சியம் அளித்­தி­ருந்­ததும் எனது மகன் உட்­பட 5 மாண­வர்­களை மட்­டு.­நகர் பொலி­ஸாரே அழைத்து சென்­றனர். சர்வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் உட்­பட கொழும்­பி­லுள்ள 4ஆ­வது மாடிக்கும் எனது பிள்­ளை­க­ளைத்­தேடி சென்று வந்­­துள்ளேன். இது­வரை எனது பிள்­ளை­களைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்­லை­யென ஒரு தாயும் கூறி­யி­ருப்­ப­துபோல் காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பாக அவர்­களின் உற­வி­னர்கள் கூறும் சோகக் கதைகள் அதிகம்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக வட­கி­ழக்கில் பல போராட்­டங்கள் முன்­னெ­டுக் ­கப்­பட்டு வரு­வ­தற்­கப்பால் சர்­வ­தேச மனி­த­ உ­ரிமை அமைப்­புக்கள் மற்றும் ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஸ்தாப­னத்தின் கவ­னத்­துக்கும் இந்த விடயம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­போதிலும் நிலை­யான நீதியை அல்­லது உண்­மையை உற­வி­னர்களால் அறிய முடி­யா­மலேயே உள்­ளது.

கடந்த வருடம் ஐ.பி.சி. தமிழ் செய்­திச் சேவை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டாரநாயக்கவுடன் நடத்­திய விசேட நேர்காணலின்­போது அதிர்ச்­சி­யான தக­வ­லொன்றை அவர் தெரி­வித்­தி­ருந்தார். 04.06. 2017 அன்று வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் உண்­மையில் உயி­ருடன் இருக்­கி­றார்­களா இல்­லையா என்­பது பற்றி அர­சாங்­கமே கண்­ட­றிய வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில் அப்­படி எவ­ரையும் முகாம்­களில் மறைத்து வைத்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. முன்­னைய கால ஆட்­சி­யின்­போது கட­மை­யாற்­றிய இரா­ணு­வத்­தி­னரின் கொடுந்­த­ன்­மைக்­கேற்ப அவர்கள் கூட­்டிச்­செல்­லப்­பட்டோ கடத்­திச்­செல்­லப்­பட்டோ கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம். இவை இன்னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற சந்­தே­கத்தை சந்திரிகா தனது நேர்காணலில் தெரி­வித்­தி­ருந்தார். இக் கருத்­தா­னது பல விமர்­ச­னங்­க­ளுக்கும் கண்­ட­னங்­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­பட்­ட­போதிலும் அவரின் பகி­ரங்­க­மான கருத்தில் உண்­மை­யி­ருப்­ப­தா­கவே நம்­பப்­ப­டு­கி­றது. இதற்கு காரணம் கடந்த வருடம் சம்­பூ­ருக்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பாக ஒரு கருத்­தைத்­தெ­ரி­வித்­தி­ருந்தார்.

"காணாமல் ஆக்­கப்­பட்­டோரை கண்­டு­பி­டித்துத் தர­வில்லை. அவர்க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை ஜனா­தி­பதி வெளிப்­ப­டுத்­து­கின்­றா­ர் இல்லை என என் மீதும் எனது அர­சாங்­கத்தின் மீதும் குறை கூறு­கி­றார்கள். காணாமல் ஆக்­கப்­ப­ட்டோர் எங்­கி­ருக்­கி­றார்கள் என எனக்கும் தெரி­வி­யுங்கள். நானும் உங்­க­ளோடு வந்து தேடு­கிறேன். அவர்கள் இருக்கும் இடங்­களைக் காட்­டுங்கள் நான் வந்து விடு­விக்­கிறேன்" என ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார். ஜனா­தி­பதி பத­வி­யேற்று இரண்­டு­வ­ரு­டங்கள் பூர்த்­தி­யா­கிய நிலையில் அவர் இக்­க­ரு த்தை பட்­ட­வர்த்­த­ன­மாக தெரி­வித்­தி­ருந்­தார்.

ஜனா­தி­ப­தி­ மைத்திரிபால பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்து கூறி­வ­ரு­கிற ஒரு விடயம், தனது நாட்டு இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுக்­கவோ சர்­வ­தேச விசா­ர­ணைக்கோ சர்வ­தேச நீதி­ப­தி­களின் வருகைக்கோ இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அத்துடன் இந்­நாட்டில் மனி­த ­உ­ரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் இடம்­பெ­ற­வி­ல­்லை­யென அவர் அடித்து கூறி­வ­ரு­வது நாட­றிந்த விடயம். இவ்­வாறு இருக்­கும்­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அவர் எவ்­வகைத் தீர்மா­னங்­களை மேற்­கொள்ள முடி­யு­மென்­பது தெளிவாக்­கப்­பட்­ட­ வி­ட­ய­மாகும். இது­மட்­டு­மன்றி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யா­கவும் முப்­ப­டை­களின் தலை­வ­ரா­கவும் விளங்கும் ஒரு­வ­ருக்கு சகல தக­வல்­களும் தெரி­விக்­கப்­ப­டாமலிருக்க முடி­யாது என்­பதும் சாதா­ரண பாம­ர­னாலும் விளங்­கிக்­கொள்­ளக்­கூ­டிய விட­ய­மாகும்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான போராட்­டங்­களும் கவ­ன­யீர்ப்பு நட­வ­டிக்­கை­களும் அவர்தம் உற­வி­னர்­களால் தொடர்ந் தேர்ச்சி­யா­கவும் காலம் தவறா­மலும் மாவட்­டங்­கள்­தோறும் நடத்தப்­பட்டு வரு­கிற நிலையில் இவ்­வி­வ­காரம் ஐ.நா. மனி­த ­உ­ரி­மைப்­பே­ர­வையில் முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த நிகழ்ச்­சி­நி­ர­லாக கொண்­டு­வ­ரப்­பட்­ட­தற்கு அமை­யவே முன்னாள் ஐ.நா. மனி­த­உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­ காணாமல் போனோர் பிரச்­சினை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக இலங்கை வந்­தி­ருந்தார். அவர் பிர­தேசம் – பிர­தே­ச­மாக சென்று காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளையும் மனி­த­ உ­ரிமை ஆர்வலர்­க­ளையும் சந்­தித்து உரை­யா­டி­யது மாத்­தி­ர­மன்றி தனது கார­சா­ர­மான அறிக்­கை­யையும் வெளியிட்­டி­ருந்தார்.அவரின் விஜ­யத்­தின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள் தலை­ந­கரில் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களை நடத்தத் திட்­ட­மிட்­டி­ருந்­த­போ­திலும் முன்­னைய அர­சாங்­கத்­தால் திட்­ட­மிட்ட வகையில் தடை­வி­திக்­கப்­பட்­டது. அத் தடை­க­ளை­யெல்லாம் மீறி உற­வினர் நவநீதம்பிள்­ளையை சந்­தித்து தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு அழுது புலம்பி கோரிக்­கை­களை விடுத்தி­ருந்­தனர். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அவ­ரது இளைப்­பா­றுகை மற்றும் புதிய அர­சாங்­கத்தின் வருகை என்பன அவர்க­ளது கோரிக்­கை­க­ளுக்கு பலம் ேசர்க்க முடி­யாத சூழ்­நி­லை­யையே உரு­வாக்­கித் ­தந்­தது.

அன்­றைய ஆட்­சிக்­கா­ல­மா­னது எல்­லா­வற்­றை­யுமே மூடி­ம­றைக்கும் பல்­வேறு தந்­தி­ரோ­பா­யங்­களை செய்­தது என்­ப­தற்­கான ஆதா­ரமே அந்த ­அ­ர­சாங்க காலத்தில் உண்­டாக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­க­ளாகும்.அவை பர­ண­கம ஆணைக்­குழு, உட­ல­ாகம ஆணைக்­கு­ழு­வென நிய­மிக்­கப்­பட்­டது.

2005 ஆம் ஆண்­டு­ம் அதற்கு பிற்பட்ட கால த்திலும் இடம்­பெற்ற மிக­மோ­ச­மான மனி­த உ­ரிமை மீறல்­களை விசா­ரணை செய்து அறி க்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவே உட­லா­கம ஆணைக்­குழு. இவ் ஆ­ணைக்­குழு வட­கி­ழக்கில் இடம்­பெற்ற படு­கொ­லைகள் தொடர்பில் விசா­ரணை செய்ய அதி­காரம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது

  1990ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம்­வரை இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் பாரிய மனி­த­ உ­ரிமை மீற­ல­்க­ளான காணாமல் போனோர் கடத்­தப்­பட்டோர் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­க­வேண்­டு­மென்ற நிய­திக்கு அமைய உரு­ வாக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவே பர­ண­கம ஆணைக்­ கு­ழு­வாகும்.இந்த ஆ­ணைக்­கு­ழுக்கள் அர­சு க்கு விசு­வா­ச­மாகவே விசா­ர­ணை­களை நடத்­தி அந்த அ­றிக்­கைகள் முன்­னைய அர­சாங்­கத்­தினால் கிடப்பில் போடப்­பட்­டி­ருந்­தன. ஆனால் இந்த அ­றிக்­கை­களை இன்­றைய அர­சாங்­கத் தின் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 2015 ஆம் ­ஆண்டு ஒக்­டோபர் மாதம் பார­ாளு­ ம­ன்றில் சமாப்­பித்து அறிக்­கையை வெளிச்­சத்­துக்குக் கொண்­டு­வந்­தார். அறிக்­கைகள் கார­சாரம் கொண்­ட­தாக இல்லாவிட்­டாலும் அந்த அ­றிக்­கையில் விதந்­து­ரைக்­கப்­பட்ட விட­யங்­க­ளுக்கு என்ன நடந்­தது? பழை­ய­ப­டி­ "வே­தாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை"­போல எல்­லாமே மீண்டும் முடக்­கி­வைக்­கப்­பட்­டன.

பர­ண­கம அறிக்கை காணாமல் போனோர் தொடர்­பாக ஒரு­சில உண்­மை­களை ெவ­ளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்­த­போதிலும் நல்­லாட்சி அர­சாங்கம் அந்த­ அ­றிக்­கையில் கூறப்­பட்ட விட­யங்­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்கத் துணி­ய­வில்லை. நல்­லாட்சி அர­சாங்­க­மென்றும் தேசிய அர­சாங்­க­மென்றும் கூறிக்­கொள்ளும் இன்­றைய அர­சாங்­கத்தின் தலை­மைப்­ப­த­வியை வகிப்போர் காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் சர்வதேசத்­தையும் உற­வு­க­ளையும் ஏமாற்றும் வகை­யி­லேயே மேற்­படி காணாமல் ஆக்­கப்­பட்டோர் காரி­யா­லயத்தை அமைத்து "கண்­கட்டு வித்தை" காட்­டப்­பார்க்­கி­றது என்­ பது உற­வு­களின் குற்­றச்­சாட்­டாக காணப்­ப­டு­கி­றது.

  அர­சால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் போனோர் அதி­கா­ரிகள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கு­ரிய முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கி­ற­போதிலும் அக் காரி­யா­லயம் தொடர்பில் அவ­நம்­பிக்கை கொண்ட நிலையில் அதி­கா­ரிகள் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் வருங்­கால செயற்­பா­டுகள் தொடர்­பிலும் உண்­மைத்­தன்மை தொடர்­பிலும் விளக்கம் அளித்­த­போதிலும் அதை ஏற்­றுக்­கொள்­ளாத உற­வுகள் தங்கள் உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு தமது எதிர்ப்பை சாத்­வீ­க­மான முறை­யிலும் ஜன­நா­யக பண்­பு­க­ளுக்கு அமைய தெரி­வித்­தி­­ருந்­தனர்.

அர­சினால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் இந்த அலு­வ­ல­கத்­தினால் எந்தப் பயனும் விளை­யப்­போ­வ­தில்லை. இது ஒரு ஏமாற்று வித்­தை­யென்றும் வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­தனர். எமது உற­வு­களை கண்­டு­பி­டித்துத் தரு­வ­தாகக் கூறி காலத்­துக்கு காலம் ஆணைக்­கு­ழுக்­களை அமைத்து எம்மை தொடர்ந்து ஏமாற்­றா­தீர்கள். இந்த ஆணைக்­கு­ழுவே இறுதி ஆணைக்­கு­ழு­வாக இருக்­க­வேண்டும். எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யப்­ப­டுத்­த­வேண்டும்.எங்கள் பொறு­மைக்கும் ஒரு எல்­லை­யுண்டு என எச்­ச­ரித்த நிலை­யி­லேயே அவர்கள் மேற்­படி அதி­கா­ரிகள் முன் அழுது புலம்­பிய சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் காலம் தொடக்கம் அர­சாங்கம் முறை­யான விசா­ர­ணையை நடத்­தவோ அல்­லது உண்மை நிலை­களை தெரி­விக்கவோ முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்­லை­யென்­பதே உற­வி­னரின் குற்­றச்­சாட்­டாக இருந்து வந்­துள்­ளது. கடந்த வருடம் ஆனி­ மா­த­ம­ளவில் வட­கி­ழக்கில் பர­வ­லாக, குறிப்­பாக கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் போராட்­டங்கள் நடத்­தப்­பட்­ட­போது இப்­பி­ரச்­சினை குறித்து ஆராய்­வ­தற்­காக இரு­வார கால அவ­காசம் கோரப்­பட்­ட­போதிலும் வெறும் சந்­திப்­புக்­களும் பேச்­சு­வார்த்­தை­களும் கண்­து­டைப்­புக்­காக நடத்­தப்­பட்­டனவே ­த­விர ஆரோக்­கி­ய­மன நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் உற­வுகள் முன்­கொண்­டு­வந்­தி­ருந்­த னர். நாட்­களும் மாதங்­களும் வரு­டங்­களை கடக்­கி­ன்றனவே தவிர காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஒரு நிரந்­தர தீர்வு காணப்­ப­ட­வில்­லை­யென்­பது பொது­வா­கவே பேசப்­ப­டு­கிற உண்மை.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் என்ற வகையில் இறு­தி­யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்பட்ட நெருக்­கடி நிறைந்த காலத்தில் சர­ண­டைந்­த­வர்கள், உற­வி­னர்­களால் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் யுத்­தத்­துக்கு முன்­னைய காலப் ­ப­கு­தி­யிலும் – பின்­னைய காலப்­ப­கு­தி­யி­லும் ­க­டத்­தப்­பட்­ட­வர்கள், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் என ஏரா­ள­மான இளை­ஞர்கள், யுவ­திகள் தொடர்­பாக அர­சாங்கம் உண்­மைத்­தன் ­மையை வெளிக்­கொண்­டு­வ­ரு­வதன் மூலமே இப்­பி­ரச்­ச­ினைக்கு நிரந்­த­ர­மான தீர்­வைக்­கொண்­டு­வ­ர­மு­டியும். இதற்கு முடி­வு­கா­ணப்­ப­ட­வேண்­டு­மாயின் உண்­மைத்­தன்மை சொல்­லப்­ப­ட­வேண்டும். ஆனால் இதனால் ஏற்­ப­டவுள்ள எதிர்விளை­வுகள் பற்றி அர­சாங்கம் அதிக அக்­கறை கொண்­டி­ருப்­ப­த­னா­லேயே உண் ­மையை சொல்­வதில் மூடி­ம­றைப்­புக்­களும் தயக்­கமும் காட்­டப்­ப­டு­கி­ன்றன.

இந்த விவ­காரம் தொடர்பில் நிறு­வப்­பட்ட ஆணைக்குழுக்கள், அதன் அறிக்கைகள் அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு ஆகி யவற்றுக்கு உண்மை நிலை தெரி யாமலில்ைல. இன்னும் கூறப்போனால் உறவினர்களால் மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒப்படைக் கப்பட்ட தகவல்கள்மூலம் பெருமளவில் உண்மை நிலையை அறியக்கூடியதாக இருக்கின்ற போதிலும் ஏன் இந்த தகவல் களை தெரியப்படுத்த அரசாங்கம் தயக்கம் காட்டிவருகிறதென்பது அறியப்படாத புதி ராகவேயுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை யும் தலைவர்களையும் முன்னாள் ஆட்சியா ளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இன் றைய ஆட்சியாளர்கள் மூடிமறைக்கப் பார்க் கிறார்களே தவிர வெளிச்சத்துக்குக் கொண்டு வர தயக்கம் காட்டுவதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது என்பது உறவினரின் கருத் தாகும்.

  காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் பிரச்சினைகளும் இவ்வாறு இருக்கிறபோது இதற்கு சமாந்திரமாக எடுக்கப்படவேண்டிய பல்வேறு முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லையென்பது தமிழ்மக்கள் மற்றும் தலைமைகளின் குற்றச்சாட்டுக்களாகும். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நிரந்தர அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கு முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வோமென கூறியிருந்த போதிலும் அவ்விவகாரம் தொடர்பில் இழுத்தடிப் புக்களையே மேற்கொண்டு வருகிறது. அதே போலவே அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு தயக்கம் காட்டிவருகிறது. இதேபோலவே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் காலத்தைக்கடத்திவிட்டு ேதர்தலுக்கான தீவிர வேட்டையில் இந்த அரசாங்கம் இறங்கியுள்ளது என்ற அதிருப்தியான கருத்துக்களே தமிழ் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறதென்பதை யாரும் மறுத லிக்க முடியாது. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்படவேண்டுமாயின் அரசாங்கம் இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும். காணாமல் போனோர் விவகாரத்துக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும்.உறவுகளின் அவலங்கள், அதிருப்திகள் தொடர்பில் உண்மைத்தன்மையுடன் நடந்து கொள்வதுடன் திறந்த பகிரங்கமான விசாரணைமுறை கொண்டுவரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுவது மாத்திரமன்றி உறவுகளுக்கு உரிய பரிகாரமும் காணப்பட வேண்டுமென்பதே யதார்த்த போக்காக இருக்கமுடியும்.

திருமலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-21#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.