Jump to content

‘நெகிழ வைக்கும் நட்பு’ - பிரமிளின் படைப்புகளை தொகுத்த வாசகர்


Recommended Posts

‘நெகிழ வைக்கும் நட்பு’ - பிரமிளின் படைப்புகளை தொகுத்த வாசகர்

 
 
'நெகிழ வைக்கும் நட்பு' - பிரமிளின் கவிதைகளை தொகுத்த வாசகர்படத்தின் காப்புரிமைFACEBOOK

புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பிரமிளின் வெளிவராத எழுத்துகள் மற்றும் அவரது முழுபடைப்புக்களையும் பத்து ஆண்டுகளாக சேகரித்து அவரது நெருங்கிய நண்பர் கால சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார்.

பிரமிள் 1997ல் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின் அவரது எழுத்து தொகுதிகளின் மீதான உரிமை, நண்பர் கால சுப்ரமணியத்திற்குச் சொந்தம் என்று எழுதிவைத்திருந்ததை அடுத்து, அவரது மொத்த படைப்புக்களையும் திரட்டுவதில் ஈடுபட்ட கால சுப்பிரமணியம், அவற்றை ஆறு புத்தகங்களாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.

அறிவியல், ஆன்மிகம், மொழி பெயர்ப்பு, கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் என பலவற்றையும் தொகுத்துள்ள கால சுப்பிரமணியம், பிரமிளுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு, அவரது படைப்புகள் பற்றி பிபிசி தமிழிடம் பேசினார்.

கோவையில் ஒரு தமிழ் ஆசிரியராகவும் சிறுபத்திரிகைகளின் வாசகனாகவும் இருந்த தன்னை பதிப்பாளராக மாற்றியவர் பிரமிள் என்கிறார் அவர்.

''நான் பிரமிளின் ஒரு கட்டுரைக்கு வாசகர் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவரிடம் இருந்தே எனக்கு பதில் கடிதம் வந்ததும், அவரை பார்ப்பதற்காக சென்னை வந்தேன். எழுதுவதில் நம்பிக்கை இல்லாமல் இருந்த அவர், எனக்காக எழுதப்போவதாக சொன்னார். இது என்னை அவரோடு நெடுங்காலம் இணைத்து வைப்பதற்கான முதல்புள்ளியாக அமைந்தது. பிரமிளின் கவிதைகளை எனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன். இது மேலும் என்னை அவரின் முழுமையாக படைப்புக்களை வாசிக்கவைத்தது,'' என்கிறார் கால சுப்பிரமணியம்.

பிரமிள்படத்தின் காப்புரிமைபிரமிள் Image captionபிரமிள்

நண்பரின் படைப்புக்களை வாசிப்பது என்று தொடங்கி, அவரது புது படைப்புக்களை பத்திரிகைகள் மற்றும் பதிப்பாளர்களிடம் கொண்டு செல்வது என்று வேலை செய்யத் தொடங்கியதாக கூறுகிறார் அவர்.

''1979 முதல் 1997ல் அவரது மறைவு வரை அவரோடு பயணித்துள்ளேன். அவரோடு நீண்டகால நட்பில் இருந்தவர்கள் மிகவும் குறைவு. கருத்து மோதல்கள் காரணமாக பல விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினர். இதன்காரணமாக பலரின் நட்பை அவர் இழந்தாலும், சமரசம் செய்துகொள்ளவில்லை. பிரமிளின் படைப்புக்களை வெளியிடுவதற்காக 1985ல் லயம் என்ற சிறுபத்திரிகை மற்றும் பதிப்பகத்தை நான் தொடங்கி அவரது படைப்புக்களை வெளியிட்டேன்,'' என்றார்.

தற்போது கொண்டுவந்துள்ள புத்தக தொகுப்புக்கான வேலைகள் பத்து ஆண்டுகளாக நடந்துவந்தது என்று கூறும் அவர்,'' பிரமிள் என்றாலே அவரது கவிதைகளை மட்டுமே பலரும் பேசுகிறார்கள். அவர் பலவிதமான படைப்புக்களை அளித்துள்ளார். எழுத்து மட்டுமில்லாமல் அவர் ஓவியம் வரைவது, களிமண் சிற்பம் வடிப்பது, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் ஆர்வம், அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதுவது என பலவிதங்களில் இயங்கிவந்தார்.

கால சுப்ரமணியம்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionகால சுப்ரமணியம்

பிரமிள் என்ற ஆளுமையை இந்த தலைமுறைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காக நான் பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. அவரின் கையெழுத்துப் பிரதிகளையும் இந்த தொகுப்பில் கொண்டுவந்துள்ளேன். சிறு பத்திரிகைகளில் வெளியான கதைகள் பலவற்றை தேடுவதில் சிரமம் இருந்தது. ஆனால் மனநிறைவுடன் இந்த ஆறு புத்தகங்களையும் கொண்டுவந்துள்ளேன்,'' என விவரித்தார்.

பிரமிளின் படைப்புக்கள் படிப்தற்கு எளிமையானவை அல்ல என்ற வாதம் இருப்பது குறித்து கேட்டபோது, ''பிரமிளின் படைப்புகள் அடர்தியானவை என்பது உண்மைதான். ஆனால் அவரின் கட்டுரைத் தொகுதிகள் எளிமையானவை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள், மூச்சு பயிற்சி செய்வது, சூபி, பௌத்த மதம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம், சமையல் என பலவிதமான தலைப்புகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ் இலக்கியத்தை விரும்பிப்படிக்கும் எவரும் படிக்கும் வகையில் உள்ளன,'' என்கிறார்.

'நெகிழ வைக்கும் நட்பு' - பிரமிளின் கவிதைகளை தொகுத்த வாசகர்படத்தின் காப்புரிமைFACEBOOK

எழுத்து மட்டுமே தனது வாழ்க்கை என்று இயங்கிய பிரமிளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை அமைத்துக்கொள்வதில் பல சிக்கல்கள் இருந்தன; எழுத்து மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு, நண்பர்களின் உதவியோடு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்தார் அவர் என்கிறார் சுப்ரமணியம்.

பிரமிள் வாழ்ந்த காலத்தில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறும் கால சுப்பிரமணியம், தற்போது பலரும் அவரைத் தேடி வாசிக்கும் நபராக மாறியுள்ளனர் என்றும் அவரது படைப்புக்கள் மீதான மீளாய்வு கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.

"விடுதலைப் புலிகளுக்கு மொழி பெயர்த்தவர்"

எழுத்தாளரும் பிரமிளின் நட்பு வட்டத்தில் இருந்தவருமான அழகிய சிங்கரும் பிரமிளுக்கு வாழும் காலத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறினார்.

"இருபது வயதில் பாரதி பற்றியும் இலக்கியச்சூழல் குறித்தும் அவர் 'எழுத்து' சிறுபத்திரிக்கையில் எழுதியுள்ளார். தற்போதுள்ள இருபதுவயது எழுத்தாளர் யாரும் பிரமிள் போல எழுதமுடியுமா என்பது கேள்விக்குறி. தமிழில் கா.ந.சுப்ரமணியம் மற்றும் சி.சு.செல்லப்பா போன்றோரின் இலக்கிய விமர்சன வரிசையில் அடுத்து வந்தவர் பிரமிள். அவரது கட்டுரைகளில் அவரது சக எழுத்தாளர்கள் பற்றி தொடர்ந்து விமர்சித்துவந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்,'' என்று கூறினார்.

பிரமிள் யார்?

1939ல் இலங்கை திருகோணமலையில் பிறந்துவளர்ந்தவர்.

இலங்கையில் இருந்து தனது இளமைக்காலத்தில் தமிழகத்திற்கு குடியேறிய எழுத்தாளர். தரு.மு.சிவராம் என்று அறியப்பட்டவர். எழுத்து என்ற சிறுபத்திரிகையில் எழுதத்தொடங்கிய அவர், கவிதைகள், சிறுகதைகள், நாடகம், கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் என பலவிதமான படைப்புக்களை தொடர்ந்து எழுதிவந்துள்ளார். கசடதபற, ஞானரதம், வானம்பாடி, சதங்கை, கொல்லிப்பாவை போன்ற சிற்றிதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின.

ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட பிரமிள், ஜே.கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகள், யோகிராம்சுரத்குமார் குறித்தும், பௌத்தம், சூபி, நாத்திகம் போன்ற மத நம்பிக்கைகள் குறித்தும் எழுதியுள்ளார். தனது சக எழுத்தாளர்களின் படைப்புக்களை இலக்கிய விமர்சனத்துக்கு உட்படுத்தி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை இல்லாமல் தனிநபராகவே இருந்தார். சென்னை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் வசித்த அவர் இறுதிக் காலத்தில் வேலூரில் வசித்தார். 1995ல் சிலிக் குயில் பதிப்பகத்தின் 'புதுமைப்பித்தன் வீறு' மற்றும் அதே ஆண்டு அமெரிக்காவில் உள்ள விளக்கு அமைப்பின் 'புதுமைப்பித்தன் விருது' ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 1997ல் மறைந்தார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44851677

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.