Jump to content

மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்


Recommended Posts

மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்

 

mannar-grave-1-300x192.jpgமன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்னர் நகர நுழைவாயிலில், சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில், கடந்த மே மாதம் தொடக்கம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது, இதுவரை 40 வரையான எலும்புக்கூடுகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தப் புதைகுழியில் 50 இற்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில், குறைந்தபட்சம் மூன்று சிறுவர்களுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி கலாநிதி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவர்களின் மண்டையோடுகள் பால் பற்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எலும்புகளும் இருப்பதாக, தொல்பொருள் அகழ்வாராச்சியாளர் ராஜ் சோமதேவாவும் கூறியிருந்தார்.

அதேவேளை, இந்த புதைகுழியில் சடலங்கள் முறைப்படியாக அடக்கம் செய்யப்படவில்லை என்பதையும் விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பெரும்பாலான சடலங்கள், ஒன்றின் மீது ஒன்று போடப்பட்டு- புதைக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி கலாநிதி சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த புதைகுழியில் உள்ள கடைசி எலும்பு எச்சம் வரை அகழ்வு செய்வதற்கு நிதி போதாது என்றும் இதனால் இந்த விசாரணைகள் நிறுத்தப்படக் கூடிய அச்சம் இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/07/21/news/31980

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளில் சிறுவர் போராளின்னு யுனிசெப்புக்கு கடிதம் எழுதின கூட்டம்.. எல்லாம். என்ன பண்ணுது..???! புலி அழிப்பு வியாபாரம் முடிஞ்ச திருப்தியில் கால் மேல் கால் போட்டிட்டு அடுத்த தேர்தல் எப்ப வருமுன்னு காத்திருக்கனம் போல. மக்களை ஏய்க்கிறதுக்கு. 

இந்த பெரும் மன்னார் புதைகுழி இப்ப எத்தினை நாளா கிண்டுப்படுகுது.. கிண்ட கிண்ட எலும்புக்கூடா வரகுது.. இதைப் பற்றி.. ஏதாவது ஒரு சர்வதேச நாடு.. அல்லது மனித உரிமைகள் அமைப்பு அக்கறை செய்திருக்கா.. இல்லை.

ஆனால்.. பயங்கரவாத அழிப்புன்னு அப்பாவி மக்களை கொன்று.. அந்த மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்க மட்டும்.. எல்லாரும் முற்பட்டிருக்கிறார்கள் என்பது.. தமிழர் நிலத்தில்.. அமெரிக்க.. சீன.. ஹிந்திய.. ரஷ்சிய.. சவுதி ஆதிக்க விரிவாக்கம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

திருமலை.. அமெரிக்க கடற்படை நிரந்தர பயிற்சித்தளமாக மாற்றப்பட்டிருப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.

இவர்கள் பேசும் மனித உரிமைகள்.. போர்க்குற்றங்கள் எல்லாம் சொந்த ஆதாயத்துக்கே அன்றி... உண்மையில் தமிழர்களுக்கு செய்த அநீதிக்கு.. நீதி வழங்குவது என்ற எந்த அடிப்படை நல்லெண்ணமும் கிடையாது. 

கேடுகெட்ட உலகம். ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகளில் சிறுவர் போராளின்னு யுனிசெப்புக்கு கடிதம் எழுதின கூட்டம்.. எல்லாம். என்ன பண்ணுது..???! புலி அழிப்பு வியாபாரம் முடிஞ்ச திருப்தியில் கால் மேல் கால் போட்டிட்டு அடுத்த தேர்தல் எப்ப வருமுன்னு காத்திருக்கனம் போல. மக்களை ஏய்க்கிறதுக்கு. 

இந்த பெரும் மன்னார் புதைகுழி இப்ப எத்தினை நாளா கிண்டுப்படுகுது.. கிண்ட கிண்ட எலும்புக்கூடா வரகுது.. இதைப் பற்றி.. ஏதாவது ஒரு சர்வதேச நாடு.. அல்லது மனித உரிமைகள் அமைப்பு அக்கறை செய்திருக்கா.. இல்லை.

ஆனால்.. பயங்கரவாத அழிப்புன்னு அப்பாவி மக்களை கொன்று.. அந்த மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்க மட்டும்.. எல்லாரும் முற்பட்டிருக்கிறார்கள் என்பது.. தமிழர் நிலத்தில்.. அமெரிக்க.. சீன.. ஹிந்திய.. ரஷ்சிய.. சவுதி ஆதிக்க விரிவாக்கம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

திருமலை.. அமெரிக்க கடற்படை நிரந்தர பயிற்சித்தளமாக மாற்றப்பட்டிருப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.

இவர்கள் பேசும் மனித உரிமைகள்.. போர்க்குற்றங்கள் எல்லாம் சொந்த ஆதாயத்துக்கே அன்றி... உண்மையில் தமிழர்களுக்கு செய்த அநீதிக்கு.. நீதி வழங்குவது என்ற எந்த அடிப்படை நல்லெண்ணமும் கிடையாது. 

கேடுகெட்ட உலகம். ? 

கதைத்து பிரயோசனம் இல்லை ....எல்லாம் சுயநல அரசியல்....மனிதநேயம் என்பது எல்லாம் சுத்தபம்மாத்து...ஐ.நா சபையே மூடுவிழா காணும் நாள் வெகு தொலைவில் இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.