Jump to content

''காலி மைதானத்தை இழக்க முடியாது ; பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகத்திற்குண்டு"


Recommended Posts

''காலி மைதானத்தை இழக்க முடியாது ; பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகத்திற்குண்டு"

 

 

உலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

galle-international-stadium.jpg

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பிரச்சினைக்கு காரணம் கிரிக்கெட் நிர்வாக சபையும் கடந்தகால அரசாங்கத்தின் குறைபாடுமே ஆகும்.  

காலி நகரத்தை உலக மரபுரிமைகள் நகரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை எமக்கு தெரிந்ததே. ஆனாலும் மறுபக்கத்தில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எம்மால் இழக்க முடியாது. இதனால் நமக்கு உலக மரபுரிமையையும் கிரிக்கெட் மைதானத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. 

தற்போது எமக்கு தெரியும் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் ஒருவர் இருப்பது பற்றி. ஆனால் எனக்குத் தெரியாது கிரிக்கட் நிர்வாக சபை இருக்கின்றதா என்று. ஆனாலும் இந்த பிரச்சினைக்கு விளையாட்டுத்துறை அமைச்சரும் கிரிக்கெட் நிர்வாகமும் முக்கிய முடிவை எடுக்கவேண்டும். காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இல்லாமலாக்க முடியாது.

 

இந்த காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பான பிரச்சினை இன்று உருவானதல்ல. நான் கிரிக்கெட் சபை தலைவராக இருந்த காலத்திலேயே இந்த பிரச்சினை இருந்துள்ளது. 

குறிப்பாக ஒருநாள் பகலிரவு போட்டியை நடத்துவதற்கு மைதானத்தில் பெரிய மின்விழக்குகளை பொருத்த தீர்மானிக்கப்பட்ட போது உலக மரபுரிமைகள் அமைப்பு அதனை செய்ய இடமளிக்கவில்லை. 

அதனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. இந்த மைதானம் இலங்கைக்கு மிகமுக்கியமான மைதானமாகும். காரணம் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் இலகுவாக வெற்றியை அடையக்கூடிய மைதானமாகும். எமது காலத்திலும் அப்படித்தான் இருந்தது. இன்று தென்னாபிரிக்காவை எதிர்த்து இலங்கை அணி வெற்றி பெற்றமை இந்த மைதானத்திலேயே. இதனால் நாம் காலி மைதானத்தை பாதுகாக்க சரியான முறையில் செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும்.

 

எனது பார்வையில் இன்று காலி மைதானம் எதிர்கொள்ளும் பிரச்சினையானது கடந்த அரசாங்கத்தினாலேயே. காரணம் உலக மரபுரிமையான பகுதியில் கட்டிடம் எழுப்பக்கூடாது என்று இருந்தது. ஆனால் என்ன நடந்தது கடந்த அரசாங்கத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அதை இடிக்க சொன்ன போது அந்த கட்டிடத்துக்கு 'மகிந்த ராஜபக்ஷ பெவிலியன்' என்ற பெயரை வைத்து கட்டிடத்தை இடிக்க விடாமல் தடுத்தனர். இங்கு தான் தவறு நடந்து.

பிரச்சினைக்கு காரணம் அநாவசியமாக கட்டப்பட்ட கட்டிடம் என்றால் பேச்சுவார்தையின் மூலம் ஒரு முடிவுக்கு வந்து இந்த கட்டிடத்தை எடுத்துவிட்டால்  இந்த மைதானத்தை எம்மால் பயன்படுத்த முடியும். 

தற்காலிக பெவிலியன் மூலம் மைதானத்தை எம்மால் தொடர்ந்து பயன்படுத்த முடியும். சரியான முடிவு எடுக்காமைக்கு  மறைமுக அழுத்தங்கள் உள்ளதா என்று எனக்குத் தெரியாது. காலி மற்றும் மொரட்டுவை மைதானங்கள் இலங்கை அணிக்கு சாதகமான மைதானங்களாகும். கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்த மைதானத்தை பாதுகாக்க எவரும் இன்று இல்லை என அவர் மேலம் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/36900

Link to comment
Share on other sites

"காலி மைதானம் இடம் மாறாது"

(நா.தினுஷா) 

காலி விளையாட்டு மைதானத்தை இடமாற்றம் செய்வதற்கு எந்தவித திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் யுனெஸ்கோவின் பாரம்பரிய தரப்பட்டியலிலிருந்து காலி விளையாட்ரங்கை நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

gale.jpg

யுனெஸ்கோ அமைப்பின் இலங்கை தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவித்த அவர், யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் எரினா இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது காலி கிரிக்கெட் மைதானத்துக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியான பார்வையாளர் அரங்க கூடாரம் குறித்து அவர் கருத்தினை வெளியிட்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/37197

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.