Jump to content

மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?


Recommended Posts

மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?
 

“இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.  

அவரது இந்தக் கருத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக, இலங்கை அரசாங்கம் நடத்தி வருகின்ற போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.  

ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைகளுக்குச் சென்றதை இந்தியா விரும்பவில்லை. அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. இத்தகைய நிலையில் தான், மத்தல விமான நிலையத்தின் மீது இந்தியாவின் கவனம் திரும்பியது.  

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போலவே, மத்தல விமான நிலையமும், முன்னைய அரசாங்கத்தால், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடனின் மூலம் கட்டப்பட்டது தான்.  

இதற்காகப் பெறப்பட்ட கடன், இலங்கையின் கழுத்தை நெரித்ததே தவிர, மத்தல விமான நிலையத்தின் மூலம் அரசாங்கத்தால் எந்த வருமானத்தையும் பெற முடியவில்லை.  

கடைசியாகப் ‘பிளை டுபாய்’ நிறுவனம் நடத்தி வந்த சேவையையும் நிறுத்தி விட்டது. எப்போதாவது, அவசர தரையிறக்கத்துக்காக வரும் விமானங்களுக்காகவும் எரிபொருள் நிரப்புவதற்காக வரும் நீண்டதூரம் பயணம் செய்யும் போக்குவரத்து விமானங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான விமானங்களுக்காகவும் தான் காத்திருக்க வேண்டியுள்ளது.  

இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, மத்தல விமான நிலையத்தின் கடனுக்காக செலுத்த வேண்டிய நிலையே இன்று வரை நீடிக்கிறது. அதனால் தான், இந்த விமான நிலையத்தின் பெரும் பங்கை இந்தியாவிடம் கொடுத்து, அந்த நிதியைக் கொண்டு கடனை அடைத்து விடக் காத்திருக்கிறது அரசாங்கம்.  

மத்தல விமான நிலையத்தைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது, தொடர்பாக, அரசாங்கத்திடம் சர்வதேச அளவில் ஆறு நிறுவனங்கள் தமது திட்டங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில் சீனாவும் உள்ளடக்கம். எனினும், சீனாவின் திட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்தது.  

image_d39a68d357.jpg

காரணம் அதுவல்ல, ஏற்கெனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்துள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தையும் சீனாவிடம் கொடுத்தால், இந்தியா எதிர்க்கும் என்பதை அறிந்தே, அரசாங்கம் சீனாவைத் தட்டிக் கழித்தது.  எப்படியாவது மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் தலையில் கட்டி விட்டு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சமப்படுத்தி விட வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் பிரதான இலக்கு.  

மத்தல விமான நிலையம் தொடர்பாக, இலங்கை அமைச்சர்கள், அதிகாரிகள் தான் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்களே தவிர, இந்தியத் தரப்பில் இருந்து எந்தக் கருத்துகளும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  

மத்தல விமான நிலையத்தைக் கூட்டாக இயக்குவது தொடர்பாகப் பேச்சுகளை நடாத்த, இந்திய விமான நிலைய அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர். அவர்களுடன் பேச்சுகள் நடாத்தப்படுகின்றன என்று முதலில் தகவல் வெளியிட்டவர் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தான்.  

இந்திய அதிகாரிகள் பேச்சுகளை முடித்துக் கொண்டு சென்ற பின்னர், 70 சதவீத பங்குகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் 40 ஆண்டுகால குத்தகை அடிப்படையில், இந்த உடன்பாடு செய்து கொள்ளப்படும் என்றும் இலங்கை அரச அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.  

இதற்குப் பின்னர், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விஜய் கோகலே கொழும்பு வந்து, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து விட்டுச் சென்றார்.  அவரும் கூட, மத்தல விமான நிலையம் உள்ளிட்ட இந்தியாவின் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்துப் பேசப்போகிறார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டனவே தவிர, அதுபற்றிய அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.  

இருந்தாலும், பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இயக்குவது தொடர்பான யோசனை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.  

“மத்தல விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய, பல்வேறு நாடுகளின் ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் இந்தியாவின் திட்டம் தான் சிறந்ததாக இருந்தது. நாம் அவர்களுடன் பேச்சு நடத்தினோம். மத்தல விமான நிலையம் 326 மில்லியன் டொலர் பெறுமதியானது என்று அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. இந்தியா முதலில் தயங்கினாலும், பேச்சுகளை அடுத்து, 70 சதவீதத்தை, தான் எடுத்துக் கொண்டு, 30 சதவீதப் பங்குகளை இலங்கையிடம் வழங்க இணங்கியுள்ளது. பெறுமதியில் 70 சதவீதப் பங்குகளுக்கு இணையான கொடுப்பனவை இந்தியா வழங்கும்” என்றும் அசோக அபேசிங்க கூறியிருந்தார்.  

அதேவேளை, மத்தல விமான நிலையத்துக்காக சீன வங்கியிடம், 190 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக அரசாங்கத்தால், 39 மில்லியன் டொலர் செலவிடப்பட்டதாகவும், அரசாங்கம் 20 மில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்ததாகவும் கூறிய பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, இதன் மூலம் இந்த விமான நிலையத்துக்காக ஏற்பட்ட செலவு, 252 மில்லியன் டொலர் எனவும் குறிப்பிட்டார்.  

எனினும், அசோக அபேசிங்க கூறுவது போல, 326 மில்லியன் டொலர் என்ற அரசாங்கத்தின் மதிப்பீட்டை இந்தியா ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லைப் போலவே தெரிகிறது. இந்தப் பெறுமதியை ஏற்றுக் கொண்டால், 228 மில்லியன் டொலரை இந்தியா செலுத்த வேண்டும்.  

இந்தத் திட்டம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஒன்றரை ஆண்டுகளாகப் பேச்சுகள் நடாத்தப்பட்டு வந்த போதிலும், சரியான இணக்கப்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.  

இப்போது மிகஅண்மையில் இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் இந்திய அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழு, இரண்டு நாட்கள் கொழும்பில் நடத்திய பேச்சுகளும் கூட, தீர்வு எதையும் எட்டுவதற்கு உதவவில்லை என்றே கூறப்படுகிறது.  

இதனால், மத்தல விமான நிலையத்தைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் நோக்கம் இந்தியாவுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.  

இதுபற்றி கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. 

அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விஜய கோகலே, கொழும்புக்கு வந்து முக்கிய பேச்சுகளை நடத்தி விட்டுச் சென்றிருந்தாலும், அதுபற்றி ஒரு சிறு செய்திக் குறிப்பும் கூட வெளியாகவில்லை.  

இந்திய அதிகாரிகள், இம்முறை மத்தல விமான நிலையம் தொடர்பான விரிவான வணிகத் திட்டத்துடன் தான் கொழும்புக்கு வந்தனர் என்றும், ஆனால் அதுபற்றி, சந்திப்புகளில் ஆராயப்படவில்லை என்றும் இன்னொரு தகவல் கூறுகிறது.  

இந்திய விமான நிலைய அதிகார சபை சமர்ப்பித்த திட்டத்தில், விமான நிலையம், 293 மில்லியன் டொலர் பெறுமதியானது என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் 70 சதவீதப் பங்குக்காக, 205 மில்லியன் டொலரைச் செலுத்தி, 40 ஆண்டு குத்தகைக்கு பெற்றுக் கொள்வது பற்றியே அதில் கூறப்பட்டிருந்தது.  
முன்னதாக இலங்கை அரசாங்கம், 70:30 சதவிகிதப் பங்கு உடன்பாட்டுக்கு இணங்க மறுத்தது. 60:40 சதவிகித அடிப்படையில் பங்கு பிரிக்கப்பட வேண்டும் என்று கோரியது.  ஆனால் இப்போது, 70:30 சதவிகித அடிப்படையில் பங்குகளைப் பிரிக்க இணக்கம் காணப்பட்டாலும், இந்த விடயத்தில் இந்தியா அவ்வளவாக ஆர்வத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.  

மத்தல விமான நிலையத்தை இலங்கையுடன் இணைந்து, கூட்டு முயற்சியாக இயக்குவதில் இந்தியா ஆர்வத்தைக் காட்டுகிறதா அல்லது, சீனா இதைப் பெற்றுக் கொண்டு விடாமல் தடுப்பதற்காக இழுத்தடித்து வருகிறதா என்பதே அந்தச் சந்தேகம்.  

சீனாவுக்கு முட்டுக்கட்டை போடுவது மாத்திரமே, இந்தியாவின் திட்டமாக இருந்தால், இப்போதைக்கு மத்தல விமான நிலைய உடன்பாடு சாத்தியமாகப் போவதில்லை.  அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் அளவுக்கு மத்தல விமான நிலையம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது என்பதும், இதை இந்தியப் பாதுகாப்பு நலன்களுக்குப் பயன்படுத்த முடியாது என்பதும், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.  

ஹம்பாந்தோட்டையை, சீனாவுக்கும், மத்தலவை இந்தியாவுக்கும் கொடுத்துச் சமப்படுத்தி விட்டோம் என்று நம்ப வைக்க ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.  

ஆனால், மத்தல விமான நிலைய விவகாரத்தில் இந்தியாவின் இறுக்கமான மௌனம், அதனை ஏற்க இந்தியா தயாராக இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மத்தள-விடயத்தில்-இழுத்தடிக்கிறதா-இந்தியா/91-219289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அதேவேளை, மத்தல விமான நிலையத்துக்காக சீன வங்கியிடம், 190 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக அரசாங்கத்தால், 39 மில்லியன் டொலர் செலவிடப்பட்டதாகவும், அரசாங்கம் 20 மில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்ததாகவும் கூறிய பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, இதன் மூலம் இந்த விமான நிலையத்துக்காக ஏற்பட்ட செலவு, 252 மில்லியன் டொலர் எனவும் குறிப்பிட்டார்.  

 

5 hours ago, நவீனன் said:

எனினும், அசோக அபேசிங்க கூறுவது போல, 326 மில்லியன் டொலர் என்ற அரசாங்கத்தின் மதிப்பீட்டை இந்தியா ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லைப் போலவே தெரிகிறது.

 

5 hours ago, நவீனன் said:

இந்திய விமான நிலைய அதிகார சபை சமர்ப்பித்த திட்டத்தில், விமான நிலையம், 293 மில்லியன் டொலர் பெறுமதியானது என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சகல கோளங்களிலும் கிந்தியவிற்கு பூட்டி சக்தியால் நிறுவப்பட்ட ஓர் விமான நிலையதின் பெறுமதி அந்த விமான நிலைய அபிவிருத்தி முதலீட்டிலும் ஏறத்தாழ 41 மில்லியன் டாலர் கூடியது என்று கிந்தியாவே எழுத்து வடிவில் ஒப்புக்கொள்கிறது.

யார் இவ்வாறு முதலீட்டில் பெருமளவு பகுதியை தாமாகவே கடனாக கொடுத்து இன்னுமோர் நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வருவார்கள்?

அந்த விமான நிலையம் அமையும் இடம் ஏனைய வசதிகள் கொண்டதா என்பதை சொறி சிங்கள லங்காவே தீர்மானித்து, மாதலையில் கட்டப்பட்டது.

சொறி சிங்கள லங்காவால் விமான நிலையத்தை இலாபகரமாக நடத்த முடியமால் இருபதத்திற்கு கரணம், சொறி சிங்கள லங்கா இடம் அத்தகைய அறிவோ, திறனோ அல்லது அவற்றை திரடக் கூடிய திராணியோ இல்லை என்பதே கரணம்.

சீனாவிடம் விமான நிலைலயம் பங்களிப்பாட்டால், தனது பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற நோக்கில் கிந்தியா இப்பொது இந்த விமான நிலையத்தை பங்கு கேட்கிறது. மேற்கு நாடுகளும் அதற்கு தூபம் போடுகின்றன,  ஏனெனில் இவர்களே வங்கம் என்று வந்து விட்டு பின்பு ஆயுத முனையிலும், உள்ளூரில் கலவரத்தை தூண்டியும் அந்தந்த சாம்ராசியங்களின் ஆட்சியை பிடித்த மன நிலை மேற்கு நாடுகளளிடம் மாறாமல் அப்படியே உள்ளது.

இந்த மேற்கு நாடுகள், தாம் முன்பு ஆயுதம் மூலமாக செய்ததை, IMF, World Bank, ADB மூலமாக செய்து 2ம் உலக யுத்தத்திற்கு பின்பு செய்து வந்தனர்.

சீனாவின் WIN-WIN, அதாவது அபிவிருத்தி பங்குதாரரில்  இருசாராரும் ஏறத்தாழ சம அளவில் நன்மை பயக்கும் அபிவிருத்தி மூலோபாயம்  தற்போது அதை அடியோடு மாற்றிவிட்டது. இதனால் மேற்கு நாடுகள் தாம் முன்பு வாலாட்டியது தடுக்கப்பட்டு, பல (ஆபிரிக்க) நாடுகளில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று விரட்டப்பட்ட சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு.

யதார்த்த ரீதியாக பார்த்தல், இதை சீனாவின் முதல் தெரிவிற்கு விடுவதே சரி. சீனா மறுத்தால், சொறி சிங்களம் வேறு பங்காளிகளை தேடலாம்.   

சிவசங்கர் மேனன் dud என்று வர்ணித்த இந்த விமான நிலையம், எப்படி கிந்தியவிற்கு இப்பொது எப்படி வருவாய் ஒப்பேறக்கூடிய ஓர் மூலதனமாக தெரிகிறது?    
       
கிந்தியா ஒன்றை சிந்திக்க வேண்டும்,  இந்த விமான நிலையத்தை மேற்றுகின் தூண்டுதலில் ஹிந்தியா கைவைக்குமானால், இது சீனப் புதைகுழியாக மாறுவதத்திற்கே நிறைய ஏதுவாய்க்கள் உண்டு.   

இதை பொருளாதார மற்றும் அபிவிருத்தி வாதமாக  அல்லது மாதிரியாக வைத்து, சீனா வடகிழக்கில் பல்வேறு வழிகளில் நிலம் மற்றும் நீர் துறை அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமப்பை சொறி சிங்களத்திடம் உரிமையுடன் வலியுறுத்தலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.