Jump to content

ராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர


Recommended Posts

ராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர

 

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) 

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ விற்றுவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக  பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

anura.jpg

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அவரே இங்கு வந்து விளக்கமளித்திருக்க  வேண்டும். ஆனால் தற்போதைய விவாதத்தின் போது அதற்கு செவிசாய்த்து அது தொடர்பாக பதிலளிக்காது ஊழல் மோசடிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் பொது பணத்தை நாசப்படுத்தியவர்கள் குழப்ப முயற்சித்துள்ளனர். 

பஷில் ராஜபக்‌ஷவின் மனைவியுடன் தொடர்புடைய சீ.ஐ.சீ.டி நிறுவனத்தை பற்றி கூற வேண்டும். அவர்களால் எச்.எஸ்.பீ.சி வங்கியில் அமெரிக்க டொலர் மற்றும் ரூபா அடிப்படையிலான கணக்குகளை பேணி வந்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு துரையடி திட்டம் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2012.05.21 ஆம் திகதி ஒரு இலட்சத்து 57ஆயிரம் டொலர் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அது  புஸ்பா ராஜபக்‌ஷ மன்றத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சீ.ஐ.சீ.டியின் 95 வீதம் சீன நிறுவனத்தினுடையது. இதன்படி 35 வருடங்களின் அந்த துறைமுக திட்டத்தை  அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் போது புஸ்பாவுக்கும் வழங்கப்பட்ட பணத்தை அரசாங்கமே மீள செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.  

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் கசோலைகள் மாற்றப்பட்டுள்ளன. சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர். இப்போது சில விடயங்களே வெளியாகியுள்ளன. மேலும் வெளியாகும். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை தேசப் பற்றாளர் என கதைக்க முடியாது.  தாய் நாடு என அவரால் கதைக்க முடியுமா? முன்னாள் ஜனாதிபதி என்றில்லாது பாராளுமன்ற உறுப்பினர் என கருதாது சாதாரண  பிரஜையாக கருதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏதேனும் நிறுவனத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றால் அது தொடர்பாக அவர் விளக்கமளிக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. என்ன காரணிக்காக வெளிவந்தது, எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா - சீனா வின் அரசியல் எமக்கு அவசியம் இல்லை, சர்வதேச ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை எமக்கு முக்கியம் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.  ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய  பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும். 

ஆனால் இவர்கள் இந்த விவாதத்தை தடுக்க எடுத்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயற்சிகள் வேடிக்கையாகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். என்னிடம் பல கேள்விகள் உள்ளன. 

மக்களின் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடித்து ஆட்சி செய்த அரசாங்கமே இதுவரை காலமாக இருந்து வந்துள்ளது. இதில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை கணக்கெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவர்கள்  தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருந்த போதே பல கோடி ரூபாய்களுக்கு கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட காசோலை மாற்றப்பட்டுள் தகவல்கள் கிடைத்துள்ளது.  எமது நாட்டில் சுயாதீனத்துவம் குறித்து பாரிய போராட்டம் உள்ளது. சிலர் வடக்குக்கு எதிரான தெற்கின் இனவாதம் தேசிய வாதம் என கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கும் ஊழலுக்கு எதிராக இந்த தேசிய வாதிகள் வாய்திறப்பதில்லை.  

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ  விற்றுவிட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்றுவிட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ் தரமான அரசியலில் ஈடுபட்டுவிட்டார்.  இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் ஒரு ஜனாதிபதியாகவோ, எதிர்கால தலைவராகவோ அல்லாது ஒரு சாதாரண குடிமகனாக பதில் கூற வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/36910

Link to comment
Share on other sites

பண நப்பாசையில் நாட்டின் கொள்கையை மஹிந்த ராஜபக் ஷ விற்றுவிட்டார்

CITY-PAGE-01-BLACKGMGPage1Image0010-da2d3e8cc6d3a30f7957b1a85d7ee76cc8310ecb.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சபையில் ஜே.வி.பி. தலைவர் கடும் சாடல் பண நப்பாசையில், அதிகார பேராசையில் எமது நாட்டின் கொள்கையை, எமது சுயாதீனத்தை மஹிந்த ராஜபக் ஷ விற்று விட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்று விட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ்த் தரமான அரசியலில் ஈடுபட்ட உண்மைகள் இன்று வெளியாகி வருகின்றன. ஆகவே முன்னாள் ஜனாதிபதியாகவோ, அடுத்த தலைவராகவோ 

 அல்லது இந்த நாட்டின் குடிமகனாக மஹிந்த ராஜபக் ஷ பதிலளிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்ன ணியின் தலைவர் அனுரகுமார திஸா நாயக தெரிவித்தார்.  

முன்னாள் ஜனாதிபதி

 மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்

ஊழல் என்பது இன்று எமது நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு காரணியாக மாற்றம் பெற்றுள்ளது. அரசியலில் பிரதான கட்சிகள் இடையில் சர்வ சாதாரண காரணியாக கருத்தில்கொள்ளப்பட்டு வருகின்றது. சாதாரண ஊழல்கள், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் செய்த ஊழலை பற்றியெல்லாம் பெரிய விடயமாக பேசுவதும் கோடிக்கணக்கில் ஊழல் செய்த அரச தலைவர்கள் மீதான ஊழல்களை கருத்தில் கொள்ளாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அரச மாளிகையில்

 இன்று மிகப்பெரிய ஊழல் மோசடிகளால் இடம்பெற்று வருகின்றன. பிணை முறி விவகாரம் தொடர்பாக கதைக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கூறாது கதைக்க முடியாது. அதேபோன்று வீடமைப்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக கதைக்கும் போது அப்போது அமைச்சராக இருந்த குறித்த அமைச்சரின் பெயரை கூறாது கதைக்க முடியாது. அதேபோன்று இன்று நடைபெறும் இந்த விவாதத்தில் மகிந்த ராஜபக்‌ஷவின் பெயரை குறிப்பிடாது கதைக்க முடியாது. ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி வேலைத்திட்ட ஊழலால் ராஜபக் ஷவின் பெயர் உச்சரிக்கப்படாது கடந்து செல்ல முடியாது.

தற்போது நாடு கடன் மற்றும் தரகு பணத்தை வழங்கி அடிமைப்படுத்த முடியுமென்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அன்று மத்தள விமான நிலையத்தை அமைக்கும் போது வருடாந்தம் 30,000 விமான சேவைகளை நடத்த முடியுமெனவும் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் வரை பொருட்கள் சேவைகளை நடத்த முடியுமெனவும் கூறப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆகியும் இன்னும் அது 100ஐயும் தாண்டவில்லை. பொய்களை கூறி ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் அனைத்துமே இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளன. அதேபோன்று அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சந்திரிக்கா அரசாங்கத்தில் யோசனை கொண்டு வரப்பட்ட போது அதனை சேவை வழங்கும் நிலையமாக அமைப்பது தொடர்பாகவே யோசனை இருந்தது. ஆனால் அது பொருட்கள் தொடர்பான துறைமுகமாக எப்படி மாறியது. இந்த வேலைத்திட்டம் எமது பொருளாதாரத்துடன் தொடர்புடையதா என பார்த்தால் அப்படியும் கிடையாது. இப்போது இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இலஞ்ச உடன்படிக்கைகள் அனைத்துமே அரச மாளிகளைளில் நடக்கின்றன என்பது உறுதியாகின்றது.

தற்போது இரண்டு தரப்பிலும் ஊழல்களில் சிக்கிக் கொண்டு ஒருவரை ஒருவரை பாதுகாத்துக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அமெரிக்க பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தியொன்றை அடிப்படையாக கொண்டு இந்த விவாதம் நடக்கின்றது. எவ்வாறாயினும் நாங்கள் அதனை அடிப்படையாக கொண்டு விவாதிக்கவில்லை. எம்மிடம் இருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த விவாதத்தில் தகவல்களை வெளியிடுகின்றோம். அதாவது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளமை தொடர்பாக அவரே இங்கு வந்து விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய விவாதத்தின் போது அதற்கு செவிசாய்த்து அது தொடர்பாக பதிலளிக்காது ஊழல் மோசடிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் பொது பணத்தை நாசப்படுத்தியவர்கள் குழப்ப முயற்சித்துள்ளனர்.

பஸில் ராஜபக்‌ஷவின் மனைவியுடன் தொடர்புடைய சீ.ஐ.சீ.டி நிறுவனத்தை பற்றி கூற வேண்டும். அவர்கள் எச்.எஸ்.பீ.சி வங்கியில் அமெரிக்க டொலர் மற்றும் ரூபா அடிப்படையிலான கணக்குகளை பேணி வந்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு துறையடி திட்டம் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2012 .05.21ஆம் திகதி ஒரு இலட்சத்து 57ஆயிரம் டொலர் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அது புஸ்பா ராஜபக்‌ஷ மன்றத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சீ.ஐ.சீ.டியின் 95 வீதம் சீன நிறுவனத்தினுடையது. இதன்படி 35 வருடங்களின் அந்த துறைமுக திட்டத்தை அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் போது புஸ்பாவுக்கும் வழங்கப்பட்ட பணத்தை அரசாங்கமே மீள செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் காசோலைகள் மாற்றப்பட்டுள்ளன. சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர். இப்போது சில விடயங்களே வெளியாகியுள்ளன. மேலும் வெளியாகும். எமது பொருளாதார சுயாதீனத்துவம் இல்லாது போயுள்ளது. தரகு பெற்று இவர்கள் இதனை பொருளாதார சுயாதீனத்துவத்தை இல்லாது செய்துவிட்டனர். இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதன் மூலம் இந்தியா இலங்கையுடன் கோபத்தை கொண்டிருந்த நிலையில் மத்தள விமான நிலையத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுக்கவும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இன்னும் தேசப் பற்றாளர் என கதைக்க முடியாது. தாய் நாடு என அவரால் கதைக்க முடியுமா?

 மஹிந்த ராஜபக் ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. என்ன காரணிக்காக வெளிவந்தது,எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா- சீனா வின் அரசியல் எமக்கு அவசியம் இல்லை, சர்வதேச ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது எமக்கு முக்கியம் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும். ஆனால் இவர்கள் இந்த விவாதத்தை தடுக்க எடுத்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தன. மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயற்சிகள் வேடிக்கையாகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்தன. மஹிந்த ராஜபக் ஷ இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். என்னிடம் பல கேள்விகள் உள்ளன.

மக்களின் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடித்து ஆட்சி செய்த அரசாங்கமே இதுவரை காலமாக இருந்து வந்துள்ளது. இதில் ராஜபக் ஷ அரசாங்கத்தின் ஊழல்களை கணக்கெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவர்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருந்த போதே பல கோடி ரூபாய்களுக்கு கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட காசோலை மாற்றப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. எமது நாட்டில் சுயாதீனத்துவம் குறித்து பாரிய போராட்டம் உள்ளது. சிலர் வடக்குக்கு எதிரான தெற்கின் இனவாதம் தேசிய வாதம் என கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கும் ஊழலுக்கு எதிராக இந்த தேசிய வாதிகள் வாய்திறப்பதில்லை. பண நப்பாசையில், அதிகார பேராசையின் எமது நாட்டின் கொள்கையை, எமது சுயாதீனத்தை மஹிந்த ராஜபக் ஷ விற்றுவிட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்றுவிட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ் தரமான அரசியலில் ஈடுபட்டுவிட்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் இந்த நாட்டின் குடிமகனாக பதில் கூற வேண்டும். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அல்ல,எதிர்கால தலைவர் என்ற ரீதியில் அல்ல, ஒரு சாதாரண குடிமகனாக அவர் இந்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

பதில் கூற வேண்டும். ஒரு இலங்கை பிரஜை என்ற வகையில் அவர் மீதான பாரிய ஊழல் குற்றத்துக்கு பதில் கூறியாக வேண்டும். எந்தவொரு தேசிய வாதிக்கும் இந்த ஊழலை மூடி மறைக்க முடியாது. ராஜபக் ஷவின் பெயரில் அரசியல் செய்யும், ராஜபக் ஷாவின் கைக்குள் செல்லமாக அரசியல் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்த ஊழலை மறைக்க முடியும். மஹிந்த ஆட்டி வைக்கும் கை பொம்மை அரசியல் வாதிகள் இன்று அவர் அணியாக செயற்பட்டு வருகின்றனர். ஆகவே உண்மைகளை மக்களுக்கு வெளிபடுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.