Jump to content

புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்: பிசிசிஐ அதிகாரி கொதிப்பு


Recommended Posts

புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்: பிசிசிஐ அதிகாரி கொதிப்பு

 

 

 
bhuvi

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் : கோப்புப்படம்

 முழு உடற்தகுதியில்லாத புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பெயர் சேர்க்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

   
 

புவனேஷ்வர் குமாருக்கு முழு உடற்தகுதியில்லை, முதுகுவலி இருப்பதால், அவருக்கு ஓய்வும், சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் இருந்தே புவனேஷ்வர் குமாருக்கு முதுகுவலி இருந்து வந்துள்ளது. அப்போதே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அதில் விளையாட வைக்கப்பட்டார்.

மேலும்,  ஒருநாள் தொடரில் முதலிரு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், 3-வது போட்டிக்கு புவனேஷ்வர் குமார் களமிறங்குவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுப் பந்துவீசினார். அந்த போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசவும் அவரால் முடியவில்லை, முதுகுவலி அதிகமாக இப்போது நாடு திரும்பும் நிலையில் உள்ளார்.

இந்நிலையில், முழு உடற்தகுதியில்லாத ஒருவீரரை எப்படி 3-வது ஒருநாள் போட்டியில் களமிறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. அணியின் உடற்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹத், பயிற்சியாளர் சங்கர் பாசு ஆகியோர் எப்படி புவனேஷ்வர் குமாரின் உடற்தகுதிக்குச் சான்று அளித்தார்கள் என்று விமர்சனமும் எழுந்தது.

3-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் விளையாடியதன் காரணமாக, அவருக்கு முதுகு வலி தீவிரமாகி இந்தியா திரும்ப உள்ளார்.

இது குறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் பிடிஐ சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:

''புவனேஷ்வர் குமார் உடற்தகுதியுடன் இருந்தாரா என என்னிடம் எதற்கு கேட்கிறீர்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் சென்று கேளுங்கள். புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அவர் முழு உடற்தகுதியில்லை என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். அதுமட்டுமல்லாமல், அடுத்துவரும் டெஸ்ட் தொடருக்கு புவனேஷ் முக்கிய வீரர் என்பதால், அதிகமான ஓய்வு கொடுங்கள் என்று கூறியபின்பும் களமிறக்கி இருக்கிறார்கள்.

buhwjpg

புவனேஷ்வர் குமார்

 

ஐபிஎல் போட்டிகளில் பார்த்தால், புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 17 போட்டிகளில் 5 போட்டிகளில் விளையாடி இருக்கமாட்டார். புவனேஷ்வர் குமாருக்கு அதிகமான பளு கொடுக்காதீர்கள், அடுத்து இந்திய அணிக்கு முக்கிய பந்துவீச்சாளர் என்று ஹைதராபாத் அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ சார்பில் கேட்டிருந்தோம். அதனால், ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

அதிலும் லேசாக புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக, இங்கிலாந்து தொடருக்கு அவரின் பணி தேவை என்பதால், ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு கூட அவரைத் தேர்வு செய்யாமல் ஓய்வு அளித்தோம். ஆனால், இங்கிலாந்தில் நாங்கள் எதிர்பார்த்தவாறு நடக்காமல் அனைத்தும் மாறிவிட்டது.

சில கேள்விகளுக்கு அணி நிர்வாகம் பதில் கூற வேண்டிய அவசியம் இருக்கிறது. 3-வது டி20 போட்டியிலும், முதல் இரு ஒருநாள் போட்டியிலும் கூட புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தால்கூட அவர் 100 சதவீதம் முழு உடற்தகுதி பெற்றிருக்கமாட்டார். அப்படி இருக்கும் போது எப்படி 3-வது ஒருநாள் போட்டியில் விளையாட புவனேஷ்வர் குமாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

bhwijpg
 

2-வது கேள்வி அணியின் உடற்தகுதி நிபுணர் பர்ஹத், புவனேஷ்வர் குமாரின் உடல்நிலையை ஆய்வு செய்து, 3-வது போட்டியில் விளையாடினால் காயம் அதிகமாகும் என்று அறிக்கை ஏதும் அளித்தாரா, அல்லது எச்சரிக்கை செய்தாரா இவற்றுக்குப் பதில் தேவை.

புவனேஷ்வர் குமார் நாடு திரும்பியதும் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவருக்குப் பயிற்சியும், உடற்தகுதி பரிசோதனைகளும் நடக்கும். அவரின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக்குழு ஆய்வு செய்யும்.''

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24459382.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.