Jump to content

மத்தள விமான நிலையம் ; மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை


Recommended Posts

மத்தள விமான நிலையம் ; மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை

 

 
 

(எம்.மனோசித்ரா)

"மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு  விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிப்படை தன்மை பேணப்பட வேண்டும். இது எமது நாட்டு அரசியல்வாதிகளினதும், அரச நிர்வாகிகளினதும் பொறுப்பாகும்." என இலங்கை மனித உரிமைகள் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

matatla_airport_news.jpg

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தேவைகளுக்கு ஏற்ப இவ்வாறான விடயங்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு இடமளிக்க முடியாது. இது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும். அவ்வாறு ஊழல் மோசடிகள் ஏற்படாதிருக்க வேண்டுமாயின் மத்தள விமான நிலையம் தொடர்பான ஒப்பந்ததில் வெளிப்படை தன்மை பேணப்பட வேண்டும். 

2013 மார்ச் மாதம் இவ் விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் 2013 ஆம் ஆண்டு 48 மில்லியன் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இவ் வருடத்தில் அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை 2,828 மில்லியன்களாகும். இதே போன்று 2014 ஆம் ஆண்டு 3, 235 மில்லியன் செலவிடப்பட்டிருந்தாலும் அவ் வருடத்தில் 136 மில்லியன் வருமானமே கிடைத்துள்ளது. 2015 இல் 72 மில்லியன், 2016 இல் 49 மில்லியன், 2017 இல் 78 மில்லியன் மற்றும் இவ்வருடம் மே மாதம் வரை 14 மில்லியன் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்படி குறித்த வருடங்களில் சுமார் 3, 898 மில்லியன் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு இலாபத்தை விடவும் அதிகமாக நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள இவ் விமான நிலையத்தை தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக பெறப்பட்ட கடன் மற்றும் வட்டி என்பவற்றை அரசாங்கம் எவ்வாறு மீளச் செலுத்தும் என்பதும், இந்தியாவுடனான ஒப்பந்தம் எவ்வாறானது என்பதும் அனைவருக்கும் தெளிவுபடுத்தபட வேண்டும் என்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/36870

Link to comment
Share on other sites

மத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இந்தியாவுடன் மத்தல விமான நிலையம் தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாது. என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.

nimal.jpg

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.

மத்தலவிமான நிலையத்தை பொறுப்பேற்கும்போது போது நட்டத்தில் இருந்தது. இதனை பொருளாதார ரீதியாக இலாபம் அடையும் நிலையமாக மாற்ற திட்டமிட்டேன். அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு யோசனை முன்வைக்க கோரினோம். 

குறித்த விடயத்தில் இந்தியா அரசாங்கம் ஆர்வம் செலுத்தியது. கூட்டு பங்காண்மையின் கீழ் விமான நிலையத்தை கட்டியெழுப்ப இந்திய விமான அதிகார சபை முன்வந்தது. ஆகையால் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளோம். 

மத்தலவிமான நிலையத்தை குத்தகைக்கு  வழங்கும் போது நாம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழியர் உரிமைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த கொடுக்கல் வாங்கலின் போது எம்மிடம் பல நிபந்ததனைகளும் உள்ளன. அதனை நாம் மாற்ற மாட்டோம். இதன்படி இலாபத்தில் 70 வீதத்தை இந்தியா கட்டாயம் வழங்கியே ஆக வேண்டும். 

அதில் தயவு காட்டமாட்டோம். மேலும் இது வணிக கொடுக்கல் வாங்கல் மாத்திரமேயாகும். எக்காரணம் கொண்டு யுத்த விமானங்கள் தரிப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. பாதுகாப்பில் எமது விமான படையினரே இருக்க வேண்டும். வெளியில் எவருக்கும் அதிகாரமில்லை. அனர்த்த நடவடிக்கைகளின் போது எமது குழுவினரே தலையீடுவர். ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்துவோம். இதுவே எமது நிபந்தனைகளாகும்.. 

கட்டுநாயக்கவின் இலாபத்தை மத்தலவிற்கு செலவிடுகின்றோம். கட்டுநாயக்க வருமானத்தை அதிகரித்துக்கொண்டோம். ஆகவே ஐந்து வருடத்தில் செயற்திறன் மிக்க விமான நிலையமாக மாற்ற வேண்டும் என காத்திரமாக இந்தியாவிடம் கோரியுள்ளோம். அதேபோன்று இதன் வணிக திட்டத்தை ஒப்படைக்குமாறு கோரியுள்ளோம்.  

அத்துடன் இந்த ஒப்பந்ததை கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவையை சட்டத்தை திருத்த வேண்டும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் கைச்சாத்திட முடியும் . இல்லையேல் முடியாது. எவ்வாறாயினும் ஒப்பந்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

http://www.virakesari.lk/article/36917

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.