Jump to content

யாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது!


Recommended Posts

யாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது!

 

 

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரையே, குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 48 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், கைதுசெய்யப்பட்டுள்ள ஆசிரியரை இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/யாழில்-மாணவிகள்-இருவர்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்கள் எந்த வேலையிலும் சேர முடியாது என்ற நிலை வரணும். மேலும் பாலியல் துஷ்பிரயோகங்கள் கடும் குற்றங்களாக இனங்காணப்பட்டு.. அதி உச்ச தண்டனைகள் வழங்கப்படுதல் அவசியம். இன்றேல்.. இக்குற்றங்களை கட்டுப்படுத்துவது சாதாரணமாக அமையாது. 

Link to comment
Share on other sites

பாலி­யல் குற்­றம் சாட்­டப்­பட்ட-ஆசி­ரி­ய­ருக்கு நீதிமன்று பிணை!!

 

 

பதின்ம வயது மாண­வி­கள் இரு­வரை பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கி­ னார் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட ஆசி­ரி­யர் நீதி­மன்­றால் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார்.

பாட­சா­லை­யின் அதி­ப­ரா­கக் கட­மை­யாற்­றி­ய­வர் மோச­டி­க­ளில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் பணி நீக்­கம் செய்­யப்­பட்­டார். அவ­ரது பணி நீக்­கத்­து­டன் இந்த ஆசி­ரி­ய­ரும் தொடர்­பு­பட்­டுள்­ளார் என்ற கார­ணத்­தைக் காட்­டியே இவர் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளார்.

சந்­தே­க­ந­ப­ரான ஆசி­ரி­யர் வன்­னிப் பகு­தி­யில் நீண்­ட­கா­லம் பணி­யாற்றி அங்­குள்ள மாண­வர்­க­ளின் கல்வி வளர்ச்­சிக்கு பங்­காற்­றி­ய­வர். இவர் ஒழுக்­க­மு­டை­ய­வர். நிர்­வாக ரீதி­யான பழி­வாங்­க­லுக்­குள்­ளான இவரை பிணை­யில் விடு­விக்­க­வேண்­டும் என்று சந்­தே­க­ந­ப­ரின் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி மன்­றில் விண்­ணப்பம் செய்­தார்.

 

வழக்கை தாக்­கல் செய்த யாழ்ப்­பாண சிறு­வர் பெண்­கள் பிரிவு பொலி­ஸா­ரும் சந்­தேக நப­ருக்­குப் பிணை வழங்­கு­வ­தற்கு ஆட்­சே­பனை தெரி­விக்­க­வில்லை.

இரு தரப்பு விண்­ணப்­பங்­க­ளை­யும் ஆராய்ந்த யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சின்­னத்­துரை சதீஸ்­த­ரன் சந்­தே­க­ந­பரை ஆள் பிணை­யில் விடு­வித்து உத்­த­ர­விட்­டார். யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யில் உள்ள பாட­சாலை ஒன்­றின் ஆசி­ரி­யர் ஒரு­வரே கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

தரம் 7 இல் கற்­கும் மாண­வி­கள் இரு­வ­ருக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­தார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

யாழ்ப்­பாண மாவட்ட சிறு­வர் பாது­காப்பு பிரி­வி­ன­ரால் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் பதிவு செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ர­ணை­களை மேற்­கொண்ட யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் ஆசி­ரி­ய­ரைக் கைது செய்­த­னர்.

ஆசி­ரி­யர் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நேற்று நீதி­மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டார். விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நீதி­மன்று சந்­தே­க­ந­ப­ரைப் பிணை­யில் செல்ல அனு­ம­தித்­தது.

http://newuthayan.com/story/09/பாலி­யல்-குற்­றம்-சாட்­டப்­பட்ட-ஆசி­ரி­ய­ருக்கு-நீதிமன்று-பிணை.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.