Jump to content

சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்


Recommended Posts

சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்

 

 

 

1-1-5-750x430.jpg

 
 

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் இலங்­கை­யில் தமி­ழ­ரின் மர­பு­ரிமை உட்­பட்ட சுய­நிர்­ணய உரி­மைக்­காகப் போரா­டிய இயக்­கங்­க­ளில் தனித்­து­வ­மா­ன­தொரு பேரி­யக்கமாகும். புலி­கள் இயக்­கம் ஆரம்­பித்த காலம் தொடக்­க­ம், இன்­று­வரை இலங்கைத் தமி­ழர்­கள் உரிமை, அர­சி­யல், சக­வாழ்வு, சமூ­கம் என்ற சகல சந்­தர்ப்­பங்­க­ளி­லும் அவர்­க­ளது பெயர், பேச்­சுக்குப் பேச்­சும், வரிக்கு வரி­யும் உச்­ச­ரிக்­கப்­ப­டா­மல் இல்லை.

ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­க­வும், வேண்­டப்­பட்ட விடு­த­லைக்­கா­க­வும் தம்மை விரித்­துக்­கொண்டு களம் புறப்­பட்­ட­வர்­க­ ளா­கவே அவர்­கள் மக்­கள்­முன் தெரிந்­த­னர். கால ஓட்­டம், புலி­கள் பக்­கத்­தில் கருத்­தா­ழம்­மிக்க, ஒரு பற்­றற்ற மாறு­தலை உரு­வாக்கி முக­ம­றியா மனி­தர்­கள் ஆக்கி இருக்­கின்­றது.

சீரு­டை­யும், சீரிய நன்­ன­டத்­தை­யும் கொண்டு சமூ­கத்­துள் உல­வி­ய­வர்­கள், 2009ஆம் ஆண்டு இறு­திப் போருக்­குப் பின்­னர் சிறை, புனர்­வாழ்வு, சமூ­கத்­து­டன் இணைப்பு என்ற மூன்று சம்­பி­ர­தா­ய­மற்ற சடங்­கு­க­ளுக்கு முகம் கொடுத்து, தாம் உயிர் கொடுக்­கத் தயா­ராக இருந்த சமூ­கத்­துக்­குள் நிரா­யு­த­பா­ணி­க­ளாக வரும்­போது முற்­றி­லும் மாறு­பட்ட மனி­தர்­க­ளாக வாழ்­வி­யலை எதிர்­கொள்­கின்­ற­னர்.

 

முத்­திரை குத்­தப்­பட்­ட­வர்­க­ளாக
நிலை நிறுத்­தப்­பட்­டுள்ள
முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

விரும்­பியோ, விரும்­பா­மலோ அவர்­கள் ஏற்­றுக்­கொண்ட பாத்­தி­ரத்­தி­லி­ருந்து விடு­பட முடி­யா­மல் முத்­திரை குத்­தப்­பட்ட மனி­தர்களாக நிலை­ நி­றுத்­தப்­பட்டுள்­ள­னர்.

பெரும்­பா­லான முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள் அங்­க­வீ­னர்­க­ளா­க­வும், போரில் தம் உட­லில் ஏற்­றுக்­கொண்ட விழுப்­புண் கார­ண­மாக, உடல் பல­மற்­ற­வர்­க­ளா­க­வும் நட­மா­டு­கின்­ற­னர். பெரும்­பா­லான முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள் சிறை வாசத்­தின்­பின் திடீ­ரென சாவடையும் உடல்­நி­லை­யி­லேயே காணப்­ப­டு­கின்­ற­னர். இது தொடர்­பான உள்­ளார்த்­தம் பொது­வா­ன­தா­கவே வைத்­துக்­கொள்­வோம். ஆனா­லும், சமூ­கம், வாழ்­வி­யல் என்ற கண்­ணோட்­டத்­தில் இவர்­க­ளது தளம், பொது­மக்­கள் வாழ்­வில் இருந்து சரி­வர இரண்­டா­கப் பிரிக்கப்­ப­டு­ கி­றது.

போருக்கு முன்­னர் மதிக்­கப்­பட்ட அவர்­கள் போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் அடங்கி ஒடுங்கி வாழ­வேண்டிய நிர்ப்பந்­தத்­திற்­குள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். ஒரு­சி­லர் தமது வாழ்­வி­ய­லை­யும், வாழ்க்­கைப் போக்­கை­யும் மாற்­றிக் கொண்டு, வௌிநா­டு­க­ளில் தஞ்­ச­ம­டைந்து வாழ்­கின்­ற­னர். பெரும்­பா­லா­ன­வர்­கள் புனர்­வாழ்­வுக்­குப் பின்­னர் வௌிநா­டு­க­ளுக்கு தப்­பிச்­செல்ல முடி­யாத இக்­கட்­டான சூழ­லில், வாழ்க்­கையை நகர்த்­து­கின்­றமை முற்­றி­லும் உண்­மை­யான விட­யம்.

பேச்­சுச் சுதந்­தி­ரம் அற்­ற­வர்­க­ளா­கிப்
போன­தாக உண­ரும்
முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

சமூ­கத்­துக்­குள் கல­க­லப்­பாக, ஒரு அங்­க­மாக இருந்த புலி உறுப்­பி­னர்­கள், சுய­மான பேச்­சுச் சுதந்­தி­ரமோ, நியா­யம் நீதி­களை எடுத்­து­ரைக்­கும் சுதந்­தி­ரமோ அற்­ற­வர்­க­ளா­கிப் போனார்­கள்.

தாம் உண்டு, தம்­பாடு உண்டு என வாழ­வேண்­டிய நிர்ப்­பந்­தம் சூழல் கார­ணி­யாக அவர்­களை முடக்கி வைத்­தி­ருப்­பது, அவர்­க­ளது தனிப்­பட்ட வாழ்­வி­ய­லி­லும், மன­த­ள­வி­லும் கடு­மை­யான தாக்­கத்­தைச் செலுத்­து­வதை உண­ர­மு­டி­கின்­றது.

மக்­க­ளோடு மக்­க­ளாக தங்­களை நிலை ­நி­றுத்­திக்­கொள்ள முடி­யாத ஒரு விசித்­தி­ர­மான பிரிவு நிலையை அவர்­கள் சந்­திக்­கின்­றார்­கள். கால ஓட்­டத்­தில் மாற்­றம் கண்­டு­வ­ரும் அர­சி­யல், சமூக சூழ் நிலை­களே இதற்­கான கார­ணம் என உண­ர­மு­டி­கி­றது.

பெரும்­பா­லும் அங்­க­வீ­ன­முற்ற போரா­ளி­க­ளின் நிலமை மிக­வும் கவ­லைக்­கு­ரி­ய­தா­கவே இருக்­கின்­றது. தமது வாழ்­வி­யல் போக்கை மாற்ற வலு இல்­லா­மை­யால், அவர்­கள் தமது வாழ்­நா­ளோடு போரா­டும் நிலமை பரி­தா­பத்­துக்கு உரி­ய­தாக ஆகி இருக்­கின்­றது.

சமூ­கத்­தில் இப்­போது தலை­ விரித்­தா­டும் சமூக ஊட­கங்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­வர்­கள், தமக்­கான கருத்­துச் சுதந்­தி­ரம் மூலம் ஓர­ளவு தமது பிரச்­சினை ­களை (பொரு­ளா­தா­ரம், மருத்­து­வம்) நண்­பர்­க­ளோடு பகிர்ந்து தமது வாழ்வை நகர்த்­து­கின்­ற­னர். ஆனால், இப்­ப­டி­யான சமூ­கத் தொடர்பு இல்­லாத முன்­னாள் புலி உறுப்­பி­னர்­க­ளின், அது­வும் உடல்­கா­யங்­க­ளு­டன் அங்­க­வீன­மாக இருப்­ப­வர்­க­ளின் நிலமை சொல்­லி­ மா­ளாதது.

இரு­த­லைக் கொள்ளி எறும்­பின் நிலை­யில்
ஒரு சில முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

குறிப்­பிட்ட ஒரு­சி­ல­ரின் நிலமை சொல்­லொ­ணாத் துய­ர­மா­னது. சமூ­கத்­துக்­குள் தாம் ஒரு முன்­னாள் புலி உறுப்­பி­னர் என்று சொல்­வ­தால் ஏற்­ப­டும் நன்­மை­கள், தீமை­கள் தொடர்­பில் அவர்­கள் இரு­த­லைக்­கொள்ளி எறும்­பா­கவே திண்­டா­டு­கின்­ற­னர்.

அரச, இரா­ணுவ பார்வை அவர்­க­ளில் இருந்து வில­கா­மல் கழு­குக்­கண்­கள் அவர்­களை மொய்த்­துப் பிடித்த வண்­ணம் உள்­ள­தும் உண்­மை­யா­னதே.
இந்த முன்­னாள் புலி உறுப்­பி­னர்­க­ளின் வாழ்­வி­யலை மேம்­ப­டுத்த பலர் முன்­வ­ரு­கின்றபோதும், அவர்­க­ளுக்­கான உள­வ­ளத்தைத் தர எவ­ரும் முன்­வ­ராமை கவ­லைக்­கு­ரி­யது. ஒரு­ம­னி­த­னால் மன ஆரோக்­கி­யத்தைப் பேண­மு­டி­யா­மல் போனால், உடல் நலி­வு­று­வது இயற்­கையே. நலி­வு­றும் உட­லையே தூக்கி நிறுத்­தும் வல்­லமை மன ஆற்­றுப்­ப­டுத்­த­லுக்­கும், மனத் தைரி­யத்­துக்­கும் உண்டு. இதைப் பொறுப்­பா­ன­வர்­கள் நன்­கு­ணர்ந்­து­கொள்ள வேண்­டும்.

பொறுப்­பு­டன் அவர்­க­ளது மனதை
அண்­மிக்­கும் செயற்­பா­டு­களே
தற்­போது அவ­ச।ி­ய­மா­னவை

வீர­மு­ழக்­கங்­க­ளும், வீர வணக்­கங்­க­ளும் அவர்­க­ளின் மன உணர்­வு­க­ளைத் தற்­போது பிரித்­துப்­போ­டும் நிலை­யில் இல்லை. கார­ணம், அவர்­கள் நோயி­னா­லும், விழுப்­புண்­ணா­ லும், வறு­மை­யா­லும் நலி­வுற்று இருக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு ஆக்­ரோ­ச­மான பேச்­சுக்­க­ளையோ, வீர வச­னங்­க­ளையோ கேட்­கும் மன­நிலை இல்லை. எனவே பொறுப்­பு­டன் அவர்­க­ளின் மனதை அண்­மிக்­கும் செயற்­பா­டு­களே தற்­போது தேவை­யா­னவை. தாம் அனா­த­ர­வாக்­கப்­பட்­டுள்­ளோம் என்ற உள்­ளு­ணர்வு அவர்­க­ளி­டம் இருப்­பதை நான் நேர­டி­யாக கண்டு, கேட்டு உணர்ந்­துள்­ளேன். ஆகை­யி­னால் அவர்­க­ளின் மன­நி­லை­யில், மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி உடல்­நி­லை­யைத் தேற்­றி­ட­நாம் முன்­வர வேண்­டும். ஒரு­சி­ல­ருக்­கா­னது என்­றில்­லா­மல், ஒட்­டு­மொத்­த­மாக அவர்­க­ளது உள நல­னில் அக்­கறை காட்ட வேண்­டிய தலை­யாய கடமை இன்­றைய எமது தமிழ்ச் சமூ­கத்­துக்கு உண்டு.

அண்­மை­யில் ஒரு முன்­னாள் புலி உறுப்­பி­னர் (திலீ­பன் என்ற பெயர் கொண்­ட­வர்) படுத்த படுக்­கை­யாக தன் உடல் உபா­தை­யோடு போரா­டும் விட­யம் வௌிக்­கொ­ண­ரப்­பட்­டது. யுத்­தம் முடி­வ­டைந்­தும் 9வரு­டங்­க­ளின் பின் இப்­படி ஒரு உயிர் வாழ்­வோடு போரா­டிக் கொண்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டமை துர­திஷ்­ட­வ­ச­மான விட­யமே. காலம் முந்­திய நிலை­யில் அவர் கண்­ட­றி­யப்­பட்டு இருந்­தால், அவ­ரது வாழ்க்கை நில­மையை கண்­டிப்­பாக மாற்றி அமைத்­தி­ருக்க முடி­யும். எனவே அவர்­கள் தொடர்­பில் பாரா­மு­க­மாக சமூ­கம் இருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. குறிப்­பிட்ட பல வரு­டங்­கள் அவர்­கள் உண­வுக்­கும் உடைக்­கும் தமது தலை­மை­யில் தங்கி வாழ்ந்­த­வர்­கள். சுய­மான பொரு­ளா­தா­ரம், வாழ்­வி­யல் என்­பது போராட்­டத்­துக்கு அடுத்த மாறு­பட்ட படி­நிலை. இதனை அவர்­கள் யாதார்த்­த­மாக உணர்­வது மிக­வும் கடி­ன­மா­னது. முற்­றி­லும் மாறு­பட்ட ஒரு வாழ்க்­கை­யைச் சந்­தித்­த­வர்­கள் சமூ­கத்­தின் தற்­போ­தைய மாற்­றத்­துள் நுழை­வது சவா­லான விட­யமே.

சமூக ஆர்­வ­லர்­க­ளும்
பொறுப்­புள்­ள­வர்­க­ளும்
முன்­னாள் போரா­ளி­கள் விட­யத்­தில்
கரி­சனை கொள்­ள­வேண்­டும்

இதனை சமூக ஆர்­வ­லர்­க­ளும் பொறுப்­புள்­ள­வர்­க­ளும் நன்கு உணர்ந்து அவர்­கள் தொடர்­பில் கண்­டிப்­பாக கரி।­­ச­னை­கொள்ள வேண்­டும். அவர்­கள் வாழ்­வி­யலை நுணுக்­க­மாக வழிப்­ப­டுத்த உறு­துணை புரி­ய­ வேண்­டும். ‘‘சமூ­கத்­துள் இணைப்பு’’ என்ற சொற்­ப­தமே, அவர்­களை பிரி­வி­னைப்­ப­டுத்­திய பின்பே சமூ­கத்­துக்­குள் நகர்த்தி இருக்­கின்­றது. இந்த நில­மையை மாற்றி அவர்­க­ளின் உள, உடல் நல­னில் கரி­சனை கொள்­ளல் மனித பொது நீதி­யாக ஆகி­யுள்­ளது.

தமது நிலமை தொடர்­பில் பலர் வௌிப்­ப­டை­யாக பேச­மு­டி­யா­மல் உள்­ள­மை­யும், இங்கு நோக்க வேண்­டிய விட­யம். அர­சி­யல் நகர்வு, சுதந்­தி­ரம் என்ற பக்­கம் பார்க்­கா­மல், சக சமூ­க­மாக அவர்­களை நோக்­கும்­போது, தனித்து அவர்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­கள் விசித்­தி­ர­மாக உள்­ளன. அவை, சமூக நிலை­யில் தாக்­கம் செலுத்­து­வதை அவர்­கள் உண­ரா­ம­லும் இல்லை. உதவி, வாழ்வு என்று அவர்­கள் ஏமாற்­றப்­பட்ட கதை­க­ளும் இல்­லா­மல் இல்லை. சமூ­கப் பொறுப்­பு­ணர்வு ஒன்று கண்­டிப்­பாக இவர்­கள் தொடர்­பில் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­தல் தற்­போது இன்­றி­ய­மை­யா­த­தாக ஆகி­யுள்­ளது.

http://newuthayan.com/story/09/சவால்களை-எதிர்நோக்கும்-முன்னாள்-விடுதலைப்புலி-உறுப்பினர்கள்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.