Jump to content

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது


Recommended Posts

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது

NAAM THAMIZHARபடத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR Image captionசீமான்

சேலம் மாவட்டத்தில் சேலம் - சென்னை எட்டுவழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தனசேகரன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நாம் தமிழார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யுனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஒன்பது பேரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் - சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணி முடிந்த நிலையில் இன்றைய தினம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் பாரப்பட்டி அருகே உள்ள ஊமாங்காடு பகுதியில் 8 வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து பேசினர்.

அப்போது அங்கு வந்த மல்லூர் போலீசார், அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்து பேசக்கூடாது என்று கூறி அவரை கைது செய்ய முற்பட்டனர்.

அப்போது அங்கிருந்த விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 11 பேரை கைதுசெய்து அழைத்து சென்றனர். மல்லூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எட்டு வழிச்சாலை

அதேபோல் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களை சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தித்து பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட 11 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிருக்கு மதிப்பு தரும் அரசு இல்லை என பொதுமக்களிடம் கூறிய சீமான் , தலைவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு லட்சம் மரங்கள் நட்டதாக அரசு சொன்னாலும் தாங்கள் எந்த மரத்தையும் பார்க்கவில்லை என்றார்.

ஆக்கிரமிப்பு செய்யப்படும் இரண்டரை ஏக்கர் நிலங்களில் குறைந்தது 70 மரங்கள் இருக்கும் என்று பொதுமக்கள் தங்கள் குறைகளை நம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தங்கள் தரப்பு நியாங்களை எடுத்துரைத்த வண்ணம் இருந்தனர். அப்போது நடைபெற்ற இக்கைது நடவடிக்கையை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எட்டு வழிச்சாலை

"தங்களின் குறைகளை சீமானிடம் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக அமர்ந்து கருத்துகளை பரிமாறிக்கொண்டு இருக்கும் போது , மக்களை தள்ளிவிட்டு காவல்துறையினர் சீமானை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது எவ்விதத்தில் நியாயம்," என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

தங்களை பாதுகாக்கும் பொருட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகள் முன்வராதபட்சத்தில், மக்களின் நலன் கருதி பேசுபவர்களை பேசும்போதே ஒவ்வொருமுறையும் சுற்றிவளைத்து கைது செய்தததாக மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். சமூக ஆர்வலர்கள், கட்சியின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்விதத்தில் நியாயம் கிடைக்கும், ஆளும் அரசு தங்கள் வாழ்க்கையை காப்பற்றி எங்களுக்கு நிலம் வழங்கும் என பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

https://www.bbc.com/tamil/india-44873770

Link to comment
Share on other sites

`போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!’ - சேலத்தில் கைது செய்யப்பட்ட சீமானுக்கு ஜாமீன்

 

சேலத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஜாமீன் வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்

சீமான்சேலம் டு சென்னை 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்து கேட்பு நடத்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய தொண்டர்கள் யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்ச்செல்வன், சிவக்குமார், தமிழரசன், மணி, ஆதிதீபக், அழகரசன் ஆகியோர் பாரப்பட்டி கூமாங்காடு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

 

 

அங்கு விரைந்து வந்த மல்லூர் காவல்துறையினர் சீமான் உட்பட 11 பேரை கைது செய்து மல்லூர் வெங்கடேஷ்வரா மண்டபத்தில் வைத்திருந்தார்கள். இரவு சீமான் உட்பட 11 பேர் மீது பொதுமக்களை திரட்டியது, பொது மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டது, அரசுக்கு எதிராக செயல்படுவது என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 2 பெண்களுக்கு தன் சொந்த ஜாமீனில் செல்ல அனுமதித்தார். மற்ற 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

 

 

இந்நிலையில் சீமானின் வழக்கறிஞர் சேலம் நீதிமன்றம் என் 6 மாஜிஸ்ட்ரேட் மோகன்ராம் முன்னிலையில் ஆஜராகி சீமானுக்கு தங்கதுரைவருகின்ற 22-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு அளித்தார். அதை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் மோகன்ராம் காவல்துறை விசாரணைக்கு அழைக்கும்போது சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஜாமீன் வழங்க மாலையில் உத்தரவிட்டார். அதையடுத்து, நாளை காலை சீமான்  ஜாமீனில் வெளியே வர இருக்கிறார். இதனால், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

இதுபற்றி வடக்குத் தொகுதி பொறுப்பாளர் தங்கதுரை, ''அண்ணன் சீமான் மீதும் எங்க கட்சி தோழர்கள் மீதும் மல்லூர் காவல்துறை பொய் வழக்கு போட்டிருக்கிறது. இந்த அடக்கு முறைக்கு நாங்கள் ஒரு கனமும் அஞ்ச மாட்டோம். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது. எங்களை அலைக்கழிப்பதற்காகவே வழக்குகள் போட்டிருக்கிறார்கள். நீதிபதி இதை விசாரித்து, எங்க அண்ணனுக்கு ஜாமீன் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலிருந்தும் அண்ணன் சீமான் விடுவிக்கப்படுவார்'' என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/131387-salem-court-grands-bail-to-seeman.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.