Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

கோலியுடன் வாக்குவாதம்; நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: ஆன்டர்ஸனுக்கு அபராதம்

 

 
son

விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நடுவரிடம் அப்பீல் செய்த ஆன்டர்சன்   -  படம் உதவி: ட்விட்டர்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடனும், நடுவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்ஸனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்தபோது, கேப்டன் விராட் கோலிக்கும், ஆன்டர்ஸனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

ஆன்டர்ஸன் வீசிய 29-வது ஓவரில் விராட் கோலி கால்காப்பில் வாங்கினார். அப்போது எல்பிடபிள்யு கேட்டு ஆன்டர்சன் நடுவரிடம் முறையிட்டார். ஆனால், அதற்கு நடுவர் தர்மசேனா அவுட் தரவில்லை. அந்த ஓவர் முடிந்து நடுவரிடம் தொப்பியை வாங்கிச் செல்லும் போது கேப்டன் விராட் கோலியிடம் ஆவேசமாக ஆன்டர்சன் வாக்குவாதம் செய்தார். இதைத் தடுத்த நடுவர் தர்மசேனாவிடமும் ஆத்திரத்துடன் கத்திவிட்டு சென்றார்.

anderjpg
 

ஆன்டர்சனின் நடவடிக்கை குறித்து போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டிடம் நடுவர் தர்மசேனா புகார் செய்தார். இந்தப் புகாரில் உண்மை குறித்து ஐசிசி எலைட் பேனல் விசாரணை செய்ததில் அதில் உண்மை இருப்பது தெரியவந்தது.அதேசமயம், தான் செய்த குற்றத்தையும் ஆன்டர்ஸன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சர்வதேச போட்டிகளில் நடுவரின் முடிவை மீறி வீரர்கள் வாக்குவாதம் செய்வது என்பது, ஐசிசி ஒழுக்கவிதிமுறைகளை வீரர்கள் மீறியதாகும்.

ஐசிசி புதிய விதிமுறைகளின்படி, ஆன்டர்சனுக்கு ஒரு மைனஸ் புள்ளியுடன் ஆட்டத்தொகையில் 15% அபராதமும் விதிக்கப்பட்டது.

https://tamil.thehindu.com/sports/article24908502.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

இறுதி இனிங்ஸில் சதமடித்தார் குக்

 

 
 

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அலைஸ்டர் குக்  தனது இறுதி இனிங்சில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.

ஓவலில் இடம்பெறும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்தின் இரண்டாவது இனிங்சில் குக் சற்று முன்னர் சதமடித்துள்ளார்.

இதன் மூலம் தனது முதல் டெஸ்டிலும் இறுதி டெஸ்டிலும் சதமடித்த வீரர் பட்டியலில் குக் இணைந்து கொண்டுள்ளார்.

பில்பொன்ஸ்போர்ட், டொன்பிரெட்மன்,கிரேய்க் சப்பல் முகமட் அசாருதீன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

குக் இந்தியாவில் தனது முதல் டெஸ்டில் சதம் பெற்றிருந்தார்.

மேலும் தனது இறுதிப்போட்டியின் முதல் இனிங்சில் அரைசதமும் இரண்டாவது இனிங்ஸில் சதமும் அடித்த வீரர் என்ற சாதனையையும்அவர்  நிகழ்த்தியுள்ளார்.

அலைஸ்டர் குக்கின் இறுதி இனிங்ஸில் அவர் சதம் பெறுவதை பார்ப்பதற்காக காத்திருந்த இரசிகர்கள் அவரிற்கு பலத்த கரகோசத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

cook_88.jpg

டுவிட்டரில் அவரிற்கு பாராட்டு மழை குவிந்தவண்ணமுள்ளது

http://www.virakesari.lk/article/40102

 

 

‘கோல்டன் ஆர்ம்’-சதநாயகர்கள் குக், ரூட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்ற ஹனுமா விஹாரி

 

 
hanuma%20vihari

ஜோ ரூட்டை வீழ்த்திய ஹனுமா விஹாரி. | ராய்ட்டர்ஸ்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்தியப் பந்து வீச்சை வறுத்தெடுத்த அலிஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் அறிமுக வீரர் ஹனுமா விஹாரி.

தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் என்று 404 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 

முதல் டெஸ்ட்டிலேயே கடும் நெருக்கடித் தருணத்தில் இறங்கி அரைசதம் அடித்து தன் தேர்வு குறித்து இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த ஹனுமா விஹாரியை முதல் இன்னிங்சில் கோலி சரியாகப் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் 3வது விக்கெட்டுக்காக இணைந்து 259 ரன்களைச் சேர்த்து இந்தியப் பந்து வீச்சை வறுத்து எடுத்த ஜோ ரூட், அலிஸ்டர் குக் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் ஹனுமா விஹாரி.

12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 125 ரன்களில் ஆடிவந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ரன் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு ஹனுமா விஹாரி வீசிய அவரது 8வது ஓவரின் முதல் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் ஆனால் பந்து பிட்சில் உள்ள ரஃபில் பட்டு நின்று வர சரியாக மட்டையில் சிக்காமல் டீப் மிட்விக்கெட்டில் பதிலி வீரர் பாண்டியாவிடம் கேட்ச் ஆனது.

இந்த ஷாட்டின் போது பேட்டிங் முனைக்கு வந்த சதநாயகன் அலிஸ்டர் குக், 147 ரன்களில் இருந்த போது அடுத்த பந்திலேயே ஹனுமா விஹாரியை கட் ஆட முயன்று எட்ஜ் செய்ய ரிஷப் பந்த் கையில் கேட்ச் ஆனது.

cook2jpg

குக் பிரியாவிடை. | ஏ.பி.

 

அலிஸ்டர் குக் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட்டில் ஆடும் அறிமுக வீரர் ஹனுமா விஹாரியிடம் ஆட்டமிழந்தது ஒரு நல்ல நகைமுரண். இந்திய வீரர்கள் அனைவரும் குழுமி நின்று கரகோஷம் செய்தனர், அனைவரும் அலிஸ்டர் குக்கிற்கு கைகொடுத்து வழியனுப்பினர். ஹனுமா விஹாரியின் பொற்கரம் ஹாட்ரிக் வாய்ப்பைக் கொடுத்தது, ஆனால் ஹாட்ரிக் தடுக்கப்பட்டது.

அதன் பிறகு பேர்ஸ்டோவை ஷமி வெளியேற்ற பட்லரை ஜடேஜா டக்கில் வெளியேற்ற தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் என்று 404 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24918236.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவிற்கு 464 ரன்கன் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

 

 

அ-அ+

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND

 
 
 
 
அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவிற்கு 464 ரன்கன் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 331 ரன்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்கை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 46 ரன்னுடனும், ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.

இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும், அலஸ்டைர் குக் 147 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.

201809102113315176_1_Joeroot-s212._L_styvpf.jpg

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை.

இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜடேஜா, விஹாரி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/10211331/1190438/ENGvIND-Alastair-Cook-joe-root-century-england-target.vpf

Day 4 - Session 3: India require another 406 runs with 7 wickets remaining
Link to comment
Share on other sites

கோலி கோல்டன் டக், புஜாராவும் 0-வில் அவுட்; மெக்ராவை சமன் செய்த ஆண்டர்சன்: தோல்வியைத் தவிர்க்க இந்தியா போராட்டம்

 

 
anderson

புஜாராவை வீட்டுக்கு அனுப்பிய மகிழ்ச்சியில் ஆண்டர்சன், இங்கிலாந்து. |ஏ.எப்.பி.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று அலிஸ்டர் குக் தனது பிரியாவிடை சதத்தை அடித்தார், இது தனது கனவு சதம் என்று கூறியுள்ளார். ரூட்டும் 2 கேட்ச்கள் விடப்பட்ட பிறகு சதம் எடுக்க ஸ்டோக்ஸ் ஒரு சிறு அதிரடி இன்னிங்ஸை ஆட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 423 என்று டிக்ளேர் செய்தது.

464 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய இந்திய அணி பொறுப்பற்ற முறையில் பேட் செய்து ஷிகர் தவண் (1), புஜாரா (0), கோலி (0) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 2/3 என்று படுமோசமானது. அதன் பிறகு கே.எல்.ராகுல் ஆட்டப்பாணியை மாற்றி அடித்து ஆடினார். இதுதான் சரியான அணுகுமுறை, அவர் 51 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் நிற்க இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.

 

ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகளை சமன் செய்துள்ளார்.

இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய போது அதுவரை நமக்கு ஸ்விங் ஆகாத பந்துகள் அவர்களுக்கு ஸ்விங் ஆகத் தொடங்கிவிட்டன. ஷிகர் தவணின் மிக மோசமான டெஸ்ட் தொடர் 1 ரன்னில் முடிவுக்கு வந்தது. பந்தை வந்த பிறகு ஆடும் ஷிகர் தவணின் முடிவில் இன்ஸ்விங்கருக்குக் குறித்த நேரத்தில் மட்டை இறங்குவதில்லை. இப்படித்தான் நேர் நேர் தேமா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

இதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் சிந்தனையின்றி ஸ்டம்புக்கு நேராக முன்காலை அரைகுறையுமாக கொண்டு வந்தார் மட்டை வரவில்லை. எல்பி ஆனார். நல்ல வேளை ரிவ்யூ செய்யலாமா என்று யோசித்து யோசனையைக் கைவிட்டார். ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மெக்ராவைச் சமன் செய்தார்.

kohlijpg

கோலி அவுட். பிராட் கொண்டாட்டம். | ராய்ட்டர்ஸ்.

 

இதற்குச் சரியாக 2 பந்துகள் சென்று ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 2வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி அது நேராகச் சென்றது ஸ்விங் இல்லை, பொதுவாக இந்தப் பந்துகளை ஒன்று கோலி ராஜகவர் டிரைவ் அடிப்பார், அல்லது ஆடாமல் விட்டு விடுவார். ஆனால் இங்கிலாந்தின் குக், ரூட் பேட் செய்து களத்தில் இந்தியாவை வறுத்து எடுத்ததினால் ஏமாற்றமோ, கோபமோ அடைந்த கோலி அந்த நினைவிலேயே கால்களை அரையும்குறையுமாக நகர்த்தி மட்டையை பந்தின் மீது தொங்கவிட்டார், எட்ஜ் ஆகி பேர்ஸ்டோ கையில் தஞ்சமடைய இங்கிலாந்துக்கு வெற்றி உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கியது. அதன் பிறகு ராகுல் தாக்குதலே சிறந்த தற்காப்பு என்று சில ஷாட்களை தூக்கி அடித்து 8 பவுண்டரிகளுடன் இந்தத் தொடரின் தனது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 46 ரன்களை 51 பந்துகளில் விளாசினார். ரஹானே தன் விக்கெட்டைப் பத்திரமாகக் காத்துக் கொண்டார். இந்தியா 58/3 என்று ஆட்ட முடிவில் உள்ளது.

நல்ல பிரகாசமாகத் தொடங்கிய தொடர் 4-1 என்ற தோல்வியில் முடிய வேண்டுமா?

எட்ஜ்பாஸ்டனில் 31 ரன்களில் தோல்வி, லார்ட்ஸில் இன்னிங்ஸ் தோல்வி, சவுத்தாம்டனில் 60 ரன்களில் தோல்வி, இடையில் டிரெண்ட் பிரிட்ஜில் ஒரு துல்லியமான, திட்டமிட்ட வெற்றி, கூட்டிக் கழித்துப் பார்த்தால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியும் இந்த டெஸ்ட் போட்டியும்தான் இங்கிலாந்து ஆதிக்கம் இருந்தது.

இந்நிலையில் பிரகாசமாகத் தொடங்கி ஏகப்பட்ட உறுதிமொழிகளின் சுவடுகளைக் காட்டிய இந்தத் தொடர் மோசமாக மீண்டும் 4-1 என்று முடிய வேண்டுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நேற்று இஷாந்த் சர்மா இடது முழங்கால் காயத்தினால் ஒரு ஓவர் போட்டு வெளியேறினர், இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றவர்கள் பந்து வீச்சில் கட்டுக்கோப்பு இல்லை. இங்கிலாந்து டிக்ளேர் செய்வது எப்போது என்று ஆடியது போல் தெரிந்தது. ரூட்டுக்கு 2 கேட்ச்கள் விடப்பட்டன. பிளாட் பிட்சில் பும்ராவின் ஷார்ட் பிட்ச் உத்தியை ரூட் எளிதில் கடந்தார், பிட்ச் மெதுவாகி விட்டது. ஜடேஜாவுக்கு பீல்டிங் வியூகம் நன்றாக வைக்கப்படவில்லை. லெக் திசையில் நிறைய இடைவெளிகள் இருந்ததால் குக், ரூட் அதைப் பயன்படுத்தி வறுத்து எடுத்தனர். ஜடேஜா பிளைட் செய்யாமல் ஷார்ட்டாகவும் நேர்நேர் தேமாவாகவும் வீசினார். சுத்த வேஸ்ட்.

ஹனுமா விஹாரியின் பந்துகள் ஓரளவுக்குத் திரும்பிய நிலையில் ஜடேஜா விரயமாக வீசினார். விஹாரி லைன் மற்றும் லெந்த்தினால் கடைசியில் சதநாயகர்களான ரூட், குக் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார். விஹாரி, ஜடேஜாவை வைத்தே போட்டிருக்க வேண்டும், ஆனால் கோலி தப்பும் தவறுமாக அப்போது போய் புதிய பந்தை எடுத்தார், இதனால் ஸ்டோக்ஸ், கரன் இடையே அனாவசியமாக 41 ரன்கள் விரைவுகதி கூட்டணி ஏற்பட்டது. கடைசியில் கையும் காலும் களைப்படைந்த இந்திய பவுலர்கள் இளைப்பாறுமார் ரூட் டிக்ளேர் செய்தார். இந்திய அணிக்கு இலக்கு 464.

மொயின் அலி அச்சுறுத்தல்:

இன்று இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மொயீன் அலியின் பந்து வீச்சுதான். கோலி அச்சுறுத்தலை ஸ்டூவர்ட் பிராட் முடித்து வைத்தார், இந்த டக் கோலியின் நினைவிலிருந்து அகல நீண்ட காலம் ஆகும். ஒரே ஆறுதல் இந்தத் தொடரில் ஆண்டர்சனிடம் விக்கெட்டைக் கொடுக்கவில்லை கோலி. அதனால் எந்தப் பயனும் இல்லை. எழுத்தாளர் அசோக மித்திரன் ‘பாவம் டல்பதடு’ என்ற தன் படைப்பில், “இருட்டில் தடுக்கி விழுந்தால் ஒரேயொரு பயன் தான் யாரும் பார்க்க மாட்டார்கள், ஆனால் அதனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்று எழுதியிருப்பார் அதுதான் கோலியின் நிலைமையும், ஆண்டர்சனிடம் விக்கெட் கொடுக்கவில்லையே ஆனால் அதனால் என்ன பயன்? என்பதே அந்த இருண்ட நகைச்சுவை.

தொடரை நம்பர் 1 என்று தொடங்கி அதற்கு எந்தவித குந்தகமும் ஏற்படவில்லை, ஆனால் இன்னமும் இந்திய அணியை நம்பர் 1 என்று கூறினால் அது நகைப்புக்குரியதுதான்.

வித்தியாசமான அணியாகத் தொடங்கி கடைசியில் ரவிசாஸ்திரி ஆடிய கால இந்திய அணிபோல் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி ஆடியது.

இங்கிலாந்தில் இந்திய அணியின் மறக்க வேண்டிய தொடர்களில் இந்தத் தொடரும் இணைந்து விட்டது.

இனி என்ன? அடுத்து மே.இ.தீவுகள் வருகிறது, அவர்களைப் போட்டு சாத்து சாத்தென்று சாத்தி ‘அப்யூஸ்’ தான். ஆசியக் கோப்பை வருகிறது. அதில் பாகிஸ்தான் என்ற அச்சுறுத்தல் உள்ளது. ஐசிசியின் எஃப்.டி.பியை தங்களுக்குச் சாதகமாக்கி தொடர்ந்து இந்தியாவிலேயே ஆடி, தொடர்ந்து இலங்கையுடனேயே ஆடி இல்லாத வெற்றுச் சாதனைகளை ஊடகங்களை வைத்துப் பேச வைத்து இப்போது உண்மையான திறமை அம்பலப்பட்டு நிற்பதைத்தான் பிசிசிஐ சாதித்துள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24922422.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ராகுல், பந்த் அபார 150 ரன் கூட்டணி: வெற்றி பெற 194 ரன்கள் தேவை; சாதிப்பார்களா?- இங்கிலாந்து உதறல்

 

 
rahul%20pant

ராகுல், பந்த் அபாரக் கூட்டணி, | கெட்டி இமேஜஸ்.

ஓவல் டெஸ்ட் போட்டியில் ராகுல், ரிஷப் பந்த் கூட்டணி மூலம் இந்திய அணிக்குப் புதிய நம்பிக்கைப் பிறந்துள்ளது. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடி வருகிறது.

கே.எல்.ராகுல் 19 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 140 ரன்களுடனும் ரிஷப் பந்த் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 104 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.

 

இருவரும் சேர்ந்து 150 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர். 39 ஓவர்களில் 194 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் உள்ளது.

இங்கிலாந்துக்கு லேசாக உதறல் எடுக்கத் தொடங்கியுள்ளது. புதிய பந்துக்கு இன்னும் 12 ஓவர்கள் இருப்பதால் இடைப்பட்ட ஓவர்களில் 45-50 ரன்களை எடுக்க முடிந்தால் இங்கிலாந்து அச்சம் இன்னும் அதிகரிக்கும்.

சாத்தியமில்லாததை நோக்கிய முயற்சியில் ராகுல், பந்த் சிறப்பாக ஆடி வருகின்றனர். ரிஷப் பந்த் பந்துகளை பளார் பளார் என்று சக்தி வாய்ந்த ஷாட்களாக ஆடி வருகிறார். இருவரும் சேர்ந்து 192 பந்துகளில் 153 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்தை தோல்வி அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

https://tamil.thehindu.com/sports/article24927695.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

Day 5 - Session 3: India require another 159 runs with 5 wickets remaining
Link to comment
Share on other sites

கடைசி டெஸ்டிலும் இந்தியா தோல்வி: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து

 
அ-அ+

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest

 
 
 
 
கடைசி டெஸ்டிலும் இந்தியா தோல்வி: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து
 
ஓவல்:
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 
 
5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.
 
சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
 
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/11220907/1190699/ENGvING-England-won-by-118-runs-and-takes-series.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குக், ராகுல், மற்றும் பந்தக்கு வாழ்த்துக்கள்.?

Link to comment
Share on other sites

பயம் காட்டிய ராகுல், ரிஷப் பந்த்: இங்கிலாந்து 4-1 வெற்றி; கிளென் மெக்ராவை முறியடித்தார் ஆண்டர்சன்

 

 
england%20team

தொடரை 4-1 என்று வென்ற இங்கிலாந்து அணி கோப்பையுடன்.

சாதனைகள் பல நிகழ்த்தப்பட்ட குக் பிரியாவிடை ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 4-1 என்று கைப்பற்றி, ஓய்வு பெற்ற அலிஸ்டர் குக்கிற்கு தொடர் வெற்றியைப் பரிசாக அளித்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 564 விக்கெட்டுகளுடன் கிளென் மெக்ரா சாதனையை முறியடித்து உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

   
 
cook%20andersonjpg

சாதனை நாயகர்கள் குக், ஆண்டர்சன். | கெட்டி இமேஜஸ்

 

கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத மகாவிரட்டலை முதலில் ராகுல், ரஹானே, பிறகு ராகுல் பந்த் மேற்கொண்டனர். தேநீர் இடைவேளையின் போது வெற்றியின் ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது.

ஆனால் ஆதில் ரஷீத் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு ஸ்பாட்டைப் பயன்படுத்தி ஒரு ஷேன் வார்ன் பந்தில் ராகுலை பவுல்டு செய்ய, அதே இடத்தில் இன்னொரு கூக்ளியை வீசி ரிஷப் பந்த்தின் ரத்த வேகத்தைச் சோதனை செய்து வீழ்த்த இந்த இரண்டு விக்கெட்டுகள் சம்பிரதாயங்களை விரைவுபடுத்தியது.

ஒருகட்டத்தில் 33 ஓவர்களில் 166 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது, ராகுல், ரிஷப் பந்த் இருவரும் சதமடித்து கிரீசில் இருந்தனர். கே.எல்.ராகுல் நினைத்திருப்பார் முதலிலிருந்தே பவுலர்களைப் பற்றிய கவலையில்லாமல் அலட்சிய புறக்கணிப்புடன் பேட் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று. அப்படித்தான் ஆடினார் ராகுல், அதுவும் சதம் அடிப்பதற்காக பென் ஸ்டோக்ஸை ஒரே ஓவரில் அடித்த ஷார்ட் ஆஃப் த மேட்ச் எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸ், பிறகு ஒரு அற்புத பவுண்டரி, கடைசியில் ஒரு டென்னிஸ் ஃபோர்ஹேண்ட் நேர் பவுண்டரி என்று சதத்தைப் பூர்த்தி செய்தார். சதம் அடித்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரு ஸ்டெப் இறங்கி மிட்விக்கெட்டில் தூக்கி அடித்த ஹைபிளிக் பிரமாதமான ஷாட் ஆகும். சச்சின் களமிறங்கியவுடனேயே இத்தகைய ஷாட்களை ஆடுவார்.

rahuljpg

தேநீர் இடைவேளையின் போது நம்பிக்கை நட்சத்திரங்களாய் ராகுல், பந்த். | கெட்டி இமேஜஸ்.

 

ஆனால் அவுட் ஆன பந்து ஒரு விதத்தில் வேஸ்ட்தான், இடது காலைத் தூக்கி லெக் ஸ்டம்புக்கு வெளியே நீட்டியிருந்தால் அந்தப் பந்து ஒருவேஸ்ட் பந்துதான் ஆதில் ரஷீத்தும் ஏதோ விக்கெட்டுகளைக் கைப்பற்ற லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசித் திருப்பவில்லை, ஒருவகையான எதிர்மறைப் பந்து வீச்சு, ரன் குறைப்பு நெகெட்டிவ் பவுலிங்கே. அதில் ராகுல் ஒரு தவறான ஷாட் ஆடப்போய் பவுல்டு ஆக அது பெரிய பந்து வீச்சாகப் பேசப்படுகிறது. அதுவும் இங்கிலாந்து வர்ணனையாளார்களுக்கு எப்போது மைக் கேட்டிங் ஷேன் வார்னிடம் ‘நூற்றாண்டின் சிறந்தப் பந்தில்’ ஆட்டமிழந்தாரோ அது அவர்களின் மனக்கற்பனைவெளியில் தங்கி விட்டது, அதனால் இங்கிலாந்தில் ஏதாவது பந்து திரும்பி விட்டாலே அது ஷேன் வார்னுடன் ஒப்பிடப்படுவது வழக்கம்.

ரிஷப் பந்த் 29 பந்து டக் அவுட்டிலிருந்து கிரிக்கெட்டைப் புரிந்து கொண்டிருப்பார், ரன்கள் எடுப்பதே பேட்ஸ்மென்கள் பணி என்பதைப் புரிந்து கொண்டார். டீப் மிட்விக்கெட்டில் ரஷீத்தை ஸ்டாண்ட்சுக்கு ரசிகர்கள் மத்தியில் சிக்சருக்குத் தூக்கி அவர் 117 பந்துகளில் அதிரடி சதம் கண்டார். 204 ரன்களை இருவரும் சேர்த்தனர். ஒருமுறை நேதன் ஆஸ்ட்ல் நியூஸிலாந்தில் இது போன்ற பெரிய இலக்கை தனது 152 பந்து இரட்டைச் சதம் மூலம் அச்சுறுத்திய நினைவு வந்தது, ஒன்று ராகுலோ, அல்லது ரிஷப் பந்த்தோ அது போன்ற ஒரு தாக்குதல் ஆட்டம் ஆடுவார்களோ என்ற நப்பாசை ஏற்பட்டது உண்மைதான்.

கூட்டாளியை உடைத்தவுடன் ரிஷப் பந்த் அதுவரை நன்றாகக் கணித்து ஆடியவர் கூக்ளியை சரிவரக் கணிக்காமல் தூக்கி அடிக்க லாங் ஆஃபில் மொயின் அலியிடம் கேட்ச் ஆனது. ஷார்ட் பிட்ச் உத்தி இங்கிலாந்துக்குக் கை கொடுக்கவில்லை. 146 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 டவரிங் சிக்சர்களுடன் 114 ரன்களில் ஆட்டமிழந்த போது மிகவும் வெறுப்படைந்தும், ஏமாற்றத்திலும் வெளியேறினார். இஷாந்த் சர்மா அடில் ரஷீத் ரஃபில் பிட்ச் செய்த பந்தை ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து தைரியம் காட்டினார். 24 பந்துகள் சுற்றிலும் குடை போல் அமைக்கப்பட்ட களவியூகத்துக்கிடையே தைரியம் காட்டினார். கடைசியில் சாம் கரன் பந்து ஒன்று எட்ஜைத் தட்டிச் சென்றது.

முதல் இன்னிங்ஸ் நாயகன் ஜடேஜாவின் மட்டை விளிம்பை சாம் கரன் பந்து முத்தமிட்டு பேர்ஸ்டோ கையில் தஞ்சமடைய, ஆண்டர்சனின் மெக்ரா சாதனை உடைப்புக்கு அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் மொகமது ஷமிக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீசி குச்சியைப் பெயர்க்க, கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகளைக் கடந்து 564 விக்கெட்டுகளுடன் உலகின் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்குச் சொந்தக் காரரானார் ஆண்டர்சன், இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராகுல், பந்த் 121/5 என்ற நிலையில் இணைந்தனர், ஹனுமா விஹாரிக்கு பேய் பவுன்சரை ஸ்டோக்ஸ் வீச எட்ஜ் ஆகி வெளியேறினார். அதன் பிறகு ராகுல், பந்த் சேர்ந்தனர். பிட்ச் மந்தமாக இருந்ததால் ராகுல் வேகப்பந்து வீச்சாளார்களையும் தூக்கித் தூக்கி அடிக்க முடிந்தது. ரிஷப் பந்த் புல் ஷாட்களை கட் ஷாட்களை அபாரமாகப் பயன்படுத்தினார். இங்கிலாந்தில் சதம்டித்த முதல் இந்திய விக்கெட் கீப்பரானார் ரிஷப் பந்த். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல், ரிஷப் பந்த் நிறைய ரன்களைக் குவித்தனர், நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்துக்கு உதறலைக் கொடுத்தனர். இந்தியா 2வது இன்னிங்ஸில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது என்பது தொலைதூர நினைவானது ரிஷப் பந்த், ராகுல் கூட்டணியால்தான். விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி இந்தியப்பக்கம்தான்.

என்னதான் நம்பிக்கை அளித்தாலும் லார்ட்ஸ் டெஸ்ட்டைத் தவிர மற்ற டெஸ்ட் போட்டிகளில் சவால் அளித்தோம் என்றாலும் கடைசியில் இன்னொரு அயல்நாட்டுட் தொடரை 4-1 என்று இந்தியா தோற்றதுதான் நடந்துள்ளது. கோலி கேட்பது போல் எத்தனை நாளைக்குத்தான் நாம் ‘சவால் அளிக்கிறோம்’ ‘முயற்சி செய்தோம்’ என்று கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்? என்றைக்கு வெற்றியுடன் திரும்பப் போகிறோம்?

ஆட்ட நாயகன் அலிஸ்டர் குக், தொடர் நாயகர்கள் சாம் கரன், விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24932163.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து அபாரமாக ஆடிவிடவில்லை; பல தருணங்களில் நாம்தான் சாதகங்களை அவர்களுக்குத் தாரை வார்த்தோம்: விராட் கோலி பேட்டி

 

 
virat%20kohlijpg

படம். | ராய்ட்டர்ஸ்.

இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற வாய்ப்பிருந்த நிலையிலெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்திய அணி வாய்ப்பை இங்கிலாந்துக்கு தாரை வார்த்துக் கொடுத்தது என்று அனைவரும் நினைப்பதையே விராட் கோலியும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான நேற்று ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரது இரட்டைச் சதக் கூட்டணி இங்கிலாந்துக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியது, இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கையை அளித்தது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

 
 

எட்ஜ்பாஸ்டனில் 194 ரன்கள் இலக்கை எதிர்த்து 31 ரன்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, சவுத்தாம்டனில் 60 ரன்களில் வெற்றியைப் பறிகொடுத்தது, ஓவலில் போராடி வெற்றி வெளிச்சம் கண்களில் தெரியும் போது கைவிட்டது ஆகியவை இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக அமைந்தது.

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி அனுகூலமான நிலையை பயன்படுத்தி நெருக்கி கில்லர் இன்ஸ்டிங்க்டுடன் ஆடாமல் இங்கிலாந்துக்குத் தாரை வார்த்தது, இங்கிலாந்தின் கீழ் வரிசை பேட்டிங், வோக்ஸ், ஸ்டோக்ஸ், சாம் கரன், பிராட், பட்லர் என்று முக்கியக் கட்டங்களில் போட்டியை இந்திய அணி கைவிட்டது.

இது பற்றி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இரு அணிகளுக்குமே வெற்றி என்பது தொடரில் சாத்தியமாகவே இருந்த சூழல்கள் அதிகம்.

இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும், இதைவிடவும் நாம் அங்கீகரிக்க வேண்டியது போட்டியில் எங்களுக்குச் சாதகமான நிலைமைகள் இருந்த போது அதை எப்படி மேலும் ஸ்திரப்படுத்துவது என்பது முக்கியம். அதாவது சரிவு நிலையிலிருந்து எதிரணியினர் மீண்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தொடரில் பார்த்தால் அடிக்கடி நாங்கள்தான் எங்கள் கைவசம் இருந்த போட்டியை இங்கிலாந்துக்குச் சாதகமாக தாரை வார்த்தோமே தவிர அவர்கள் ஏதோ பிரில்லியண்டாக விளையாடி சூழ்நிலையைத் தங்கள் பக்கம் வென்றனர் என்று கூற முடியாது. சாம் கரன் இந்தத் தொடரில் தனிச்சிறப்பாக ஆடினார் என்பதை நான் அறிவேன். அவரைத் தவிர அந்த இடத்தில் அந்தச் சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்டிங்கில் அபாரமாகத் திகழ்ந்தது என்று நான் கூற மாட்டேன். எங்களால் அவர்கள் மீது அழுத்தத்தை நீண்ட நேரத்துக்குத் தக்க வைக்க முடியவில்லை.

நான் ஏற்கெனவே கூறியது போல் தொடரை நன்றாகத் தொடங்க வேண்டும் முதல் டெஸ்ட் போட்டியை ஏதோ பயிற்சிப் போட்டிபோல் தொடங்குவது கூடாது. முதல் டெஸ்ட் மிக மிக முக்கியம். நாம் நம் சரியான மனநிலையில் இருக்கிறோம் என்பதையும் அனைத்தையும் சரியாகச் செய்து முதலில் வெற்றி பெறுவோம் என்பதையும் உறுதி செய்வது அவசியம்” என்றார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24932642.ece

Link to comment
Share on other sites

தோனி உட்பட எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத தனிச்சிறப்பு: ரிஷப் பந்த் சாதனை

 

 
pantjpg

ரிஷப் பந்த். | கெட்டி இமேஜஸ்.

ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது அனைத்து அதிரடி மற்றும் நிதானத் திறமைகளைக் காட்டி ஆடிய ரிஷப் பந்த் 117 பந்துகளில் சதம் அடித்தார், அதுவும் பம்மிக்கொண்டிருக்காமல் அடில் ரஷீத்தை தூக்கி ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடித்து ராஜா போல் சதம் கண்டார்.

இங்கிலாந்தை இவரும் ராகுலும் சேர்ந்து 204ரன்கள் கூட்டணி  அமைத்து உதறலெடுக்க வைத்தனர், ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்க இங்கிலாந்து ஸ்லிப் இல்லாமல் வீச நேரிட்டது. அடில் ரஷீத்தை சிக்சர்களாக அவர் வெளுத்தாலும் பென் ஸ்டோக்ஸின் ஷார்ட் பிட்ச் உத்திக்கும் தயாராகவே இருந்து தைரியம் காட்டினார்.

 

கடைசியில் அடில் ரஷீத்தை சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் டீப்பில் கேட்ச் ஆனது இந்திய அணியின் ட்ரா வாய்ப்பை பறித்தது.

இந்நிலையில் நேற்றைய ஓவல் சதத்தின் மூலம் ஒரு தனிச்சிறப்பான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பரூக் இஞ்ஜினியர் முதல் தோனி ஈறாக கிர்மானி, கிரன் மோர் என்று எந்த இந்திய விக்கெட் கீப்பரும் செய்யாத ஒரு சாதனையை தன் சதத்தின் மூலம் செய்துள்ளார் ரிஷப் பந்த்.

இங்கிலாந்தில் டெஸட் கிரிக்கெட்டில் சதம் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் என்ற சாதனையே அது.

இதனைப் பாராட்டி ஐசிசி அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், “முதல் டெஸ்ட் சதத்தை அடித்ததற்கு வாழ்த்துக்கள் பந்த், மிக ஸ்டைலாக சிக்சரில் சதம்” என்று பாராட்டியதோடு, “இங்கிலாந்தில் சதம் எடுக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர்” என்று ரிஷப் பந்த் சாதனையை அங்கீகரித்துள்ளது.

ஓவலில் 4வது இன்னிங்சில் சதமடித்த இந்திய தொடக்க வீரர்களில் சுனில் கவாஸ்கருக்குப் பிறகு ராகுல் இணைந்துள்ளார், 1979 தொடரில் இதே ஓவைலில் சுனில் கவாஸ்கர் 438 ரன்கள் இலக்கை விரட்டும்போது 221 ரன்கள் விளாசியதை யாரால் மறக்கமுடியும். இதே போட்டியில் 213 ரன்கள் தொடக்கக் கூட்டணியை கவாஸ்கருடன் சேர்ந்து அமைத்த சேத்தன் சவுகான் 80 ரன்கள் எடுத்தார்.

https://tamil.thehindu.com/sports/article24932917.ece

Link to comment
Share on other sites

என்று தணியும் நம் கோலியின் காட்டம்? - மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறாரா?


 

 

kohli-strikes-again

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி காட்டமாக பதில் சொன்னது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் என இரண்டையும் அடுத்தடுத்து இழந்துள்ளது. ஓவலில் நடந்த தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை விராட் கோலி சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு காட்டாமாக பதிலளித்தார் கோலி.

பத்திரிகையாளர்: விராட், உங்கள் அணி தொடர் முழுவதும் போட்டி போட்டு விளையாடியது. ஆனால் கடந்த 15 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி என்று சொல்வதெல்லாம் உங்கள் மீது கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதா? நீங்கள் அந்த பட்டத்தை நம்புகிறீர்களா?

கோலி: நாங்கள் சிறந்த அணி என்பதை நம்பவேண்டும். அதிலென்ன இருக்கிறது?

பத்திரிகையாளர்: ஆனால் கடந்த 15 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி இதுவா?

கோலி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிகையாளர்: என்னால் உறுதியாக அப்படி சொல்ல முடியாது

கோலி: உங்களால் சொல்ல முடியாது என்றால் அது உங்கள் கருத்து. நன்றி. 

இப்படி சட்டென முகத்தில் அடிப்பது போல பதிலை சொல்லி முடித்த கோலி வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு அடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற போதும், பத்திரிகையாளர் சந்திப்பில் கோலி காட்டமாகவே நடந்து கொண்டார்.

தற்போது மீண்டும் கோலியின் இந்த காட்டமான பதில் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கோலியின் ஆணவத்தையே இது காட்டுகிறது, அவர் திருந்தவே மாட்டார் என்கின்ற ரீதியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரே வேதனையுடன் இந்த காணொலிப் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

https://www.kamadenu.in/news/sports/5897-kohli-strikes-again-3.html

 

Link to comment
Share on other sites

வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைக்க வேண்டும்: கேப்டன் கோலிக்கு ‘தாதா’ அட்வைஸ்

 

 
ganguly

கங்குலி, கோலி. | படம்: ஏ.எஃப்.பி.

இங்கிலாந்து தொடரில் கடைசியாக ராகுல், ரிஷப் பந்த் முதுகெலும்புடன் தைரியமாக அதிரடி ஆட்டம் ஆடி இங்கிலாந்தை அச்சுறுத்தி ஆடியதால் தொடரை 4-1 என்று இழந்தாலும் ரசிகர்ளுக்கு ஆறுதல் கிடைத்தது.

இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்சி அணுகுமுறையில் பல குறைகள் தெரிய ஆரம்பித்துள்ளதால் பலரும் அவருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

 

வீரர்களை நடத்துவதில் வேலை வாங்குவதில் நிபுணரான முன்னாள் கேப்டன் தாதா கங்குலி, விராட் கோலிக்கு தற்போது ஆலோசனை வழங்கியதாவது:

“போஸ்ட் மார்ட்டம் செய்வதை விட, திறமைகளை அங்கீகரிப்பதே இப்போது முக்கியம். புஜாரா, ரஹானே, ராகுல் இந்தத் தொடரில் ஆடியது முன்னை விட 10 மடங்கு மேம்பட்ட ஆட்டமாகும்.

கோலி வீரர்களிடமிருந்து சிறப்பான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டும். இது கேப்டனின் பொறுப்பு.

ஒரு கேப்டனாகப்பட்டவர் வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைத்து தனக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருமாறு பேச வேண்டும் ஆட்டத்திறன் தானாகவே மேம்படும்.” என்றார் கங்குலி.

https://tamil.thehindu.com/sports/article24941177.ece

 

 

வாய்ப்பேச்சு ரவி சாஸ்திரியும் வாங்கிக்கட்டிக் கொண்டதும்

 
 
SHASTRI

படம். | ராய்ட்டர்ஸ்.

118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஓவல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்த இந்திய அணியை வானாளவ புகழ்ந்தார். அதற்குச் சரியான பதிலடிகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

தென் ஆப்பிரிக்கா முதல் இங்கிலாந்து வரை கேப்டன் கோலி செய்தவற்கெல்லாம் ஆதரவு தெரிவித்து கேள்விக்குரிய அணித்தேர்வின் போது கூட எதுவும் சொல்லாமல் கிட்டத்தட்ட ‘ஜால்ரா’ அடித்து வரும் ரவிசாஸ்திரி, தென் ஆப்பிரிக்கா தோல்வி, தற்போது இங்கிலாந்து தோல்வி, வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் அதன் பிறகு நடக்கும் உலகக்கோப்பை என்று கடும் நெருக்கடிகளை சந்திக்கிறார்.

 

கடந்த 15-20 ஆண்டுகளில் இந்த இந்திய அணியே சிறந்தது என்றும் அயல்நாடுகளில் இந்த அணியே வெற்றி பெறுகிறது என்றும் மற்ற அணிகளெல்லாம் ஏதோ ‘ஓபி’ அணிகள் எனும் தொனியில் பேசி முன்னாள், இந்நாள் வீரர்களிடம் வகையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

கிரிக் இன்போ தலைமை எடிட்டர் சம்பித் பால் தன் ட்விட்டரில் ரவிசாஸ்திரியை விமர்சிக்கும் போது, “தன்னம்பிக்கை ஒரு அருமையான குணம்தான். ஆனால் சுயவிளம்பரம் எனும் நுரைக்குமிழி எப்போதும் சுய-தோல்வியில்தான் முடியும்” என்று சாடியுள்ளார்.

ஹர்ஷா போக்ளே, “இப்போது இரண்டு அயல்நாட்டுத் தொடர்களில் தொடர்ச்சியான தோல்விகள்” என்று கூறியுள்ளார்.

இந்தியா இலங்கையில் 2 தொடர்களையும் மே.இ.தீவுகளில் ஒரு தொடரையும் வென்றது. ஆனால் 15-20 வருடங்களில் இந்த அணிதான் வெற்றி அணி என்று ரவிசாஸ்திரி இறுமாப்புடன் கூறியது சில முன்னாள் வீரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

சவுரவ் கங்குலி, சாஸ்திரியின் கருத்து முதிர்ச்சியற்றது என்றும் சாஸ்திரி அணியை மேம்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும் என்று சாடினார்.

விரேந்திர சேவாக், “களத்தில் விளையாடுவதை வைத்துத்தான் அயல்நாட்டில் சிறந்த அணி என்று கூற முடியுமே தவிர ஓய்வறையில் அமர்ந்து கொண்டு அதைப்பற்றி பேச முடியாது” என்று சாடினார்.

உடனேயே விராட் கோலி, தனக்கு ‘பூரண’ ஆதரவு தரும் ரவி சாஸ்திரிக்கு ஒத்து ஓதும் விதமாக, “நாம் சிறந்த அணி என்று நாம் நம்ப வேண்டும், ஏன்? இதில் தவறென்ன” என்று கேட்டார்.

அதற்கு ஒரு பத்திரிகையாளர், ‘என்னால் அப்படிக் கூற முடியாது’ என்றார் உடனே கோலி அவருக்கு உங்களால் கூற முடியாது என்றால் அது உங்கள் கருத்து’ என்றார்.

தற்போது கோலி இல்லாமல் ரோஹித் சர்மா தலைமையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கச் செல்கிறது. வரும் 19ம் தேதி பரமவைரி பாகிஸ்தானுடன் தோற்றால் ரவிசாஸ்திரி தலை மேலும் உருளும்.

https://tamil.thehindu.com/sports/article24941649.ece

 

 

களவியூகம், பந்துவீச்சு மாற்றம் பற்றி கோலி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்: சுனில் கவாஸ்கர்

 
 
sunil

சுனில் கவாஸ்கர்.| படம்: கே.முரளிகுமார்.

இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு கேப்டனாக நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது, உத்தி ரீதியாக, சமயோசித முடிவுகளில் கோலி இன்னும் கொஞ்சம் தேற வேண்டியுள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியா டுடே நியூஸ் சேனலில் கவாஸ்கர் கூறும்போது, “அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தற்போது இங்கிலாந்து தொடரிலும் பார்த்தோம்.

 

கொஞ்சம் சரியான களவியூகம் சரியான பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றை அவர் செய்திருந்தால் முடிவு வித்தியாசமாக அமைந்திருக்கும்., அவர் கேப்டனாகி 2 ஆண்டுகள் (உண்மையில் 4 ஆண்டுகள்) ஆகிறது எனவே அனுபவமின்மையும் ஒரு காரணம்.” என்றார்.

முதல் டெஸ்ட் போட்டி முதல் இங்கிலாந்தின் டாப் ஆர்டர்களைக் கழற்றிவிட்டு பின் கள வீரர்களை ஆடவிட்டது அவரது களவியூகம் மற்றும் அனுபவமற்ற பந்து வீச்சு மாற்றத்தினால் இங்கிலாந்து வெற்றி பெற்றதில் முடிந்தது.

சாம் கரன் சிறப்பாக ஆடிய போது அஸ்வினை பந்து வீச்சிலிருந்து தூக்கியது, அன்று ஷமி பிரமாதமாக வீசிய போது அவருகு 3வது ஸ்லிப் வைக்காமல் பட்லர், பிராட், பரவலான களவியூகத்தில் ஏகப்பட்ட சிங்கிள்களை எடுத்து பிறகு பட்லர் வெளுத்துக் கட்டியதும் கோலியின் தவறுகளே, இதைத்தான் அனுபவமின்மை என்றார் சுனில் கவாஸ்கர்.

ஆனால் செய்தியாளர் ஒருவரிடம் விராட் கோலி இது சிறந்த அணியல்ல என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கருத்து என்று கூறியது பற்றி கவாஸ்கர் கூறும்போது,

“தோற்றுப் போய் உட்கார்ந்திருக்கும் ஒருவரிடம் அந்த நேரத்தில் சிறந்த அணியா என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது ஆனால் செய்தியாளராக அவர் கடமையைச் செய்தது நியாயமே. அதற்கு விராட் கோலி ஒருபோதும், “நீங்கள் சரி, நாங்கள் தவறு” என்று கூறப்போவதில்லை. எனவே இதில் அதிகம் பார்க்க ஒன்றுமில்லை, ஏற்கெனவே தோல்வியில் அவர் துவண்டு போயிருப்பார், அந்தத் தருணத்தில் அவர் அப்படித்தான் பதிலளித்திருப்பார்” என்றார்

அதே போல் ரவிசாஸ்திரி கடந்த 15-20 ஆண்டுகளில் இந்த அணியே சிறந்தது என்று கூறியதையும் சுனில் கவாஸ்கர் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல், “நேர்மையாக ரவி சாஸ்திரி முந்தைய இந்திய அணிகளை மட்டம்தட்டும் நோக்கில் கூறியிருக்க மாட்டார், இந்த அணியை உத்வேகப்படுத்த அவர் கூறியிருப்பார்.

நிச்சயம் முந்தைய அணிகளை மட்டம்தட்டுவது அவரது நோக்கமாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.

https://tamil.thehindu.com/sports/article24941751.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் தோல்வி... இந்த 5 வீரர்கள்தான் காரணமா?! #EngVInd

 
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் தோல்வி... இந்த 5 வீரர்கள்தான் காரணமா?!  #EngVInd
 

`இது ஒன்றும் மோசமான தோல்வியில்லை. கிட்டத்தட்ட எல்லா டெஸ்ட் போட்டிகளிலுமே இந்தியா வெல்லும் சூழல் இருந்தது. ஒரு டெஸ்ட்டில் வெற்றியும் பெற்றது. அதனால் இந்தியாவின் இங்கிலாந்து தொடர் தோல்வியை படுதோல்வி என சொல்லமுடியாது. கோலியும் காரணமல்ல' - இப்படி  இந்திய அணிக்கு ஆதரவாக சிலர் சொன்னாலும் உண்மை என்ன என்பதை புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்திய அணியால் இங்கிலாந்து தொடரில் வெல்ல முடியாததற்கு காரணம் பேட்டிங் சொதப்பல் என பொதுவில் சொன்னாலும்  இந்த ஐந்து வீரர்கள்தான் தோல்விக்குக் காரணம் என்பதை புள்ளி விவரங்களும் அடுக்குகின்றன. அவர்கள் யார்... யார்?

1. ஷிகர் தவான்

கோலி

 

 

இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸின் சொதப்பல் உச்சம் ஷிகர் தவான். தொடர்ந்து மோசமான ஆட்டம் ஆடினாலும் 5 டெஸ்ட் போட்டிகளில் நான்கு போட்டிகளில் 8 இன்னிங்ஸ் விளையாடினார் ஷிகர். 26, 13, 35, 44, 23, 17, 3, 1.... இதுதான் எட்டு இன்னிங்ஸிலும் இவர் அடித்த ரன்கள். மொத்தமாக 162 ரன்கள்.  அதிகபட்ச ஸ்கோரே 44 ரன்கள்தான். 8 இன்னிங்ஸ்களையும் சேர்த்து இவரது ஆவரேஜ் 20.25. இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் நீண்ட நேரம் நின்று, அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்க வேண்டிய ஷிகர் தவான், டி20 போட்டிகளில் ஆடுவதுபோல் பொறுப்பின்றி ஆடியது, அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக எடுத்துக்கொள்ளலாம். தனது விக்கெட்டுகளை மிக ஈஸியாகக் கொடுத்துவிட்டு வெளியேறிக்கொண்டே இருந்தார் ஷிகர்.

2. அஜிங்கியா ரஹானே

கோலி ரஹானே

இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் அஜிங்கியா ரஹானே. 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களும் ஆடினார் ரஹானே. மொத்தமாக அவர் அடித்த ரன்கள் 257. ஆவரேஜ் ஒரு இன்னிங்ஸுக்கு 25.70 ரன்கள். ஆறு இன்னிங்ஸ்களில் 20 ரன்களுக்கும் குறைவாக அடித்த அவரது டாப் ஸ்கோர் 81. கோலிக்கு அடுத்தபடியாக களம் இறங்கும் ரஹானே, மிடில் ஆர்டரில் நின்று அதிக ரன்கள் சேர்த்திருக்க வேண்டியவர். பேட்டிங் ஆர்டரில் இவர் இறங்கும் 5-வது இடம் மிக முக்கியமானது. ஆனால் அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆடியதுபோலத்தான் அவரது ஆட்டம் இருந்தது. கோலியுடன் நின்று பார்ட்னர்ஷிப்பில் பின்னியெடுத்திருக்க வேண்டிய ரஹானே சொதப்பியது அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம். 

3. ஹர்திக் பாண்டியா

கோலி பாண்டியா

2.0 இந்திய அணியின் கபில்தேவ் என அழைப்பதை பெருமையாக நினைப்பவர் ஹர்திக் பாண்டியா. இந்தியாவின் மிக முக்கியமான ஆல் ரவுண்டராக நினைத்து இவருக்கு முதல் நான்கு டெஸ்ட்களிலுமே வாய்ப்பை வழங்கினார் கோலி. ஆனால், ஒரே ஒரு டெஸ்ட்டைத் தவிர மற்ற மூன்று டெஸ்ட்களிலுமே ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம், அணிக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கவில்லை. 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸிலுமே பேட்டிங் செய்தார் பாண்டியா. இதில் இவரது டாப் ஸ்கோர் 52 ரன்கள் நாட் அவுட். இதே போட்டியில் 5 விக்கெட்டுகளும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் பாண்டியா. ஆனால், மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் அசால்ட்டான ஆட்டம். 8 இன்னிங்ஸிலும் சேர்த்து இவர் மொத்தமாக அடித்த ரன்கள் 164. ஒரு இன்னிங்ஸூக்கான ஆவரேஜ் 23.42. பெளலிங்கிலும் இதே கதைதான். ஒரு போட்டியைத்தவிர மற்ற அனைத்திலுமே பாண்டியாவின் பெளலிங் எடுபடவில்லை. 4 மேட்ச்களில் விளையாடி மொத்தமாக 10 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து அணியில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் என ஆல்ரவுண்டர்கள் கலக்க, இந்தியாவின் ஆல் ரவுண்டர் பதுங்காட்டம் ஆடியது தொடர் தோல்விக்கான முக முக்கியக் காரணம்

4. ரவிச்சந்திரன் அஷ்வின்

கோலி அஷ்வின்

டி20, ஒருநாள் போட்டிகளில் அஷ்வினை இந்திய தேர்வுக் குழு அணிக்குள் எடுப்பதில்லை. அதனால் அஷ்வினை டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் என்றே எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டின் பெளலிங் சுத்தமாக இங்கிலாந்தில் எடுபடவில்லை. இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆஃப் ஸ்பின்னில் அசத்தி, நான்காவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்கு வெற்றிபெற்றுத்தர, அஷ்வினோ விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறினார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இங்கிலாந்து தொடரில் மிக சிறப்பாக இருந்தது. ஆனால், ஸ்பின்..? 4 மேட்ச்களில் 7 இன்னிங்ஸில் பந்து வீசினார் ரவிச்சந்திரன் அஷ்வின். இதில் இரண்டு இன்னிங்ஸ்களில் விக்கெட்டே இல்லை. மொத்தமாக இவர் எடுத்த விக்கெட்டுகள் 11 மட்டுமே. மாறாக மொயின் அலி இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து சீரிஸில் மொத்தமே 2 போட்டிகளில்தான் விளையாடினார். அதில் எடுத்த விக்கெட்டுகள் மட்டுமே 12. இந்தியாவின் ஸ்பின் அட்டாக் இந்த தொடரில் மிக மோசமாக இருந்ததற்கான மிக முக்கியக் காரணம் அஷ்வினின் சுமாரான பந்துவீச்சு.  

5. விராட் கோலி 

கோலி

பேட்ஸ்மேனாக 2018 இங்கிலாந்து சீரிஸ் கோலிக்கு மிகப்பெரிய வெற்றி. 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 593 ரன்கள் அடித்து இந்தியாவின் டாப் பேட்ஸ்மேனாக உயர்ந்து நின்றார் கோலி. இவரது பேட்டிங் ஆவரேஜ் ஒரு இன்னிங்ஸுக்கு கிட்டத்தட்ட 60 ரன்கள். இத்தொடரில் இரண்டு சதங்களும் அடித்திருந்தார் கோலி. ஆனால், கேப்டனாக பல இடங்களில் தடுமாறினார் கோலி. சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதில் கிட்டத்தட்ட 5 டெஸ்ட் போட்டிகளிலுமே சொதப்பினார். ப்ளேயிங் லெவன் மட்டும் அல்லாமல், பேட்டிங் ஆர்டரிலும், பெளலிங் ரொட்டேஷினிலும் பல சொதப்பல்கள். முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுகள் எடுக்க, இந்தப்பக்கம் ஹர்திக் பாண்டியாவுக்கு பந்து வீச ஓவர்களே கொடுக்கவில்லை கோலி. அதேபோல் அஷ்வினிடம் ஓவர் டிபென்ட்டென்ட்டாகவும் இருந்தார். கோலி எடுத்த பல தவறான முடிவுகள் இத்தொடர் தோல்விக்கான முக்கியமானக் காரணங்களில் ஒன்று!

https://www.vikatan.com/news/sports/136877-indias-test-series-loss-against-england-are-these-5-players-to-be-blamed-engvsind.html

Link to comment
Share on other sites

`சாம் குரான் எங்களை அதிகமாகவே காயப்படுத்திவிட்டார்' - ரவி சாஸ்திரி வேதனை!

 

இங்கிலாந்து அணியைக்காட்டிலும், சாம் குரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்திவிட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

De15ICmWAAAYjIJ_20099.jpg


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்ட் போட்டிகளில், 20 வயதான சாம் குரான் அதிரடி காட்டினார். அவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியைப் பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய அணி தோல்வியடைய காரணமாக இருந்தார் குரான். அபாரமான ஆட்டத்தால்  இங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

 

 

இது தொடர்பாக ரவி சாஸ்திரி பேசுகையில், ``நாங்கள் தோற்றோம் எனக் கூறிவிட முடியாது, நாங்கள் முயற்சித்தோம். ஆனால் எங்களின் முயற்சியை விட இங்கிலாந்தின் முயற்சி அபாரமாய் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றார்கள் அவ்வளவுதான். இதுவே இந்திய அணி திறமைக்கான சான்று. தொடரை 1-4 என்ற தோற்ற நிலையிலும், இந்தத் தோல்வியால் இந்திய வீரர்களின் முயற்சி கேள்விக்குரியதாக ஒன்றும் இல்லை. அடுத்தடுத்த தோல்விகளால் நாங்கள் துவளவில்லை. கடந்த நான்கு வருடங்களில் 9 டெஸ்ட் தொடர்களை அந்நிய மண்ணில் இந்தியா வென்றுள்ளது. இந்திய ரசிகர்களுக்கும், எங்களின் மனசாட்சிக்கும் நாங்கள் போராடியது தெரியும். அடுத்து நடக்கவிருக்கும் ஆசிய தொடரிலும், நவம்பரில் நடக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் நிச்சயம் இந்தியா வெல்லும். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதைத் தேர்வு செய்ய எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள். இருவருமே சாம் குரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்து அணியைவிட குரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.

https://www.vikatan.com/news/sports/136921-ravi-shastri-speaks-about-england-player-sam-curran.html

Link to comment
Share on other sites

அவரால்தான் நாங்க தோற்றோம்!! ஒரே ஒரு வீரரை காரணம் காட்டும் சாஸ்திரி

 
First Published 15, Sep 2018, 9:55 AM IST
 
ravi shastri revealed the name who is reason for indias defeat
 
HIGHLIGHTS

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு வீரரை காரணம் காட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு வீரரை காரணம் காட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் அனைத்து போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோர் ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் ஆடினரே தவிர பெரும்பாலான இன்னிங்ஸ்களில் கைகொடுக்க தவறிவிட்டனர். 

அதனால்தான் முதல் மற்றும் நான்காவது போட்டியில் வெற்றியின் விளிம்பில் தோல்வியை தழுவினோம். இரண்டாவது போட்டியில் படுதோல்வி, மூன்றாவது போட்டியில் வெற்றி, கடைசி போட்டியில் போராடி தோல்வி என அதிகமான போட்டிகளில் தோற்று தொடரை இழந்தோம். 

sam-curran.jpg

இந்திய அணி போராடி தோல்வியடைந்த போட்டிகளில் எல்லாம், நாம் தோற்பதற்கு இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரனே காரணமாக அமைந்தார். அந்த அணி இக்கட்டான சூழலில் இருந்தபோதெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் 4 போட்டிகளில் ஆடி 272 ரன்களை குவித்த சாம் கரன், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட டிரண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில்(மூன்றாவது போட்டி) அந்த அணி தோல்வியடைந்தது. 

curaan.jpg

அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரு அணிகளின் ஆட்டத்திற்கு இடையே பெரிய வித்தியாசமாக இருந்த சாம் கரன் தான் இந்திய அணி தொடரை இழக்க காரணம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

20 வயதான சாம் கரன், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான கெவின் கரனின் மகன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி அசத்தினார். விராட் கோலியுடன் சேர்த்து அவருக்கும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

Sam-Curran-Virat-Kohli.jpg

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, நாங்கள் படுமோசமாக தோற்கவில்லை. இந்த தொடரை இங்கிலாந்து வென்றதற்கான கிரெடிட் சாம் கரனையே சாரும். அதனால்தான் நானும் கோலியும் பேசி முடிவெடுத்து, இங்கிலாந்து அணி சார்பில் தொடர் நாயகன் விருதை சாம் கரனுக்கு கொடுக்க பரிந்துரைத்தோம். சாம் கரன் எப்போதெல்லாம் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தாரோ, அப்போதெல்லாம் நாங்கள் பாதிக்கப்பட்டோம். 

ravi_sad.jpg

எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது சாம் கரன் ரன்களை குவித்தார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்களுக்கு விக்கெட்டே இல்லாமல் இருந்தது. அந்த சூழலில் இந்திய அணியின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதேபோல சவுத்தாம்ப்டனில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் அந்த அணி 86 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போதும் சாம் கரன் ரன்களை குவித்தார். இப்படி, முக்கியமான தருணங்களில் எல்லாம் அவர் அந்த அணியை மீட்டெடுத்தார். அதனால் சாம் கரன் தான் இந்திய அணி தோல்விக்கு காரணம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

https://tamil.asianetnews.com/sports/ravi-shastri-revealed-the-name-who-is-reason-for-indias-defeat-pf2xm6

Link to comment
Share on other sites

‘ரவி சாஸ்திரி வர்ணனையாளர் பணியை பார்க்கட்டும் பயிற்சியாளர் பணிக்கு சரிப்பட மாட்டார்: சேட்டன் சவுகான் ஆவேசம்

 

 

 
ravi%20chowgan

முன்னாள் வீரர் சேட்டன் சவுகன், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி : கோப்புப்படம்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி சரிபட்டுவரமாட்டார், ஆஸ்திரேலியத் தொடருக்கு முன் அவரை நீக்கிவிடுங்கள். அவருக்கு வர்ணனையாளர் பணிதான் பொருத்தமாக இருக்கும் என்று முன்னாள் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது. இந்தத் தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் ஆளானது.

 
 
 

இங்கிலாந்து தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசியில் டெய்லண்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டனர் என்ற விமர்சனமும், விராட் கோலி, ரஹானே, புஜாரா, ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக பேட் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஆனால், இதற்குப் பதில் அளித்துப் பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கடந்த 20 ஆண்டுகளில் இப்போது விராட் கோலி தலைமையில் இருக்கும் இந்திய அணியே சிறந்த அணி, குறைந்த காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்தக் கருத்து மீதும் பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை வைத்தனர்.

இந்நிலையில் முன்னாள் இந்திய தொடக்க வீரரும், உ.பி. அரசின் விளையாட்டுத்துறை அமைச்சருமான சேட்டன் சவுகான் தான்பாட் நகரில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்பாக நீக்கிவிடுங்கள். ரவி சாஸ்திரி நல்ல கிரிக்கெட் வர்ணனையாளர். அவர் அந்த பணியைச் செய்தால் போதுமானது, அந்த பணியைச் செய்ய அவரை அனுமதியுங்கள். இந்திய அணிக்குப் பயிற்சியாளர் பணிக்கு அவர் சரிபட்டுவரமாட்டார்.

இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும், இங்கிலாந்து தொடரில் இரு அணிகளுமே சமபலம் கொண்டதாக இருந்ததாகவே காணமுடிந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் இங்கிலாந்து டெய்லண்டர்களை வீழ்த்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர். இந்தக் குறைபாட்டை களைய வேண்டும்.

இப்போதுள்ள இந்திய அணியைக் கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த அணி என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதைநான் ஏற்க மாட்டேன். என்னைப் பொருத்தவரை கடந்த 1980களில் இருந்த இந்திய அணிதான் எப்போதுமே சிறப்பான அணியாக இருக்க முடியும். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வெற்றிகளையும் பெற்றுத் திரும்பியது.

ஆசியக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களும், புதியரத்தம் பாய்ச்சப்பட்ட இளம் வீரர்களும் கொண்ட கலவையாக இருப்பதால், கோப்பையைவெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு சேட்டன் சவுகான் தெரிவித்தார்.

இந்திய அணியில் கடந்த 1969 முதல் 1981-ம் ஆண்டுவரை இடம் பெற்ற சேட்டன் சவுகன், 40 டெஸ்ட் போட்டிகளி்ல விளையாடி, 2,084 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 1969-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராகமும்பையில் நடந்த போட்டியில் சேட்டன் சவுகன் அறிமுகமாகினார். அதன்பின் 1981 ஆண்டு ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெற்றார். சிறந்த டெஸ்ட் வீரரான சேட்டன் சவுகான் 7 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார்.

ரவிசாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோர் வலியுறுத்திய நிலையில், இப்போது சேட்டன் சேவாக்கும் குரல் எழுப்பியுள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24967102.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

இங்கிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம்: இந்திய அணிக்கு ராகுல் திராவிட் வேண்டுகோள்


 

 

rahul-dravid-speech-about-england-tour

 

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 11:13 am
  • அ+ அ-

இங்கிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம் என்று இந்திய அணிக்கு ராகுல் திராவிட் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற அணி களுக்கு எதிராகவும் இந்திய அணி எச்சரிக்கையுடனே விளையாட வேண் டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் குறித்து, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் செய்தி நிறுவனத்துக்கு ராகுல் டிராவிட் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு எளிதானது அல்ல. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா-இங்கிலாந்து தொடரில் இரு அணி பேட்ஸ் மேன்களும் பந்துகளை எதிர்கொள்வதில் தடுமாறினர். நான் இங்கிலாந்தில் சில காலம் விளையாடி இருக்கிறேன். அங்குள்ள ஆடுகளங்கள் மிகவும் கடினமானவை. ரன் குவிப்பது சிரமமாக இருக்கும்.

அடுத்த முறை இங்கிலாந்து தொடருக்கு நாம் செல்லுவதற்கு, முன்னதாகவே பயிற்சி பெற்று செல்லவேண்டும். இங்கிலாந்து தட்ப வெப்பநிலை, ஆடுகளங்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப தயாராவது அவசியமாகும். நம்மால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விளையாட முயல்வது அவசியமாகும். இந்தத் தொடர் மூலம் நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியமாகும்.

இங்கிலாந்தில் நடைபெறும் தொடர் என்பது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். எனவே அந்தத் தொடரிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம். இந்தத் தொடர் அருமையானதாக இருந்தது. நமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

ஆசியக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் நமது சிந்தனை எல்லாம் பாகிஸ்தான், வங்கதேசத்தை மட்டும் ஏன் நோக்கியிருக்கிறது என்று தெரியவில்லை.

பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமல்லாமல் மற்ற அணிகளுடனும் எச்சரிக்கையாக விளையாடவேண்டும். வெள்ளைப் பந்துகளில் ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வலிமையானது என்றாலும், எச்சரிக்கையாக விளையாடுவது அவசியம்.

இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்

https://www.kamadenu.in/news/sports/6396-rahul-dravid-speech-about-england-tour.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.