Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

  • Replies 195
  • Created
  • Last Reply

இந்திய அணி இப்படியும் ஒரு சாதனை! - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவிப்பு #EngvsInd

 
 

நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களில் ஆட்டமிழந்தது. 

ரிஷப் பண்ட்

Photo Credit: ICC

 

 


இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் ஃபீல்டிங் தேர்வு செய்தார். முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா என 3 மாற்றங்களுடன் முதலில் பேட் செய்ய இந்திய அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு பொறுமையாக விளையாடிய கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. ஆனால், ஷிகர் தவான், கே.எல்.ராகுல் மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்திய அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்குக் கைகோத்த கேப்டன் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரஹானே ஆகியோர் 159 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ரஹானே 81 ரன்களிலும், கோலி 97 ரன்களிலும் ஆட்டமிழக்க முதல்நாள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் சேர்ந்திருந்தது. ரிஷாப் பண்ட் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  

 

 

நாட்டிங்ஹாம் பகுதியில் பெய்த மழையால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக அந்நாட்டு நேரப்படி காலை 11.30 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷாப் பாண்டுடன், அஷ்வின் இந்திய அணியின் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினார். போட்டி தொடங்கிய சிறிதுநேரத்திலேயே பிராட் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜாகி ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷாப் பண்டுக்குப் பின்னர் அஷ்வின், ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 329 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.  

இங்கிலாந்து மண்ணில் விளையாடும் வெளிநாட்டு அணி ஒன்று டாஸை இழந்து முதலில் பேட் செய்யும் சூழலில், அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் 8 வீரர்களும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்ப்பது இதுவே முதல்முறையாகும்.

https://www.vikatan.com/news/sports/134478-indiaengland-third-test-team-india-all-out-for-329-in-first-innings.html

Link to comment
Share on other sites

ரிஷப் பந்த்தை வீழ்த்திவிட்டு வார்த்தைகளை உதிர்த்த பிராட்: இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்

 

 

 
rishab%20pant

பிராட் பந்தில் பவுல்டு ஆன ரிஷப் பந்த்.| கெட்டி இமேஜஸ்.

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 307/6 என்று 2ம் நாளில் தொடங்கிய இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ரிஷப் பந்த் முதல்நாள் ஆட்டத்தில் 22 நாட் அவுட் என்று இருந்தவர் இன்று 2 ரன்கள் மட்டுமே சேர்த்து 24 ரன்களில் பிராடின் சோதனை தரும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகும் லைன் பந்தை காலை நகர்த்தாமல் மட்டையை மட்டும் தொங்க விட்டு ஆடப்பார்த்தார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

 

அதுவரை அருமையாக பந்துகளை ஆடாமல் விட்டுவந்த பந்த், தடுப்பாட்டத்திலும் நல்ல நிதானத்தையும் இறுக்கத்தையும் காட்டினார், ஆனால் ஒரு பந்து அவரைப் பதம் பார்த்தது, தவறு அவருடையதுதான். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் ஸ்டூவர்ட் பிராட் அவரிடம் சில வார்த்தைகளைக் கூறினார், அவரது முகபாவத்தை வைத்துப் பார்த்தபோது விஷமமான வார்த்தைகளா, அல்லது வாழ்த்தினாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் இதுவும் ஒரு வழியனுப்புதலே, ஆட்ட நடுவர் கவனத்தில் கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

ரவிச்சந்த்திரன் அஸ்வின் 3 பவுண்டரிகளையும் தேர்ட்மேன் திசையிலேயே அடித்து 14 ரன்கள் எடுத்து பிராடின் இன்ஸ்விங்கருக்கு ஸ்டம்புகளை இழந்தார். மொகமது ஷமி, பும்ரா ஆகியோரை ஆண்டர்சன் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்ய இந்திய அணி 94.5 ஓவர்களில் 329 ரன்களுக்குச் சுருண்டது. வோக்ஸ், பிராட், ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரஷீத் கோலியை வீழ்த்தினார்.

இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 9 ஓவர்கள் முடிவில் 46 ரன்களுக்கு விக்கெட் விழாமல் ஆடி வருகிறது. ஸ்லிப்பில் பந்து இடையில் புகுந்து போனாலும் வேடிக்கைப் பார்க்கின்றனர் இந்திய வீரர்கள். ஸ்லிப் திசையில் நிற்கும் போது துணைக்கண்டத்தில் நிற்பது போல் இருகைகளையும் கால்முட்டியில் ஊன்றக்கூடாது என்று பலரும் பலமுறை அறிவுறுத்தியும் அப்படித்தான் நிற்கிறார்கள், இதனால் ஒரு பந்து கேட்ச் பிடிக்கும் உயரத்தில் ரஹானே, ராகுல் வேடிக்கைப் பார்க்க இடையில் புகுந்து பவுண்டரி சென்றது. டைவ் அடித்துக் கேட்ச் பிடிக்க வேண்டிய பந்து அது.

https://tamil.thehindu.com/sports/article24731132.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

1.png&h=42&w=42

59/2 * (13 ov)
Link to comment
Share on other sites

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறல்

 
அ-அ+

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இங்கிலாந்து 128 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #ENGvIND #HardikPandya #KLRahul

 
 
 
 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறல்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா விராட் கோலி (97), ரகானே (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவரில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்கவில்லை.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். 12-வது ஓவரின் கடைசி பந்தில் குக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

201808192028006887_1_cook001-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த போப்பை 10 ரன்னில் வெளியேற்றினார் இசாந்த் ஷர்மா. 25-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில ஜோ ரூட் 16 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் (15), பென் ஸ்டோக்ஸ் (10), கிறிஸ் வோக்ஸ் (8) அடில் ரஷித் (5) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வெளியேற்ற இங்கிலாந்து 128 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/19202800/1184950/ENGvIND-Trent-Bridge-Test-England-8-wickets-loses.vpf

 

1.png&h=42&w=42

158/9 * (37.1 ov)
 
Link to comment
Share on other sites

பாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை! - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd

 

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய அணி

Photo Credit: ICC

 

 

நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கிய இந்திய அணி, 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 29 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே மற்றொரு தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். 

 

 

இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். கேப்டன் ஜோரூட் 16 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 10, பேரிஸ்டவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்து அசத்திய கிறிஸ் வோக்ஸ், ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சில் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய பாண்டியா, டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

ஹர்திக் பாண்ட்யா

கடைசி விக்கெட்டுக்கு ஆண்டர்சனுடன் ஜோடி சேர்ந்து ஜோஸ் பட்லர் சிறிதுநேரம் அதிரடி காட்ட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 150ஐக் கடந்தது. 38.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி, 168 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்திய அணி தரப்பில் ஹர்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 5 கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், அறிமுகப் போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்தார். 

https://www.vikatan.com/news/sports/134497-india-take-crucial-168run-first-innings-lead-over-england-in-3rd-test.html

6.png&h=42&w=42

329 & 76/1 * (14.3 ov)
Link to comment
Share on other sites

 

6.png&h=42&w=42

329 & 124/2 * (31 ov)
 

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்திய அணி

 
அ-அ+

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் ஹர்திக் பாண்டியாவின் அபார பந்து வீச்சால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. #ENGvIND

 
 
 
 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்திய அணி
 
லண்டன் :

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா விராட் கோலி (97), ரகானே (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.  

நேற்று 22 ரன்களுடன் களத்தில் இருந்த ரிஷப் பந்த் இன்று மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அஸ்வின் 14, ஷமி 3, பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தனது கடைசி 5 விக்கெட்டுக்களை வெறும் 22 ரன்களுக்கு பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் குக் மற்றும் ஜென்னிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணி மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவரில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்கவில்லை.
 
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். 12-வது ஓவரின் கடைசி பந்தில் குக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
 
201808192350179429_1_cok._L_styvpf.jpg

அதன்பின் வந்த போப், இஷாந்த் ஷர்மாவின் வேகத்தில் 10 ரன்களில் அவுட்டானார். பிட்சில் பந்து நன்றாக ஸ்விங் ஆவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா, ஜோ ரூட் 16, பேர்ஸ்டோவ் 15, கிறிஸ் வோக்ஸ் 8, அடில் ரஷித் 5, பிராட் 0 என அடுத்தடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை துவம்சம் செய்தார்.

இதனால், 38 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 6 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்ந்தார். இஷாந்த் ஷர்மா, பும்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா உற்சாகத்துடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் ராகுல் மீண்டும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ராகுல் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த புஜாரா வழக்கத்திற்கு மாறாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாசிய தவான் 44 ரன்களில் ரஷித் பந்தில் பேர்ஸ்டோவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் குவித்தது. புஜாரா 33 ரன்களுடனும் கோலி 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ் மற்றும் ரஷித் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 8 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 292 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது. #ENGvIND

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/19235018/1184982/Day-2-India-lead-by-292-runs-with-8-wickets-remaining.vpf

Link to comment
Share on other sites

கலக்கினார் பாண்டியா; கலங்கியது இங்கிலாந்து; 5 ஓவர்களில் 5 விக்.: வெற்றிப்பாதையில் இந்தியா

 

 
pandyajpg

5 விக். பாண்டியா. | ஏ.எப்.பி.

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அபார இந்திய ஸ்விங் பந்து வீச்சுக்கு 161 ரன்களுக்குச் சுருண்டது. பிறகு இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.

பாண்டியா 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்து இங்கிலாந்துக்கு சோதனை அளிக்க அறிமுக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அருமையான 5 கேட்ச்களை எடுத்தார்.

 

2ம் நாள் ஆட்ட முடிவில் புஜாரா 33 ரன்களுடனும் விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நேற்று காலை 307/6 என்று தொடங்கிய இந்திய அணி 22 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. 7.5 ஓவர்கள்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆண்டர்சன் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிராட் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வோக்ஸ் 3 விக்கெட்டையும் கோலி விக்கெட்டை ஆதில் ரஷீத்தும் கைப்பற்றினர்.

அதன் பிறகு இங்கிலாந்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய போது இஷாந்த் சர்மா, பும்ரா அபாரமாக வீசி எட்ஜ்களைப் பிடித்தனர், குறிப்பாக பும்ரா இங்கிலாந்து மட்டையாளர்களிடம் சில கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பினார். ஆனால் பந்து ஸ்லிப் பீல்டர்களுக்கு இடையே புகுந்து சென்றது, அல்லது முன்னால் விழுந்தது, இப்படி அதிர்ஷ்டவசமாக ஆடினாலும் அலிஸ்டர் குக் (29), ஜெனிங்ஸ் (20) ஆகியோர் இந்தத் தொடரில் முதல் விக்கெட்டுக்காக முதல் அரைசதக் கூட்டணி அமைத்தனர்.

இந்நிலையில் இஷாந்த் ஷர்மா இன்னிங்சின் 12வது ஓவரை அதியற்புதமாக வீசினார், ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே குக்கிற்கு வீசிக் கொண்டேயிருந்தார். ஒரு எட்ஜ் பவுண்டரியும் சென்றது. அடுத்த பந்து மீண்டும் அதே காரிடாரில் வீச குக் எட்ஜ் செய்தார் ஆனால் ஸ்லிப்பில் நேரடியாக கையில் விழுந்த கேட்சை புஜாரா கையினூடாக தரைக்குத் தாரை வார்த்தார். ஆனால் குக் புஜாராவிடம் ‘நீ கேட்ச் விட்டால் வேறு ஆளா எனக்கில்லை’ என்று கூறுவது போல் அபாரமான அடுத்த பந்தை ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்த ஓவரின் முதல் பந்தில் பும்ராவின் ஷார்ட் மற்றும் சற்றே வைடு பந்தை ஜெனிங்ஸ் பேட்டைக் கொண்டு செல்லலாமா பேட்டை விலக்கிக் கொள்ளலாமா என்ற இரண்டக மனநிலையில் தொட்டே விட்டார், ரிஷப் பந்த் தன் 2வது கேட்சை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து உற்சாகம் காட்டினார். இடையே அஸ்வின் ஒரு ஓவர் வீசி விட்டு பெவிலியன் சென்றார், என்ன காரணம் என்று தெரியவில்லை, பிறகுதான் தெரிந்தது, இடுப்புப் பகுதியில் தசைப் பிடிப்புக் காரணமாக அவர் பெவிலியன் சென்றார் என்று. அங்கு சென்று தினேஷ் கார்த்திக்குடன் அரட்டையில் ஈடுபட்டார்.

போப் இறங்கி மிக அழகான ஒரு ஆஃப் டிரைவ் பவுண்டரி அடித்தார். ஜோ ரூட் இறங்கி இஷாந்த் ஷர்மாவின் ஒரு ஓவரில் தடவு தடவென்று தடவினார். ஒரு எட்ஜ், பிறகு இன்ஸ்விங்கரில் தொடையில் வாங்கினார். பிறகு இன்ஸ்விங்கரில் ஒரு மாபெரும் எல்.பி. முறையீடு. பிறகு பும்ராவை ஒரு எட்ஜ் பவுண்டரி என்று இவர் தடவத் தடவ எதிர்முனையில் போப்பிற்கு கொஞ்சம் அழுத்தம் ஏறியது, அதனால் அவர் இஷாந்த் சர்மா அரிதாக வீசிய ஒரு லெக் திசை பந்தை பைன் லெக் திசையில் திருப்பி விட முனைந்து மட்டையில் லேசாகப் பட்டு பந்த்திற்கு இடது புறம் செல்ல ஒரு டைவ் அடித்து கேட்ச் எடுத்தார், போப் 10 ரன்களில் வெளியேறினார்.

பிறகும் ரூட் பும்ரா பந்தில் 3வது ஸ்லிப்புக்கு முன் பந்து விழ ஒரு எட்ஜ் செய்தார். எழும்பிய அடுத்த பந்தையும் தடவினார். ரூட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியே இவர் ஆட பேர்ஸ்டோ ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையி ரூட் தடவல் இன்னிங்ஸில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது....

பாண்டியா வந்தார் இங்கிலாந்தை சரித்தார்... ரூட் சர்ச்சைத்தீர்ப்பு

ஆட்டத்தின் 25வது ஓவரில் பாண்டியா பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தையே வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பாண்டியா வீசி ஷார்ட் ஆஃப் லெந்தில் பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து பிட்ச் ஆனவுடன் வெளியே எடுத்தார். ரூட் எட்ஜ் செய்தார் ராகுல் அதனை முன்னால் கையை நீட்டிப் பிடித்தார். பிடித்தவுடன் ராகுல் விக்கெட் விக்கெட் என்று கொண்டாட ஜோ ரூட் இல்லை இல்லை அது கேட்ச் இல்லை என்று தலையை ஆட்டினார். ஆனால் களநடுவர் அவுட் என்று அடையாளம் காட்டி 3வது நடுவரை உதவிக்கு அழைத்தார். அதில் தெளிவாக எதுவும் தெரியவில்லை, பந்து தரையில் பட்டது போலும் இருந்தது, படுவதற்கு முன்பாக ராகுல் விரல்களைக் கொண்டு வந்து கேட்ச் எடுத்தது போலவும் தெரிந்தது.

joe%20root%20outjpg

ஜோ ரூட் சர்ச்சை அவுட். | ஏ.பி.

 

ஆனால் விதிமுறைப்படிதான் 3வது நடுவர் அவுட் என்றார், ஏனெனில் சாட்சியங்கள் தெளிவாக இல்லாத போது களநடுவர் தீர்ப்பே செல்லுபடியாகும் அதன் படி களநடுவர் அவுட் கொடுத்ததற்கிணங்க அவுட் என்றார் 3வது நடுவர், அதே போல் களநடுவர் நாட் அவுட் என்றிருந்தால் அது நாட் அவுட்தான் அப்போது கோலியும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ரூட் கடுகடுப்புடன் முனகியபடியே சென்றார், இது நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்கை என்று ஐசிசி ஆட்ட நடுவர் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பார் என்று கருதப்படுகிறது.

பிறகும் ஹர்திக் பாண்டியா மிக அருமையான லைன் அண்ட் லெந்தில் வீசி தொடர்ந்து சோதித்தார். அதன் பலனாக அவர் தனது ஒரே ஒவரில் ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸை வீழ்த்தினார். பேர்ஸ்டோவுக்கும் பந்து ஆஃப் அண்ட் மிடிலில் உள்ளே வந்து லேட் ஸ்விங் ஆகி செல்லும் வழியில் மட்டை விளிம்பில் பட்டுச் சென்றது, ராகுல்தான் இதையும் பிடித்தார். கிறிஸ் வோக்ஸ் பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார் தோளுக்கு வந்த பவுன்சர் அது, ஹூக் சரியாகச் சிக்கவில்லை, ரிஷப் பந்த் அருமையாகப் பிடித்தார்.

இடையில் பென் ஸ்டோக்ஸ் (10) மொகமது ஷமியின் லேட் அவுட் ஸ்விங்கருக்கு பந்தைத் தொட்டார், ராகுலிடம் கேட்ச் ஆனது. ஆதில் ரஷீத்தை பாண்டியா ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுக்கச் செய்ய பிராட் பாண்டியாவிடம் எல்.பி.ஆக பாண்டியா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஷீத் ஆட்டமிழக்கும் போது இங்கிலாந்து 201 ரன்கள் பின்னிலை கண்டிருந்தது. ஆனால் கடைசியில் பட்லர் ஒரு டி20 பாணி இன்னிங்ஸை ஆடினார். ஷமியை ஒரு ராட்சச ஸ்கொயர் லெக் சிக்சும் பிறகு இஷாந்த் சர்மாவை ஒரு சிக்சும் அடித்து 32 பந்துகளில் 39 ரன்களைக் குவித்து பும்ராவிடம் ஆட்டமிழக்க இங்கிலாந்து 161 ரன்களுக்குச் சுருண்டது. பாண்டியா 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகள், ஷமி 1 விக்கெட். ஷமி 10 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து சொதப்பினார். இங்கிலாந்து 54/0 107 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து சரிந்தது, சரிந்து இழந்தது.

ராகுல், தவண் அதிரடித் தொடக்கம்:

168 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ராகுல், தவண் மூலம் தன்னம்பிக்கைத் தொடக்கம் கண்டது.

இங்கிலாந்து 161 ரன்களுக்குச் சுருண்டதில் அதிர்ச்சியடைந்திருப்பது அதன் பந்து வீச்சில் தெரிந்தது, ஊக்கமற்ற பந்து வீச்சாக அது இருந்தது,

மாறாக ஷிகர் தவண், ராகுல் தன்னம்பிக்கையுடன் ஆடினர், குறிப்பாக ராகுல் 7 அபார பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க ஷிகர் தவன் தன் ஸ்ட்ரோக்குகளைக் காட்டத் தொடங்கினார், அவர் 63 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுக்க இந்திய அணி மீண்டும் ஒரு நல்லத் தொடக்கம் கண்டதோடு அதிரடி தொடக்கமாகவும் அது இருந்தது, 11 ஒவர்களில் 60 ரன்கள் வந்தது. அப்போது ஸ்டோக்ஸ் பந்து ஒன்று உள்ளே வந்து ராகுலின் பேடில் பட்டு ஸ்டம்புக்குத் திரும்பி பவுல்டு ஆனது.

ஷிகர் தவண் 44 ரன்களில் அடில் ரஷீத்தின் கூக்ளியை சரியாகக் கணிக்காமல் மேலேறி வந்தார் அப்படியே நின்றார், ஸ்டம்ப்டு ஆனார். அவர் மேலேறி வருவதைப் பார்த்த ஆதில் ரஷீத் கடைசி நொடியில் பந்தை கூக்ளியாக்கினார்.

முதல் விக்கெட்டுகாக 60 ரன்களும் பிறகு தவன், புஜாரா (33 நாட் அவுட்) கூட்டணி 51 ரன்களையும் விரைவு கதியில் சேர்த்தனர். கோலி 8 ரன்களுடன் களத்தில் இருக்க இந்திய அணி 124/2 என்று 292 ரன்கள் வலுவான முன்னிலையுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.

https://tamil.thehindu.com/sports/article24734800.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

‘கபில் ஆக விரும்பவில்லை, பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன்’

 

 
pandya2jpg

பாண்டியாவை முன்னால் விட்டு கைதட்டும் இந்திய அணி. | ஏ.பி.

கிரேட் ஆல்ரவுண்டர் கபில்தேவுடன் ஒப்பிட வேண்டாம், நான் பாண்டியாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்று ஹர்திக் பாண்டியா கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று 29 பந்துகளில் இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் முதுகெலும்பை உடைத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா. இது மேட்ச் வின்னிங் ஸ்பெல்லாக வேண்டும் என்றால் 2வது இன்னிங்ஸிலும் இதே போன்று வீச வேண்டும்.

 
 

தன் அறிமுக டெஸ்ட்டில் 50 ரன்களையும் 3வது டெஸ்ட் போட்டியில் சதமும் எடுத்தார். இதனையடுத்து அடுத்த கபில் என்று ஊடகங்கள் தூபம் போடத் தொடங்கின. ஆனால் அவர் சொதப்பவும் அனைவரும் மீண்டும் கபில்தேவுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூப்பாடு போட்டனர். இப்போது அவர் 5 விக்கெட் வீழ்த்தியதையடுத்து மீண்டும் கபில் என்று கூறிவிடுவார்களோ பிறகு திட்டுவார்களோ என்று அஞ்சி அவரே நான் கபில் அல்ல, பாண்டியாதான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியா கூறியதாவது:

இதில் என்ன பிரச்சினை என்றால் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள், அடுத்த கபில் என்கிறீர்கள் பிரச்சினையில்லை ஆனால் உடனே தவறு நிகழ்ந்து விட்டால் கபில்தேவா, இவரா? என்று கூறுகிறீர்கள். நான் ஒரு போதும் கபில் ஆகவிரும்பவில்லை, ஹர்திக் பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன்.

நான் ஹர்திக் பாண்டியாவாகவே 40 ஒருநாள் போட்டிகள் 10 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளேன், கபில்தேவாக அல்ல. கபில் அவரது காலக்கட்டத்தில் ஒரு கிரேட். நான் ஹர்திக் பாண்டியாவாகவே இருக்கிறேன், கபிலுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ஒப்பிடாத போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.

இதே போன்று பந்து வீசவே விரும்புகிறேன். நான் வைடாகச் சென்று வீசும்போது பேட்ஸ்மென்கள் பந்து உள்ளே வருகிறது என்று கருதுகின்றனர் ஆனால் பந்து லேட் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆனது.

இஷாந்த் சர்மாவும் என்னிடம் கூறும்போது விக்கெட்டுகளின் பின்னால் ஓடாதே, சரியான இடத்தில் பந்தைப் பிட்ச் செய்தால் உன்னிடம் அவர்களை வீழ்த்தும் திறமை இருக்கிறது என்றார். டைட்டாக வீசுவோம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்பதுதான் நாங்கள் பேசியது. அவர்கள் பொறுமையைச் சோதித்தோம் தற்போது அதன் முடிவு எங்களுக்குச் சாதகமானது.

என்னுடைய 2வது 5 விக்கெட் ஸ்பெல் இது, ஆனால் முதல் 5 விக்கெட்டை விட இது முக்கியமான இடத்தில் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. எனக்கு சதம் அடிப்பதை விட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்தான் மகிழ்ச்சி.

இவ்வாறு கூறினார் பாண்டியா.

https://tamil.thehindu.com/sports/article24735087.ece

Link to comment
Share on other sites

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

 

டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 521 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli

 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
 
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
 
இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.
 
அடுத்து விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி 191 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 197 பந்தில் 103 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் சேர்த்திருந்தது. 449 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
 
201808202223065835_1_pand2._L_styvpf.jpg
 
கோலி ஆட்டமிழந்த பிறகு அதிரடியாக ரன்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பந்தை இந்தியா களம் இறக்கியது. அவர் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 
 
ரஹானே 29 ரன்களும், அடுத்து களமிறங்கிய சமி 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 110 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 352 ரன்களை எட்டிய போது, இந்திய அணி டிக்ளேர் செய்தது. பாண்டியா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 
இதன் மூலம் இந்திய அணி 520 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொண்டது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 
 
Link to comment
Share on other sites

1.png&h=42&w=42

161 & 32/2 * (12.3 ov, target 521)

இங்கிலாந்து தனது 2 ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும் இழந்து உள்ளது.

சேவாக்கைத் தொட்டு அசாரூதீன் சாதனையை முறியடித்த கோலி: டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்

 

 

 
virat-kohli-eng-m

நாட்டாங்ஹாமில் சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி   -  படம்: ராய்டர்ஸ்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் சேவாக்கின் சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, கேப்டனாக இருந்து இங்கிலாந்து அதிக ரன்கள் அடித்த முகமது அசாரூதீனின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை இழந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 521 ரன்கள் இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில், விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டி அரங்கில் 23-வது சதத்தை 118-வது இன்னிங்ஸில் எட்டி சேவாக்கின் டெஸ்ட் சதத்தை சமன் செய்தார். சேவாக் டெஸ்ட் போட்டியில் 23 சதங்கள் அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கேப்டனாக இருந்து இங்கிலாந்தில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இதுவரை முன்னாள் கேப்டன் அசாருதீன் முதலிடத்தில் இருந்தார். அவர் இங்கிலாந்தில் 426 ரன்கள் சேர்த்திருந்தார். அந்த சாதனையை விராட் கோலி முறியடித்து, 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 490 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலிலும் 1,827 ரன்கள் சேர்த்து கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி சராசரியாக 60 ரன்கள் சேர்த்தார். 2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1,693 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 40 ரன்களாகும்.

கேப்டனாக கோலி பொறுப்பேற்ற பின் விராட் கோலி அடிக்கும் 16-வது சதம் இதுவாகும். இதன் மூலம் கேப்டனாக இருந்து அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை கோலி பிடித்துள்ளார்.

முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 19 சதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார். விராட் கோலி 16-வது சதத்துடன் 3-வது இடத்தில் உள்ளார்.

மேலும், ஒரு அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு அதிகமாக ஸ்கோர் செய்த கேப்டன்களிலும் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை கோலி இங்கிலாந்துக்கு எதிராக 5 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.

2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி 4 முறையும், மறைந்த கேப்டன் பட்டோ 3 முறையும் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். மேலும், இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் விளையாடியதில் கோலி 700 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24744158.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ஜோ ரூட் கேட்சை இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் கொண்டாடிய கேஎல் ராகுல்

 

 

அ-அ+

ஜோ ரூட்டை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதை இங்கிலாந்து கால்பந்து ரசிகர் டேல் அலி ஸ்டைலில் லோகேஷ் ராகுல் கொண்டாடினார். #ENGvIND

 
 
 
 
ஜோ ரூட் கேட்சை இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் கொண்டாடிய கேஎல் ராகுல்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. 25-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை ஜோ ரூட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டி விளிம்பில் பட்டு மின்னல் வேகத்தில் 2-வது ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுல் கைக்கு சென்றது.

201808211917260615_1_Dellealli-s._L_styvpf.jpg

கேஎல் ராகுல் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இந்த சந்தோசத்தை வலது கையை வைத்து சல்யூட் அடிப்பதுபோல் கொண்டாடினார். இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரரான டேல் அலி கோல் அடித்ததும் சல்யூட் அடித்து வெற்றியை கொண்டாடுவார்.

201808211917260615_2_Dellealli001-s._L_styvpf.jpg

அவர் மாதிரி வலது கையின் பெருவிரல், ஆள்காட்டி விரல்களை மடக்கி சல்யூட் அடிப்பது கடினம். இது மிகப்பெரிய அளவில் டேல் அலி செலபிரேட் சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலம் ஆனது. இதை இன்று கேஎல் ராகுல் செய்தார். அவரது செய்கை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/21191726/1185472/KL-Rahul-did-the-Dele-Alli-celebration-after-taking.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் தோல்வி இந்த தொடரின் வருமானத்தை பெருக்கியுள்ளது.?

Link to comment
Share on other sites

டிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா

 
அ-அ+

டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG

 
 
 
 
டிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா
 
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் விராட் கோலி மற்றும் ரகானேயின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதையடுத்து, முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
அடுத்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். அவருக்கு புஜாரா ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 72 ரன்களில் அவுட்டானார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
 
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.
 
201808212349387947_1_ben-2._L_styvpf.jpg
 
ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.
 
தொடர்ந்து இறங்கிய அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.
 
இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. #ENGvIND #INDvENG

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/21234939/1185508/england-3119-in-fourth-day-against-india-in-trent.vpf

Link to comment
Share on other sites

ரிஷப் பந்தை வம்பிழுத்த ஸ்டூவர்ட் பிராடு - போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம்

 
அ-அ+

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விதி மீறிய காரணத்தால் இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad

 
 
 
 
ரிஷப் பந்தை வம்பிழுத்த ஸ்டூவர்ட் பிராடு - போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம்
 
டிரண்ட் பிரிட்ஜ்:
 
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
 
முதலில் விளையாடிய இந்திய அணி விராட் கோலி, ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டத்தின் இரண்டாவது நாளில் பிராடு வீசிய பந்தில் ரிஷப் பந்த் ஆட்டம்
இழந்தார். அப்போது, பிராடு அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டதாக தெரிகிறது. இது விதிமுறைகளை மீறியது.
 
இதனால், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/22061914/1185533/Nottingham-Test-Stuart-Broad-penalised-for-breaching.vpf

Link to comment
Share on other sites

இணைந்த கைகள்: சாதனை நிகழ்த்திய ரிஷப் பந்த் & கே.எல். ராகுல்!

 

 
pant12

 

டெஸ்ட் தொடரில் 2-0 என்ற இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்களையும், இங்கிலாந்து 161 ரன்களையும் எடுத்தன. இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் கோலி (103), புஜாரா (72), பாண்டியா (52) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ராகுலும் ஓர் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள். 

இந்த டெஸ்டில் இதுவரை 7 கேட்சுகளைப் பிடித்துள்ளார் கே.எல். ராகுல். விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு வீரர் இங்கிலாந்தில் அதிக கேட்சுகள் பிடிப்பது இப்போதுதான். இந்திய ஃபீல்டர்களில் ஒரே டெஸ்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்களில் ராகுலுக்கு இரண்டாம் இடம். 2015 கேலே டெஸ்டில் ரஹானே 8 கேட்சுகள் பிடித்ததே சாதனையாக உள்ளது. 

இந்த டெஸ்டில் இதுவரை ராகுலும் ரிஷப் பந்தும் தலா 7 கேட்சுகள் பிடித்துள்ளார்கள். இதுபோல ஓர் அணியில் உள்ள இரு வீரர்கள் 7 அல்லது அதற்கு அதிகமான கேட்சுகள் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. 

டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் கேட்சுகளைக் கோட்டை விடுவது வாடிக்கையாக உள்ள சமயத்தில் ராகுல் இதுபோல 7 கேட்சுகள் பிடித்து சாதனை செய்திருப்பது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமையவுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/aug/22/super-sevens-for-rahul-and-pant-2985388.html

Link to comment
Share on other sites

3வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி
 
India won by 203 runs

 

 

பும்ராவின் பந்துகளைக் கணிக்க முடியாத இங்கிலாந்து திணறல்: அனைத்து விதங்களிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி

 

 
bumrah

5 வீக். பந்துடன் பும்ராம். | கெட்டி இமேஜஸ்.

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்று தங்கள் வெற்றிக்கணக்கைத் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து தோற்பதைத் தவிர வேறு வழியில்லை, நேற்று 62/4 என்று சரிந்து உணவு இடைவேளையின் போது 84/4 என்று தடுமாறிய போதே இங்கிலாந்து காலாவதியாகிவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் கோலியையும் ஒன்றும் செய்யமுடியவில்லை, பும்ராவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

   
 

ஆனால் பட்லர் (106), பென் ஸ்டோக்ஸ் (62) இணைந்து 169 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவின் வெற்றியை ஒத்திப் போடச் செய்ததோடு, இருவரும் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடி மற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தனர். ஆனால் அதன் பிறகு பும்ராவுக்குள் ஒரு பேய் புகுந்தது, ஒரே ஓவரில் சதப் போராளி பட்லர், அடுத்த பந்தே பேர்ஸ்டோ ஆகியோரை அபாரமான உள்ளே வரும் பந்துகளில் காலி செய்தார், அதிலும் பட்லர் அந்தப் பந்தை ஆடாமல் விட முடிவெடுத்தது விசித்திரம்தான்.

buttlerjpg

கூட்டணி அமைத்த பட்லர்-ஸ்டோக்ஸ். | ஏ.எஃப்.பி.

 

பேர்ஸ்டோவுக்கு பந்து ஒரு கோணத்தில் உள்ளே வந்தது, இதனால் அவர் மிடில் அண்ட் லெக்கில் தடுத்தாட முயன்றார், ஆனால் பந்து பிட்ச் ஆகி சற்றே கோணத்தை மாற்ற பவுல்டு ஆவதைத் தவிர வேறு வழியில்லை, மிக மிக அபாரமான பந்து 80களில் இம்ரான் கான் ஸ்பெஷல் பந்து ஆகும் இது. எவ்வளவோ டாப் பேட்ஸ்மென்கள் இம்ரானின் இந்தப் பந்துக்கு காலியாகியுள்ளனர், பிறகு ஜவகல் ஸ்ரீநாத் இத்தகைய பந்துகளை வீசினார், 2004 பாகிஸ்தான் தொடரில் லஷ்மிபதி பாலாஜிக்கும் விக்கெட்டுகளைப் பெற்றுத்தந்த பந்து இதுவே.

பிறகு அபாயவீரர் கிறிஸ் வோக்ஸ் தலையை நோக்கி ஒரு பவுன்சர் வீச அவர் தடுத்தாட முயன்றார், முடியவே முடியாத பந்து அது பந்த்திடம் கேட்ச் ஆனது. வோக்ஸ் அவுட் ஆனவுடன் பென் ஸ்டோக்ஸ் புதிய பந்தில் பாண்டியாவின் அபாரமான அவுட் ஸ்விங்கருக்கு ராகுலிடம் கேட்ச் ஆனார். பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய ஸ்விங் ஆகி உடலின் குறுக்காகச் செல்ல மட்டையை முன்னரே லெக் திசையில் மடக்கிய பென்ஸ்டோக்ஸ் ஸ்கொயர் ஆக பந்து எட்ஜ் ஆகி ராகுல் கையில் தஞ்சமடைந்தது.

bairstow%20bowledjpg

பும்ரா பந்தில் பேர்ஸ்டோ பவுல்டு. | ஏ.எப்.பி.

 

இதே போன்ற ஒரு பந்துக்கு பும்ராவிடம் பிராட் (20) காலியாக 291/9 என்ற நிலையிலிருந்து ரஷித் (30), ஆண்டர்சன் (8) ஆகியோரினால் 311/9 ஆக ஆன போது ஆட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. இன்னும் ஒரு விக்கெட் இந்தியா வெற்றி பெறுவதை தடுக்க முடியாது.

முன்னதாக உணவு இடைவேளைக்கு முன்பாக இஷாந்த் ஷர்மாவை ஆட முடியவில்லை. ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து வெளியில் எடுக்கும் பந்துகளில் இங்கிலாந்து இடது கைவீரர்களான குக், ஜெனிங்ஸ் தடவினர். ஜெனிங்ஸ் அப்படித்தான் கால்கள் இருக்கும் நினைவே இல்லாமல் இஷாந்த் பந்து ஒன்றை தொட்டார், கெட்டார், பந்தில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்தது. குக்கிற்கும் ஒரு பந்தை ஆடியே ஆக வேண்டும் என்று வீசி வெளியே இழுத்தார் பந்தை, எட்ஜ் ஆனது மார்புயர கேட்சை ராகுல் பிடித்தார்.

ஜோ ரூட் 13 ரன்களில் பும்ராவின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து ஒன்று வெளியே செல்ல ஆடாமல் விட வேண்டிய பந்தைப் போய் மட்டையால் இடித்தார், இவரும் ராகுல் கையில் சிக்கினார். வலது புறம் பந்து அவரைக் கடந்து சென்றிருக்கும் ஆனால் இருகைகளையும் கொண்டு சென்றதால் பிடித்து ரூட்டை வெளியேற்றினார். இதுதான் பும்ராவின் முதல் விக்கெட் பிறகு இரண்டாவது புதிய பந்தில் மேலும் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து 85 ரன்களுக்கு 5 விக்க்ட் என்று 2வது முறையாக அயல்நாட்டுப் பிட்சில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார் பும்ரா.

ஷமி வீசிய பந்தை போப் (16), அனாவசியமாக நோண்ட 3வது ஸ்லிப்பில் அபாரமான ரிஃப்ளெக்சுடன் கோலி இடது புறம் எம்பி கடினமான முறையில் கையை ரிவர்ஸ் ஆக வைத்துப் பிடித்தார். அபாரமான கேட்ச். இங்கிலாந்து 62/4 என்று ஆனது, அதன் பிறகுதான் பென் ஸ்டோக்ஸ், பட்லர் கூட்டணி அமைத்து இந்திய அணியை கொஞ்ச நேரம் அழ அடித்த்தனர், பிறகு பும்ரா வந்தார், பாண்டியா முக்கிய விக்கெட்டைச் சாய்க்க இங்கிலாந்து தவிர்க்க முடியாத தோல்வி நிலையில் உள்ளது.

பும்ராவை கோலி எப்போதும் நம்புகிறார், அவரும் அதற்குரிய பலன்களை அளித்தார், காலியில் ஜோ ரூட்டை ஆட்டிப் படைத்தார் பும்ரா. பல லெந்த்களில் வீசினார் பந்தை உள்ளே கொண்டு வந்தார், வெளியே கொண்டு சென்றார். சில வேளைகளில் தனது டி20, ஒருநாள் உத்தியான யார்க்கர்களையும் வீசி படுத்தினார். ஒருமுறை அஸ்வினிடம் கேட்ச் ஆகியிருப்பார். வெளியே செல்லும் பந்தை ஆடப்போயும் உள்ளே வரும் பந்தை ஆடுவதா வேண்டாமா என்ற சந்தேகத்தையும் பும்ரா ரூட்டுக்கு ஏற்படுத்தினார்.

ஜோஸ் பட்லருக்கும் வந்தவுடனேயே ரூட்டுக்குப் போட்ட அதே பந்தை வீசினார், எட்ஜ் ஆனது ஆனால் ஏற்கெனவே இடது பக்க கொஞ்சம் கூடுதலாக நகர்ந்த பந்த்தினால் பிடிக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் எப்படியோ நின்று விட்டனர், ஆனால் பும்ராவை தொடர்ந்து ஆட முடியவில்லை, அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னால் பும்ராவின் பந்துகளைக் கணிக்க முடியவில்லை என்று பட்லரே ஒப்புக் கொண்டார்.

இங்கிலாந்தில் முதல் முறையாக ஆடுகிறார், மொத்தமாகவே 4வது டெஸ்ட் போட்டி இது அதுவும் டியூக்ஸ் பந்தில் முன்னபின்ன பரிச்சயம் இல்லாமல் இப்படி வீசுவது என்பதெல்லாம் பும்ராவிடம் பெரிய பவுலருக்கான அனைத்துத் தரங்களையும் எடுத்துரைக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி லார்ட்ஸ் தோல்வி என்ற சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்து இங்கிலாந்தை சகல விதங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24751631.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
அ-அ+

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை லைவ் ஆக வைத்துள்ளது. #ENGvIND

 
 
 
 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா நேற்று வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.

201808221557465478_1_ViratKohliTeam1-s._L_styvpf.jpg

இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆகவே இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/22155746/1185666/ENGvIND-Trent-Bridge-Test-india-Beats-england-ny-203.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.