Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

இந்தியா தோற்றதற்கு கோலிதான் பொறுப்பேற்க வேண்டும்: நாசர் ஹுசைன் அதிரடி

 

 
kohli

படம். | ஏ.பி.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கோலி, அஸ்வின், இசாந்த் சர்மா ஆகியோர் உயர்தரமாக ஆடி வெற்றிக்கு நெருங்கி வந்து தோற்றுள்ள நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கோலியைப் புகழ்ந்து கூறினாலும் கேப்டன்சியில் கோலி சோடைபோனதற்காக இந்திய தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸில் நாசர் ஹுசைன் கூறியதாவது:

 

இந்தப் போட்டியில் கோலி ஒரு பிரமாதமான ஆட்டத்தை ஆடினார், அதனால் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். டெய்ல் எண்டர்களுடன் ஆடி இந்திய அணியை டெஸ்ட் மேட்சிற்குள் கொண்டு வந்தார்.

ஆனால் அதே வேளையில் தோல்விக்கு அவர் பொறுப்பும் ஏற்க வேண்டும், காரணம் இங்கிலாந்து 87/7. கரனும் ஆதில் ரஷீத்தும் உள்ளனர் ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினை ஒரு மணி நேரம் ஆட்டத்தில் காணவில்லை.

இந்தியா அப்போது கட்டுப்பாட்டை இழந்தது. எனவே கோலி தன் கேப்டன்சி குறித்து திரும்பிப் பார்த்து சிந்திக்க வேண்டும். இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வினின் சராசரி 19. சாம் கரன் என்ற 20 வயது இளம் இடது கை வீரர் கிரீசில் இருக்கிறார், அவரை ஏன் பவுலிங்கிலிருந்து அகற்ற வேண்டும்?

இவ்வாறு கேள்வி எழுப்பினார் நாசர் ஹுசைன்.

https://tamil.thehindu.com/sports/article24607564.ece

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

பேட்ஸ்மென்களை நீக்குவதற்கு முன்பாக போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும்: கங்குலி கருத்து

 

 
ganguly

கங்குலி, விராட் கோலி. | படம்: ஏ.எப்.பி.

மிகப்பெரிய, உலகத்தரம் வாய்ந்த இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற விராட் கோலியிடமிருந்து கேப்டனாக தான் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

புஜாராவை உட்காரவைத்ததை நேரடியாகக் குறிப்பிடாமல், கங்குலி இன்ஸ்டாகிராமில் கூறும்போது, பேட்ஸ்மென்களை நீக்கும் போது போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது:

கேப்டனாக இருந்தால் வெற்றி பெற்றால் எப்படி வாழ்த்துகிறார்களோ அதே போல் தோல்வியடைந்தால் விமர்சிக்கவே செய்வார்கள். கோலி மீது ஒரு விமர்சனம் என்னவெனில் பேட்ஸ்மென்களை நீக்கும் முன் அவர்களுக்கு சீராக போதிய வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோமா என்பதை அவர் பரிசீலிக்க வேண்டும்.

கேப்டன் தான் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இது அவர் அணி, எனவே அவர்தான் வீரர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அவர்களுடன் அமர்ந்து தான் செய்ய முடியும் போது அவர்களாலும் முடியும் என்று ஊக்கமளிக்க வேண்டும்.

அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து அணியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று கூறி அவர்கள் மனதில் இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும் விராட் கோலி. எப்பப்பார்த்தாலும் வீரர்களை நீக்குவதும் எடுப்பதுமாக இருந்தால் அவர்கள் மனதில் பயம் வந்து சுதந்திரமாக ஆட முடிவதில்லை. இதனாலேயே சமீப காலங்களில் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது.

கடந்த காலங்களின் சிறந்த அணிகளின் வெற்றிக்கு ஒரு காரணத்தை நாம் அடையாளம் காண முடியும். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று எதுவாக இருந்தாலும் அல்லது இந்திய அணி (2007-ல் இங்கிலாந்தில் வென்றது)ஆக இருந்தாலும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் ஆடினர். எனவே ஓரிரண்டு போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலும் அடுத்த போட்டிகளில் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. முதல் தர கிரிக்கெட்டில் ஆடி 150 ரன்களைக் குவித்தாலும் அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடுகாணாது. விராட் கோலி தவிர மற்ற வீர்ர்கள் யாரும் 3 வடிவங்களிலும் ஆடுவதில்லை.

இவ்வாறு கூறினார் கங்குலி.

கங்குலி கூறியதற்கான காரணம்:

தென் ஆப்பிரிக்காவில் 2 இன்னிங்ஸ்கள் தவண் சரியாக ஆடாததால் உடனே ராகுல் கொண்டு வரப்பட்டார். ரஹானே இந்தியாவின் துணைத்தலைவர் ஆனால் 2 டெஸ்ட்களுக்கு உட்கார வைக்கப்பட்டார், 3வது டெஸ்ட் போட்டிக்குக் கொண்டு வரப்பட்டார். முன்னதாக இலங்கைக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கொல்கத்தாவில் முதல் டெஸ்ட்டுக்கு விஜய் இல்லை. பிறகு 2வது டெஸ்ட் போட்டிக்கு விஜய் வந்தார். எட்ஜ்பாஸ்டனில் புஜாரா நீக்கப்பட்டு 3 தொடக்க வீரர்கள் அணியில் இருந்தனர்.

இதற்கு முன்னதாகவும் புஜாரா நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டாப் 3 என்பதை அளவுக்கு அதிகமாக யோசித்து விஜய், தவண், புஜாரா என்று சீராக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பது கங்குலியின் நியாயமான குற்றச்சாட்டாகவே படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article24608260.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் அதிரடி மாற்றம்: மலானுக்கு பதிலாக போப்;ஸ்டோக்ஸுக்கு பதிலாக வோக்ஸ்

 

 
ben

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ்   -  படம் உதவி: ட்விட்டர்

லண்டன் லார்டஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பேட்டிங்கிலும் சொதப்பி, கேட்ச்களையும் கோட்டை விட்ட டேவிட் மலானுக்கு பதிலாக இளம் வீரர், ஆலிவர் போப் அறிமுகமாகிறார்.

 

முதல் போட்டியில் கலக்கலாகப் பந்துவீசிய பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ் மீது வழக்கு உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2 மாற்றங்களைச் செய்துள்ளது.

முதலாவதாக, பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து, பீல்டிங்கிலும் மோசமாக இருந்த டேவிட் மலானுக்கு பதிலாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் 20வயது வீரர் ஆலிவர் போப் வாய்ப்பு பெற்றுள்ளார்.

டேவிட் மலான் இரு இன்னிங்ஸிலும் முறையே 8, 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார், ஸ்லிப்பில் பீல்டிங் செய்து 3 கேட்சுகளை கோட்டைவிட்டார் என்பதால், அவருக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் கல்தா கொடுத்துள்ளது.

அதேசமயம் புதுமுகமாக அறிமுகமாகும் ஆலிவர் போப் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் 684 ரன்கள் சேர்த்துள்ளார். இது 2-வது அதிகபட்சமாகும். மேலும், வலதுகை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய வீரர் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொண்டு துவம்சம் செய்ய இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

Woakes-Chrisjpg

கிறிஸ் வோக்ஸ்

 

சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டல் நகரில் ஒரு மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டார். அது தொடர்பாக அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஒழுக்கக்குறைவான சம்பவத்தால், இங்கிலாந்து அணியிலும் சில போட்டிகளுக்கு ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நாளை வருகிறது. விசாரணை வேறு ஒரு தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டால், 2-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்படுவார். அல்லது விசாரணை நடந்து தண்டனை ஏதும் அளிக்கப்படும் பட்சத்தில் கிறிஸ் வோக்ஸ் அணியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24608662.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

கோலியை வீழ்த்த புதிய வியூகம்; அழுத்தம் மறைமுகமாக வரும்: கள யுத்தியை வெளிப்படையாகக் கூறிய இங்கிலாந்து பயிற்சியாளர்

 

 
trevor-bayliss-en

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ்   -  படம்: கெட்டி இமேஜஸ்

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள 2-வது டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கமாட்டோம், மாறாக வேறுயுத்தியில் கோலிக்கு அழுத்தம் இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் கேப்டன் விராட் கோலியைத் தவிர அனைவரும், இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு இரையானார்கள். விராட் கோலி மட்டுமே இங்கிலாந்து வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

 

இதற்கிடையே இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலானுக்குப் பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2-வது போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் எப்படி கள யுத்தியை செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டும் சிறந்த பேட்ஸ்மேனாக இல்லாமல் இருந்திருந்தால், அவரை எப்போதோ எங்கள் வீரர்கள் ஆட்டமிழக்கச் செய்திருப்போம். முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் விராட் கோலியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. அதை வர்ணிக்க முடியாது.

ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் எங்கள் யுத்தியை மாற்றிக்கொள்ள இருக்கிறோம். விராட் கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நாங்கள் கொடுக்கப் போகிறோம்.

அவர்களுக்குப் பந்துவீச்சில் நாங்கள் கொடுக்கும் நெருக்கடியால், அவர்கள் விக்கெட்டை எளிதாக இழப்பார்கள். அந்த அழுத்தம் முழுவதையும் கேப்டன் கோலி மீது சுமத்துவார்கள். இதனால், கோலிக்கு அழுத்தம் அதிகரிக்கும், விக்கெட்டை இழப்பார். இதுதான் எங்கள் யுத்தியாகும்.

மற்ற வீரர்களுக்கு மட்டுமே நெருக்கடி இருக்கும். விராட் கோலிக்கு மற்ற வீரர்களால் அழுத்தம் ஏற்படும்.

baylisjpg
 

முதல் டெஸ்ட்டின் இரு அணிகளின் 4 இன்னிங்ஸ்களிலும் லெக் சைட், ஆப் சைட், மிட் ஆப் என அனைத்துப் பகுதிகளிலும் விக்கெட்டுகளை வீரர்கள் இழந்தார். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு அசராமல் பேட் செய்தவர் கோலி. இந்தப் பந்துவீச்சில் பேட் செய்வது கடினம் எனத் தெரிந்தும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

இந்திய அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு, பந்து வருவதற்கு முன்கூட்டியே பேட்டைக் கொண்டு சென்று தேவையில்லாமல் ஆட்டமிழந்தார்கள். அதுபோன்ற தவறைத் திருத்திக்கொண்டு விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

எங்கள் அணியினரும் சுழற்பந்துவீச்சைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆதலால், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து தீவிரமான பயிற்சி எடுத்து வருகிறோம்.

அஸ்வினின் வலது கை சுழற்பந்துவீச்சை சமாளிக்கத் திறமையான வலதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதால்தான் டேவிட் மலானை நீக்கிவிட்டு ஆலிவர் போப்பை 2-வது டெஸ்ட் போட்டியில் சேர்த்திருக்கிறோம்.

வழக்கு தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் சென்றுள்ளார் என்பதால், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வோஸ் சிறந்த ஆல்ரவுண்டர், வேகப்பந்துவீச்சாளர். வலைப்பயிற்சியில் 14 ஓவர்கள் வரை வீசிவிட்டு, களைப்படையாமல், டி20 போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை படைத்தவர் வோக்ஸ்.

இங்கிலாந்து, இந்திய அணிக்கு ஒரேமாதிரியான பிரச்சினைதான் இருக்கிறது. ஸ்லிப்பில் இருக்கும் பீல்டர்கள் சரிவர கேட்ச்களைப் பிடிப்பதில்லை. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், இந்திய அணியில் ஷிகர் தவண், ரஹானே ஆகியோரும் கேட்சுகளைத்  தவறவிட்டனர். இதையும் வரும் போட்டியில் திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியை 2-வது போட்டியிலும் வீழ்த்த பல்வேறு யுத்திகளோடு களமிறங்குவோம்.''

இவ்வாறு பேலிசிஸிஸ் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24614443.ece

Link to comment
Share on other sites

என்ன செய்யப்போகிறது இந்திய அணி? லார்ட்ஸில் நாளை 2வது டெஸ்ட்

 

 
rahane-kohli

ரஹானே, கோலி, லார்ட்ஸில் வலைப்பயிற்சியில். | ஏ.எப்.பி.

எட்ஜ்பாஸ்டனில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி தோற்றதன் மூலம் நிறைய அனுகூலங்களை பெற்றாலும் இறுதியில் முடிவு தோல்வி என்பது சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி, 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்களுக்கு நிச்சயம் இருதயம் உடையும் அனுபவமாகவே இருக்கும்.

ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணி முன்னெப்போதும் இல்லாத தீவிரத்துடன் ஆடுகிறது, அதனால் தோல்விகள் நிச்சயம் இந்திய அணியை உலுக்கவே செய்யும்.

 

இங்கிலாந்து அணி தன் கேட்ச்களைப் பிடிக்க ஆரம்பித்தால் இந்திய அணியின் தோல்வி இன்னமும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும், அல்லது இனி தீர்மானிக்கப்படும்.

2வது டெஸ்ட் போட்டிக்கு பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய நிம்மதி. ஏனெனில் அவர் மிடில் ஆர்டரைக் காலி செய்து விடும் திறமை கொண்டவர். அவருக்குப் பதில் கிறிஸ் வொக்ஸ் அல்லது மொயின் அலி வரலாம் இந்த ஓட்டையை இந்திய அணி நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்திய அணியும் பீல்டிங்கில் முன்னேற வேண்டியுள்ளது, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண் மட்டும் வாய்ப்புகளை பிடித்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். மேலும் சாம் கரன் என்ற இளம் வீரர் எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடும்போது கேப்டன் விராட் கோலி என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதுதான் நடந்தது.

இந்திய அணிக்குப் பெரிய அனுகூலம் என்னவெனில் பந்து வீச்சு அபாரமாக உள்ளது, அஸ்வினின் அயல்நாட்டுப் பிட்சில் திடீர் எழுச்சி இங்கிலாந்துக்கு இன்னும் கவலையளிக்கவே செய்யும். காரணம் லார்ட்ஸ் பிட்ச் இன்னமும் கூட வறண்ட பிட்சாகவே இருக்கும். அலிஸ்டர் குக், எப்போதும் எந்த வேகப்பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற சிந்தனையிலிருந்து தற்போது அஸ்வினிடம் விக்கெட் கொடுக்காமல் இருப்பது எப்படி என்ற புதிய குழப்பத்தில் ஆட்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் இன்னொரு சாதக அம்சம் என்னவெனில் நம் பேட்டிங்கை தொடர்ந்து நெருக்கடியிலும் அழுத்தத்திலும் வைத்திருந்ததே. விராட் கோலி இன்னமும் கூட ஆண்டர்சனை தன்னம்பிக்கையுடன் ஆடுவது போல் தெரியவில்லை. ஆனாலும் அவரது பொறுமை மற்றும் உறுதி உலகத்தரம் வாய்ந்த இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களை அவருக்கு எட்ஜ்பாஸ்டனில் அளித்தது.

விஜய், தவன், ரஹானே, ராகுல் ஆகியோர் தங்கள் உத்தியை மீண்டுமொருமுறை பரிசீலித்துக் கொள்வது நல்லது. புஜாரா அணிக்குள் வந்தால் நல்லது என்றே இப்போது இந்திய ரசிகர்களுக்குத் தோன்றலாம், ஆனால் ரசிகர்கள் பார்வை வேறு அணி நிர்வாகத்தின் பார்வை வேறு.

ரஹானே நிச்சயம் நிரூபிக்க வேண்டியுள்ளது, தேவையில்லாமல் அவரை உட்கார வைத்து செய்த பரிசோதனைகளினால் அவர் இந்திய பிட்ச்களில் ஸ்பின் பந்து வீச்சில் கூட திணறும் வீரராக மாற்றப்பட்டிருப்பதுதான் நடந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 7 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 10.72 என்பது அவரது தரத்துக்கு மிகவும் இழுக்கானது.

இங்கிலாந்து அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வலது கை பேட்ஸ்மென் 20 வயது ஆலி போப் நாளை ஆடுவார் என்பது ஏறக்குறைய ஊர்ஜிதமாகி உள்ளது. இந்திய அணி பவுலர்கள் உண்மையில் பயப்பட வேண்டியது ஜானி பேர்ஸ்டோ என்ற அபாய வீரரின் பேட்டிங்கில்தான். விரைவில் எதிரணியிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்வார்.

ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவன் தேவையா?

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு அடுத்த படியாக அதிக ரன்களை எடுத்தவர் பாண்டியா என்றாலும் அவரது ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சியில்லை. பவுலிங்கில் அவரை விராட் கோலி நம்பவில்லை.

பேசாமல் இவருக்குப் பதிலாக கருண் நாயர் போன்ற கூடுதல் பேட்ஸ்மெனைத் தேர்வு செய்துகொள்ளலாம். பவுலிங்கில் பிட்ச் வறண்டு காணப்பட்டால் உமேஷ் யாதவ்வை தூக்கி விட்டு குல்தீப் அல்லது ஜடேஜாவைக் கொண்டு வர வாய்ப்புள்ளது.

ஷிகர் தவண் மீது அவர் ஏதோ சேவாக் போல் நம்பிக்கை வைப்பது வீணே. எப்போது வேண்டுமானாலும் எட்ஜ் ஆகும் அவரது கால் நகர்த்தல்கள் சர்வதேச உயர்தர பந்து வீச்சுக்குப் பொருத்தமானதாக இல்லை.

ஆனால் நாம் என்ன மாற்றமெல்லாம் வேண்டும், விரும்பத்தக்கது என்று கூறுகிறோமோ அதையெல்லாம் கோலி ஒரு போதும் கவனிக்க மாட்டார், மாறாத அதே அணியுடன் கூட நாளை களமிறங்கலாம். கோலியின் ஸ்டைல் என்னவெனில் எப்போது மாற்றம் தேவையோ அப்போது செய்ய மாட்டார், எப்போதெல்லாம் மாற்றம் தேவையில்லையோ அப்போதெல்லாம் மாற்றம் செய்வார். கேட்டால் இது என் ஸ்டைல் என்பார். ஆகவே அதே அணியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா 4 கேட்ச்களை விட்டன. இதனால் இந்தியாவுக்குக் கூடுதலாக 154 ரன்களும் இங்கிலாந்துக்கு கூடுதலாக 86 ரன்களும் கிடைத்தன.

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம் என்று ஆடுவதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவர், “பெரிய அளவில் நாங்கள் சிறப்பாக ஆடாமலேயே நெருக்கடியிலும் வெற்றி வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம்” என்று கூறியது இங்கிலாந்து அணி குறித்த அவரது கருத்தல்ல, மாறாக, இந்திய அணியைப் பற்றிய கருத்தாகும், அதாவது, “இந்திய அணி எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் எப்படியாவது அவர்களே தோற்று விடுவார்கள்” என்று கூறுவது போல் அவர் சுற்றிவளைத்து மறைமுக அர்த்தத்தில் இடக்கரடக்கலாகத் தெரிவிப்பது போல்தான் நமக்குப் படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article24634993.ece

Link to comment
Share on other sites

ஒரு தோல்வி என்றவுடனேயே முடிவு கட்டி விடாதீர்கள்; பிரச்சனை உத்தி அல்ல; மனரீதியானது: விராட் கோலி

kohli

படம். | ஏ.எஃப்.பி.

முதல் டெஸ்ட் தோல்வியையடுத்து உடனே அணியைப்பற்றி முடிவு கட்டிவிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அனுதாபிகளை கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை லார்ட்ஸில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்யும் நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

 

இந்நிலையில் டெஸ்ட்டுக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:

“நாம் உடனடியாக அணியைப் பற்றி விரைவில் தீர்ப்புக்குத் தாவி விட வேண்டாம், ஒரு அணியாக நாம் பொறுமை காப்போம். தோல்விகளில், பேட்ஸ்மென் தோல்விகளில் எந்த ஒரு வகைமாதிரியையும் தொடர்ச்சியையும் நாங்கள் பார்க்கவில்லை. விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் பிரச்சனை, இது உத்தி ரீதியான தவறுகளல்ல, இது மனரீதியான பிரச்சனையே.

முதல் 20-30 பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான திட்டமிடுதல் வேண்டும். இந்தத் திட்டம் ஆக்ரோஷமாக ஆடுவதாக எப்போதும் இருக்க வேண்டியத் தேவையில்லை. இங்கு நமக்கு நிதானமும் பொறுமையுமே அவசியமே தவிர ஆக்ரோஷம் அல்ல.

வெளியிலிருந்து பார்க்கும்போது தோல்வி மோசமானதாகத் தெரியும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்தில் ஆடுகிறோம், இங்கு எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். ஆனால் பிழைகளை குறைக்க வேண்டும், இதைத்தாண்டி நாங்கள் பெரிதாக கவலையடைய வேண்டியதில்லை.

ஒரு கேப்டனாக நான் என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன். நிர்வாகத்திடமிருந்தும் நிறைய பின்னூட்டங்கள், ஆலோசனைகள் வந்தவண்ணம்தான் உள்ளன. சிலர் ஆட்டத்தை பார்க்கும் விதம் வேறு மாதிரி இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான கருத்துக்கள் இருக்கும் குறிப்பாக கேப்டன்சி பற்றி, ஆனால் நான் வீரர்களுடன் நல்ல தொடர்புறுத்தலில்தான் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.

இரண்டு ஸ்பின்னர்கள்?

2 ஸ்பின்னர்களை அணியில் எடுப்பது ஆர்வமான சிந்தனை, பிட்சில் கொஞ்சம் நடந்து பார்த்தேன், கடினமாகவும் வறண்டும் உள்ளது. ஆனால் நல்ல புற்களும் முளைத்துள்ளன. புற்கள் இருந்தால்தான் பிட்ச் உடையாமல் இருக்கும் இல்லையெனில் உடைவதைத் தடுப்பது கடினமாக இருக்கும்.

2 ஸ்பின்னர்கள் ஆர்வமூட்டும் ஒரு சிந்தனைதான், ஆனால் அணியின் சமச்சீர் தன்மையைப் பொறுத்தே அந்த முடிவை எடுக்க முடியும். ஆனால் 2 ஸ்பின்னர்கள் ஆடும் முடிவு நிச்சயம் மனதில் உள்ளது.

ரன்கள் எடுக்கும் போது மட்டுமல்ல வெற்றி பெற முடியாத போதும் சரி ரன்களை எடுக்க முடியாத போதும் சரி கொஞ்சம் வேதனையாகவே இருக்கும்.

நான் ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி பெற முடியவில்லையே என்று நான் கருதவில்லை. நாங்கள் போட்டிகளை வெல்வதில்லை என்ற பொதுப்படையான வேதனையாகவே அது இருக்கும். நான் ரன்கள் எடுக்கவில்லை ஆனால் அணி வெற்றி பெறுகிறது எனும்போது எனக்கு முற்றிலும் வேறு உணர்வு ஏற்படும். அணியாக எந்த விளையாட்டை ஆடும்போதும் இது இயற்கையான உணர்வே.

நான் என் பேட்டிங் மூலம் என்ன சாத்தியமாகுமோ அதனை முயன்று ஆடுகிறேன். இது எப்போதும் நடக்காது, ஆனால் அது நடக்கும்போது நான் அதிகம் பங்களிப்பு செய்யவே விரும்புவேன். நெருக்கமாக வந்து தோற்றது துரதிர்ஷ்டவசமானது. எனவே எப்படி வெற்றியை அடைவது என்பது மட்டுமே நாங்கள் சிந்திக்க வேண்டியது. தோற்பதில் எந்த ஒரு தொடர்ச்சியான மாதிரியை நான் காணவில்லை.

ஒரு குறிப்பிட்ட பவுலரை இப்படித்தான் ஆடுவது என்பது தயாரிப்பின் மூலம் வருவது, என்னுடைய தயாரிப்பு மற்ற வீரர்களை விட வித்தியாசமானதாக இருக்கும். வீரர் களமிறங்கும் போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24635633.ece

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்- ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

அ-அ+

இங்கிலாந்து - இந்தியா இடையிலான லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. #ENGvIND

 
 
லார்ட்ஸ் டெஸ்ட்- ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது. டாஸ் சுண்டப்படுவதற்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

201808092142357154_1_ENGvIND002-s._L_styvpf.jpg

அதன்பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/09214236/1182799/The-entire-first-day-play-has-been-abandoned-at-Lords.vpf

Link to comment
Share on other sites

தவான், உமேஷுக்குப் பதில் புஜாரா, குல்தீப்! - லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து ஃபீல்டிங் தேர்வு

 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் புஜாரா, குல்தீப் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

60_15209.jpg

Photo Credit: Twitter/@bcci

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20ஐ கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இழந்தது. இதன் பின்னர், 5 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நழுவவிட்டது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே, நேற்று காலை முதலே லேசான மழை தொடர்ந்தது. இதனால், டாஸ் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

 

 

இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்று மழை பெய்யாததால் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக சொதப்பலாக ஆடிவந்த ஷிகர் தவான் மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். 

 

https://www.vikatan.com/news/sports/133587-england-wins-the-toss-and-elects-to-bowl-first-in-the-2nd-test-at-lords.html

Link to comment
Share on other sites

காப்பாற்றிய மழை; மோசமான தொடக்கம்: நகராத கால்கள்; விஜய் பவுல்டு, ராகுல் எட்ஜ்

 

 
vijay%20bowledjpg

ஆண்டர்சன் பந்தில் முரளி விஜய் பவுல்டு. | கெட்டி இமேஜஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது, ஆண்டர்சன் இந்திய தொடக்க வீரர்களின் நகராத கால்களைப் பயன்படுத்தி விஜய், ராகுலை வீழ்த்தினார்.

11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று கடும் நெருக்கடியில் மழை வந்து இந்திய அணியைக் காப்பாற்றியுள்ளது. புஜாரா 19 பந்துகளில் 1 ரன்னுடனும், விராட் கோலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் என்று மழையால் தற்காலிக நிம்மதியடைந்துள்ளது.

 

மிகவும் சாதாரணமான ஒரு உத்தியைத்தான் ஆண்டர்சன் முதல் ஓவரில் கடைபிடித்தார், 4 பந்துகள் 4வது ஸ்டம்ப் லைனில் வீசி வெளியே ஸ்விங் செய்தார். அடுத்த பந்து ஆண்டர்சன் வீசிய பந்தின் தையல் இன்ஸ்விங்கருக்கானது, ஃபுல் லெந்தில் பிட்ச் ஆனது, பந்து உள்ளே வருவதாக ஏமாந்து மட்டையைத் தாமதமாக இறக்கியதோடு தாமதமாக பிளிக்‌ஷாட்டையும் முயன்றார், ஆனால் பிட்ச் ஆன பந்து லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுல்டு ஆனது. விஜய் டக் அவுட் ஆனார். கால்கள் சுத்தமாக நகரவில்லை.

ராகுலுக்கு பிராட் வீசிய ஓவரில் ஒரு பந்து கட் ஆகி உள்ளே வர கணிப்பில் தவறிழைத்து பந்தை ஆடாமல் ராகுல் விட்டுவிட ஸ்ட்ம்புக்கு அருகில் சென்றது. அடுத்த பந்து அவுட்ஸ்விங்கர் மட்டையைத் தொங்க விட்டு பீட்டன் ஆனார். அடுத்த ஓவரில் புஜாராவை அவுட்ஸ்விங்கரில் பீட் செய்தார் ஆண்டர்சன். பிறகு ராகுல், பிராடை ஒரு அபார கவர் ட்ரைவ் அடித்தார், ஆனால் இது பொறிதான். பிறகு ஆண்டர்சன் ராகுலின் கால்காப்பைக் குறைவைக்க தெளிவான பிளிக் ஷாட் பவுண்டரி ஆனது. அடுத்து பிராட் பந்தில் தடுமாற்றத்துடன் ஆடி மட்டை உள் விளிம்பில் வாங்கினார்.

அடுத்த ஆண்டர்சன் ஓவரில் மட்டையை தேவையில்லாமல் காலை நகர்த்தாமல் கொண்டு சென்ற ராகுல் எட்ஜ் ஆகி வெளியேறினார். கோலி இறங்கும் போது மைதானம் முழுதுமே ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர்.

கோலி தன் முதல் ரன்னை எடுக்க மழை வந்தது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்தியா தடவல் தொடக்கம்.

https://tamil.thehindu.com/sports/article24653984.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

மழை வருவதற்குள் அவசரம்: கிரீசில் புஜாராவின் வேதனையைத் தீர்த்து வைத்த ரன் அவுட்

 

 
pujara%20run%20out

ரன் அவுட் ஆகி வெளியேறிய புஜாரா. | கெட்டி இமேஜஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மழைக்கு இடையே சிறிது நேரம் கிடைத்து ஆட்டம் தொடங்கப்பட்ட போது புஜாரா தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டார்.

கோலிதான் அவரை இழுத்துவிட்டார். இவர் ஓடியிருக்கக் கூடாது, பந்து மட்டையில் பட்டதும் ஆர்வமிகுதியில் ஓடிவிட்டார் பாவம்.

 
 

1 ரன்னில் அவர் ரன் அவுட் ஆன உடனேயே மழை கொஞ்சம் கனமாக விழ ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இப்படியே ஆடினால் 2 முழு நாட்கள் ஆட்டமிருந்தாலே போதும் தோற்க வாய்ப்பு ஏற்படும்.

24 பந்துகளைச் சந்தித்த புஜாரா தட்டுத்தடுமாறினார், ஆண்டர்சன் இவரைப் படுத்தி எடுத்தார், அவுட் ஸ்விங்கர்கள் மட்டையைக் கடந்து செல்ல இன்ஸ்விங்கர்கள் இவர் உடலை இரண்டாக்கி பின்னால் சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னிங்ஸின் 9வது ஓவரை ஆண்டர்சன் வீச புஜாராவுக்கு ஒரு பந்து அதிசயமாக மட்டையில் பட பந்து பாயிண்ட் திசைக்குச் சென்றது, ஆஹா புஜாரா மட்டையில் பட்டுவிட்டது, இப்போது ஓடினால்தான் உண்டு என்று கோலி ரன்னுக்கு அழைக்க, புஜாரா பாதிதூரம் கடந்து ரன்னர் முனை நோக்கி ஓடி வர அங்கிருந்து வந்த கோலி திடீரென ரன் வேண்டாம் என்று திரும்பவும் தன் முனைக்கு ஓடிவிட்டார்.

புஜாரா நடுவழியில் திக்குத் தெரியாத நபர் போல் நின்றார், ரன் அவுட் ஆனார். நிச்சயம் கோலிதான் இந்த ரன் அவுட்டுக்குக் காரணம், அழைத்து விட்டு இழுத்து விட்டார்.

ஆனால் புஜாரா ஆடியது காலம் விரைவில் பதில் சொல்லும் என்பது போல்தான் இருந்தது, எப்போது வேண்டுமானாலும் அவர் ஒன்று பவுல்டு அல்லது எல்.பி.ஆகுவது போல் கிரீசிற்குள் நின்று கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்.

இவரை ரன் அவுட் செய்தது கோலியின் கோபத்தை உருவாக்கியிருந்தால் நிச்சயம் தன் தரப்பில் ஒரு இன்னிங்ஸை ஆடி ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

https://tamil.thehindu.com/sports/article24657471.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Live
2nd Test, India tour of Ireland and England at London, Aug 9-13 2018
Day 2 - Session 3: England won the toss and elected to field
  •  
 
Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது

 
அ-அ+

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது. #ENGvIND

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 
 
இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது
 
அதன்பின் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
201808110017077665_1_eng-3._L_styvpf.jpg
 
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது.
 
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆண்டர்சன், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/11001708/1183067/india-all-out-for-107-in-first-innings-at-lords-test.vpf

Link to comment
Share on other sites

உசைன் போல்ட் ஆக முடியாது, ஆனால் இன்சமாம் உல் ஹக் ஆகாமல் இருக்கலாமே: புஜாரா ரன் அவுட்டில் எழுந்த சிரிப்பலை

 

 

 
pujarajpg

புஜாரா பரிதாப ரன் அவுட். | ஏ.எப்.பி.

ரவிசாஸ்திரியிடம் புஜாராவின் ரன் அவுட் பழக்கம்பற்றி சமீபத்தில் கேட்ட போது, ‘நாங்கள் அவரை உசைன் போல்ட்டாக இருக்க விரும்பவில்லை, புஜாராவாக இருந்தால் போதும்’ என்றார்.

ஆனால் ஜனவரியில் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறை ரன் அவுட் ஆனார். ஆகவே இவர் உசைன் போல்ட்டாக இருக்க வேண்டாம் என்று ரவிசாஸ்திரி நக்கலாக கூறினாலும் உசைன் போல்ட்டெல்லாம் டூ மச், புஜாரா பாகிஸ்தான் ரன் அவுட் புகழ் இன்ஜமாம் உல் ஹக்காக மாறாமல் இருக்கலாமே என்றுதான் கிரிக்கெட் ரசிகர்கள் அபிப்ராயப் படுகின்றனர்.

 
 

நேற்று லார்ட்ஸ் இருமுறை சிரிப்பலையில் ஆழ்ந்தது. கொஞ்சம் மழை பெய்ததையடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு வெறியுடன் காத்திருக்கும் போது விராட் கோலி, புஜாரா மைதானத்தை விட்டு வெளியே சென்ற சமயம் திடீரென மழை நிற்க சூரியனும் வெளியே வந்தது, உடனேயே நடுவர்கள் புஜாரா, கோலியை திரும்பிவருமாறு செய்கை செய்தனர். அப்போது லார்ட்ஸ் ரசிகர்கள் சிரிப்பலைகளை ஏற்படுத்தினர்.

பிறகு மீண்டும் ஆண்டர்சன் பந்து ஒன்று புஜாரா மட்டையில் அதிசயமாகப் பட பந்து பாயிண்டில் சென்றது. 5 ஸ்லிப்களில் கடைசி ஸ்லிப்பில் ஆலி போப் நின்று கொண்டிருந்தார், பாயிண்டில் லேசாகத் தட்டிவிட்ட பந்துக்கு தயங்காமல் ஒற்றைக் குறிக்கோளுடன் ஓடியிருந்தால் ஒரு ரன் கிடைத்திருக்கும், ஆனால் கோலி, புஜாரா இருவரும் கபடி ஆட, போப் பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய கோலிக்கு கொஞ்சம் அருகில் ரன்னர் முனையில் இருந்தார் புஜாரா. ரன் அவுட்.

அவர் ரன் அவுட் ஆனவுடன் பெருமழை பெயதது, புஜாராவின் துரதிர்ஷத்தை நினைத்தா, அல்லது ரன் அவுட் ஆன விதத்தை நினைத்தா என்று தெரியவில்லை, லார்ட்ஸ் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

ரவிசாஸ்திரி இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

லார்ட்ஸில் இந்திய அணி தோற்றால் அடுத்த 3 மைதானங்களும் இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராடுக்கு பிரமாதமான மைதானங்களாகும், இந்த டெஸ்ட்டை விட்டால் இந்திய அணி எழும்புவது கடினம், ஆனால் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனால் என்ன செய்வது? என்பதே தற்போது இந்திய அணி நிர்வாகத்தின் கவலையாக இருக்கும்.

https://tamil.thehindu.com/sports/article24663435.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து திணறல்; 4விக். இழப்புக்கு 89; தவறான கணிப்பில் 2 ரிவியூக்களையும் இழந்தது

 

 
joe%20root

ஷமியிடம் ஆட்டமிழந்து வெளியேறும் ஜோ ரூட். | ஏ.பி.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

மீதமுள்ள 6 விக்கெட்டுகளை குறைந்தது அடுத்த 50 ரன்களில் இந்திய அணி சுருட்ட வேண்டும். பிறகு 2வது இன்னிங்ஸில் ஒரு 280-90 ரன்களை எடுத்து இங்கிலாந்தை களமிறக்கினார்ல் 4வது இன்னிங்சில் இங்கிலாந்து தோல்வி அடைய வாய்ப்புள்ளது.

 

இங்கிலாந்து அணியில் ஜெனிங்ஸ் (11), அலிஸ்டர் குக் (21), ரூட் (19), ஆலி போப் (28) ஆகியோர் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினர். இந்திய அணியில் மொகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மிக முக்கிய விக்கெட்டான அலிஸ்டர் குக்கை வீழ்த்த ஹர்திக் பாண்டியா அறிமுக வீரர் போப் விக்கெட்டை எல்.பி.முறையில் கைப்பற்றினார், மொகமது ஷமி ஜெனிங்ஸ், ரூட் இருவரையும் அற்புதமாக ஒர்க் அவுட் செய்து எல்.பி.யில் வீட்டுக்கு அனுப்பினார்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 15 ரன்கள் விக்கெட் இல்லை, மிக அதிசயமாக இந்தியாவின் கடந்த போட்டியின் சிறந்த பவுலரான அஸ்வின் இன்னமும் கொண்டு வரப்படவில்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் வீழ்த்தும் அஸ்வினைக் கொண்டுவராமல் குல்தீப் யாதவ்வைக் கொண்டு வந்தது நல்ல கேப்டன்சிக்கு அழகாகத் தெரியவில்லை மாறாக தன் தேர்வு குறித்து நிரூபிக்கும் ஈகோத்தனமான முடிவு என்ற ஐயம் எழுகிறது.

இங்கிலாந்து இன்று காலை தொடங்கிய போது இஷாந்த் சர்மா, மொகமது ஷமிக்கு சரியாக லெந்த் கிடைக்கவில்லை, லெக் திசையிலும் ஷார்ட் பிட்ச் ஆகவும் வீசினர், இதனால் பவுண்டரிகள் வந்தன, ஆனால் அதன் பிறகு மிக அருமையாக நிலைபெற்றனர். மொகமது ஷமி ஆண்டர்சனுக்கு நேர் மாறாக, இன்ஸ்விங்கர்களாக வீசி பிறகு அவுட் ஸ்விங்கர்களை வீசினார், குறிப்பாக அவர் பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து பிறகு சில பந்துகளை வெளியே ஸ்விங் செய்தார். சில வேளைகளில் அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி ஃபுல் லெந்தில் இன்ஸ்விங்கரையே வீசினார், இதனால்தான் ஜெனிங்ஸ், ஜோ ரூட் ஆட்டமிழந்தனர், பந்துகள் ஒரு முனையில் சில சமயம் தாழ்வாக வருவதும் நடைபெறுகிறது. ஜோ ரூட் எல்.பி.ஆன பந்து தாழ்வான பந்து.

அணித்தேர்வில் மீண்டும் கோலி சோடைபோயுள்ளாரோ என்று தோன்றுகிறது, உமேஷ் யாதவ் இருந்திருந்தால் இந்தப் பிட்சில் உதவிகரமாக இருக்கும் போல் தெரிகிறது, ஆனால் குல்தீப் யாதவ்வை தேர்வு செய்துள்ளார். பார்ப்போம். பிட்சில் ஸ்பின்னர்களுக்குக் கொஞ்சம் பவுன்ஸ் இருப்பது போல் தெரிகிறது.

ஜெனிங்ஸ் முதலில் 11 ரன்களில் ஷமியின் கிட்டத்தட்ட யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், போகிற போக்கில் ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். அலிஸ்டர் குக் அபாரமான 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களில் அஸ்வின் வராத தைரியத்தில் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் இஷாந்த் சர்மா ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஸ்டம்புக்கு நேராக வீசி வெளியே எடுக்க குக்கின் நிலையே மாறிப்போனது, ஸ்கொயர் ஆனார். கொஞ்சம்தான் ஸ்விங் என்றாலும் துல்லிய லெந்த்தில் எட்ஜ் எடுக்க கார்த்திக் கையில் கேட்ச் ஆனது.

ஜோ ரூட், ஆலி போப் இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 45 ரன்களைச் சேர்த்து நன்றாகவே ஆடினர். 38 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த போப் ஆஃப் ஸ்டம்பில் பாண்டியா வீசிய குட்லெந்த் பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு வர கால் காப்பில் வாங்கி வெளியேறினார், இவரும் தேவையில்லாமல் ரிவியூ ஒன்றை விரயம் செய்தார். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் கேப்டன் ரூட் 19 ரன்களில் ஷமியின் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். பந்து அவர் எதிர்பார்த்த உயரம் வராமல் தாழ்வாக வர எல்.பி.ஆனார். இங்கிலாந்து 89/4. ஜானி பேர்ஸ்டோ 4 ரன்களில் கிரீசில் உள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24666171.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

1.png&h=42&w=42

197/5 * (48.3 ov)
 
Link to comment
Share on other sites

 

லார்ட்ஸ் டெஸ்ட்: சீட்டுக்கட்டுகள் போல சரிந்த இந்திய அணியின் விக்கெட்டுகள்! (விடியோ)

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6

 
அ-அ+

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்சின் அபார சதத்தால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
 
2ம் நாளான நேற்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
 
201808112335396139_1_shami-2._L_styvpf.jpg
 
இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதலில் ஷமியின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
 
அதன்பின், பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோவ் 93 ரன்களில் அவுட்டானார்.
 
மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இங்கிலாந்து அணி 81 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் கரன் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/11233539/1183303/lords-test-3rd-day-england-3576-against-india.vpf

Link to comment
Share on other sites

லார்ட்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச் -வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

 

இந்திய கிரிக்கெட் அணியினர் உண்ணும் உணவுகளின் வகைகளை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

உணவு

PhotoCredits: Twitter/@bcci

 

 

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் மிகவும் போராடி இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

 

மெனு

PhotoCredits: Twitter/@bcci

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியமான பிசிசிஐ தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக இந்திய அணியினரின் அன்றைய உணவு வகைகளின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை பார்க்கும் அனைவரது வாயிலும் கண்டிப்பாக எச்சில் ஊறும் என்பது உண்மை. அந்த அளவுக்கு உள்ளது கிரிக்கெட் வீரர்களின் உணவு பட்டியல். ஸ்டஃபுடு லாம்ப், ரோஸ்டர்டு ஸ்டோன் பாஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் கார்போனரா பாஸ்தா, கிரில்டு சிக்கன், தால் மக்னி போன்ற உணவுகளுடன் இரால், உருளைகிழங்கு, பட்டாணி, சோளம், கேரட், ஆகியவை கலந்த சாலட், மேலும் ஆப்பிள், ராஸ்பெர்ரி, ஆலமண்ட், கொண்ட பழங்கள் சாலட் மற்றும் வெரைட்டி ஐஸ் கிரீம் போன்றவை அந்த மெனுவில் இடம்பெற்றுள்ளன. 

 

 

இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச்

PhotoCredits: Twitter/@bcci

இந்த மெனுக்கள் சில உணவு பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இதற்கு பல எதிர்மறையான கருத்துகளும் எழுந்துள்ளன. இவ்வளவு உணவை உண்பதால் தான் வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த மெனுவுக்கு தொடர்ந்து லைக்குகளும் குவிந்துகொண்டே தான் வருகின்றன.
 

 

https://www.vikatan.com/news/sports/133729-bcci-share-a-lunch-menu-of-team-india-in-twitter.html

Don't tell me you go out to bat after a lunch like this!

Delicious and how.

Lunch menu for Day 1 here at @HomeOfCricket.#ENGvIND pic.twitter.com/WomcJwF4U8

 

Will they be able to play at all after eating that stuff. Just wondering though.

Link to comment
Share on other sites

விராட் கோலியை அவுட்டாக்க வானிலை கைக்கொடுத்தது - கிறிஸ் வோக்ஸ்

 
அ-அ+

விராட் கோலியை வீழ்த்தியதுடன், சதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த கிறிஸ் வோக்ஸ், வானிலை கைகொடுத்தது என்று தெரிவித்துள்ளார். #ENGvIND

 
 
 
 
விராட் கோலியை அவுட்டாக்க வானிலை கைக்கொடுத்தது - கிறிஸ் வோக்ஸ்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்தது. அடிக்கடி மழை விட்டுவிட்டு பொழிய, மைதானத்தை சுற்றி மேகமூட்டாக காணப்பட, வானிலையை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தார்கள்.

இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன், பிராட் பந்துகளை சமாளித்த விராட் கோலி கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவை ஆட்டமிக்க செய்த கிறிஸ் வோக்ஸ், முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஏறக்குறைய போட்டியை இந்தியாவிடம் இருந்து பறித்து விட்டார்.

இந்நிலையில் விராட் கோலியை வீழ்த்த வானிலை நன்றாக ஒத்துழைத்தது என்று கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இந்திய பேட்டிங் வரிசையில் அவர்தான் ராஜா.

201808121511439232_1_woakes001-s._L_styvpf.jpg

2-வது நாள் ஆட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பந்தை நன்றாக ஸ்விங் ஆனது. விராட் கோலியை முன்கூட்டியே அவுட்டாக்க இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதினேன். அதன்படி நடந்தது.

ஒருமுறை அவர் களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின் அவுட்டாக்குவது கடினமாகிவிடும். ஆகவே, அவரை வீழ்த்தியன் மூலம் மகிழ்ச்சியடைந்தேன்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12151144/1183401/really-good-opportunity-get-virat-Kohli-chris-Woakes.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.