Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

இந்தியா தோற்றதற்கு கோலிதான் பொறுப்பேற்க வேண்டும்: நாசர் ஹுசைன் அதிரடி

 

 
kohli

படம். | ஏ.பி.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கோலி, அஸ்வின், இசாந்த் சர்மா ஆகியோர் உயர்தரமாக ஆடி வெற்றிக்கு நெருங்கி வந்து தோற்றுள்ள நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கோலியைப் புகழ்ந்து கூறினாலும் கேப்டன்சியில் கோலி சோடைபோனதற்காக இந்திய தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸில் நாசர் ஹுசைன் கூறியதாவது:

 

இந்தப் போட்டியில் கோலி ஒரு பிரமாதமான ஆட்டத்தை ஆடினார், அதனால் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். டெய்ல் எண்டர்களுடன் ஆடி இந்திய அணியை டெஸ்ட் மேட்சிற்குள் கொண்டு வந்தார்.

ஆனால் அதே வேளையில் தோல்விக்கு அவர் பொறுப்பும் ஏற்க வேண்டும், காரணம் இங்கிலாந்து 87/7. கரனும் ஆதில் ரஷீத்தும் உள்ளனர் ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினை ஒரு மணி நேரம் ஆட்டத்தில் காணவில்லை.

இந்தியா அப்போது கட்டுப்பாட்டை இழந்தது. எனவே கோலி தன் கேப்டன்சி குறித்து திரும்பிப் பார்த்து சிந்திக்க வேண்டும். இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வினின் சராசரி 19. சாம் கரன் என்ற 20 வயது இளம் இடது கை வீரர் கிரீசில் இருக்கிறார், அவரை ஏன் பவுலிங்கிலிருந்து அகற்ற வேண்டும்?

இவ்வாறு கேள்வி எழுப்பினார் நாசர் ஹுசைன்.

https://tamil.thehindu.com/sports/article24607564.ece

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

பேட்ஸ்மென்களை நீக்குவதற்கு முன்பாக போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும்: கங்குலி கருத்து

 

 
ganguly

கங்குலி, விராட் கோலி. | படம்: ஏ.எப்.பி.

மிகப்பெரிய, உலகத்தரம் வாய்ந்த இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற விராட் கோலியிடமிருந்து கேப்டனாக தான் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

புஜாராவை உட்காரவைத்ததை நேரடியாகக் குறிப்பிடாமல், கங்குலி இன்ஸ்டாகிராமில் கூறும்போது, பேட்ஸ்மென்களை நீக்கும் போது போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது:

கேப்டனாக இருந்தால் வெற்றி பெற்றால் எப்படி வாழ்த்துகிறார்களோ அதே போல் தோல்வியடைந்தால் விமர்சிக்கவே செய்வார்கள். கோலி மீது ஒரு விமர்சனம் என்னவெனில் பேட்ஸ்மென்களை நீக்கும் முன் அவர்களுக்கு சீராக போதிய வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோமா என்பதை அவர் பரிசீலிக்க வேண்டும்.

கேப்டன் தான் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இது அவர் அணி, எனவே அவர்தான் வீரர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அவர்களுடன் அமர்ந்து தான் செய்ய முடியும் போது அவர்களாலும் முடியும் என்று ஊக்கமளிக்க வேண்டும்.

அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து அணியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று கூறி அவர்கள் மனதில் இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும் விராட் கோலி. எப்பப்பார்த்தாலும் வீரர்களை நீக்குவதும் எடுப்பதுமாக இருந்தால் அவர்கள் மனதில் பயம் வந்து சுதந்திரமாக ஆட முடிவதில்லை. இதனாலேயே சமீப காலங்களில் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது.

கடந்த காலங்களின் சிறந்த அணிகளின் வெற்றிக்கு ஒரு காரணத்தை நாம் அடையாளம் காண முடியும். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று எதுவாக இருந்தாலும் அல்லது இந்திய அணி (2007-ல் இங்கிலாந்தில் வென்றது)ஆக இருந்தாலும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் ஆடினர். எனவே ஓரிரண்டு போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலும் அடுத்த போட்டிகளில் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. முதல் தர கிரிக்கெட்டில் ஆடி 150 ரன்களைக் குவித்தாலும் அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடுகாணாது. விராட் கோலி தவிர மற்ற வீர்ர்கள் யாரும் 3 வடிவங்களிலும் ஆடுவதில்லை.

இவ்வாறு கூறினார் கங்குலி.

கங்குலி கூறியதற்கான காரணம்:

தென் ஆப்பிரிக்காவில் 2 இன்னிங்ஸ்கள் தவண் சரியாக ஆடாததால் உடனே ராகுல் கொண்டு வரப்பட்டார். ரஹானே இந்தியாவின் துணைத்தலைவர் ஆனால் 2 டெஸ்ட்களுக்கு உட்கார வைக்கப்பட்டார், 3வது டெஸ்ட் போட்டிக்குக் கொண்டு வரப்பட்டார். முன்னதாக இலங்கைக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கொல்கத்தாவில் முதல் டெஸ்ட்டுக்கு விஜய் இல்லை. பிறகு 2வது டெஸ்ட் போட்டிக்கு விஜய் வந்தார். எட்ஜ்பாஸ்டனில் புஜாரா நீக்கப்பட்டு 3 தொடக்க வீரர்கள் அணியில் இருந்தனர்.

இதற்கு முன்னதாகவும் புஜாரா நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டாப் 3 என்பதை அளவுக்கு அதிகமாக யோசித்து விஜய், தவண், புஜாரா என்று சீராக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பது கங்குலியின் நியாயமான குற்றச்சாட்டாகவே படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article24608260.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் அதிரடி மாற்றம்: மலானுக்கு பதிலாக போப்;ஸ்டோக்ஸுக்கு பதிலாக வோக்ஸ்

 

 
ben

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ்   -  படம் உதவி: ட்விட்டர்

லண்டன் லார்டஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பேட்டிங்கிலும் சொதப்பி, கேட்ச்களையும் கோட்டை விட்ட டேவிட் மலானுக்கு பதிலாக இளம் வீரர், ஆலிவர் போப் அறிமுகமாகிறார்.

 

முதல் போட்டியில் கலக்கலாகப் பந்துவீசிய பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ் மீது வழக்கு உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2 மாற்றங்களைச் செய்துள்ளது.

முதலாவதாக, பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து, பீல்டிங்கிலும் மோசமாக இருந்த டேவிட் மலானுக்கு பதிலாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் 20வயது வீரர் ஆலிவர் போப் வாய்ப்பு பெற்றுள்ளார்.

டேவிட் மலான் இரு இன்னிங்ஸிலும் முறையே 8, 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார், ஸ்லிப்பில் பீல்டிங் செய்து 3 கேட்சுகளை கோட்டைவிட்டார் என்பதால், அவருக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் கல்தா கொடுத்துள்ளது.

அதேசமயம் புதுமுகமாக அறிமுகமாகும் ஆலிவர் போப் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் 684 ரன்கள் சேர்த்துள்ளார். இது 2-வது அதிகபட்சமாகும். மேலும், வலதுகை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய வீரர் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொண்டு துவம்சம் செய்ய இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

Woakes-Chrisjpg

கிறிஸ் வோக்ஸ்

 

சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டல் நகரில் ஒரு மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டார். அது தொடர்பாக அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஒழுக்கக்குறைவான சம்பவத்தால், இங்கிலாந்து அணியிலும் சில போட்டிகளுக்கு ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நாளை வருகிறது. விசாரணை வேறு ஒரு தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டால், 2-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்படுவார். அல்லது விசாரணை நடந்து தண்டனை ஏதும் அளிக்கப்படும் பட்சத்தில் கிறிஸ் வோக்ஸ் அணியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24608662.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

கோலியை வீழ்த்த புதிய வியூகம்; அழுத்தம் மறைமுகமாக வரும்: கள யுத்தியை வெளிப்படையாகக் கூறிய இங்கிலாந்து பயிற்சியாளர்

 

 
trevor-bayliss-en

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ்   -  படம்: கெட்டி இமேஜஸ்

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள 2-வது டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கமாட்டோம், மாறாக வேறுயுத்தியில் கோலிக்கு அழுத்தம் இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் கேப்டன் விராட் கோலியைத் தவிர அனைவரும், இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு இரையானார்கள். விராட் கோலி மட்டுமே இங்கிலாந்து வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

 

இதற்கிடையே இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலானுக்குப் பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2-வது போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் எப்படி கள யுத்தியை செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டும் சிறந்த பேட்ஸ்மேனாக இல்லாமல் இருந்திருந்தால், அவரை எப்போதோ எங்கள் வீரர்கள் ஆட்டமிழக்கச் செய்திருப்போம். முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் விராட் கோலியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. அதை வர்ணிக்க முடியாது.

ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் எங்கள் யுத்தியை மாற்றிக்கொள்ள இருக்கிறோம். விராட் கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நாங்கள் கொடுக்கப் போகிறோம்.

அவர்களுக்குப் பந்துவீச்சில் நாங்கள் கொடுக்கும் நெருக்கடியால், அவர்கள் விக்கெட்டை எளிதாக இழப்பார்கள். அந்த அழுத்தம் முழுவதையும் கேப்டன் கோலி மீது சுமத்துவார்கள். இதனால், கோலிக்கு அழுத்தம் அதிகரிக்கும், விக்கெட்டை இழப்பார். இதுதான் எங்கள் யுத்தியாகும்.

மற்ற வீரர்களுக்கு மட்டுமே நெருக்கடி இருக்கும். விராட் கோலிக்கு மற்ற வீரர்களால் அழுத்தம் ஏற்படும்.

baylisjpg
 

முதல் டெஸ்ட்டின் இரு அணிகளின் 4 இன்னிங்ஸ்களிலும் லெக் சைட், ஆப் சைட், மிட் ஆப் என அனைத்துப் பகுதிகளிலும் விக்கெட்டுகளை வீரர்கள் இழந்தார். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு அசராமல் பேட் செய்தவர் கோலி. இந்தப் பந்துவீச்சில் பேட் செய்வது கடினம் எனத் தெரிந்தும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

இந்திய அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு, பந்து வருவதற்கு முன்கூட்டியே பேட்டைக் கொண்டு சென்று தேவையில்லாமல் ஆட்டமிழந்தார்கள். அதுபோன்ற தவறைத் திருத்திக்கொண்டு விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

எங்கள் அணியினரும் சுழற்பந்துவீச்சைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆதலால், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து தீவிரமான பயிற்சி எடுத்து வருகிறோம்.

அஸ்வினின் வலது கை சுழற்பந்துவீச்சை சமாளிக்கத் திறமையான வலதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதால்தான் டேவிட் மலானை நீக்கிவிட்டு ஆலிவர் போப்பை 2-வது டெஸ்ட் போட்டியில் சேர்த்திருக்கிறோம்.

வழக்கு தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் சென்றுள்ளார் என்பதால், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வோஸ் சிறந்த ஆல்ரவுண்டர், வேகப்பந்துவீச்சாளர். வலைப்பயிற்சியில் 14 ஓவர்கள் வரை வீசிவிட்டு, களைப்படையாமல், டி20 போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை படைத்தவர் வோக்ஸ்.

இங்கிலாந்து, இந்திய அணிக்கு ஒரேமாதிரியான பிரச்சினைதான் இருக்கிறது. ஸ்லிப்பில் இருக்கும் பீல்டர்கள் சரிவர கேட்ச்களைப் பிடிப்பதில்லை. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், இந்திய அணியில் ஷிகர் தவண், ரஹானே ஆகியோரும் கேட்சுகளைத்  தவறவிட்டனர். இதையும் வரும் போட்டியில் திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியை 2-வது போட்டியிலும் வீழ்த்த பல்வேறு யுத்திகளோடு களமிறங்குவோம்.''

இவ்வாறு பேலிசிஸிஸ் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24614443.ece

Link to comment
Share on other sites

என்ன செய்யப்போகிறது இந்திய அணி? லார்ட்ஸில் நாளை 2வது டெஸ்ட்

 

 
rahane-kohli

ரஹானே, கோலி, லார்ட்ஸில் வலைப்பயிற்சியில். | ஏ.எப்.பி.

எட்ஜ்பாஸ்டனில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி தோற்றதன் மூலம் நிறைய அனுகூலங்களை பெற்றாலும் இறுதியில் முடிவு தோல்வி என்பது சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி, 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்களுக்கு நிச்சயம் இருதயம் உடையும் அனுபவமாகவே இருக்கும்.

ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணி முன்னெப்போதும் இல்லாத தீவிரத்துடன் ஆடுகிறது, அதனால் தோல்விகள் நிச்சயம் இந்திய அணியை உலுக்கவே செய்யும்.

 

இங்கிலாந்து அணி தன் கேட்ச்களைப் பிடிக்க ஆரம்பித்தால் இந்திய அணியின் தோல்வி இன்னமும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும், அல்லது இனி தீர்மானிக்கப்படும்.

2வது டெஸ்ட் போட்டிக்கு பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய நிம்மதி. ஏனெனில் அவர் மிடில் ஆர்டரைக் காலி செய்து விடும் திறமை கொண்டவர். அவருக்குப் பதில் கிறிஸ் வொக்ஸ் அல்லது மொயின் அலி வரலாம் இந்த ஓட்டையை இந்திய அணி நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்திய அணியும் பீல்டிங்கில் முன்னேற வேண்டியுள்ளது, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண் மட்டும் வாய்ப்புகளை பிடித்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். மேலும் சாம் கரன் என்ற இளம் வீரர் எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடும்போது கேப்டன் விராட் கோலி என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதுதான் நடந்தது.

இந்திய அணிக்குப் பெரிய அனுகூலம் என்னவெனில் பந்து வீச்சு அபாரமாக உள்ளது, அஸ்வினின் அயல்நாட்டுப் பிட்சில் திடீர் எழுச்சி இங்கிலாந்துக்கு இன்னும் கவலையளிக்கவே செய்யும். காரணம் லார்ட்ஸ் பிட்ச் இன்னமும் கூட வறண்ட பிட்சாகவே இருக்கும். அலிஸ்டர் குக், எப்போதும் எந்த வேகப்பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற சிந்தனையிலிருந்து தற்போது அஸ்வினிடம் விக்கெட் கொடுக்காமல் இருப்பது எப்படி என்ற புதிய குழப்பத்தில் ஆட்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் இன்னொரு சாதக அம்சம் என்னவெனில் நம் பேட்டிங்கை தொடர்ந்து நெருக்கடியிலும் அழுத்தத்திலும் வைத்திருந்ததே. விராட் கோலி இன்னமும் கூட ஆண்டர்சனை தன்னம்பிக்கையுடன் ஆடுவது போல் தெரியவில்லை. ஆனாலும் அவரது பொறுமை மற்றும் உறுதி உலகத்தரம் வாய்ந்த இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களை அவருக்கு எட்ஜ்பாஸ்டனில் அளித்தது.

விஜய், தவன், ரஹானே, ராகுல் ஆகியோர் தங்கள் உத்தியை மீண்டுமொருமுறை பரிசீலித்துக் கொள்வது நல்லது. புஜாரா அணிக்குள் வந்தால் நல்லது என்றே இப்போது இந்திய ரசிகர்களுக்குத் தோன்றலாம், ஆனால் ரசிகர்கள் பார்வை வேறு அணி நிர்வாகத்தின் பார்வை வேறு.

ரஹானே நிச்சயம் நிரூபிக்க வேண்டியுள்ளது, தேவையில்லாமல் அவரை உட்கார வைத்து செய்த பரிசோதனைகளினால் அவர் இந்திய பிட்ச்களில் ஸ்பின் பந்து வீச்சில் கூட திணறும் வீரராக மாற்றப்பட்டிருப்பதுதான் நடந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 7 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 10.72 என்பது அவரது தரத்துக்கு மிகவும் இழுக்கானது.

இங்கிலாந்து அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வலது கை பேட்ஸ்மென் 20 வயது ஆலி போப் நாளை ஆடுவார் என்பது ஏறக்குறைய ஊர்ஜிதமாகி உள்ளது. இந்திய அணி பவுலர்கள் உண்மையில் பயப்பட வேண்டியது ஜானி பேர்ஸ்டோ என்ற அபாய வீரரின் பேட்டிங்கில்தான். விரைவில் எதிரணியிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்வார்.

ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவன் தேவையா?

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு அடுத்த படியாக அதிக ரன்களை எடுத்தவர் பாண்டியா என்றாலும் அவரது ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சியில்லை. பவுலிங்கில் அவரை விராட் கோலி நம்பவில்லை.

பேசாமல் இவருக்குப் பதிலாக கருண் நாயர் போன்ற கூடுதல் பேட்ஸ்மெனைத் தேர்வு செய்துகொள்ளலாம். பவுலிங்கில் பிட்ச் வறண்டு காணப்பட்டால் உமேஷ் யாதவ்வை தூக்கி விட்டு குல்தீப் அல்லது ஜடேஜாவைக் கொண்டு வர வாய்ப்புள்ளது.

ஷிகர் தவண் மீது அவர் ஏதோ சேவாக் போல் நம்பிக்கை வைப்பது வீணே. எப்போது வேண்டுமானாலும் எட்ஜ் ஆகும் அவரது கால் நகர்த்தல்கள் சர்வதேச உயர்தர பந்து வீச்சுக்குப் பொருத்தமானதாக இல்லை.

ஆனால் நாம் என்ன மாற்றமெல்லாம் வேண்டும், விரும்பத்தக்கது என்று கூறுகிறோமோ அதையெல்லாம் கோலி ஒரு போதும் கவனிக்க மாட்டார், மாறாத அதே அணியுடன் கூட நாளை களமிறங்கலாம். கோலியின் ஸ்டைல் என்னவெனில் எப்போது மாற்றம் தேவையோ அப்போது செய்ய மாட்டார், எப்போதெல்லாம் மாற்றம் தேவையில்லையோ அப்போதெல்லாம் மாற்றம் செய்வார். கேட்டால் இது என் ஸ்டைல் என்பார். ஆகவே அதே அணியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா 4 கேட்ச்களை விட்டன. இதனால் இந்தியாவுக்குக் கூடுதலாக 154 ரன்களும் இங்கிலாந்துக்கு கூடுதலாக 86 ரன்களும் கிடைத்தன.

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம் என்று ஆடுவதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவர், “பெரிய அளவில் நாங்கள் சிறப்பாக ஆடாமலேயே நெருக்கடியிலும் வெற்றி வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம்” என்று கூறியது இங்கிலாந்து அணி குறித்த அவரது கருத்தல்ல, மாறாக, இந்திய அணியைப் பற்றிய கருத்தாகும், அதாவது, “இந்திய அணி எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் எப்படியாவது அவர்களே தோற்று விடுவார்கள்” என்று கூறுவது போல் அவர் சுற்றிவளைத்து மறைமுக அர்த்தத்தில் இடக்கரடக்கலாகத் தெரிவிப்பது போல்தான் நமக்குப் படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article24634993.ece

Link to comment
Share on other sites

ஒரு தோல்வி என்றவுடனேயே முடிவு கட்டி விடாதீர்கள்; பிரச்சனை உத்தி அல்ல; மனரீதியானது: விராட் கோலி

kohli

படம். | ஏ.எஃப்.பி.

முதல் டெஸ்ட் தோல்வியையடுத்து உடனே அணியைப்பற்றி முடிவு கட்டிவிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அனுதாபிகளை கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை லார்ட்ஸில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்யும் நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

 

இந்நிலையில் டெஸ்ட்டுக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:

“நாம் உடனடியாக அணியைப் பற்றி விரைவில் தீர்ப்புக்குத் தாவி விட வேண்டாம், ஒரு அணியாக நாம் பொறுமை காப்போம். தோல்விகளில், பேட்ஸ்மென் தோல்விகளில் எந்த ஒரு வகைமாதிரியையும் தொடர்ச்சியையும் நாங்கள் பார்க்கவில்லை. விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் பிரச்சனை, இது உத்தி ரீதியான தவறுகளல்ல, இது மனரீதியான பிரச்சனையே.

முதல் 20-30 பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான திட்டமிடுதல் வேண்டும். இந்தத் திட்டம் ஆக்ரோஷமாக ஆடுவதாக எப்போதும் இருக்க வேண்டியத் தேவையில்லை. இங்கு நமக்கு நிதானமும் பொறுமையுமே அவசியமே தவிர ஆக்ரோஷம் அல்ல.

வெளியிலிருந்து பார்க்கும்போது தோல்வி மோசமானதாகத் தெரியும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்தில் ஆடுகிறோம், இங்கு எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். ஆனால் பிழைகளை குறைக்க வேண்டும், இதைத்தாண்டி நாங்கள் பெரிதாக கவலையடைய வேண்டியதில்லை.

ஒரு கேப்டனாக நான் என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன். நிர்வாகத்திடமிருந்தும் நிறைய பின்னூட்டங்கள், ஆலோசனைகள் வந்தவண்ணம்தான் உள்ளன. சிலர் ஆட்டத்தை பார்க்கும் விதம் வேறு மாதிரி இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான கருத்துக்கள் இருக்கும் குறிப்பாக கேப்டன்சி பற்றி, ஆனால் நான் வீரர்களுடன் நல்ல தொடர்புறுத்தலில்தான் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.

இரண்டு ஸ்பின்னர்கள்?

2 ஸ்பின்னர்களை அணியில் எடுப்பது ஆர்வமான சிந்தனை, பிட்சில் கொஞ்சம் நடந்து பார்த்தேன், கடினமாகவும் வறண்டும் உள்ளது. ஆனால் நல்ல புற்களும் முளைத்துள்ளன. புற்கள் இருந்தால்தான் பிட்ச் உடையாமல் இருக்கும் இல்லையெனில் உடைவதைத் தடுப்பது கடினமாக இருக்கும்.

2 ஸ்பின்னர்கள் ஆர்வமூட்டும் ஒரு சிந்தனைதான், ஆனால் அணியின் சமச்சீர் தன்மையைப் பொறுத்தே அந்த முடிவை எடுக்க முடியும். ஆனால் 2 ஸ்பின்னர்கள் ஆடும் முடிவு நிச்சயம் மனதில் உள்ளது.

ரன்கள் எடுக்கும் போது மட்டுமல்ல வெற்றி பெற முடியாத போதும் சரி ரன்களை எடுக்க முடியாத போதும் சரி கொஞ்சம் வேதனையாகவே இருக்கும்.

நான் ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி பெற முடியவில்லையே என்று நான் கருதவில்லை. நாங்கள் போட்டிகளை வெல்வதில்லை என்ற பொதுப்படையான வேதனையாகவே அது இருக்கும். நான் ரன்கள் எடுக்கவில்லை ஆனால் அணி வெற்றி பெறுகிறது எனும்போது எனக்கு முற்றிலும் வேறு உணர்வு ஏற்படும். அணியாக எந்த விளையாட்டை ஆடும்போதும் இது இயற்கையான உணர்வே.

நான் என் பேட்டிங் மூலம் என்ன சாத்தியமாகுமோ அதனை முயன்று ஆடுகிறேன். இது எப்போதும் நடக்காது, ஆனால் அது நடக்கும்போது நான் அதிகம் பங்களிப்பு செய்யவே விரும்புவேன். நெருக்கமாக வந்து தோற்றது துரதிர்ஷ்டவசமானது. எனவே எப்படி வெற்றியை அடைவது என்பது மட்டுமே நாங்கள் சிந்திக்க வேண்டியது. தோற்பதில் எந்த ஒரு தொடர்ச்சியான மாதிரியை நான் காணவில்லை.

ஒரு குறிப்பிட்ட பவுலரை இப்படித்தான் ஆடுவது என்பது தயாரிப்பின் மூலம் வருவது, என்னுடைய தயாரிப்பு மற்ற வீரர்களை விட வித்தியாசமானதாக இருக்கும். வீரர் களமிறங்கும் போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24635633.ece

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்- ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

அ-அ+

இங்கிலாந்து - இந்தியா இடையிலான லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. #ENGvIND

 
 
லார்ட்ஸ் டெஸ்ட்- ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது. டாஸ் சுண்டப்படுவதற்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

201808092142357154_1_ENGvIND002-s._L_styvpf.jpg

அதன்பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/09214236/1182799/The-entire-first-day-play-has-been-abandoned-at-Lords.vpf

Link to comment
Share on other sites

தவான், உமேஷுக்குப் பதில் புஜாரா, குல்தீப்! - லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து ஃபீல்டிங் தேர்வு

 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் புஜாரா, குல்தீப் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

60_15209.jpg

Photo Credit: Twitter/@bcci

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20ஐ கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இழந்தது. இதன் பின்னர், 5 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நழுவவிட்டது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே, நேற்று காலை முதலே லேசான மழை தொடர்ந்தது. இதனால், டாஸ் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

 

 

இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்று மழை பெய்யாததால் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக சொதப்பலாக ஆடிவந்த ஷிகர் தவான் மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். 

 

https://www.vikatan.com/news/sports/133587-england-wins-the-toss-and-elects-to-bowl-first-in-the-2nd-test-at-lords.html

Link to comment
Share on other sites

காப்பாற்றிய மழை; மோசமான தொடக்கம்: நகராத கால்கள்; விஜய் பவுல்டு, ராகுல் எட்ஜ்

 

 
vijay%20bowledjpg

ஆண்டர்சன் பந்தில் முரளி விஜய் பவுல்டு. | கெட்டி இமேஜஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது, ஆண்டர்சன் இந்திய தொடக்க வீரர்களின் நகராத கால்களைப் பயன்படுத்தி விஜய், ராகுலை வீழ்த்தினார்.

11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று கடும் நெருக்கடியில் மழை வந்து இந்திய அணியைக் காப்பாற்றியுள்ளது. புஜாரா 19 பந்துகளில் 1 ரன்னுடனும், விராட் கோலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் என்று மழையால் தற்காலிக நிம்மதியடைந்துள்ளது.

 

மிகவும் சாதாரணமான ஒரு உத்தியைத்தான் ஆண்டர்சன் முதல் ஓவரில் கடைபிடித்தார், 4 பந்துகள் 4வது ஸ்டம்ப் லைனில் வீசி வெளியே ஸ்விங் செய்தார். அடுத்த பந்து ஆண்டர்சன் வீசிய பந்தின் தையல் இன்ஸ்விங்கருக்கானது, ஃபுல் லெந்தில் பிட்ச் ஆனது, பந்து உள்ளே வருவதாக ஏமாந்து மட்டையைத் தாமதமாக இறக்கியதோடு தாமதமாக பிளிக்‌ஷாட்டையும் முயன்றார், ஆனால் பிட்ச் ஆன பந்து லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுல்டு ஆனது. விஜய் டக் அவுட் ஆனார். கால்கள் சுத்தமாக நகரவில்லை.

ராகுலுக்கு பிராட் வீசிய ஓவரில் ஒரு பந்து கட் ஆகி உள்ளே வர கணிப்பில் தவறிழைத்து பந்தை ஆடாமல் ராகுல் விட்டுவிட ஸ்ட்ம்புக்கு அருகில் சென்றது. அடுத்த பந்து அவுட்ஸ்விங்கர் மட்டையைத் தொங்க விட்டு பீட்டன் ஆனார். அடுத்த ஓவரில் புஜாராவை அவுட்ஸ்விங்கரில் பீட் செய்தார் ஆண்டர்சன். பிறகு ராகுல், பிராடை ஒரு அபார கவர் ட்ரைவ் அடித்தார், ஆனால் இது பொறிதான். பிறகு ஆண்டர்சன் ராகுலின் கால்காப்பைக் குறைவைக்க தெளிவான பிளிக் ஷாட் பவுண்டரி ஆனது. அடுத்து பிராட் பந்தில் தடுமாற்றத்துடன் ஆடி மட்டை உள் விளிம்பில் வாங்கினார்.

அடுத்த ஆண்டர்சன் ஓவரில் மட்டையை தேவையில்லாமல் காலை நகர்த்தாமல் கொண்டு சென்ற ராகுல் எட்ஜ் ஆகி வெளியேறினார். கோலி இறங்கும் போது மைதானம் முழுதுமே ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர்.

கோலி தன் முதல் ரன்னை எடுக்க மழை வந்தது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்தியா தடவல் தொடக்கம்.

https://tamil.thehindu.com/sports/article24653984.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

மழை வருவதற்குள் அவசரம்: கிரீசில் புஜாராவின் வேதனையைத் தீர்த்து வைத்த ரன் அவுட்

 

 
pujara%20run%20out

ரன் அவுட் ஆகி வெளியேறிய புஜாரா. | கெட்டி இமேஜஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மழைக்கு இடையே சிறிது நேரம் கிடைத்து ஆட்டம் தொடங்கப்பட்ட போது புஜாரா தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டார்.

கோலிதான் அவரை இழுத்துவிட்டார். இவர் ஓடியிருக்கக் கூடாது, பந்து மட்டையில் பட்டதும் ஆர்வமிகுதியில் ஓடிவிட்டார் பாவம்.

 
 

1 ரன்னில் அவர் ரன் அவுட் ஆன உடனேயே மழை கொஞ்சம் கனமாக விழ ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இப்படியே ஆடினால் 2 முழு நாட்கள் ஆட்டமிருந்தாலே போதும் தோற்க வாய்ப்பு ஏற்படும்.

24 பந்துகளைச் சந்தித்த புஜாரா தட்டுத்தடுமாறினார், ஆண்டர்சன் இவரைப் படுத்தி எடுத்தார், அவுட் ஸ்விங்கர்கள் மட்டையைக் கடந்து செல்ல இன்ஸ்விங்கர்கள் இவர் உடலை இரண்டாக்கி பின்னால் சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னிங்ஸின் 9வது ஓவரை ஆண்டர்சன் வீச புஜாராவுக்கு ஒரு பந்து அதிசயமாக மட்டையில் பட பந்து பாயிண்ட் திசைக்குச் சென்றது, ஆஹா புஜாரா மட்டையில் பட்டுவிட்டது, இப்போது ஓடினால்தான் உண்டு என்று கோலி ரன்னுக்கு அழைக்க, புஜாரா பாதிதூரம் கடந்து ரன்னர் முனை நோக்கி ஓடி வர அங்கிருந்து வந்த கோலி திடீரென ரன் வேண்டாம் என்று திரும்பவும் தன் முனைக்கு ஓடிவிட்டார்.

புஜாரா நடுவழியில் திக்குத் தெரியாத நபர் போல் நின்றார், ரன் அவுட் ஆனார். நிச்சயம் கோலிதான் இந்த ரன் அவுட்டுக்குக் காரணம், அழைத்து விட்டு இழுத்து விட்டார்.

ஆனால் புஜாரா ஆடியது காலம் விரைவில் பதில் சொல்லும் என்பது போல்தான் இருந்தது, எப்போது வேண்டுமானாலும் அவர் ஒன்று பவுல்டு அல்லது எல்.பி.ஆகுவது போல் கிரீசிற்குள் நின்று கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்.

இவரை ரன் அவுட் செய்தது கோலியின் கோபத்தை உருவாக்கியிருந்தால் நிச்சயம் தன் தரப்பில் ஒரு இன்னிங்ஸை ஆடி ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

https://tamil.thehindu.com/sports/article24657471.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Live
2nd Test, India tour of Ireland and England at London, Aug 9-13 2018
Day 2 - Session 3: England won the toss and elected to field
  •  
 
Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது

 
அ-அ+

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது. #ENGvIND

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 
 
இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது
 
அதன்பின் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
201808110017077665_1_eng-3._L_styvpf.jpg
 
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது.
 
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆண்டர்சன், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/11001708/1183067/india-all-out-for-107-in-first-innings-at-lords-test.vpf

Link to comment
Share on other sites

உசைன் போல்ட் ஆக முடியாது, ஆனால் இன்சமாம் உல் ஹக் ஆகாமல் இருக்கலாமே: புஜாரா ரன் அவுட்டில் எழுந்த சிரிப்பலை

 

 

 
pujarajpg

புஜாரா பரிதாப ரன் அவுட். | ஏ.எப்.பி.

ரவிசாஸ்திரியிடம் புஜாராவின் ரன் அவுட் பழக்கம்பற்றி சமீபத்தில் கேட்ட போது, ‘நாங்கள் அவரை உசைன் போல்ட்டாக இருக்க விரும்பவில்லை, புஜாராவாக இருந்தால் போதும்’ என்றார்.

ஆனால் ஜனவரியில் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறை ரன் அவுட் ஆனார். ஆகவே இவர் உசைன் போல்ட்டாக இருக்க வேண்டாம் என்று ரவிசாஸ்திரி நக்கலாக கூறினாலும் உசைன் போல்ட்டெல்லாம் டூ மச், புஜாரா பாகிஸ்தான் ரன் அவுட் புகழ் இன்ஜமாம் உல் ஹக்காக மாறாமல் இருக்கலாமே என்றுதான் கிரிக்கெட் ரசிகர்கள் அபிப்ராயப் படுகின்றனர்.

 
 

நேற்று லார்ட்ஸ் இருமுறை சிரிப்பலையில் ஆழ்ந்தது. கொஞ்சம் மழை பெய்ததையடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு வெறியுடன் காத்திருக்கும் போது விராட் கோலி, புஜாரா மைதானத்தை விட்டு வெளியே சென்ற சமயம் திடீரென மழை நிற்க சூரியனும் வெளியே வந்தது, உடனேயே நடுவர்கள் புஜாரா, கோலியை திரும்பிவருமாறு செய்கை செய்தனர். அப்போது லார்ட்ஸ் ரசிகர்கள் சிரிப்பலைகளை ஏற்படுத்தினர்.

பிறகு மீண்டும் ஆண்டர்சன் பந்து ஒன்று புஜாரா மட்டையில் அதிசயமாகப் பட பந்து பாயிண்டில் சென்றது. 5 ஸ்லிப்களில் கடைசி ஸ்லிப்பில் ஆலி போப் நின்று கொண்டிருந்தார், பாயிண்டில் லேசாகத் தட்டிவிட்ட பந்துக்கு தயங்காமல் ஒற்றைக் குறிக்கோளுடன் ஓடியிருந்தால் ஒரு ரன் கிடைத்திருக்கும், ஆனால் கோலி, புஜாரா இருவரும் கபடி ஆட, போப் பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய கோலிக்கு கொஞ்சம் அருகில் ரன்னர் முனையில் இருந்தார் புஜாரா. ரன் அவுட்.

அவர் ரன் அவுட் ஆனவுடன் பெருமழை பெயதது, புஜாராவின் துரதிர்ஷத்தை நினைத்தா, அல்லது ரன் அவுட் ஆன விதத்தை நினைத்தா என்று தெரியவில்லை, லார்ட்ஸ் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

ரவிசாஸ்திரி இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

லார்ட்ஸில் இந்திய அணி தோற்றால் அடுத்த 3 மைதானங்களும் இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராடுக்கு பிரமாதமான மைதானங்களாகும், இந்த டெஸ்ட்டை விட்டால் இந்திய அணி எழும்புவது கடினம், ஆனால் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனால் என்ன செய்வது? என்பதே தற்போது இந்திய அணி நிர்வாகத்தின் கவலையாக இருக்கும்.

https://tamil.thehindu.com/sports/article24663435.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து திணறல்; 4விக். இழப்புக்கு 89; தவறான கணிப்பில் 2 ரிவியூக்களையும் இழந்தது

 

 
joe%20root

ஷமியிடம் ஆட்டமிழந்து வெளியேறும் ஜோ ரூட். | ஏ.பி.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

மீதமுள்ள 6 விக்கெட்டுகளை குறைந்தது அடுத்த 50 ரன்களில் இந்திய அணி சுருட்ட வேண்டும். பிறகு 2வது இன்னிங்ஸில் ஒரு 280-90 ரன்களை எடுத்து இங்கிலாந்தை களமிறக்கினார்ல் 4வது இன்னிங்சில் இங்கிலாந்து தோல்வி அடைய வாய்ப்புள்ளது.

 

இங்கிலாந்து அணியில் ஜெனிங்ஸ் (11), அலிஸ்டர் குக் (21), ரூட் (19), ஆலி போப் (28) ஆகியோர் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினர். இந்திய அணியில் மொகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மிக முக்கிய விக்கெட்டான அலிஸ்டர் குக்கை வீழ்த்த ஹர்திக் பாண்டியா அறிமுக வீரர் போப் விக்கெட்டை எல்.பி.முறையில் கைப்பற்றினார், மொகமது ஷமி ஜெனிங்ஸ், ரூட் இருவரையும் அற்புதமாக ஒர்க் அவுட் செய்து எல்.பி.யில் வீட்டுக்கு அனுப்பினார்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 15 ரன்கள் விக்கெட் இல்லை, மிக அதிசயமாக இந்தியாவின் கடந்த போட்டியின் சிறந்த பவுலரான அஸ்வின் இன்னமும் கொண்டு வரப்படவில்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் வீழ்த்தும் அஸ்வினைக் கொண்டுவராமல் குல்தீப் யாதவ்வைக் கொண்டு வந்தது நல்ல கேப்டன்சிக்கு அழகாகத் தெரியவில்லை மாறாக தன் தேர்வு குறித்து நிரூபிக்கும் ஈகோத்தனமான முடிவு என்ற ஐயம் எழுகிறது.

இங்கிலாந்து இன்று காலை தொடங்கிய போது இஷாந்த் சர்மா, மொகமது ஷமிக்கு சரியாக லெந்த் கிடைக்கவில்லை, லெக் திசையிலும் ஷார்ட் பிட்ச் ஆகவும் வீசினர், இதனால் பவுண்டரிகள் வந்தன, ஆனால் அதன் பிறகு மிக அருமையாக நிலைபெற்றனர். மொகமது ஷமி ஆண்டர்சனுக்கு நேர் மாறாக, இன்ஸ்விங்கர்களாக வீசி பிறகு அவுட் ஸ்விங்கர்களை வீசினார், குறிப்பாக அவர் பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து பிறகு சில பந்துகளை வெளியே ஸ்விங் செய்தார். சில வேளைகளில் அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி ஃபுல் லெந்தில் இன்ஸ்விங்கரையே வீசினார், இதனால்தான் ஜெனிங்ஸ், ஜோ ரூட் ஆட்டமிழந்தனர், பந்துகள் ஒரு முனையில் சில சமயம் தாழ்வாக வருவதும் நடைபெறுகிறது. ஜோ ரூட் எல்.பி.ஆன பந்து தாழ்வான பந்து.

அணித்தேர்வில் மீண்டும் கோலி சோடைபோயுள்ளாரோ என்று தோன்றுகிறது, உமேஷ் யாதவ் இருந்திருந்தால் இந்தப் பிட்சில் உதவிகரமாக இருக்கும் போல் தெரிகிறது, ஆனால் குல்தீப் யாதவ்வை தேர்வு செய்துள்ளார். பார்ப்போம். பிட்சில் ஸ்பின்னர்களுக்குக் கொஞ்சம் பவுன்ஸ் இருப்பது போல் தெரிகிறது.

ஜெனிங்ஸ் முதலில் 11 ரன்களில் ஷமியின் கிட்டத்தட்ட யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், போகிற போக்கில் ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். அலிஸ்டர் குக் அபாரமான 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களில் அஸ்வின் வராத தைரியத்தில் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் இஷாந்த் சர்மா ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஸ்டம்புக்கு நேராக வீசி வெளியே எடுக்க குக்கின் நிலையே மாறிப்போனது, ஸ்கொயர் ஆனார். கொஞ்சம்தான் ஸ்விங் என்றாலும் துல்லிய லெந்த்தில் எட்ஜ் எடுக்க கார்த்திக் கையில் கேட்ச் ஆனது.

ஜோ ரூட், ஆலி போப் இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 45 ரன்களைச் சேர்த்து நன்றாகவே ஆடினர். 38 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த போப் ஆஃப் ஸ்டம்பில் பாண்டியா வீசிய குட்லெந்த் பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு வர கால் காப்பில் வாங்கி வெளியேறினார், இவரும் தேவையில்லாமல் ரிவியூ ஒன்றை விரயம் செய்தார். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் கேப்டன் ரூட் 19 ரன்களில் ஷமியின் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். பந்து அவர் எதிர்பார்த்த உயரம் வராமல் தாழ்வாக வர எல்.பி.ஆனார். இங்கிலாந்து 89/4. ஜானி பேர்ஸ்டோ 4 ரன்களில் கிரீசில் உள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24666171.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

1.png&h=42&w=42

197/5 * (48.3 ov)
 
Link to comment
Share on other sites

 

லார்ட்ஸ் டெஸ்ட்: சீட்டுக்கட்டுகள் போல சரிந்த இந்திய அணியின் விக்கெட்டுகள்! (விடியோ)

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6

 
அ-அ+

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்சின் அபார சதத்தால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
 
2ம் நாளான நேற்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
 
201808112335396139_1_shami-2._L_styvpf.jpg
 
இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதலில் ஷமியின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
 
அதன்பின், பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோவ் 93 ரன்களில் அவுட்டானார்.
 
மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இங்கிலாந்து அணி 81 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் கரன் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/11233539/1183303/lords-test-3rd-day-england-3576-against-india.vpf

Link to comment
Share on other sites

லார்ட்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச் -வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

 

இந்திய கிரிக்கெட் அணியினர் உண்ணும் உணவுகளின் வகைகளை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

உணவு

PhotoCredits: Twitter/@bcci

 

 

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் மிகவும் போராடி இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

 

மெனு

PhotoCredits: Twitter/@bcci

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியமான பிசிசிஐ தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக இந்திய அணியினரின் அன்றைய உணவு வகைகளின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை பார்க்கும் அனைவரது வாயிலும் கண்டிப்பாக எச்சில் ஊறும் என்பது உண்மை. அந்த அளவுக்கு உள்ளது கிரிக்கெட் வீரர்களின் உணவு பட்டியல். ஸ்டஃபுடு லாம்ப், ரோஸ்டர்டு ஸ்டோன் பாஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் கார்போனரா பாஸ்தா, கிரில்டு சிக்கன், தால் மக்னி போன்ற உணவுகளுடன் இரால், உருளைகிழங்கு, பட்டாணி, சோளம், கேரட், ஆகியவை கலந்த சாலட், மேலும் ஆப்பிள், ராஸ்பெர்ரி, ஆலமண்ட், கொண்ட பழங்கள் சாலட் மற்றும் வெரைட்டி ஐஸ் கிரீம் போன்றவை அந்த மெனுவில் இடம்பெற்றுள்ளன. 

 

 

இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச்

PhotoCredits: Twitter/@bcci

இந்த மெனுக்கள் சில உணவு பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இதற்கு பல எதிர்மறையான கருத்துகளும் எழுந்துள்ளன. இவ்வளவு உணவை உண்பதால் தான் வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த மெனுவுக்கு தொடர்ந்து லைக்குகளும் குவிந்துகொண்டே தான் வருகின்றன.
 

 

https://www.vikatan.com/news/sports/133729-bcci-share-a-lunch-menu-of-team-india-in-twitter.html

Don't tell me you go out to bat after a lunch like this!

Delicious and how.

Lunch menu for Day 1 here at @HomeOfCricket.#ENGvIND pic.twitter.com/WomcJwF4U8

 

Will they be able to play at all after eating that stuff. Just wondering though.

Link to comment
Share on other sites

விராட் கோலியை அவுட்டாக்க வானிலை கைக்கொடுத்தது - கிறிஸ் வோக்ஸ்

 
அ-அ+

விராட் கோலியை வீழ்த்தியதுடன், சதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த கிறிஸ் வோக்ஸ், வானிலை கைகொடுத்தது என்று தெரிவித்துள்ளார். #ENGvIND

 
 
 
 
விராட் கோலியை அவுட்டாக்க வானிலை கைக்கொடுத்தது - கிறிஸ் வோக்ஸ்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்தது. அடிக்கடி மழை விட்டுவிட்டு பொழிய, மைதானத்தை சுற்றி மேகமூட்டாக காணப்பட, வானிலையை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தார்கள்.

இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன், பிராட் பந்துகளை சமாளித்த விராட் கோலி கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவை ஆட்டமிக்க செய்த கிறிஸ் வோக்ஸ், முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஏறக்குறைய போட்டியை இந்தியாவிடம் இருந்து பறித்து விட்டார்.

இந்நிலையில் விராட் கோலியை வீழ்த்த வானிலை நன்றாக ஒத்துழைத்தது என்று கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இந்திய பேட்டிங் வரிசையில் அவர்தான் ராஜா.

201808121511439232_1_woakes001-s._L_styvpf.jpg

2-வது நாள் ஆட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பந்தை நன்றாக ஸ்விங் ஆனது. விராட் கோலியை முன்கூட்டியே அவுட்டாக்க இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதினேன். அதன்படி நடந்தது.

ஒருமுறை அவர் களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின் அவுட்டாக்குவது கடினமாகிவிடும். ஆகவே, அவரை வீழ்த்தியன் மூலம் மகிழ்ச்சியடைந்தேன்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12151144/1183401/really-good-opportunity-get-virat-Kohli-chris-Woakes.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.