Jump to content

மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்


Recommended Posts

மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்
 
 

அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார்.   

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்.  

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறையிலிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.   

ஆனால், பொதுவாகவே பாரியளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் விடயத்திலேயே, அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.   

ஜனாதிபதி கூறுவது சரியென்றால், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்னர், அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது.  

 அதாவது, சிறையில் இருந்துகொண்டே அந்தப் போதைப் பொருள் வியாபாரிகள், தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உதவும் சிறைச்சாலை அதிகாரிகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவதே ஆகும்.   

சிறைக் கைதிகளுக்கு, அவர்கள் விளக்கமறியல்க் கைதிகளாக இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்பட்ட கைதியாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.  

 ஆனால், இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட செல்வந்தர்களும் போதைப்பொருள் தொடர்பாகச் சிறைக்குச் சென்றவர்களும் பாதாள உலகக் குண்டர்களும் சிறைச்சாலைகளில் அலைபேசிகளைப் பாவிப்பது, சாதாரண விடயமாகிவிட்டது.   

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில், சந்தேக நபர்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் அலோசியஸ்,  கசுன் பலிசேன ஆகியோர், படுத்துறங்கும் மெத்தையின் கீழ், ஐந்தாறு அலைபேசிகளை மறைத்து வைத்திருந்தபோது, அவை கைப்பற்றப்பட்டதாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

 ஏனைய கைதிகள், தரையில் வெறும் ‘கன்வஸ்’ பாயை விரித்துப் படுக்கையில், அலோசியஸும் பலிசேனவும் மெத்தையில் படுப்பது, அப்போதுதான் தெரிய வந்தது.   

அதாவது, பணம் இருந்தால், சிறைச்சாலைகளில் பல வசதிகளைப் பெற முடியும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. சிறைச்சாலைகளிலுள்ள போதைப் பொருள் விற்பனையாளர்களும் பணத்தை வீசித்தான், தமது காரியத்தைச் செய்து கொள்கிறார்கள் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.   

இது இவ்வாறு இருக்க, சிறைக்குச் சென்ற பின்னரும், போதைப்பொருள் தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி கூறுகிறார்.   

சிறைச் சாலைகளுக்குள் போதைப் பொருள் செல்வதைத் தடுக்கத் தம்மால் முடியாது என, ஜனாதிபதி முடிவு செய்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது.   

ஏனெனில், போதைப்பொருள், சிறைக்குள் செல்லும் வழிகளை அடைக்க முடியும் என்றால், எவரும் சிறையிலிருக்கும் போதே, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட முடியாமல் போய்விடும். அப்போது, அவ்வாறானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் அவசியமும் ஏற்படாது.   

ஜனாதிபதியின் வாதத்தைப் பாவித்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த கோட்டாபயவாதிகளான சில அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் 2012 ஆம் ஆண்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில், 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முயற்சிப்பதையும் இதற்குள் அவதானிக்க முடிகிறது.   

சிறைச் சாலைகளில் இடம்பெறும் இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காகவே, அன்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அதற்காக இன்று சில அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த, அரசியல்வாதிகளும் பிக்குகளும் வாதிடுகின்றனர்.   

ஆனால், குற்றமிழைத்தாலும் நீதிமன்றத்துக்கன்றி, பொலிஸாருக்கோ இராணுவத்தினருக்கோ, தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை என்பது, அவர்களுக்குத் தெரியாது போலும்.   

உண்மையிலேயே, மரண தண்டனை என்பது, பெரும் சிக்கலான விடயமாகும். அதை நிறைவேற்ற வேண்டுமா, இல்லையா என்பதற்கு, நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிக்க முடியாது.  

 நாட்டுக்கும் சமூகத்துக்கும் தீங்கிழைக்கும் சிலரைத் திருத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை எதிர்க்க முடியாது. 

அதேவேளை, சட்டத்துறையும் நீதித்துறையும் ஊழலில் மூழ்கியிருக்கும் நிலையில், நிரபராதிகள் தண்டிக்கப்படும் அபாயம் இருப்பதால் மரண தண்டனையை ஆதரிக்கவும் முடியாது.   

மரண தண்டனை வழங்குவதன் மூலம், சமூகத்தில் குற்றங்கள் குறையுமா என்ற கேள்வியும் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது.   

மக்களைக் குற்றமிழைக்கத் தூண்டும் வறுமை, கலாசாரச் சீரழிவு, அரசியல்வாதிகளினதும் நாட்டின் தலைவர்களினதும், குற்றங்களுக்கான ஒத்துழைப்புகள் போன்ற சூழ்நிலைமைகள் மாறாதிருக்க, வெறுமனே மரண தண்டனையால் மட்டும், குற்றங்களைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாது.   

சிறுவர் விவகார‍ங்களுக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் பலமாக இருந்த காலத்தில் சமூக ரீதியான குற்றங்கள், இடம் பெறவில்லை என்பதைக் கூற முனைந்ததில், தமது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்தார்.   

புலிகளின் நிர்வாகத்தின் கீழிருந்த பகுதிகளில், குற்றங்கள் குறைய, புலிகளின் மரண தண்டனை உள்ளிட்ட, கடுமையான தண்டனைகளே காரணமாகின  என்பது, சகலரும் அறிந்த விடயமாகும். 

புலிகளும் கல்வியின் மூலம், மக்களின் மனதை மாற்றிக் குற்றங்களைக் குறைத்தார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், அவ்வாறாயின் புலிகள் தோல்வியடைந்த பின்னர், அந்த அறிவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுகிறது.   

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், வறுமை இருந்த போதிலும், தமது இரும்புப் பிடியால், தலைவர்கள் குற்றங்களுக்கு உதவுவது, குற்றவாளிகளைப் பாதுகாப்பது போன்ற ஏனைய நிலைமைகள் தலைதூக்க, புலிகள் இடமளிக்கவில்லை.   

எனவே, அவர்கள் மறைந்த உடன் குற்றச்செயல்கள் தலைதூக்கின. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால், அவ்வாறானதோர் நிலைமையை உருவாக்க முடியாது.   

அண்மையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடபகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கேட்டுக் கொண்டார்.   

மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைவதில்லை என்றால், ஏனைய தண்டனைகள் மூலம் குற்றச் செயல்கள் குறைகின்றனவா என்றும் கேள்வி எழுப்பலாம்.   

அவ்வாறு தொடர்ந்து தர்க்கித்தால், எந்தவொரு தண்டனையும் அர்த்தமற்றது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றனவா, இல்லையா என்பதைக் குற்றமிழைக்க மக்களைத் தூண்டும் அல்லது குற்றங்களுக்குள் மக்களைத் தள்ளிவிடும் சூழ்நிலைமைகளற்ற ஒரு சமூகத்தில் தான், சரியான முறையில் பார்க்கலாம். அவ்வாறானதொரு சமூகம் எங்கே இருக்கிறது?  

மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றன என்று வைத்துக் கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்த அத்தியாவசியமான, ஊழலற்ற பாதுகாப்புத் துறையும் நீதித்துறையும் நாட்டில் இருக்கின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.  

 ஊழல் தொடர்பாக ஆராயும் ‘டிரான்பெரன்ஸி இன்டர்நஷனல் நிறுவனம்’ வருடாந்தம் வெளியிடும் அறிக்கையின் பிரகாரம், கடந்த காலங்களில், இலங்கை பொலிஸ் திணைக்களமும் நீதித்துறையும் கல்வித் துறையும் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தன.   

தென் பகுதியில், கொட்டதெனியாவையில் 2015 ஆம் ஆண்டு சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட போது, பொலிஸார் ‘கொண்டயா’ என்றழைக்கப்படும் நபரொருவரைக் கைது செய்து, அந்தக் குற்றச் செயலை, அவரே செய்ததாக, அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலமொன்றையும் பெற்றிருந்தனர்.   

ஆனால், அதே கொட்டதெனியாவ பொலிஸார், பின்னர் மற்றொருவரைக் கைது செய்து, வழக்குத் தாக்கல் செய்து, ‘கொண்டயா’வை விடுவித்தனர். முன்னர் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், எவ்வாறு பெறப்பட்டது என்பதை, அதன் மூலம் ஊகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.   

அதே ஆண்டு, வடபகுதியில் புங்குடுதீவில், வித்தியா என்னும் மாணவியும் அதேபோல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சிலரைப் பாதுகாக்க, உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் முன்வந்தமை பின்னர் அம்பலமாகியது.   

இப்போதும், வட பகுதியில் போதைப்பொருள் போன்ற குற்றங்களோடு, பொலிஸாருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.   

இதேபோல், அரசியல்வாதிகளின் தேவைக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சிலருக்குச் சாதகமாகவும் பொலிஸார், நடவடிக்கை எடுத்த சம்பவங்கள் உள்ளன.   

தமிழீழ விடுதலை புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த ‘தயா மாஸ்டர்’ அவ்வாறான ஒருவராவர். புலிகளின் சார்பில், ஆயிரக் கணக்கில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு, பல ஊடகவியலாளர் மாநாடுகளை ஏற்பாடு செய்தவர் அவர். ஆயினும், அவருக்குப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறுவதற்கு, ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.   

அண்மையில், இனக் கலவரங்கள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய போன்ற பகுதிகளிலும், அதற்கு முன்னர் இனக் கலவரம் ஏற்பட்ட அளுத்கம, பேருவல, வெலிபன்ன போன்ற பகுதிகளிலும், பொலிஸார் பக்கச் சார்பாகச் செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.   

இவ்வாறு குற்றத்தடுப்பு விடயத்தில், பொலிஸார் எதையும் செய்யக்கூடிய நிலையில் இருக்க, நீதித்துறையும் இப்போது சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.   

அண்மையில், சுகந்திகா பெர்னாண்டோ, நாகாநந்த கொடிதுவக்கு என்ற இரண்டு சட்டத்தரணிகள், பகிரங்க மேடையில் நீதித்துறையில் காணப்படும் பல விடயங்களை அம்பலப்படுத்தினர்.   

குற்றத்தடுப்புத்துறையும் நீதித்துறையும் இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி வரும் நிலையில், மரணதண்டனை நிறைவேற்றப்படும் நிலையும் நாட்டில் இருந்தால், ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.   

ஆயிரம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது பயங்கரமான நிலைமையாகும் எனப் பலர் இதனாலேயே கூறுகின்றனர். 

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வாறிருந்திருக்கும்?  

சில சமயத் தலைவர்களும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவை வரவேற்றுள்ள நிலையில், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதை எதிர்த்துள்ளன.   

சில அரசியல்வாதிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், பலரது எதிர்ப்பில், நேர்மையில்லை என்றே கூற வேண்டும். 

ஏனெனில், இந்த நாட்டில் ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் ஒன்றில், சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டுள்ளன. அல்லது, அவற்றை அங்கிகரித்துள்ளன. அதாவது, சட்ட விரோதமான மரணதண்டனையை, அவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களும் எப்போதாவது அங்கிகரித்துள்ளனர்.   

1970 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால், 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணியினரும், தமது எதிரிகளான சாதாரண மக்களை, எவ்வித சட்டபூர்வமான விசாரணையுமின்றிக் கொலை செய்தனர்.   

கைது செய்யப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேரை, அரச படைகளும் எவ்வித விசாரணையுமின்றிக் கொலை செய்தனர். அப்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சம சமாஜக் கட்சியும் கொம்யூனிஸ்ட் கட்சியுமே பதவியில் இருந்தன.  

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி, 1988-89 ஆண்டுகளில் இடம் பெற்ற போதும், இரு சாராரும் சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டனர். அப்போது, அரச படைகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் மேலெனக் கூறப்படுகிறது.   

மக்கள் விடுதலை முன்னணியினர் கொம்யூனிஸக் கொள்கை கொண்டவர்கள் என்பதால், மேற்கத்திய மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, ‘ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்’ போன்ற அமைப்புகளும் அவற்றைப் பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.   

வடக்கு, கிழக்கு போரின் போது, காணாமல் போனவர்களில் 19,000 பேர் விடயத்தில், பரணகம ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அவ்வாறு காணாமற்போனவர்கள் போர்க்களத்தில் சண்டையில் ஈடுபட்ட போதோ அல்லது போரின் போது இரு சாராருக்கும் இடையில் சிக்கியோ கொல்லப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு நடந்த கதியையும் மதகுருமார்கள் உள்ளிட்ட வடக்கிலும் தெற்கிலும் பலர் வரவேற்றுள்ளனர். அல்லது அங்கிகரித்து நியாயப்படுத்தியுள்ளனர்.   

புலிகளும் மரண தண்டனை விதித்தார்கள். அவற்றைப் பல தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வரவேற்றன; அல்லது அங்கிகரித்தன. எனவே, தாம் விரும்பாதவர்களுக்கு சட்டபூர்வமாகவோ சட்ட விரோதமாகவோ மரண தண்டனை வழங்குவதையே, ஏறத்தாழ சகலரும் விரும்புகின்றனர். அத்தோடு, தாம் விரும்புவோர் அல்லது நேசிப்போர் விடயத்தில், மனித உரிமைகளையும் வலியுறுத்திக் கொள்வர்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மரண-தண்டனை-விடயத்தில்-நேர்மையான-ஒருவரைத்-தேடித்-தாருங்கள்/91-219176

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நவீனன் said:

புலிகளும் மரண தண்டனை விதித்தார்கள்.

இதென்ன கோதாரியாய் இருக்கு புலிகள்  பயங்கரவாதிகள்  ,தீவிரவாதிகள் என்று விட்டு இப்ப புலிகளை போல் மரணதண்டனை குடுப்பதுக்கு முண்டுபட்டுகொண்டு நிக்கினம் சொரிலங்கன் சோஷலிச குடியரசு ஆட்கள் .

இப்ப விளங்கனும் புலி என்பது யார் என்று அவர்கள் மக்களுக்காகவே போராடினார்கள் மடிந்தார்கள் கிபிர் மல்ரிபரல் அடிகளில் கூட தமிழ்  மக்கள் குற்ற செயல்கள் அறவே இல்லாமல்  நிம்மதியாய் இருந்தார்கள் .இப்ப புலி இல்லை ஆட்ச்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு நாள் நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கையை குடுக்க வக்கற்று இருக்கினம் .

Link to comment
Share on other sites

மைத்திரியின் கிணறு
 

மரண தண்டனை பற்றிய பேச்சுகள் திரும்பவும் ஒரு முறை சூடு பிடித்திருக்கின்றன.  

 இலங்கையின் வரலாறு நெடுகிலும், குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலங்களில், மரண தண்டனையை அமுலாக்குவது பற்றி, அவ்வப்போது உரத்துப் பேசப்படுவதும், சிறிது காலத்தில் அந்த விவகாரம் ‘சப்பென்று’ அமுங்கிப் போவதும், வழமையாக இருந்து வருகிறது.   

அந்த வகையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைக்குள்ளிருந்து கொண்டே, அதே குற்றத்தைச் செய்கின்றவர்களுக்கு, மரண தண்டனையை அமுலாக்கப் போவதாக, ஜனாதிபதி கூறியிருக்கின்றமை, அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.  

ஆதிகாலத்திலிருந்தே மரண தண்டனையை அரசுகள் அமுல்படுத்தி வருகின்றன. அதற்குச் சமாந்தரமாக, மரண தண்டனைக்கு எதிரான குரல்களும் வீரியத்துடன் ஒலித்து வருகின்றன.   

இலங்கையில், சுதந்திரத்துக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமராவிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, மரண தண்டனையை இல்லாமலாக்கினார். ஆனால், பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டமையை அடுத்து, 1959ஆம் ஆண்டு, மீண்டும் மரண தண்டனை அமுலுக்கு வந்தது.  

ஒரு கட்டத்தில், 1978 ஆம் ஆண்டு, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மரண தண்டனை தொடர்பாக, அரசமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.  

 அதற்கிணங்க, குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடன்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டது.   

மேலும், ஜனாதிபதியின் ஒப்புதலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பெறப்படுதல் அவசியமாக்கப்பட்டது.  

இலங்கையில் மரண தண்டனை அமுலில் உள்ள போதும், 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.  

 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ஜே.எம். சந்திரதாஸ என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதுவே, இலங்கையில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட, சட்ட ரீதியான மரண தண்டனையாகும்.  

ஆனாலும், இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிற குரல்கள், அவ்வப்போது மேலெழுந்து வருகின்றமையும் கவனத்துக்குரியது.   

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், மரண தண்டனையை அமுலாக்க வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தார். ஆனால், அதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. அதன் காரணமாக, அந்த யோசனையை அவர் கைவிட்டார்.  

பிறகு, மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய, 2004ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து, மரண தண்டனை அமுலாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.   

நீதிபதிகளின் உயிருக்கே அச்சுறுத்தல் எழுந்த போது, மரண தண்டனையை அமுலாக்குகின்றமை பற்றி அதிகம் பேசப்பட்டது. நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் ‘பொட்ட நௌபர்’ எனப்படுகின்ற எம்.எம். நௌபர் என்பவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.  

இவ்வாறாக, வரலாற்றின் தொடர்ச்சியில்தான், மரண தண்டனையை அமுலாக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது கையில் எடுத்திருக்கிறார்.  

இலங்கையில் போதைப் பொருள் வியாபாரம், மிகத் தீவிரமானதொரு கட்டத்தை அடைந்துள்ளமையை அடுத்தே, இவ்வாறானதொரு முடிவுக்கு ஜனாதிபதி வந்துள்ளார். குறிப்பிட்ட சில காலங்களாக, இலங்கை, உலகளவில் போதைப் பொருள் வர்த்தகத்துக்கான முக்கிய தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதெனும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.   

இதில், வெட்கத்துக்கு உரியதோர் உண்மை என்னவென்றால், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் கணிசமானோர், உள்ளிருந்து கொண்டே வெளியிலுள்ள போதைப் பொருள் வர்த்தக வலையமைப்பை இயக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும்.   

இதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால்தான், இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, தான் கையொப்பமிட்டு உத்தரவு வழங்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.  

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான, முன் ஆயத்த வேலைகளும் தொடங்கி இருக்கின்றன.   

இலங்கையில் மரண தண்டனை, தூக்கிலிட்டு நிறைவேற்றப்படுகின்றமை அறிந்ததே. அதனால், மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.   

அதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 18 பேரின் விவரங்களை சிறைச்சாலைகள் திணைக்களம், நீதியமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.  

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அமைச்சரவைக்குள் இருக்கின்ற மிக முக்கிய அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர ஆகியோர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.   

மரண தண்டனையை அமுலாக்குவதன் மூலம், எதை அடைய நினைக்கிறார்களோ, அதை ஒருபோதும் எட்ட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்த கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் இவர் அமைச்சரவை இணைப் பேச்சாளர் என்பது நினைவுகொள்ளத்தக்கது.  

இன்னொரு புறமாக, மரண தண்டனையை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை, இலங்கையின் மிக முக்கிய கிறிஸ்தவ மதத் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வரவேற்றுப் பேசியுள்ளமை மிகவும் கவனத்துக்குரியது.   

மேலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து வெளியில் குற்றச் செயல்களை நடாத்துவதற்குக் காரணமாக இருக்கின்ற கைதிகளுக்கு, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உதவியளிப்பதாகவும் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  

மறுபுறமாக, மரண தண்டனையை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. அப்படியொரு யோசனை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், அதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை அந்த ஆணைக்குழு வலியுறுத்தி உள்ளது.  

மரண தண்டனையை அமுல்படுத்து -வதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு, இன்னும் எதிர்ப்புகள் கிளம்புவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன. ஆனாலும், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு நிதியுதவி அளிக்கின்ற பிரதான நாடுகளின் எதிர்ப்புகளை, இந்த விவகாரத்தில் இலங்கை சந்திக்கும் அபாயம், மிகவும் குறைவாகவே உள்ளமை ஜனாதிபதிக்கு ஆறுதலானதாகும்.  

 ஏனெனில், உலகில் மரண தண்டனையை நிறைவேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் முக்கியமானவை ஆகும்.   

உலகில் 53 நாடுகள், மரண தண்டனையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவற்றில் 23 நாடுகளில், கடந்த வருடம் மட்டும் 993 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவென, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும், உண்மையான தொகை, இதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.   

எவ்வாறாயினும், 2016, 2015ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2017ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் தொகை குறைவானதாகும். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர், இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.  

ஆனால், தற்போது இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   

அதிலும், இந்தக் குற்றத்துக்காக ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், உள்ளிருந்து கொண்டே வெளியில் அதே குற்றத்தை நடாத்தி வருகின்றவர்களுக்கே, மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.   

இந்த இடத்தில், மிக நேர்மையுடன் சில விடயங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. சிறைச்சாலைக்கு உள்ளே இருக்கின்ற மரண தண்டனைக் கைதிகள், அங்கிருந்து கொண்டே வெளியில் மிகப் பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால், அதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவி நிச்சயமாகக் கிடைத்திருக்க வேண்டும்.  

 கடந்த மார்ச் மாதம் மட்டும், வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளிருந்து அங்குள்ள கைதிகள் திருட்டுத்தனமாக 3,950 தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர் என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்திருக்கின்றார்.   

இவ்வாறான அழைப்பு ஒன்றுக்கு 2,000 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த அழைப்புகள் சென்றிருக்கின்றன.  

ஆக, சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவியின்றி, இவையெல்லாம் நடந்திருக்க முடியாது. குற்றவாளிகளுக்கு இவ்வாறான ‘உதவிகள்’ செய்வதை, வருமானம் தருகின்ற தொழிலாக மேற்கொண்டு வரும், சிறைச்சாலை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அங்கு உள்ளவரையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, குற்றச்செயல்களை மேற்கொள்கின்றமையைத் தடுப்பதென்பது சாத்தியமாகாது.   

இந்த இடத்தில், கிணற்றுக்குள் பூனை விழுந்து, இறந்த கதையை நினைவுபடுத்துதல் பொருத்தமாகும். ஆளொருவரின் வீட்டுக் கிணற்றுக்குள் பூனையொன்று விழுந்து, இறந்து விட்டது. 

அதன் காரணமாக, கிணற்று நீர் அசுத்தமடைந்ததோடு, நாற்றமெடுக்கவும் தொடங்கியது. இதைக் கண்ட வீட்டுக்காரர், கிணற்றிலுள்ள நீரை இறைக்கத் தொடங்கினார். அதேநேரம் கிணற்றுக்குள் தண்ணீரும் ஊறிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் நாற்றம் அகலவில்லை. வீட்டுக்காரரும் விடாமல் தண்ணீரை இறைத்துக் கொண்டேயிருந்தார். ஆனாலும், கடைசி வரையில் கிணற்றிலிருந்து அசுத்தமான நாற்றம் அகலவேயில்லை.   

சரியாகச் சிந்தித்திருந்தால், கிணற்றில் விழுந்த பூனையை முதலில் அவர் வெளியே எடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அசுத்தமான நீரை வெளியே இறைத்திருக்க வேண்டும். அசுத்தத்தை உள்ளே வைத்துக் கொண்டு, துப்புரவு செய்ய முடியாது என்பதை, அந்த வீட்டுக்காரர் விளங்கிக் கொள்ளவில்லை.  

சிறைச்சாலைகளில் உள்ளவர்கள், வெளியில் நடக்கும் போதைப் பொருள் வர்த்தகத்தை உள்ளிருந்து கொண்டே இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், முதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உதவி செய்கின்ற சிறைச்சாலை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.   

மேலே சொன்ன கதையில், கிணற்றுக்குள் செத்து மிதந்த பூனைகளுக்கு ஒப்பானவர்களாகத்தான் இந்தச் சிறை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் பார்க்க முடிகிறது. இவர்களை அப்படியே வைத்துக் கொண்டு, சிறைச்சாலைகளை ‘துப்புரவு’ செய்ய முடியாது என்பதையும் ஜனாதிபதி விளங்கிக் கொள்தல் அவசியமாகும்.   

இன்னொருபுறம், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முக்கியமானவையாகும்.   

குற்றம் புரிந்த ஒருவருக்குத் தண்டனை வழங்கி, சிறையில் அடைப்பதற்கு நோக்கங்கள் உள்ளன. குற்றம் புரிந்த நபர், தனது பிழையை நினைத்து வருந்தி, திருந்துவதற்காகவே சிறைத்தண்டனைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.   

ஆனால், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் பலருக்கு, தலைகீழான அனுபவங்களே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப், அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.   

அதாவது, “சிறைக்கூடங்கள் சீர்திருத்தக் கூடங்களாக மாற்றப்படும்போதே, போதைப்பொருள் குற்றவாளிகளைக் குறைக்க முடியும். போதைப்பொருள் தொடர்பான சிறியதொரு குற்றத்துக்காக சிறைக்குச் செல்லும் ஒருவர், வெளியேறும்போது, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொடர்புகளை விஸ்தரித்துக் கொண்டு வருகிறார்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை நாட்டில் இல்லாதொழிப்பதற்காக, ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கையின் தொடக்கப் புள்ளி, சரிதானா என்கிற சந்தேகம் மீளமீள எழுகின்றமையைத் தவிர்க்க முடியாமலுள்ளது.   

செத்துப்போன பூனையை வெளியே எடுத்துப் போடாமல், கிணற்று நீரை இறைப்பதற்கு ஜனாதிபதி ஆயத்தமாகின்றார் என்பதை, அவரின் காதுகளில் யாரேனும் ஓதி விட மாட்டீர்களா?   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியின்-கிணறு/91-219128

Link to comment
Share on other sites

மரண தண்டனையெனும் கூச்சல்
 
 

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் அமுல்படுத்தப்படாமல் உள்ள மரண தண்டனையை, மீளவும் அமுல்படுத்துவதற்கான முடிவை, இலங்கையின் அமைச்சரவை எடுத்திருக்கிறது. இதற்காக முன்னின்றவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமானவர்.  

2015ஆம் ஆண்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, ஜனாதிபதியால் கூறப்பட்ட காரணம், சிறுவர் துஷ்பிரயோகம், கொலைகள் ஆகியவற்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோருக்கு மரண தண்டனை வழங்குவது என்பதாகும். ஆனால் இப்போது கூறப்படும் காரணம், போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பது என்பதாகும். எனவே, வெறுமனே இரண்டரை ஆண்டுகளில், என்ன காரணத்துக்காக மரண தண்டனை வேண்டுமென்பதிலேயே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.  

இது தான், உண்மையிலேயே என்ன காரணத்துக்காக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முயலப்படுகிறது என்பது தொடர்பான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அப்போது சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள் முக்கியமானவை என்றால், இப்போது போதைப்பொருள் விடயங்கள் முக்கியமானவையாக, மக்கள் உணர்கிறார்கள். மக்களின் அவ்வுணர்வைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீளக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, குற்றங்களைக் குறைக்கும் உண்மையான எண்ணம் இருக்கிறதா என்பது சந்தேகமே.  

மக்களைப் பொறுத்தவரை, உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைத்து விடயங்களிலும் உறுதியான, சரியான முடிவை அவர்களால் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனால் தான், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். மக்களுக்கு அவசியமான முடிவுகளை, ஆராய்ந்தறிந்து எடுக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்குத் தான் இருக்கிறது. மக்களின் தலைவர்களாக இருக்க வேண்டியவர்கள், அவர்கள் தான்.  

அரசியல்வாதிகள் என்று வரும் போது, அவர்கள் நடந்துகொள்ளக் கூடிய வகைகளில், இரண்டு பிரதான பிரிவுகள் இருக்கின்றன:  

1. மக்களுக்கு ஏற்கெனவே இருக்கின்ற சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் மேலும் வலுவூட்டுவது. மக்களின் பலவீனங்களை மேலும் பயன்படுத்தி, அவர்கள் விரும்புகின்ற, ஆனால் நீண்டகாலத்தில் அவர்களுக்குப் பயன்தராத, முடிவுகளை எடுப்பது.  

2. மக்களுக்குப் பிடிக்காத விடயங்கள் குறித்து விளக்கமளித்து, மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தி, மக்களுக்குத் தேவையான முடிவுகளை எடுப்பது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த பரம்பரை பற்றிக் கவலைப்படுவது.  

இதில், மரண தண்டனைக்கு மக்களிடத்தில் இருக்கும் ஆதரவைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்ற முயலும் அரசியல்வாதிகள், முதல் வகையினர்.  

சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் கொண்டுசெல்லப்படுகின்றன என்பது தான், மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமெனக் கருதுவதற்கான காரணமாக, ஜனாதிபதி சிறிசேன கூறும் காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைச்சாலைக்குள் இருந்து போதைப்பொருட்களை விநியோகிப்போர் அல்லது அது தொடர்பான கடத்தலில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை வழங்க வேண்டுமென்று தான் அவர் கூறுகிறார்.  

ஆனால், முக்கியமானதொரு விடயம் இங்குள்ளது. சிறைச்சாலைகளுக்குள், உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லவே பெருமளவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், அவற்றுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடிய நிலைமை எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  

அப்படியானால், அரச அதிகாரிகளாக இருந்துகொண்டு, போதைப்பொருள் விநியோகத்துக்கு அனுசரணை வழங்குவதென்பது, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதற்குப் பின்னரும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதை விட மோசமானதல்லவா? அப்படியாயின், இலங்கையின் சட்ட அமுலாக்கத்துறை, பயனற்றதாக இருக்கிறது என்பதை, ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறார்களா?  

அப்படியாயின், அவர்களுக்கான தண்டனைகளை வழங்கி, அவர்களைக் களையெடுக்க வேண்டியது அவசியமல்லவா? அதற்கான என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன?   

மறுபக்கமாக, பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அரசியல்வாதிகள் விடயத்தில் மாத்திரம், விசாரணைகளும் வழக்குகளும் தண்டனைகளும் தாமதிக்கும் விந்தை ஏன்? பாகுபாடான நீதி நடைமுறை தான் இலங்கையில் இருக்கிறது என்பது அதற்கான அர்த்தமா?  

நீதித்துறை என்று வரும் போது தான், அதைப் பற்றியும் கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது. உலகிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும், இலங்கையின் நீதித்துறை தொடர்பான கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. நம்பகத்தன்மை இல்லாத நீதித்துறை ஒன்றை வைத்துக்கொண்டு, மரண தண்டனை எனும், கொடூரமான தண்டனை பற்றிக் கலந்துரையாட முடியுமா? 

போர்க் காலங்களில், ஏராளமான தமிழர்கள், சட்ட அமுலாக்கத் துறையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, தாங்கள் செய்யாத குற்றங்களைச் செய்ததாக ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இலங்கையின் நீதித்துறை, அனைத்து இனத்தவர்களையும் சமமாக மதிக்கிறது என்பதை, யாராவது உறுதியாகக் கூற முடியுமா?  

உலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட, தவறான முறையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, பல தசாப்தங்களை, தவறாகச் சிறையில் கழித்த ஏராளமானோர் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது. இலங்கை எம்மூலைக்கு?  

இப்படி, அடிப்படையான விடயங்களிலேயே, மரண தண்டனை என்பது பொருத்தமற்ற தண்டனையாகத் தெரியும் போது, நுணுக்கமான வாதங்களைப் பற்றியெல்லாம் ஆராயத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. மரண தண்டனை என்பது, நீதித்துறையால் மேற்கொள்ளப்படும் கொலை; இத்தண்டனை நிறைவேற்றப்பட்டால், மீண்டும் அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை; உயிரை எடுப்பதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி போன்றவையெல்லாம், ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, அந்நிலைமைக்குப் போவதற்கான தேவை கூட எமக்கில்லை.  

இதில், மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்காக, பொய்யான பிரசாரங்களிலும் அரசாங்கத் தரப்பு ஈடுபடுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் குறிப்பாக, நல்லிணக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் மனோ கணேசன், “சதாம் ஹுஸைனுக்கு, அமெரிக்கா தூக்குத் தண்டனை வழங்கிய போது, சர்வதேச மன்னிப்புச் சபை எங்கே போனது? இலங்கைக்கு மாத்திரம் ஏன் அழுத்தம்?” என்ற ரீதியில் கருத்தை வெளியிட்டிருந்தார்.

மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் மீதான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், மரண தண்டனை போன்ற விடயங்களில், அவ்வமைப்புகள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன. அமைச்சர் குறிப்பிட்ட சதாம் ஹுஸைனின் மரண தண்டனை நிறைவேற்றல் விடயத்தில் கூட, தனது முழுமையான எதிர்ப்பை, மன்னிப்புச் சபை வெளியிட்டிருந்தது. எதிர்ப்புக்கு ஒருபடி மேல் போய், ஹுஸைன் மீதான வழக்கு விசாரணையின் நடைமுறைகள் குறித்த கேள்விகளையும் அது எழுப்பியிருந்தது. எனவே, ஐ.அமெரிக்கா என்றவுடன் அச்சபை அடங்கிப் போனது என்ற குற்றச்சாட்டு, மிகவும் பொய்யானது.  

இவற்றையெல்லாம் தாண்டி, மரண தண்டனையை அமுல்படுத்தித் தான் ஆகவேண்டுமென இருந்தால், இன்னொரு தீர்வும் இருக்கிறது. ஏனைய குற்றங்களை விடுத்து, மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென, சட்டமொன்றை இயற்றி, அதை நடைமுறைப்படுத்துமாறு, “குற்றங்களைக் குறைக்க விரும்புகிறோம்” என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடம் நாம் கோர முடியும். ஒரு ரூபாயாக இருந்தாலும், அரச பணம் கொள்ளையிடப்பட்டால் இல்லாவிட்டால் கையாடப்பட்டால், அதற்குத் தண்டனை, மரண தண்டனை தான் என, முடிவெடுக்கப்படட்டும். 

அரசியல்வாதிகள் அனைவரும் அதற்குச் சம்மதிப்பார்களாக இருந்தால், ஏனைய குற்றங்களுக்கும் தண்டனை வழங்க முடியுமெனக் கூற முடியும்.  

ஆனால், அவ்வாறான ஒரு முயற்சிக்கு, எந்தவோர் அரசியல்வாதியும் சம்மதிக்கப் போவதில்லை. மரண தண்டனைக்கு அவர்கள் ஆதரவு வழங்குவதெல்லாம், தமக்கு அதனால் நேரடியான பாதிப்பு வராது என்ற அடிப்படையில் தான்.

எனவே, குற்றங்களைக் குறைக்க வேண்டுமென்ற உண்மையான கூச்சல் இருக்குமாயின், முதலில் அரசியல்வாதிகளிடமிருந்து அதை ஆரம்பிக்கப்பட்டும். அதைவிடுத்து, நம்பிக்கை தொடர்பான கேள்விகளை இன்னமும் கொண்டுள்ள நீதித்துறை, சட்ட அமுலாக்கத் துறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மனித வாழ்வை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய மரண தண்டனை பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதே, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நடவடிக்கையாகும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மரண-தண்டனையெனும்-கூச்சல்/91-219246

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.