Jump to content

காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?


Recommended Posts

காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?

 

 

எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?
 
தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
வினிகர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு

201807171506575011_1_Fish-pickle._L_styvpf.jpg

செய்முறை  :

இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   

பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/07/17150657/1177117/Fish-pickle.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனில்  ஊறுகாயா? கேள்விப்பட இல்லை. யாராவது செய்து சாப்பாபிட்டுப்ர்த்து  சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

மீனில்  ஊறுகாயா? கேள்விப்பட இல்லை. யாராவது செய்து சாப்பாபிட்டுப்ர்த்து  சொல்லுங்களேன்.

hering rezepte à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

hering rezepte à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯   

hering rezepte à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஜேர்மனியிலை இருக்கெல்லோ...

அதின்ரை ரேஸ்ற் எங்கடை கருவாட்டு வாய்க்கு சரிவராது....

ஆனால் ஜேர்மன்காரர்  ஊம்....ஊம் எண்டு சாப்பிடுவினம் :grin:

https://www.fettich.de/fisch/1854-gruene-heringe-selbst-einlegen-paleo-lowcarb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலைருக்கெல்லோ...

அதின்ரை ரேஸ்ற் எங்கடை கருவாட்டு வாய்க்கு சரிவராது....

பார்த்திருக்கிறேன்.அதன் நிறம், பாம்பு வடிவான Hering  இவைகளால்  அதன் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை.

எங்கள் ஊறுகாய்களை பார்க்கும் போதே  நாவில் நீராடும்.

நீங்கள் சொன்னதுபோல் கருவாட்டு வாய்க்கு  யேர்மனிய einlegen   சரிவராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

பார்த்திருக்கிறேன்.அதன் நிறம், பாம்பு வடிவான Hering  இவைகளால்  அதன் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை.

எங்கள் ஊறுகாய்களை பார்க்கும் போதே  நாவில் நீராடும்.

நீங்கள் சொன்னதுபோல் கருவாட்டு வாய்க்கு  யேர்மனிய einlegen   சரிவராது

நீங்கள் குறிப்பிட்ட பாம்பு வடிவிலான மீன் ஆல் என ஜெர்மனியர்கள் அழைப்பார்கள். aal fisch à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

எனது பார்வையில் இதை நாங்கள் விலாங்கு மீன் என அழைக்கின்றோம்.


 கீரி மீன் அல்லது சூடைமீனுக்கு ஒப்பானதுதான் அந்த Hering மீன். சுவைக்கும் வேறுபாடு அதிகமில்லை.hering à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கண்ட  பொடி மெனிக்கேன்ற மீன் ஊறூகாயை விட்டுட்டு, எங்க ஜேர்மனிக்கிளயே தேடிடுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nathamuni சும்மா இருந்த என்னை மாட்டி விட்டிட்டீங்களே. உங்கள் பெயரில் ra சேர்த்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்ன பொடி மெனிக்காவின்ரை மீன் ஊறுகாயை செய்து  வீட்டுக்காரியை அசத்தலாம் என்று செய்து கொடுத்துட்டு பவ்வியமா நின்றால், “அச்சாறு பரவாயில்லை”  என்கிறாள்

இப்பொழுது எனக்கு தெரியவேண்டியது, சிங்களத்தில் அச்சாறு என்பது ஊறுகாயைத்தானா என்பது

On 7/18/2018 at 9:58 PM, Nathamuni said:

எங்கண்ட  பொடி மெனிக்கேன்ற மீன் ஊறூகாயை விட்டுட்டு, எங்க ஜேர்மனிக்கிளயே தேடிடுறியள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

Nathamuni சும்மா இருந்த என்னை மாட்டி விட்டிட்டீங்களே. உங்கள் பெயரில் ra சேர்த்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்ன பொடி மெனிக்காவின்ரை மீன் ஊறுகாயை செய்து  வீட்டுக்காரியை அசத்தலாம் என்று செய்து கொடுத்துட்டு பவ்வியமா நின்றால், “அச்சாறு பரவாயில்லை”  என்கிறாள்

இப்பொழுது எனக்கு தெரியவேண்டியது, சிங்களத்தில் அச்சாறு என்பது ஊறுகாயைத்தானா என்பது

 

அச்சாறு என்பது ஹிந்தி சொல். எப்படி நம்மூரு வந்தது. மலே (மலேசியா) போனது. சிங்களம் வந்தது. ஆய்வுக்கு உரியது.

அனோமா ஆன்டி, அபே அம்மா என்று இரண்டு சிங்கள சாப்பாடு தளங்கள் உள்ளன. இரசியமா பார்த்து, மனைவியை, உறவினர், நண்பர்களை அசத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இரசியமா பார்த்து, மனைவியை, உறவினர், நண்பர்களை அசத்துங்கள்.

நன்றி நாதமுனி. ஒரு கை பார்க்கிறேன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

அனோமா ஆன்டி, அபே அம்மா என்று இரண்டு சிங்க சாப்பாடு தளங்கள் உள்ள

அனோமா ஆறுதலாக நேரம் எடுத்து  அன்பாக, ஆசையா  விளக்கமாகச் சொல்லுறா. சமைக்கிறதை விட்டிட்டு அனோமா சொல்லுறதை கேட்டுக்கொண்டிருக்கலாம் போலே இருக்கு. நீங்கள் என்ன சொல்லுறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kavi arunasalam said:

அனோமா ஆறுதலாக நேரம் எடுத்து  அன்பாக, ஆசையா  விளக்கமாகச் சொல்லுறா. சமைக்கிறதை விட்டிட்டு அனோமா சொல்லுறதை கேட்டுக்கொண்டிருக்கலாம் போலே இருக்கு. நீங்கள் என்ன சொல்லுறீங்க?

ஆன்டி :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

அனோமா ஆறுதலாக நேரம் எடுத்து  அன்பாக, ஆசையா  விளக்கமாகச் சொல்லுறா. சமைக்கிறதை விட்டிட்டு அனோமா சொல்லுறதை கேட்டுக்கொண்டிருக்கலாம் போலே இருக்கு. நீங்கள் என்ன சொல்லுறீங்க?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அபே அம்மா

அபே அம்மாவின் பொக்கெற் றொட்டி நல்லாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அனோமாவின் மிருஸ் மாலு கொஞ்சம் விசேசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஆன்டி :grin: 

3 hours ago, Kavi arunasalam said:

அங்கிள்?

மாஸ்டர்.tw_glasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரத நாட்களில் பாவிப்பதற்கே கூடுதலாக ஊறுகாய் மிளகாள் அப்பளம் முதலான சாப்பாடு.மீன் ஊறுகாய் என்றால் விரத நாளில் எப்படி சாப்பிடுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

விரத நாட்களில் பாவிப்பதற்கே கூடுதலாக ஊறுகாய் மிளகாள் அப்பளம் முதலான சாப்பாடு.மீன் ஊறுகாய் என்றால் விரத நாளில் எப்படி சாப்பிடுவது?

விரலால் தொட்டுத்தான் சாப்பிடுவது ஆனால் விரதநாளிலும்கூட மீன் ஊறுகாய் சாப்பிட்டே ஆகணுமா......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

விரத நாட்களில் பாவிப்பதற்கே கூடுதலாக ஊறுகாய் மிளகாள் அப்பளம் முதலான சாப்பாடு.மீன் ஊறுகாய் என்றால் விரத நாளில் எப்படி சாப்பிடுவது?

 

வீட்டிலே சண்டை வந்து (சமையல்) வேலை நிறுத்தம் வருமே அப்ப சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

விரலால் தொட்டுத்தான் சாப்பிடுவது ஆனால் விரதநாளிலும்கூட மீன் ஊறுகாய் சாப்பிட்டே ஆகணுமா......!  tw_blush:

என்னையா விரதநாளில்த் தான் ஊறுகாய் தொடலாம்.அன்றைக்கும் மீன் ஊறுகாயா என்பது தான் பிரச்சனை.

32 minutes ago, Kavi arunasalam said:

வீட்டிலே சண்டை வந்து (சமையல்) வேலை நிறுத்தம் வருமே அப்ப சாப்பிடலாம்

என்ன சண்டை வந்தாலும் சாப்பாடு நிற்பாட்டுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா விரதநாளில்த் தான் ஊறுகாய் தொடலாம்.அன்றைக்கும் மீன் ஊறுகாயா என்பது தான் பிரச்சனை.

என்ன சண்டை வந்தாலும் சாப்பாடு நிற்பாட்டுவதில்லை.

நீங்கள் நம்ம இனம்.... நிஜமாகவே சொல்கிறேன் இவ்வளவு வருடகால தாம்பத்திய வாழ்க்கையில் எவ்வளவுதான் பிரச்சினைகள் வந்தாலும் யாரும் சாப்பிடாமல் கோபம் சாதித்தது கிடையாது. காரணம் நான் முதலில் அவங்களுக்கு முன்னாலேயே வடிவாய் சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிடுவேன்.இன்றுவரை அப்படித்தான்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.