Jump to content

'வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள்


Recommended Posts

'வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள்


 

 

vaali-ninaivu-naal

கவிஞர் வாலி

 

 

 

 

’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள்.

‘அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே...’ பாடலும் அப்படித்தான். நம்மை நம் பால்யத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாடல் இது.

 

‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்’ பாடலாகட்டும், ‘தரைமேல் பிறக்கவைத்தான்...’ பாடலாகட்டும்... எல்லாவற்றுக்கும் மேலாக ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ பாடலாகட்டும்... பாட்டைக் கேட்டதுமே, ‘கண்ணதாசன் கண்ணதாசன்தான்யா’ என்று சொல்லிப் பெருமைப்படுத்துவோம். பெருமிதப்படுவோம்.

ஆனால்... ஒருவரின் பலம், பலவீனம் என்றெல்லாம் பேசுகிறோமே... இதிலொரு சுவாரஸ்யம் இருக்கிறது. எது பலமோ அதுவே பலவீனமாகவும் இருக்கும். இதற்கொரு உதாரணம்... கவிஞர் வாலி. இவரின் பாடல்கள் பலவற்றை, கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் என்று சொல்லிவிடுவதுதான் இவரின் பலமும் பலவீனமும். ஆனால் தன் பலவீனங்களையெல்லாம் கடந்து,  மிகப்பெரிய ராஜபாட்டையே நடத்தினார், தன் எழுத்தின் மூலமாக!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மொத்தம் மூன்று ரங்கராஜன்கள் மிகபெரிய பிரபலம். முதலாவது... ஸ்ரீரங்கம் ரங்கராஜப் பெருமாள். அடுத்து... ரங்கராஜன் என்கிற சுஜாதா. குறும்பும்குசும்புமாக, அறிவியலும் ஆன்மிகமுமாக எழுதி, தனியிடம் பிடித்தவர். மூன்றாவதாக, ரங்கராஜன் என்கிற கவிஞர் வாலி. வாலிபக் கவிஞர் வாலி! 

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கற்பகம் படத்தில் ‘அத்தை மடி மெத்தையடி’ பாடல்தான் வாலியின் முதல் பாடல். அதன் பிறகு தொடங்கியது வாலி(பால்) ஆட்டம்.

‘என்ன ஆண்டவரே...’ என்று எம்.ஜி.ஆர். வாலியை அழைப்பார். அதேபோல, ‘வாங்க வாத்தியாரே...’ என்று வாலியை சிவாஜி கூப்பிடுவார். அந்த அளவுக்கு வாலிக்கு மரியாதை தந்தார்கள். அந்த அளவுக்கு வாலியின் எழுத்துகள், அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.

கே.பாலசந்தரின் படங்களுக்கு பாடல் எழுதுவதுதான் கடினமான வேலை என்று கண்ணதாசனே சொல்லியிருக்கிறார். அவரின் படங்களுக்கு ஒருகட்டத்தில் வாலி எழுதத் தொடங்கினார். ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்றெல்லாம் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார் வாலி.

ஒருமுறை, கே.பி. தன் உதவியாளர்களுடன் இருக்க, எம்.எஸ்.வி.வும் தயாராக இருந்தார். வாலியின் பாடல்கள் ரெடி. பிற்பாடு வாலியும் வந்துவிட்டார். ‘பிரமாதம். அற்புதமான வரிகள். கண்ணதாசனுக்கு நிகரா இருக்கு ஒவ்வொரு வரியும்’ என்று சொல்லிக்கொண்டே, ‘இந்த வரியை கொஞ்சம் இப்படி மாத்திக்கலாமா?’, ‘அந்த வரியை ரெண்டாவதாப் போட்டு, ரெண்டாவது வரியை அங்கே போட்டுட்டு, அதை இப்படி மாத்திக்கலாம். என்ன சொல்றீங்க?’ என்று கே.பி.யும் எம்.எஸ்.வி.யும் சொல்லிக்கொண்டே இருக்க, ’சார்... அதோ... மேல இருக்கே. அது இருக்கட்டுமா? அதையும் மாத்திக்கணுமா?’ என்று சுட்டிக்காட்டினார் வாலி. அப்படி காகிதப் பகுதியின் மேலே இருந்ததை வாலி காண்பித்தது... பிள்ளையார் சுழியை!

இளையராஜாவுக்கும் வாலிக்கும் அருமையானதொரு தொடர்பும் நட்பும் மரியாதையும் உண்டு. வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு வந்ததும், தொடர்ந்து இளையராஜாவின் படங்களுக்கு வாலிதான் பாடல்களை எழுதினார். அப்படியொரு நிலையில், கமலின் படத்துக்கு இளையராஜா இசை. பாடல்கள் வாலி. ‘அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்குண்ணே. அந்த நாலாவது வரியை முதல் வரியா வைச்சா நல்லாருக்கும்ணே. ஆனா மெட்டுக்கு உக்காராது. அதனால, இப்படி மாத்திக்கலாமாண்ணே’ என்று இளையராஜாவும் கமலும் மாற்றி மாற்றிச் சொல்ல... கடுப்பாகிப் போன வாலி, கேலியும்கிண்டலுமாக, ‘ஏண்டா செல்ஃப் ஷேவிங்னு முடிவுபண்ணிட்டீங்க. அப்புறம் ஏண்டா, சவரப்பெட்டியோட என்னை வரச்சொன்னீங்க’ என்று தனக்கே உரிய பாணியில் கேட்டார். வெடித்துச் சிரித்தார்கள் அங்கிருந்தவர்கள்.

எம்.ஜி.ஆரின் படகோட்டிக்கு வாலிதான் எல்லாப்பாடல்களும்! தொட்டால் பூ மலரும் பாடல், ஆகச்சிறந்த காதல் பாடலாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது; பாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பலவும், எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலத்துக்கு விதைகளாகவும் உரங்களாகவும் இருந்தன. இந்தப் பாடல்களைக் கொண்டே பின்னாளில் நல்ல அறுவடையென மக்கள் ஆதரவு எனும் மகசூல் கிடைத்தது எம்.ஜி.ஆருக்கு!

ஜெண்டில்மேன் படத்தில் எல்லாப் பாடல்களும் வைரமுத்து எழுதியிருப்பார். வாலி ஒரேயொரு பாடல் எழுதியிருப்பார். படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட். ஆனாலும் ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ மாஸ் ஹிட்டடித்தது. அதேபோல ஷங்கரின் காதலன் படத்தில் எல்லாப்பாடல்களும் வைரமுத்து. வாலி ஒரேயொரு பாடல்தான். ஆனாலும் வாலி எழுதிய, ‘முக்காலா முக்காபுலா’ பாட்டு ஹிட்டானதைச் சொல்லவும் வேண்டுமா?

கே.பாலசந்தருக்கும் அவரின் சிஷ்யரான கமலுக்கும் வாலி மீது அப்படியொரு காதல் உண்டு. பொய்க்கால் குதிரையில் வாலியை நடிக்கவைத்திருப்பார். அதேபோல், சத்யா படத்திலும் ஹேராம் படத்திலும் வாலி நடித்திருப்பார்.

ஒருமுறை ஷூட்டிங்கெல்லாம் முடிந்ததும் வாலி தன் சிலேடைப் பேச்சால் ரகளை பண்ணிக்கொண்டிருந்தார். கிளம்பும்போது, வாலியிடம் பேப்பரையும் பேனாவையும் கொடுத்துவிட்டு, ‘எதுனா எழுதிக்கொடுங்களேன்’ என்று கமல் ஜாலியாகச் சொல்ல... சட்டென்று எழுதி, ஒரேநிமிடத்தில் கொடுத்தார் வாலி.

அது... ‘நீ கே.பி. வளர்த்தெடுத்த பேபி’ என்று எழுதியிருந்தார்.

தமிழ் அகராதியில் ‘நன்றி’ என்ற சொல்லுக்கு வாலி என்றும் அர்த்தம் இருக்கலாம். அப்படியொரு நன்றியுணர்வு மறக்காதவர் வாலி. ஆரம்பகாலத்தில், வாய்ப்பு தேடி அலைந்த தருணத்தில், சென்னை தி,நகர் சிவாவிஷ்ணு கோயிலுக்கு அருகில் உள்ள கிளப் ஹவுஸில், ரூம் எடுத்துத் தங்கியிருந்தார் வாலி. அவருடன் சேர்ந்து தங்கி, இருவருமாக சான்ஸ் தேடி அலைந்தார்கள். இருவருமே மிகப்பெரிய கோட்டை கட்டி, கொடி நாட்டினார்கள். அந்த இன்னொருவர் ... நாகேஷ்!

அதேபோல், ‘இவன் கவிஞன். நல்லா எழுதுவான். ஒரேயொரு பாட்டு வாய்ப்பு கொடுங்க. எங்கேயோ போயிருவான். அப்புறம் ஒருபாட்டு மட்டுமே தரமாட்டீங்க. எல்லாப் பாட்டுகளும் எழுதுங்கனு சொல்லுவீங்க’ என்று காலையும் மாலையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கவிஞர் வாலியையும் நம்பிக்கையையும் அழைத்துக்கொண்டு, சினிமாக் கம்பெனிகளில் ஏறி இறங்கியவரை, வாலி நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். அவர்... நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்.

ஊக்கு விற்பவனை

ஊக்குவித்தால்

ஊக்கு விற்பவனும்

தேக்கு விற்பான்!

என்றொரு கவிதை, வாலி எழுதிய ஆட்டோ மொழி. இன்றைக்கு பல ஆட்டோக்களிலும் வாகனங்களிலும் அந்த வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, திருச்சி ஐயப்பன் கோயிலில், கல்வெட்டுகளில் வாலியின் பாடல் ஒன்று, பொறிக்கப்பட்டு, பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ விருதுகளும் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் வாலியின் வாழ்க்கையில், இதுவே பூரணம்; பரிபூரணம்.

கோயிலில், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட அந்தப் பாட்டு என்ன தெரியுமா?

அம்மா என்றைழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே!

வாலிபக் கவிஞர் வாலியின் நினைவு தினம் இன்று (18.7.18). அவரையும் அவர் பாடல்களையும் இந்தநாளில் நினைவுகூர்வோம். வாலியின் புகழ் ஓங்கட்டும். தமிழ் உலகில், அவரின் பெயர், என்றும் நிலைக்கட்டும்!

https://www.kamadenu.in/news/cinema/4117-vaali-ninaivu-naal.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.