Jump to content

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு


Recommended Posts

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

 

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

ரொட்டியின் பழமையான வரலாற்றை அறிவீர்களா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் போன்றும் ருசித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த ரொட்டிகளுக்குள் வறுத்த மாமிசத்தை வைத்து முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும். இதுவே பழமையான சேன்விச்சாகவும் இருக்கிறது.

ஜோர்டன் நாட்டின் பாலைவனத்தில் இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பார்லி மற்றும் கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவில், தாவரங்களின் பொடியாக்கப்பட்ட வேர்கள் மற்றும் தண்ணீர் சேர்க்கப்பட்டு, கற்காலத்தில் ரொட்டிகள் சுடப்பட்டன.

ரொட்டியின் பழமையான வரலாற்றை அறிவீர்களா?படத்தின் காப்புரிமைALEXIS PANTOS Presentational grey line

ஜோர்டனில் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ரொட்டி செய்யப்பட்டது எப்படி?

கோதுமை மற்றும் பார்லியிலிருந்து மாவு எடுக்கப்பட்டது.

நீரில் வளரும் காட்டு தாவரங்களின் கிழுங்குகள் (வேர்கள்) உலர வைக்கப்பட்டு தூளாக்கப்பட்டன.

இவற்றில் தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு போல பிசையப்பட்டது.

சுற்றி நெருப்பு வைக்கப்பட்ட சூடான கற்களில் ரொட்டி சுடப்பட்டது.

Presentational grey line

"கலப்பு உணவு தயாரிக்கப்பட்டு, சமையல் செய்ததற்கான பழமையான ஆதாரம் இது" என்று பிபிசியிடம் பேசிய, லன்டன் கல்கலைக்கழக பேராசிரியர் டொரியன் ஃபுல்லர் கூறினார்.

தட்டையான ரொட்டிகளுடன், வறுத்த மான் போன்றவற்றை அவர்கள் சாப்பாட்டாக உண்டுள்ளனர்.

உலகில் உள்ள பல நாடுகளில் ரொட்டிகள் பிரதான உணவாக இருக்கின்றன. ஆனால், இது எப்போது தோன்றியது என்ற தகவல் தெளிவாக இல்லை.

தற்போது வரை, துருக்கியில் ரொட்டி தயாரிக்கப்பட்டதற்கான பழமையான ஆதாரங்கள் உள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் 9000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை.

இது தொடர்பாக இரண்டு கட்டடங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை, பெரிய வட்டமான நெருப்புத் தகடுகளும், அவற்றில் ரொட்டி துகள்களும் இருந்தது தெரிய வந்தது.

ரொட்டியின் பழமையான வரலாற்றை அறிவீர்களா?படத்தின் காப்புரிமைALEXIS PANTOS

"கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்தில் இருக்கும் உணவு கலாசாரத்தின் இணைப்பாக ரொட்டி திகழ்வதாக" கோபன்ஹேகன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் அமையா கூறுகிறார்.

அக்காலத்தில் மக்கள் வேட்டைகாரர்களாக இருந்தார்கள். மான் வகைகளை வேட்டையாடி, முயல்கள் மற்றும் பறவைகள் போன்றவற்றை பிடித்து வைத்திருப்பார்கள்.

மேலும், உணவுகளுக்காக பழங்கள் மற்றும் தானியங்களையும் அவர்கள் நம்பியிருந்தனர்.

ஏதாவது கொண்டாட்டம் அல்லது விருந்து காலங்களில் மக்கள் கூடும்போது ரொட்டிகள் செய்யப்பட்டன என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

ரொட்டியின் பழமையான வரலாற்றை அறிவீர்களா?படத்தின் காப்புரிமைAMAIA ARRANZ OTAEGUI Image captionரொட்டி துகள்

இவையெல்லாம் விவசாயத்தின் வருகைக்கு முன் நடந்தவை. விவசாயத்திற்கு முன்பாக தானிய பயிர்களை அவர்கள் வளர்க்க ஆரம்பித்தனர்.

அப்போது இருந்த ரொட்டிகள், பீட்டா பிரட் அல்லது சப்பாத்தி போல இருந்திருக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/science-44865839

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.