Jump to content

மனிதஉரிமை ஆணையகத்தின் தலைவருக்கே அச்சுறுதல்- சிவில் சமூகம் அதிர்ச்சி


Recommended Posts

மனிதஉரிமை ஆணையகத்தின் தலைவருக்கே அச்சுறுதல்- சிவில் சமூகம் அதிர்ச்சி

 

 
 

இலங்கையின் மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை சிவில் சமூக பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.

தீபிக உடகமவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை 37 சிவில் சமூக அமைப்புகளும் 170 தனிநபர்களும் கடுமையாக கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு எதிராக  கொலை மிரட்டல்,வன்முறைகள் மற்றும் பகைமையை தூண்டும் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை   குறித்து அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபிக உடகமவிற்கு எதிரான அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனையையும், அச்சத்தையும் வெளியிடுவதுடன் அவரிற்கான எங்கள் உறுதியான ஆதரவை தெரிவிக்கின்றோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தீபிகஉடகமவின் தலைமைத்துவத்தின்  கீழ் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள வெளிப்படையான,குறிப்பிடத்தக்க, சுயாதீன. கொள்கை தலையீடுகளை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

srilanka_human_rights_coo.jpg

ஐக்கியநாடுகள் அமைதிப்படைக்கு அனுப்பப்படும் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும்ந நடவடிக்கையை இலங்கை மனித உரிமை ஆணையகம் மேற்கொண்டுள்ளது இதன் காரணமாகவே தீபிக உடகமவிற்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது  என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது இலங்கை மனித உரிமை ஆணையகத்திற்கு வழங்கப்பட்ட ஆணை எனவும் குறிப்பிட்டுள்ள சிவில் சமூக அமைப்புகள் மரண அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் துணிச்சலாக தங்களது பணியை முன்னெடுப்பதற்காக ஆணையகத்தை பாராட்டியுள்ளன.

தீபிக உடகமவிற்கு எதிராக முன்னாள்  படை அதிகாரி சரத்வீரசேகர அச்சுறுத்தலை விடுத்துள்ளார் மவ்பிம அதனை வெளியிட்டுள்ளது, இந்த அச்சுறுத்தல் இலங்கை இராணுவத்தின் சம்மதத்துடன்  இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படைக்கு அனுப்பப்படும் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும் நடவடிக்கை தொடர்பானது எனவும் சிவில சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் நலன்களை முன்னெடுப்பதற்காக உடகம  அரசசார்ப்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றுகின்றார் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்,தேசப்பற்றுள்ள அரசாங்கத்தின்  கீழ் துரோகிகள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் என அவை சுட்டிக்காட்டியுள்ளன.

http://www.virakesari.lk/article/36762

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.