Jump to content

என்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்!!


Recommended Posts

என்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்!!

 

 

asmin.jpg

 
 
 
 

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார். எனினும் இதனை அனந்தி மறுத்து ஊடகங்களுக்கு செய்திக்கு குறிப்பு அனுப்பியிருந்தார். இந்நிலையில் அஸ்மினை தொடர்பு கொண்டு கேட்ட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார். இதனை அவர் மறைக்க ஊடகங்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/00/என்னிடம்-சகல-ஆவணங்களும்-உள்ளது-பகிரங்கமாக-வெளிப்படுத்துவேன்-அஸ்மின்.html

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

 

அமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார்.

 

இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அஸ்மின்? பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை வெளியில் சொல்லக் கூடாது எனக் கூட அறிவுருத்தப்பட்டிருக்கலாம் , அவர் எல்லாம் சட்டப்படி தானே செய்கிறார். நீங்கள் ஏன் அந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டீர்கள்.........? யாருடைய ஏவலின் கீழ் செய்ற்படுகிறீர்கள்? 
தமிழைரைப் பிரித்து, அவர்களின் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என  செயற்படுவர்களின்  நேரடி கைக்கூலியாக இயங்கும் உதயன் பத்திரிகையும் இப்படியான செய்திகளுக்கு அதி முக்கியதுவம் கொடுப்பார்கள்......, 

Link to comment
Share on other sites

அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன் – அனந்தி சசிதரன்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ananthy-sasitharan.jpg?resize=464%2C300
என்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

 

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள அவருடைய அமைச்சின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

வடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.

நான் ஆயுதத்தை அறியதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன. விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை.

நான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.

இது கண்டிக்கத்தக்க விடயம்.
என்னிடத்தில் துப்பாக்கி உள்ளது என்று சொல்லியுள்ள அஸ்மின் என்னிடத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து காண்பிக்க வேண்டும். அது தவிர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் வந்திருந்தால் அந்த அனுமதி கடிதம் வந்திருந்தால், நான் துப்பாக்கி பெற்றுக் கொண்டதற்கான ஆவணமும் இருக்க வேண்டும்.

அவ்வாறான ஆவணங்கள் இருந்தால் அவர் அதனை வெளிப்படுத்தலாம். என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்ய உள்ளேன்.

நாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.

http://globaltamilnews.net/2018/88323/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.