Jump to content

வடக்கு அமைச்சரவை -மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு- ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு!!


Recommended Posts

வடக்கு அமைச்சரவை -மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு- ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு!!

 

 

HG_Reginald-696x400.jpg

 
 

 

 

வடக்கு மாகாண அமைச்சரவையினை எனது மறு அறிவித்தல் வரும் வரை கூட்டக் கூடாது என வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பா.டெனீஸ்வரனும் ஓர் சட்டப்படியான அமைச்சராவார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் அமைச்சர் வாரியக் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு பிரதம செயலாளர் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்துக்குப் பதில் அளித்துள்ள ஆளுநர் இன்றைய நிலையில் வடக்கு மாகாண சபையில் 6 அமைச்சர்கள் இருப்பதனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் வாரியக் கூட்ட விடயத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனுக்கு கடந்த 12ஆ ம் திகதிய கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக தற்போதைய சூழலில் அமைச்சர் வாரியக் கூட்டம் எவையும் இடம்பெறுவதற்கான சாத்தியம் அற்ற நிலமை கானப்படுவதனால், வடக்கு மாகாண சபையின் ஊடாக முன்னெடுத்த பல திட்டங்களில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. –

http://newuthayan.com/story/00/வடக்கு-அமைச்சரவை-மறு-அறிவித்தல்-வரை-ஒத்திவைப்பு-ஆளுநர்-விடுத்துள்ள-உத்தரவு.html

Link to comment
Share on other sites

அமைச்சர் சபைக் கூட்டம் கூட்ட ஆளுநர் குரே தடா! – சிக்கலுக்குள்ளாகின்றது வடக்கு மாகாண நிர்வாகம்

 

 

download-15.jpg

 
 
 

வடக்கு மாகாண அமைச்­சர் சபை­யின் கூட்­டத்தை தனது அறி வித்­தல் வழங்­கப்­ப­டும் வரை கூட்­டக் கூடாது என்று அமைச் சர் சபை­யின் செய­ல­ரும், வடக்கு மாகாண தலை­மைச் செய­ல­ரு­மான அ.பத்­தி­நா­த­னுக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் குரே உத்­த­ரவு பிறப் பித்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தீர்ப்புத் தொடர்­பாக வடக்கு மாகாண நிறை­வேற்று நிர்­வா­கத்­தில் எழுந்­துள்ள அசா­தா­ரண சூழ்­நிலை தொடர் பில், வடக்கு மாகாண சபை­யில் நேற்­று­முன்­தி­னம் விவா­தம் நடத்­தப் பட்­டி­ருந்­தது. வடக்­கில் நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் முடங்­கும் சூழ்நிலைக்­கான ஏதுக்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று மாகாண சபை அமர் வில் கூறப்­பட்­டி­ருந்த நிலை­யில், வடக்கு மாகாண ஆளு­ந­ரால் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண அமைச்­சர் சபை­யில் பா.டெனீஸ்­வ­ர­னும் அமைச்­ச­ரா­கத் தொடர்­கின்­றார் என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடந்த மாதம் 29ஆம் திகதி இடைக்­கால கட்­ட­ளை­யைப் பிறப்­பித்­தி­ருந்­தது. இடைக்­கால கட்­ட­ளைக்கு அமை­வாக பா.டெனீஸ்­வ­ர­னுக்கு அவர் வகித்த அமைச்­சுப் பொறுப்­புக்­கள் மீள வழங்­கப்­ப­ட­வில்லை.

 

நீதி­மன்­றத்­தின் கட்­ட­ளை­யால் அமைச்­சர் சபை செயற்­பட முடி­யாத நிலமை தோன்­றி­யுள்­ளது. கடந்த மாதம் 6ஆம் திக­திக்­குப் பின்­னர் அமைச்­சர் சபை கூட்­டப்­ப­ட­வில்லை. அமைச்­சர் சபை­யைக் கூட்­டும், அமைச்­சர் சபை­யின் செய­ல­ரும் வடக்கு மாகாண தலை­மைச் செய­ல­ரு­மான அ.பத்­தி­நா­தன், இது தொடர்­பில் வடக்கு ஆளு­ந­ருக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

அமைச்­சர் சபைக் கூட்­டத்தை தனது அனு­ம­தி­யின்றி கூட்­ட­வேண்­டாம் என்று ஆளு­நர் பதில் வழங்­கி­யுள்­ளார்.
இந்த விவ­கா­ரம் தீர்க்­கப்­ப­ட­மை­யால் வடக்கு மாகாண நிர்­வா­கம் நாளுக்கு நாள் சிக்­க­லுக்கு உள்­ளாகி வரு­கின்­றது என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/08/அமைச்சர்-சபைக்-கூட்டம்-கூட்ட-ஆளுநர்-குரே-தடா-சிக்கலுக்குள்ளாகின்றது-வடக்கு-மாகாண-நிர்வாகம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.